புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
2 Posts - 2%
mruthun
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
3 Posts - 1%
manikavi
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
2 Posts - 1%
mruthun
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_m10விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்?


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 15, 2018 4:42 pm

கடந்த மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முதல் விஷயம் வடகொரிய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். இரண்டு நாடுகளும் பாம்பும் கீரியும் போல என்பதால், உலக ஊடகங்களின் கவனம் முழுக்க வடகொரிய அணியின் மீதே குவிந்தது. இதற்கடுத்து அதிகம் கவனம் ஈர்த்த ஒரு விஷயம் 5G. ஆம், குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடந்த இந்த பியாங்சங் ஒலிம்பிக் கிராமம்தான் உலகிலேயே 5G டெக்னாலஜி முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட இடம்.

Winter olympics 2018
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? 1ZCdkfM4RrOm4bGZSCR5+5g4_18599

5G டெக்னாலஜியில் சாதிப்பதற்காக ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் ஜப்பானும், தென் கொரியாவும் கூடுதல் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சிதான் தென்கொரியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான KT கார்ப்பரேஷன் 5G டெக்னாலஜியை குளிர்கால ஒலிம்பிக்ஸில் நிறுவியது. வருகிற 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானும் தன்னுடைய 5G டெக்னாலஜியை அறிமுகம் செய்யவிருக்கிறது. 5G ரேஸில் ஜப்பானும் தென் கொரியாவும் சரி. இந்தியா என்ன செய்துகொண்டிருக்கிறது?

ஏன் அந்த தாமதம்?

2009-ம் ஆண்டே உலகிற்கு 4G அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், முதன்முதலாக இந்தியாவுக்கு வந்தது 2012-ல். அதுவும் அறிமுகம் மட்டும்தான். வாடிக்கையாளர்களிடம் பெருமளவில் சென்று சேர்ந்தது 2016-ம் ஆண்டுதான். இடையே சுமார் 7 ஆண்டுகள் இடைவெளி. இதற்கு முந்தைய 3G, 2G விஷயத்திலும் இதே சங்கதிதான். முதலில் வேறு நாடுகளால் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் கழித்தே இந்தியாவுக்கு வரும். இதற்கு மிக முக்கியமான காரணம், அப்போது இந்தியாவில் ARPU (Average Revenue Per User) குறைவாக இருந்ததுதான். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் சம்பாதிக்க முடியாமல் இருந்தன. எனவே புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்யவோ, ஊக்குவிக்கவோ யாரும் முன்வரவில்லை. தொலைத்தொடர்பு துறையில் இந்தியா சந்தித்த காலதாமதங்களுக்கு இதுதான் காரணம். 4G வரைக்கும் இந்தியா மற்ற நாடுகளிடம் இருந்து தொழில்நுட்பங்களை வாங்கிக்கொண்டிருந்தது. நாம் எதையும் உருவாக்கவில்லை. ஆனால், 5G அப்படியல்ல.

தற்போது இந்தியாவில் 5G-க்கான சந்தை மிகப்பெரிது. ARPU-வும் அதிகமாகிவிட்டது. எனவே 5G தொடர்பான ஆராய்ச்சிகளும் பெருமளவில் நடந்துகொண்டிருக்கின்றன. 4G போல இந்தமுறை தாமதம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்திய அரசும் இவற்றை ஊக்குவித்துவருகிறது.எனவே இந்தியா தனக்கான சொந்த 5G தொழில்நுட்பத்தை வடிவமைப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. இதுவரைக்கும் மற்ற நாடுகளிடம் இருந்து மட்டுமே தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த நாம் இந்தமுறை நாமே வடிவமைக்கவிருக்கிறோம்.

நன்றி
விகடன்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 15, 2018 4:44 pm

காலத்தின் கட்டாயம்:

3G-யில் இருந்து 4G-க்கு மாறி இன்னும் சில வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எதற்காக நாம் 5G-க்கு செல்லவேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். காலத்தின் தேவை என்பதுதான் அதற்கான பதில். 3G வரைக்குமே செல்லுலார் நெட்வொர்க்குகள் அனைத்தும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அப்போது நம்மிடம் இருந்ததெல்லாம் ஸ்மார்ட்போன்கள் மட்டும்தான். எனவே பேசவோ, இணைய வசதியை பயன்படுத்தவோ மட்டும்தான் 3G-யை பயன்படுத்தினோம். ஆனால், 4G வந்த சமயத்தில் இன்னொரு தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்தது; அது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Iot). கேட்ஜெட்ஸ், எலக்ட்ரானிக் பொருள்கள், இயந்திரங்கள் என அனைத்தையுமே இணையத்துடன் சேர்த்து பயன்படுத்துவதுதான் இந்த இன்டர்நெட் ஆப் திங்க்ஸ். ஸ்மார்ட் ஹோம்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஸ்மார்ட்போன்களைப் போல இவை குறைவான டேட்டாவைப் பயன்படுத்தப்போவதில்லை.

5G

அதிகளவிலான டேட்டாவை பயன்படுத்தும். ரோபோட்டிக் இயந்திரங்கள் அடங்கிய தொழிற்சாலை, ஓட்டுநர் இல்லாத கார், தானாகவே இயங்கும் வேளாண் கருவிகள் போன்றவையெல்லாம் இன்னும் சில காலத்திற்குள் நிஜமாகிவிடும். இவை அனைத்திற்குமே டேட்டாதான் ஆதார மூலம். இதுவரைக்கும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே செலவழித்த டேட்டாவை இனிமேல் இவையும் பங்கிட்டுக்கொள்ளப்போகின்றன. அந்தக் கூடுதல் டேட்டாவை தற்போதைய சிஸ்டத்தை பயன்படுத்தி எப்படி அனுப்பமுடியும்?

மேலும், நாம் பயன்படுத்தும் 4G-யின் வேகம் தற்போதைய பயன்பாடுகளுக்கு ஏற்றதுதான் என்றாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. தகவல்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் இடையே சில மைக்ரோ நொடிகள் தாமதம் ஏற்படுவது அதில் ஒரு பிரச்னை. வாட்ஸ்அப்பில் சில நொடிகள் மெசேஜ் தாமதமாக செல்வதால், நமக்கொன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ரோபோக்களும், அதன் கன்ட்ரோல் சிஸ்டமும் ரியல் டைமில் இயங்கும் ஓர் இடத்தில் இந்த தாமதம் ஆபத்து அல்லவா? தொலைதூரத்தில் இருந்துகொண்டு இணையம் மூலம் ரோபோக்களை வைத்து ஒரு மருத்துவர் நோயாளியை பரிசோதிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அங்கே மருத்துவரின் ஒவ்வொரு கட்டளையும் உடனே ரோபோக்களுக்கு செல்ல வேண்டியது மிகமுக்கியம். ஆனால், மருத்துவர் கட்டளையிட்டு சில நொடிகளுக்குப் பின்னர்தான் ரோபோ இயங்குகிறது என்றால் மருத்துவரால் மேற்கொண்டு நோயாளியைப் பரிசோதிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணவும், புதிதாக இணையப் போகிற பலமில்லியன் வாடிக்கையாளர்களை சமாளிக்கவும் நமக்கு 5G அதிஅவசியம்.


எப்படி உருவாகிறது 5G?

"5G என்பது புத்தம்புதிய தொழில்நுட்பம் கிடையாது. தற்போது நாம் பயன்படுத்திவரும் 4G நெட்வொர்க்கின் வசதிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் 5G. இதற்கான தரத்தை சர்வதேச தகவல்தொடர்பு யூனியன் (ITU) நிர்ணயித்துள்ளது. அந்தத் தகுதிகளுடன்  5G-யை வடிவமைப்பதுதான் உலக நாடுகளின் பணி. உதாரணமாக ஒரு நொடியில் 10 GB டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யும் அளவிற்கு 5G திறன் பெற்றிருக்க வேண்டும் என ITU நிர்ணயித்தால், நாம் தயாரிக்கும் 5G அந்தளவு திறன்பெற்றிருக்க வேண்டும். எந்தநாடு முதலில் இதைச் செய்தாலும் அதனை ITU அங்கீகரிக்கும். இந்தத் தரக்கட்டுப்பாடுகளை நாம் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் பூர்த்திசெய்யலாம். இது அந்தந்த நாடுகளின் திறமையைப் பொறுத்தது. 5G-யில் இதற்கு முன்பு இருந்ததை விடவும் இந்தமுறை சில புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

MIMO, ஸ்மால் செல் டெக்னாலஜி மற்றும் மில்லிமீட்டர் அலைகள் போன்றவை அவற்றுள் சில. இந்த மில்லிமீட்டர் அலைகள் இதுவரைக்கும் ராணுவ ரீதியான தகவல் தொடர்புக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. முதல்முறையாக சாதாரண தகவல் தொடர்புக்கு  பயன்படப் போகிறது. இந்த அலைகள் மூலம் நம்மால் மிகக்குறுகிய தூரத்திற்கு மட்டுமே தகவல்களை அனுப்பமுடியும். ஆனால், அதிகளவிலான டேட்டாவை அனுப்பமுடியும். இப்படி தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாறுதல்கள் இருந்தாலும், பயனாளரைப் பொறுத்தவரைக்கும் 4G-க்கும் 5G-க்கும் வேகத்தைத் தவிர எவ்வித வேறுபாடும் இருக்காது." என்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யின் மின்னியல் துறை பேராசிரியர் டேவிட் கோயில்பிள்ளை.

விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? JlAh36jkTMdHT9mu98Zh+info5_12145



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 15, 2018 4:45 pm

சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சிகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் 5G தொழில்நுட்பத்திற்கான பரிசோதனை நிலையம் அமைப்பது குறித்து இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த இரு ஆண்டுகளாகவே 5G தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

உதவிப்பேராசிரியர் ராதா கிருஷ்ண கண்டி "சென்னை ஐ.ஐ.டி மட்டுமின்றி, ஹைதராபாத், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டி.களும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ளன. வருகிற 2021-ம் ஆண்டு இந்தியாவில் 5G முழுமையாக அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கலாம். பிறநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பங்களை வாங்குவதற்கும், நாமே நமக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணமாக, வெளிநாடுகளில் வீடுகள் கட்ட மரங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், நம் நாட்டில் பெரும்பாலும் செங்கற்கள்தான். இதனால் அலைக்கற்றைகள் செல்வதில் வெளிநாடுகளுக்கும் நமக்கும் இடையே சிறியளவில் வேறுபாடு இருக்கும். இது ஒரு உதாரணம்தான். இப்படி நம் நாட்டில் ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்களைக்கூட நம்மால் எளிதில் தீர்க்கமுடியும். வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பங்கள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வாங்கும்போது காப்புரிமைக்காக அதிகப்பணத்தை செலவிட வேண்டியதிருக்கும். நாமே தயாரிப்பதால் அந்த செலவு அவர்களுக்கு மிச்சம். இதன்மூலம் நம்மால் குறைவான செலவில் இங்கே 5G சேவைகளை வழங்கமுடியும்.

ITU, 3GPP போன்ற அமைப்புகளின் பணி என்பது 5G-க்கான தரத்தை நிர்ணயிப்பதுதான். அவற்றை எப்படி செய்துமுடிப்பது என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். 5G-யின் தொழில்நுட்ப பெயர் IMT2020. இதற்கான வரையறைகளை ITU முடிவுசெய்த பின்னர் அதனை எந்தெந்த தொழில்நுட்பங்கள் மூலம் செய்யலாம் என்பதனை 3GPP அமைப்பு முடிவுசெய்யும். தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் 4G LTE-யின் தொழில்நுட்பம் இந்த அமைப்பு நிர்ணயித்ததுதான். உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் 3GPP-யின் தரநிர்ணய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 5G-க்கான வரையறையை கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பு வெளியிட்டது ((Draft மட்டும். முழு அறிக்கை இந்த ஆண்டு வெளியிடப்படும்). இதனை அமல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், அதற்கான சாதனங்கள் போன்றவற்றை நாம்தான் உருவாக்க வேண்டும். அதுதான் எங்களின் பணி" என்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யின் மின்னியல்துறை உதவிப்பேராசிரியர் ராதா கிருஷ்ண கண்டி.

இதிலிருக்கும் சவால்களையும் பகிர்ந்துகொண்டார். "5G பரிசோதனை  தற்போது சிறிய அளவில் மட்டுமே சோதனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய அளவில், பெரிய பரப்பில் சோதனை செய்யும்போதுதான் நம்மால் இதிலிருக்கும் குறைகளைக் கண்டறியமுடியும். இதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடும் இணைந்து செயல்படவிருக்கிறோம். இதன்மூலம் ஸ்டார்ட்அப்களும் 5G தொழில்நுட்பத்தை எளிதாக கையாளமுடியும். முதலில் இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் முடிந்தபின்பு சோதனை முறையில் 5G சேவைகள் தொடங்கும். பின்னர் டெலிகாம் நிறுவனங்கள் முறையாக இதற்குள் வந்ததும் 4G சேவையுடன் சேர்ந்து 5G சேவையும் கிடைக்கும். ஸ்மார்ட்போன்களும் இதற்கேற்றபடி தயாரிக்கப்படும். பின்னர் 5G அடுத்தகட்டத்திற்கு செல்லும். இந்த மாற்றம் எப்படி 3G-யில் இருந்து 4G-க்கு  நாம் மாறினோமோ, அதே போலதான்." என முடித்தார்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் முனைப்பு

5G-யை தத்தமது துறைகளில் அமல்படுத்துவதற்காக அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மொபைல்போன்களுக்கான சிப்களை தயாரிக்கும் குவால்காம் 5G-யை சப்போர்ட் செய்யும் சிப்பை தயார் செய்துவிட்டது. இதனைப் பயன்படுத்துவதற்காக ஜியோமி, HTC, LG, சாம்சங் உள்பட 19 பல்வேறு மொபைல் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கிறது. எரிக்ஸன் நிறுவனமும் 5G தொழில்நுட்பத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தை வைத்து சிறிய அளவில் சோதனையையும் நடத்திமுடித்துவிட்டது. எரிக்ஸன் செல்லும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த ஆண்டு பாதியிலேயே 5G தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது. கூடிய விரைவில் 5G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களும் சந்தையில் இறங்கவிருக்கிறது.

செல்லுமிடமெல்லாம் 5G
விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? 10DLzGFRTW7ZGrZz3HsL+5g2_18196

இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் வேகமாக வளர்ந்து வருவதால் 5G-யில் இதன் பயன்பாடுதான் அதிகளவில் இருக்கும். கனெக்டட் டிவைஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, மருத்துவம், விவசாயம், போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி எனப் பல இடங்களிலும் 5G-யின் ஆதிக்கம் இருக்கும். இவையனைத்தும் இன்னும் சில ஆண்டுகளிலேயே நடக்கவிருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சர்யப்பட வேண்டிய செய்தி.

4G விளம்பரத்தில் சாஷா ஷேத்ரியை நடிக்கவைத்த ஏர்டெல் நிறுவனம், 5G-க்கான பெண்ணைத் தேடும் காலம் வெகுதொலைவில் இல்லை!

( அதில் ஓவிய நடிக்கவும் வாய்ப்பு உள்ளது )



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 15, 2018 4:45 pm

5G-க்கான அங்கீகாரம்

ITU நிர்ணயித்த தரக்கட்டுப்பாடுகளை ஏதேனும் நிறுவனங்கள் பூர்த்தி செய்துவிட்டால், தத்தமது நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப அமைப்புகள் மூலமாக அவற்றை ITU-விடம் சமர்ப்பிக்கும். பிறகு ITU-வில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவற்றை சரிபார்த்த அது முழுமையான 5G-யா என்பதை முடிவு செய்து அங்கீகாரம் வழங்குவார்கள். இந்தியாவில் ஏதேனும் நிறுவனங்கள் 5G தொழில்நுட்பத்தை வடிவமைத்துவிட்டால் அவற்றை TSDSI (Telecommunications Standards Development Society of India) மூலமாக ITU-விடம் சமர்ப்பிக்க வேண்டும். 5G-க்கான தரக்கட்டுப்பாடுகளாக ITU நிர்ணயித்தவற்றுள் இந்தியாவின் கோரிக்கையும் ஒன்று உண்டு.

விரைவில் வருகிறது இந்தியாவின் 5G தொழில்நுட்பம்... 4G-யை விடவும் இதிலென்ன விசேஷம்? Lm3ygE0AR8WH3IWw1ALA+final5g_11098

இதுவரைக்கும் இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் நகரங்களை மையப்படுத்தி மட்டுமே தங்கள் சேவைகளை வழங்கும். கிராமப்புறங்களில் அதன் தரம் குறைவாக இருக்கும். ஆனால், 5G என்பது அப்படி இல்லாமல் கிராமப்புறங்களிலும் தரமாக இருக்கவேண்டும் என இந்திய ஆராய்ச்சி மையங்கள் சார்பில் ITU-விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்திய அரசின் சார்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் 'பாரத் நெட்' இணைப்புகள் மூலமாக இவற்றை சாத்தியப்படுத்தலாம் என இந்திய விஞ்ஞானிகள் சொன்னதை ITU-வும் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே டெலிகாம் நிறுவனங்கள் இந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது 5G என ITU அங்கீகரிக்கும்.



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 15, 2018 4:49 pm

படங்கள் மற்றும் கட்டுரை விகடன் தலத்தில் இருந்து பெறப்பட்டது

நன்றி
விகடன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 15, 2018 5:57 pm

நன்றி SK ஜி
நல்ல தகவல் ஜி
2 G கேசு முடியாததால் 4 ஜி காலதாமதமாகி விட்டது.
5 ஜி குறித்த காலத்தில் வந்துவிடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக