புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லிக்கடை மீனாட்சி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாள்... விழாக்கோலம் பூண்டிருந்தது, கூடல் மாநகர்.
நகரின் மையப் பகுதியான முத்துப்பிள்ளை சந்து முனையில், இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள், 70 வயது மீனாட்சி கிழவி. உலக நடப்பு பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாது, இட்லி வியாபாரத்தில் முனைப்புடன் இருந்தாள்.
''ஏத்தா... இன்னைக்கு மீனாட்சி திருக்கல்யாணம்; மீனாட்சின்னு பேர் வச்சிட்டு, திருவிழாவுக்கு போகாம, இப்படி இட்லி கடையே கதின்னு கிடக்கறியே....'' இட்லி வாங்கிய செல்லத்தாயி, சும்மாயிராமல், கிழவியின் வாயை கிண்டினாள்.
''அடி போடி பொசகெட்டவளே... நான், அந்த மீனாட்சிய பாக்கப் போயிட்டா, அவளா இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்துவா... இல்லன்னா நீ ஊத்தப் போறியா... இந்த மீனாட்சி பாடு பட்டாதாண்டி கஞ்சி...'' என்று செல்லத்தாயியை ரெண்டு விரட்டு விரட்டவும், அவள், ''கிழவிக்கு ரோஷத்த பாரு,'' என்று சொல்லி, சிரித்தவாறு சென்று விட்டாள்.
தன், 30 வயதில், இந்த இடத்தில் இட்லி கடை போட்டவள், மீனாட்சி. தானும் ஜீவித்து, தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து, இன்றும் யாருக்கும் பிடி கொடுக்காமல், கடன் இல்லாமல், காலந்தள்ளுகிறாள்.
இட்லி கடையின் ஆவிதான் அவள் விடும் மூச்சுக்காற்று; இட்லி கடை மீனாட்சி என்றால், அந்த ஏரியாவில் உள்ள சின்னப் புள்ளைக்கும் தெரியும்.
பரபரப்பாக அவள் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மீனாட்சி கிழவியின் தங்கை மகன் கருப்பையாவும், அவன் மனைவி ஈஸ்வரியும், அவளிடம் அந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றனர்.
''ஏண்டி... புருஷனும், பொண்டாட்டியும் ஒண்ணும் பேசாம நிக்கறீங்க... என்ன விசயம்?'' என்றவாறு, ஆவி பறக்கும் இட்லியை, வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்த்தாள், கிழவி.
''பெரியம்மா... அரசரடியில, பெரியப்பன் சாகக் கிடக்கறாராம்; போன் வந்திருக்கு. ஒருமுறை போய் பாத்துட்டு வந்துடலாம்; கடையை எடுத்து வை,'' என்று பயந்தபடியே சொன்னான், கருப்பையா.
''ஆமா அத்தை... உங்க மக்கமாறு ரெண்டு பேரும் அப்பனை பாக்க போறாங்களாம், போன் வந்துச்சு,'' என்றாள், ஈஸ்வரி.
எந்த பிரதிபலிப்பையும் காட்டாமல், இட்லி சுடுவதில் கவனமாக இருந்தாள், மீனாட்சி கிழவி.
மனதிற்குள் எண்ண ஓட்டங்கள், பின்னோக்கிப் போயின...
மீனாட்சியின் கணவன் ராசு, கொத்தனார்; கட்டுமானப் பணியில் கை தேர்ந்தவன். இரண்டு பெண் குழந்தைகள் நண்டும் சிண்டுமாய் இருக்கையில், தன்னுடன் வேலை பார்த்த சித்தாள் மாயா மீது காதல் கொண்டு, அவளுடன் ஓடிப் போனான், ராசு. கடைசி வரை மீனாட்சியையும், குழந்தைகளையும் எட்டிப் பார்க்கவே இல்லை.
புருஷன்காரன் ஓடிவிட்டதால், இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாக நின்றாள், மீனாட்சி. வாழ்ந்தாக வேண்டும், இரு பெண் பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலையில், அன்று போட்ட இட்லி கடைதான், இன்றும் மீனாட்சிக்கு உயிர் கொடுக்கிறது. 40 ஆண்டு காலம் நாய் படாத பாடு... புருசன் என்ற நினைப்பே அவளுக்கு அற்றுப் போனது. கழுத்தில் தொங்கும் தாலியில்லாத மஞ்சள் கயிறு ஒன்று தான் அவள் சுமங்கலி என்பதற்கான ஒரே அடையாளம்!
கட்டுமான கான்ட்ராக்டில் பணம் தாராளமாக வரவே, மாயாவிற்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகளை கொடுத்து, அவளையும் விட்டு, கமலவள்ளி என்பவளுடன் சென்று விட்டான், ராசு.
மீனாட்சி மற்றும் மாயா போன்று ஏமாளி இல்லை, கமலவள்ளி. ஏற்கனவே ரெண்டு பெண்டாட்டி கட்டி, அவர்களை விட்டு, தன்னிடம் வந்தவன், தன்னை விட்டுப் போக மாட்டான் என்பது என்ன நிச்சயம்... என்று கருதி, அகப்பட்டதை சுருட்டுடா ஆண்டியப்பா... என்ற பாணியில், ராசுவிடமிருந்த நகை, பணம், வீட்டுப் பத்திரம் என, அனைத்தையும் சுருட்டி, எங்கோ ஓடி விட்டாள்.
பணம் மற்றும் பெண் துணையின்றி தவித்தான் ராசு. வயதும், 60ஐ, நெருங்கி விடவே, முன்னைப் போல், வேலை செய்ய முடியாமல், மதிப்பற்று, வாழ்க்கையில் சாரமற்று போனான். குடிக்க கஞ்சியின்றி, ஊத்துவார் கஞ்சிக்கு உட்காரும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது மனைவி மாயாவின் மகள் தான், இரக்கப்பட்டு, கஞ்சி ஊற்றினாள். ராசுவின் இந்நிலையை கேள்விப்பட்டாலும், அதைப் பற்றி கவலைப்படவில்லை, மீனாட்சி.
தொடரும்..............
நகரின் மையப் பகுதியான முத்துப்பிள்ளை சந்து முனையில், இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள், 70 வயது மீனாட்சி கிழவி. உலக நடப்பு பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாது, இட்லி வியாபாரத்தில் முனைப்புடன் இருந்தாள்.
''ஏத்தா... இன்னைக்கு மீனாட்சி திருக்கல்யாணம்; மீனாட்சின்னு பேர் வச்சிட்டு, திருவிழாவுக்கு போகாம, இப்படி இட்லி கடையே கதின்னு கிடக்கறியே....'' இட்லி வாங்கிய செல்லத்தாயி, சும்மாயிராமல், கிழவியின் வாயை கிண்டினாள்.
''அடி போடி பொசகெட்டவளே... நான், அந்த மீனாட்சிய பாக்கப் போயிட்டா, அவளா இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்துவா... இல்லன்னா நீ ஊத்தப் போறியா... இந்த மீனாட்சி பாடு பட்டாதாண்டி கஞ்சி...'' என்று செல்லத்தாயியை ரெண்டு விரட்டு விரட்டவும், அவள், ''கிழவிக்கு ரோஷத்த பாரு,'' என்று சொல்லி, சிரித்தவாறு சென்று விட்டாள்.
தன், 30 வயதில், இந்த இடத்தில் இட்லி கடை போட்டவள், மீனாட்சி. தானும் ஜீவித்து, தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து, இன்றும் யாருக்கும் பிடி கொடுக்காமல், கடன் இல்லாமல், காலந்தள்ளுகிறாள்.
இட்லி கடையின் ஆவிதான் அவள் விடும் மூச்சுக்காற்று; இட்லி கடை மீனாட்சி என்றால், அந்த ஏரியாவில் உள்ள சின்னப் புள்ளைக்கும் தெரியும்.
பரபரப்பாக அவள் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மீனாட்சி கிழவியின் தங்கை மகன் கருப்பையாவும், அவன் மனைவி ஈஸ்வரியும், அவளிடம் அந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றனர்.
''ஏண்டி... புருஷனும், பொண்டாட்டியும் ஒண்ணும் பேசாம நிக்கறீங்க... என்ன விசயம்?'' என்றவாறு, ஆவி பறக்கும் இட்லியை, வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்த்தாள், கிழவி.
''பெரியம்மா... அரசரடியில, பெரியப்பன் சாகக் கிடக்கறாராம்; போன் வந்திருக்கு. ஒருமுறை போய் பாத்துட்டு வந்துடலாம்; கடையை எடுத்து வை,'' என்று பயந்தபடியே சொன்னான், கருப்பையா.
''ஆமா அத்தை... உங்க மக்கமாறு ரெண்டு பேரும் அப்பனை பாக்க போறாங்களாம், போன் வந்துச்சு,'' என்றாள், ஈஸ்வரி.
எந்த பிரதிபலிப்பையும் காட்டாமல், இட்லி சுடுவதில் கவனமாக இருந்தாள், மீனாட்சி கிழவி.
மனதிற்குள் எண்ண ஓட்டங்கள், பின்னோக்கிப் போயின...
மீனாட்சியின் கணவன் ராசு, கொத்தனார்; கட்டுமானப் பணியில் கை தேர்ந்தவன். இரண்டு பெண் குழந்தைகள் நண்டும் சிண்டுமாய் இருக்கையில், தன்னுடன் வேலை பார்த்த சித்தாள் மாயா மீது காதல் கொண்டு, அவளுடன் ஓடிப் போனான், ராசு. கடைசி வரை மீனாட்சியையும், குழந்தைகளையும் எட்டிப் பார்க்கவே இல்லை.
புருஷன்காரன் ஓடிவிட்டதால், இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாக நின்றாள், மீனாட்சி. வாழ்ந்தாக வேண்டும், இரு பெண் பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலையில், அன்று போட்ட இட்லி கடைதான், இன்றும் மீனாட்சிக்கு உயிர் கொடுக்கிறது. 40 ஆண்டு காலம் நாய் படாத பாடு... புருசன் என்ற நினைப்பே அவளுக்கு அற்றுப் போனது. கழுத்தில் தொங்கும் தாலியில்லாத மஞ்சள் கயிறு ஒன்று தான் அவள் சுமங்கலி என்பதற்கான ஒரே அடையாளம்!
கட்டுமான கான்ட்ராக்டில் பணம் தாராளமாக வரவே, மாயாவிற்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகளை கொடுத்து, அவளையும் விட்டு, கமலவள்ளி என்பவளுடன் சென்று விட்டான், ராசு.
மீனாட்சி மற்றும் மாயா போன்று ஏமாளி இல்லை, கமலவள்ளி. ஏற்கனவே ரெண்டு பெண்டாட்டி கட்டி, அவர்களை விட்டு, தன்னிடம் வந்தவன், தன்னை விட்டுப் போக மாட்டான் என்பது என்ன நிச்சயம்... என்று கருதி, அகப்பட்டதை சுருட்டுடா ஆண்டியப்பா... என்ற பாணியில், ராசுவிடமிருந்த நகை, பணம், வீட்டுப் பத்திரம் என, அனைத்தையும் சுருட்டி, எங்கோ ஓடி விட்டாள்.
பணம் மற்றும் பெண் துணையின்றி தவித்தான் ராசு. வயதும், 60ஐ, நெருங்கி விடவே, முன்னைப் போல், வேலை செய்ய முடியாமல், மதிப்பற்று, வாழ்க்கையில் சாரமற்று போனான். குடிக்க கஞ்சியின்றி, ஊத்துவார் கஞ்சிக்கு உட்காரும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது மனைவி மாயாவின் மகள் தான், இரக்கப்பட்டு, கஞ்சி ஊற்றினாள். ராசுவின் இந்நிலையை கேள்விப்பட்டாலும், அதைப் பற்றி கவலைப்படவில்லை, மீனாட்சி.
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
''கிழவிக்கு என்னா வைராக்கியம் பாரு... என்னதான் இருந்தாலும், தாலி கட்டின புருசன் சாகக் கிடக்கிறான்; போய் பாக்காம இருக்கலாமா,'' என்றாள், செல்லத்தாயி.
''எந்த ஆம்பிள ஒழுங்கா இருக்கான்... இம்புட்டு வயசாச்சு, ஆனாலும் கிழவிக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்கக் கூடாது,'' என்றாள், இன்னொருத்தி.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, ''எந்த ஆம்பிள தப்பு பண்ணாம இருக்கான்னு, ஒரு தப்பை நியாயப்படுத்தி பேசுறீகளே... மீனாட்சி அத்தை, 40 வருஷமா ஒத்தையாயிருந்து மல்லாடிக் கிட்டிருக்கே... இதே தெருவில் பல வருஷமா குடியிருக்கிற உங்களுக்கு தெரியாதா... ஒரு கெட்ட சொல் வாங்கியிருக்குமா... இந்த காலத்தில, புருசன் சரியில்லன்னா, இன்னொருத்தன தேடிக்கிறாளுக... யாருக்கு பயந்து, கிழவி ஒழுக்கமா வாழ்ந்தா... மனசுக்குள் இருக்கற வைராக்கியத்தால தானே வாழ்ந்தா... அதை குறைச்சு பேசுறீங்களே...'' என்றாள்.
புரணி பேசிய பெண்கள் பேச்சடங்கினர்.அன்று மாலை, ராசு இறந்து விட்டார் என்ற செய்தி, மீனாட்சி கிழவிக்கு வந்தது.
'இப்பவாவது, புருசன் செத்த எழவிற்கு கிழவி போகுதான்னு பார்ப்போம்...' என்று, மீனாட்சியின் வீட்டிற்கு வேவு பார்க்கச் சென்றனர், அத்தெரு பெண்கள் இருவர். புருசன் செத்தது அறிந்து, ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை மீனாட்சி கிழவி. எண்ணெய் தேய்த்து தலை முழுகியவள், என்ன நினைத்தாளோ, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை கழற்றி, வெறுப்புடன் வீசியெறிந்தாள்.
குளித்து, தலை முடியை அள்ளி முடித்து, சுங்குடி சேலையொன்றை கட்டி, வெளியே கிளம்பினாள். மவுனமாக, கிழவியை வேடிக்கை பார்த்தனர், தெருவாசிகள். மாசி வீதியை நோக்கி அவள் வந்த போது, திருக்கல்யாணம் வைபவம் முடிந்து, நகர்வலம் வந்து கொண்டிருந்தாள், அன்னை மீனாட்சி. மீனாட்சியம்மையின் தரிசனத்திற்காக, கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்திற்குள் செல்லாமல், ஒரு கணம் நின்றவள், அம்மன் வரும் திசையை நோக்கி, கையெடுத்து கும்பிட்டு, கடை வீதியை நோக்கி, திரும்பி நடந்தாள்.
மஞ்சள், குங்குமம், மாங்கல்ய பாக்கியத்துடன் நகர்வலம் வரும் மீனாட்சியை அவள் தரிசிக்க விரும்பவில்லை.
மளிகைக் கடையில், இட்லிக்கான அரிசி, உளுந்து, பலசரக்கு சாமான்களை வாங்கியபடி வீட்டிற்கு நடையை கட்டினாள்.
மறுநாள் காலை, எவ்வித பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாமல், வழக்கம் போல் இட்லி கடையை திறந்தாள். 40 ஆண்டுகள் நெறி பிறழாது வாழ்ந்து காட்டிய மீனாட்சி கிழவி, ஒவ்வொரு பெண்ணிற்கும் சுய சார்பை, தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்து விட்டாள். இளமையானாலும், முதுமையானாலும், ஒரு பெண்ணிற்கு தேவையான வலிமையும், உதவியும் அவளுக்குள்ளேயே உள்ளது என்பதை, தன் வாழ்க்கையின் மூலம் சக பெண்களுக்கு உணர்த்தி விட்டாள், மீனாட்சி கிழவி!
மு.சுந்தரம்
''எந்த ஆம்பிள ஒழுங்கா இருக்கான்... இம்புட்டு வயசாச்சு, ஆனாலும் கிழவிக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்கக் கூடாது,'' என்றாள், இன்னொருத்தி.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, ''எந்த ஆம்பிள தப்பு பண்ணாம இருக்கான்னு, ஒரு தப்பை நியாயப்படுத்தி பேசுறீகளே... மீனாட்சி அத்தை, 40 வருஷமா ஒத்தையாயிருந்து மல்லாடிக் கிட்டிருக்கே... இதே தெருவில் பல வருஷமா குடியிருக்கிற உங்களுக்கு தெரியாதா... ஒரு கெட்ட சொல் வாங்கியிருக்குமா... இந்த காலத்தில, புருசன் சரியில்லன்னா, இன்னொருத்தன தேடிக்கிறாளுக... யாருக்கு பயந்து, கிழவி ஒழுக்கமா வாழ்ந்தா... மனசுக்குள் இருக்கற வைராக்கியத்தால தானே வாழ்ந்தா... அதை குறைச்சு பேசுறீங்களே...'' என்றாள்.
புரணி பேசிய பெண்கள் பேச்சடங்கினர்.அன்று மாலை, ராசு இறந்து விட்டார் என்ற செய்தி, மீனாட்சி கிழவிக்கு வந்தது.
'இப்பவாவது, புருசன் செத்த எழவிற்கு கிழவி போகுதான்னு பார்ப்போம்...' என்று, மீனாட்சியின் வீட்டிற்கு வேவு பார்க்கச் சென்றனர், அத்தெரு பெண்கள் இருவர். புருசன் செத்தது அறிந்து, ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை மீனாட்சி கிழவி. எண்ணெய் தேய்த்து தலை முழுகியவள், என்ன நினைத்தாளோ, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை கழற்றி, வெறுப்புடன் வீசியெறிந்தாள்.
குளித்து, தலை முடியை அள்ளி முடித்து, சுங்குடி சேலையொன்றை கட்டி, வெளியே கிளம்பினாள். மவுனமாக, கிழவியை வேடிக்கை பார்த்தனர், தெருவாசிகள். மாசி வீதியை நோக்கி அவள் வந்த போது, திருக்கல்யாணம் வைபவம் முடிந்து, நகர்வலம் வந்து கொண்டிருந்தாள், அன்னை மீனாட்சி. மீனாட்சியம்மையின் தரிசனத்திற்காக, கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்திற்குள் செல்லாமல், ஒரு கணம் நின்றவள், அம்மன் வரும் திசையை நோக்கி, கையெடுத்து கும்பிட்டு, கடை வீதியை நோக்கி, திரும்பி நடந்தாள்.
மஞ்சள், குங்குமம், மாங்கல்ய பாக்கியத்துடன் நகர்வலம் வரும் மீனாட்சியை அவள் தரிசிக்க விரும்பவில்லை.
மளிகைக் கடையில், இட்லிக்கான அரிசி, உளுந்து, பலசரக்கு சாமான்களை வாங்கியபடி வீட்டிற்கு நடையை கட்டினாள்.
மறுநாள் காலை, எவ்வித பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாமல், வழக்கம் போல் இட்லி கடையை திறந்தாள். 40 ஆண்டுகள் நெறி பிறழாது வாழ்ந்து காட்டிய மீனாட்சி கிழவி, ஒவ்வொரு பெண்ணிற்கும் சுய சார்பை, தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்து விட்டாள். இளமையானாலும், முதுமையானாலும், ஒரு பெண்ணிற்கு தேவையான வலிமையும், உதவியும் அவளுக்குள்ளேயே உள்ளது என்பதை, தன் வாழ்க்கையின் மூலம் சக பெண்களுக்கு உணர்த்தி விட்டாள், மீனாட்சி கிழவி!
மு.சுந்தரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261375SK wrote:எனக்கும் இதே போல ஒரு பெண் தெரியும்
தனது ஒரே ஆன் பிள்ளைக்காக மட்டுமே வாழ்ந்தவர்
இன்று நானும் அவரை நிர்கதியாய் விட்டுவிட்டு விட்டுவிட்டு வந்துட்டேன்
ஆனாலும் வைராக்கியம் குறையாம வாழ்கிறார் என் அம்மா
![]()
![]()
உங்களுக்கு என்ன பதில் போடுவது என்று தெரியாமல் ஒருவாரமாக மௌனமாக இருந்தேன் செந்தில்...........இன்றும் தெரியவில்லைதான், என்றாலும் நான் என் பதிவுகளுக்கான பதில் போடாமல் இருந்தது கிடையாது ...அது தான் .......ஜஸ்ட் ஒரு பதில் போட வந்தேன் ! ........சோ சாரி செந்தில் !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|