புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
106 Posts - 65%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
6 Posts - 4%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 26 Apr 2019 - 18:33

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -146

குறள் மூலம்-சிறப்புரையாக்கம்- பேராசிரியர்-நா. பாலுச்சாமி-மதுரை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்


தெளிவுரை
பிறர் மனைவியை விரும்புபவனிடம் பகை, பாவம், பயம், பழி
ஆகிய நான்கு குற்றங்களும் ஒருங்கே வந்து சேரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகை/பா/வம்--------- அச்/சம்------- பழி/யென/--------- நான்/கும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா--------கருவிளம்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


இக/வா/வாம்-------- இல்/லிறப்/பான்------- கண்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்---------நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கண்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-வாவாம் –பகைபாவம்
மோனை- கைபாவம்-ழியென, கவாவாம் -ல்லிறப்பான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 26 Apr 2019 - 18:39

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -147

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்


தெளிவுரை
பிறன் மனைவியை விரும்பாத ஒருவனே உண்மையில்
அறநெறியில் ஒழுகும் இல்லறத்தான் ஆவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னிய/லான்-------- இல்/வாழ்/வான்------ என்/பான்----- பிற/னிய/லான்
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்------------தேமா------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பெண்/மை------ நய/வா------- தவன்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னியலான்- பினியலான்
மோனை- பிறனியலான்- பெண்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 26 Apr 2019 - 18:47

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -148

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு


தெளிவுரை
பிறன் மனைவியை மனத்தாலும் நினையாத ஆண்மையே
அறிவுடையோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/மனை------நோக்/கா/த------- பே/ராண்/மை-------சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை


கற/னொன்/றோ------ ஆன்/ற------ ஒழுக்/கு
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்மனை- கனொன்றோ, சான்றோர்க்
மோனை- பிறன்மனை- பேராண்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 27 Apr 2019 - 12:04

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -149

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நலக்குரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்


தெளிவுரை
ஒருவனுக்கு உரிய மனையாளை மனத்தாலும் விரும்பாத அறிவுடையோரே எல்லா நன்மைகளையும் அடையத்தக்க சிறப்புக்குரியர்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நலக்/குரி/யர்---------- யா/ரெனின்----- நா/ம/நீர்----------- வைப்/பில்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்---------கூவிளம்-------------தேமாங்காய்-----தேமா
வெண்சீர் --------------- இயற்சீர் ------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பிறர்க்/குரி/யாள்------தோள்/தோ/யா-----தார்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------நாள்
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாரெனின்- தார்
மோனை- லக்குரியர் - நாமநீர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 27 Apr 2019 - 12:13

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -150

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று


தெளிவுரை
அறநெறி தவறிப் பாவச் செயல் பல செய்தாலும், பிறன் மனையாளை விரும்பாமை ஒன்றே ஒருவனை வாழ்விக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/வரை/யான்------ அல்/ல--------- செயி/னும்---------- பிறன்/வரை/யான்
நிரை/நிரை/நேர்----------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------தேமா-------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பெண்/மை-------நய/வா/மை ---------நன்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/பு
தேமா-----------------புளிமாங்காய்--------காசு
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ன்வரையான்- பின்வரையான்
மோனை- றன்வரையான் -ல்ல , யவாமை –ன்று, பிறன்வரையான்- பெண்மை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 10 May 2019 - 12:24

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


தெளிவுரை
பூமி தன்னை வெட்டிச் சிதைப்போரையும் தாங்கிக் கொள்கிறது;
அது போலத் தம்மை நிந்திப்போரையும் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அகழ்/வா/ரைத்-----தாங்/கும்-------- நிலம்/போ/லத்----தம்/மை
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


இகழ்/வார்ப்----- பொறுத்/தல்--- தலை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை
புளிமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழ்வாரைத்- இழ்வார்ப், நிம்போலத்- தலை
மோனை- -ம்மை- லை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 10 May 2019 - 12:33

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -152

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று


தெளிவுரை
தனக்குச் செய்யப்படும் தீங்கினை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனைவிட அச்செயலையே மறந்து விடல் வேண்டும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பொறுத்/தல்---- இறப்/பினை----- என்/றும்--------- அத/னை
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


மறத்/தல்---------- அத/னினும்------- நன்று
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-ப்பினை- மத்தல் , அனை- அனினும் , என்றும்- நன்று
மோனை- தனை- தனினும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 10 May 2019 - 12:44

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -153

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாமை வறுமையிலும் வறுமையாகும்;அதுபோல அறிவில்லாதார் செய்யும் குற்றத்தைப் பொறுத்தல் வலிமையுள் வலிமையாகும்.


குறள்-------------------அசை--------------சீர்-வாய்ப்பாடு--------தளை

இன்/மையுள்----- இன்/மை-------- விருந்/தொரால்---- வன்/மையுள்
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நிரை------------நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------கருவிளம்----------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை


வன்/மை---------- மட/வார்ப்------பொறை
நேர்/நேர்-----------நிரை/நேர்----நிரை
தேமா-----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்மையுள் –இன்மை- வன்மையுள்- வன்மை
மோனை- ன்மையுள் –ன்மை ,ன்மையுள்- ன்மை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 May 2019 - 17:53

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -154

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்


தெளிவுரை
முழுமனிதப் பண்பைப் பாதுகாக்க விரும்பும் ஒருவன்
பொறுமையைக் கண்போல் காத்தல் வேண்டும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நிறை/யுடை/மை-----நீங்/கா/மை---------வேண்/டின்-----பொறை/யுடை/மை
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் --------------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை


போற்/றி---------- ஒழு/கப்---------- படும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நிறையுடைமை- பொறையுடைமை
மோனை- நிறையுடைமை –நீங்காமை , பொறையுடைமை- போற்றி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 May 2019 - 18:01

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -155

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து


தெளிவுரை
தமக்குத் துன்பம் செய்தாருக்குத் திரும்பத் துன்பம் செய்தவர்களை உலகம் மதிக்காது; ஆயின், பொறுமைசாலிகளைப் பொன்போல் போற்றும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒறுத்/தா/ரை------- ஒன்/றா/க---------- வை/யா/ரே--------- வைப்/பர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்  
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமாங்காய்---------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை----- வெண்டளை


பொறுத்/தா/ரைப்---- பொன்/போற்----- பொதிந்/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------------நிரை/பு
புளிமாங்காய்------------தேமா--------------------புளிமா
வெண்சீர்  -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொதிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றுத்தாரை- பொறுத்தாரைப் , ஒன்றாக- பொன்போற்
மோனை- றுத்தாரை -ன்றாக ,வையாரே –வைப்பர் ,
     பொறுத்தாரைப் –பொன்போற்- பொதிந்து


Sponsored content

PostSponsored content



Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக