புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 9 of 12 •
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
02.03.2018
திடீர்னு ‘யாரு இவரு கண்டுபுடிங்க’ பகுதியில வைஜெயந்திமாலா எங்கேயிருந்து, ஏன் மொளச்சாங்க?
வைஜெயந்திமாலா
“ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே, ஜெகத்தை மயக்கிடுவேனே”
இது மறக்க கூடிய பாட்டா? மறக்க கூடிய டான்ஸா? அடேங்கப்பா. ஆடலழகி. ஹிந்தி சினிமாவில நம்பர் ஒன் நடிகை. பாரத நாட்டிய கலைஞர். கர்னாடக இசை பாடகர். நடன வடிவமைப்பாளர்.
இவரோட அப்பாவும், அம்மாவோட அம்மாவும்தான் இவரை வளத்தாங்க. ஏன்னா, இவர் பிறந்தப்போ, இவங்க அம்மாவுக்கு 16 வயசுதானாம். அதனால புள்ளைய வழக்க தெரியலேன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல. அப்போ அவர் சினிமாவில பிஸியா இருந்தாராம், அந்த வயசிலேயே.
MV ராமன்னு ஒரு சினிமா டைரக்டர். இவர் சென்னைல வைஜெயந்தியின் பரதநாட்டிய கச்சேரி ஒண்ண பாத்திருக்கார். டைரக்டருக்கு அவரை புடிச்சு போச்சு. AVM வாழ்க்கைன்னு ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்துச்சு. MVR ரெகமண்டேஷன்ல வைஜெயந்தி வாழ்க்கை [1949] படத்தில ஒப்பந்தமானார். இந்தப் படம் ஓஹோ...............ன்னு ஓடுச்சு.
ஹிந்திலயும் ரீமேக் செய்யப்பட்டதால, வைஜயந்தியின் நடிப்பும், டான்ஸும் வட இந்தியர்களை கவர்ந்தது. இந்தப் படம் அந்த வருஷத்தில வசூலை அள்...................ளி குடுத்துச்சு. அதனால AVMஇன் அடுத்த இரு மொழி படங்கள்லேயும் வைஜெயந்திக்கு சான்ஸ் கெடச்சுது. வரூ............சயா ஹிந்தி படத்தில நடிக்க போயிட்டார். அப்புறமா மறுபடியும் வஞ்சிக்கோட்டை வாலிபன் [1958] படத்தின் மூலமா தமிழுக்கு வந்துட்டார். ஹிந்தீலயும், தமிழ்லயும் போயிட்டு வந்தா............ர், வந்துட்டு போனார்.
தமிழ்ல 12, தெலுங்கில 2, வங்காளத்தில 1, ஹிந்தில 19 படங்கள் நடிச்சிருக்கார்.
இவர் நடிச்ச 12 தமிழ் படங்கள்ல பாட்டாளியின் சபதம்[1958], வாழ்க்கை[1949], பெண்[1954], அதிசய பெண்[1959], இரும்புத்திரை[1960], தேன் நிலவு[1961] இந்த படங்கள்லாம் சமூக கதை படங்கள்.
மர்மவீரன்[1956], வஞ்சிக்கோட்டை வாலிபன்[1959], ராஜபக்தி[1960], பாக்தாத் திருடன்[1960], பார்த்திபன் கனவு[1960], சித்தூர் ராணி பத்மினி[1963] இந்த படங்கள் ராஜா ராணி கதை படங்கள்.
வாழ்க்கை, தேன்நிலவு இந்த ரெண்டு படங்களும் நூறு நாள் ஓடுச்சு. இரும்புத்திரை 175 நாள் ஓடுச்சு. தமிழ்ல, கலர் படத்தில வைஜயந்தி நடிக்கல. அதிசய பெண் படத்தில பாட்டு மட்டும் கலர்ல வந்துச்சாமே.
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில “கண்ணும் கண்ணும் கலந்து” போட்டி பாட்டின் கடேசில, யாராவது ஒருத்தர் தோக்கணும். ஆனா அதுக்கு வைஜயந்தியின் பாட்டியும், பத்மினியின் அம்மாவும் ஒத்துக்கலியாம். அதனால படத்தில யாரும் ஜெயிச்ச மாதிரியும் இல்ல, தோத்த மாதிரியும் இல்லேல்ல. SS வாசன் சாமர்த்தியமா, ரெண்டு பேரும் வருத்தப்படாதபடி முடிச்சிருவார்.
வைஜயந்தி நடத்திட்டு இருந்த நடன குழுவில வேதா ஆர்மோனியம் வாசிச்சுட்டு இருந்தாராம். மர்ம வீரன் படத்தில வைஜயந்தி நடிச்சிட்டு இருக்கும்போது, இவர்தான் அந்த படத்துக்கு வேதாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தாராம்.
வேதாவுக்கு வைஜெயந்தியாலதான் சினிமாவுல முதல் சான்ஸ் கெடச்சுதா? எவ்ளோ................... தகவல் புதுசு புதுசா.................... கெடக்குது!!!
இரும்புத்திரை படத்தில வசுந்தராதேவியும், வைஜயந்தியும் அம்மா மகளாக நடிச்சாங்களாம்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷிய பிரதமர் புல்கானின், யூக்கோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் இவங்கல்லாம் இந்தியாவுக்கு வந்தப்போ, இந்திய அரசாங்கம் அவங்களுக்கு கொடுத்த வரவேற்பு விழாவில, வைஜெயந்தி டான்ஸ் இருந்துச்சாம்.
வைஜெந்தியுடன் நடிச்ச ஹீரோ :
MGR [பாக்தாத் திருடன்], சிவாஜி [சித்தூர் ராணி பத்மினி, இரும்புத்திரை, ராஜபக்தி], ஜெமினி கணேசன் [வஞ்சிக்கோட்டை வாலிபன், பெண், பார்த்திபன் கனவு, தேன்நிலவு], A நாகேஸ்வரராவ் [அதிசயப்பெண்], ஸ்ரீராம் [மர்ம வீரன்], TR ராமச்சந்திரன் [வாழ்க்கை].
இவர் வாங்கிய விருதுகள் :
பத்மஸ்ரீ [1968], தமிழக அரசின் கலைமாமணி விருது [1979], பாரத நாட்டியத்தில இவரின் பங்களிப்புக்கு சங்கீத நாடக அகாடமி விருது [1982], தியாகராஜ பாகவதர் விருது [2001], வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது [2002]
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை, 1998ல ப்ரிட்டிஷ் ஏஷியன் திரைப்பட விழாலயும், 2006ல பூனே சர்வதேச திரை விழாலயும், 2012ல பெங்களூர் சர்வதேச திரை விழாலயும் வாங்கினார்.
ஃபிலிம்ஃபேர் விருது [ஹிந்தி] : தேவதாஸ் 1956, சாதனா & மதுமதி 1958, கங்கா ஜமுனா & சங்கம் 1961, வாழ்நாள் சாதனையாளர் விருது 1996.
அகினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருது 2008.
- சினிமா எக்ஸ்ப்ரெஸ்
- இது தமிழ்
Heezulia
திடீர்னு ‘யாரு இவரு கண்டுபுடிங்க’ பகுதியில வைஜெயந்திமாலா எங்கேயிருந்து, ஏன் மொளச்சாங்க?
வைஜெயந்திமாலா
“ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே, ஜெகத்தை மயக்கிடுவேனே”
இது மறக்க கூடிய பாட்டா? மறக்க கூடிய டான்ஸா? அடேங்கப்பா. ஆடலழகி. ஹிந்தி சினிமாவில நம்பர் ஒன் நடிகை. பாரத நாட்டிய கலைஞர். கர்னாடக இசை பாடகர். நடன வடிவமைப்பாளர்.
இவரோட அப்பாவும், அம்மாவோட அம்மாவும்தான் இவரை வளத்தாங்க. ஏன்னா, இவர் பிறந்தப்போ, இவங்க அம்மாவுக்கு 16 வயசுதானாம். அதனால புள்ளைய வழக்க தெரியலேன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல. அப்போ அவர் சினிமாவில பிஸியா இருந்தாராம், அந்த வயசிலேயே.
MV ராமன்னு ஒரு சினிமா டைரக்டர். இவர் சென்னைல வைஜெயந்தியின் பரதநாட்டிய கச்சேரி ஒண்ண பாத்திருக்கார். டைரக்டருக்கு அவரை புடிச்சு போச்சு. AVM வாழ்க்கைன்னு ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்துச்சு. MVR ரெகமண்டேஷன்ல வைஜெயந்தி வாழ்க்கை [1949] படத்தில ஒப்பந்தமானார். இந்தப் படம் ஓஹோ...............ன்னு ஓடுச்சு.
ஹிந்திலயும் ரீமேக் செய்யப்பட்டதால, வைஜயந்தியின் நடிப்பும், டான்ஸும் வட இந்தியர்களை கவர்ந்தது. இந்தப் படம் அந்த வருஷத்தில வசூலை அள்...................ளி குடுத்துச்சு. அதனால AVMஇன் அடுத்த இரு மொழி படங்கள்லேயும் வைஜெயந்திக்கு சான்ஸ் கெடச்சுது. வரூ............சயா ஹிந்தி படத்தில நடிக்க போயிட்டார். அப்புறமா மறுபடியும் வஞ்சிக்கோட்டை வாலிபன் [1958] படத்தின் மூலமா தமிழுக்கு வந்துட்டார். ஹிந்தீலயும், தமிழ்லயும் போயிட்டு வந்தா............ர், வந்துட்டு போனார்.
தமிழ்ல 12, தெலுங்கில 2, வங்காளத்தில 1, ஹிந்தில 19 படங்கள் நடிச்சிருக்கார்.
இவர் நடிச்ச 12 தமிழ் படங்கள்ல பாட்டாளியின் சபதம்[1958], வாழ்க்கை[1949], பெண்[1954], அதிசய பெண்[1959], இரும்புத்திரை[1960], தேன் நிலவு[1961] இந்த படங்கள்லாம் சமூக கதை படங்கள்.
மர்மவீரன்[1956], வஞ்சிக்கோட்டை வாலிபன்[1959], ராஜபக்தி[1960], பாக்தாத் திருடன்[1960], பார்த்திபன் கனவு[1960], சித்தூர் ராணி பத்மினி[1963] இந்த படங்கள் ராஜா ராணி கதை படங்கள்.
வாழ்க்கை, தேன்நிலவு இந்த ரெண்டு படங்களும் நூறு நாள் ஓடுச்சு. இரும்புத்திரை 175 நாள் ஓடுச்சு. தமிழ்ல, கலர் படத்தில வைஜயந்தி நடிக்கல. அதிசய பெண் படத்தில பாட்டு மட்டும் கலர்ல வந்துச்சாமே.
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில “கண்ணும் கண்ணும் கலந்து” போட்டி பாட்டின் கடேசில, யாராவது ஒருத்தர் தோக்கணும். ஆனா அதுக்கு வைஜயந்தியின் பாட்டியும், பத்மினியின் அம்மாவும் ஒத்துக்கலியாம். அதனால படத்தில யாரும் ஜெயிச்ச மாதிரியும் இல்ல, தோத்த மாதிரியும் இல்லேல்ல. SS வாசன் சாமர்த்தியமா, ரெண்டு பேரும் வருத்தப்படாதபடி முடிச்சிருவார்.
வைஜயந்தி நடத்திட்டு இருந்த நடன குழுவில வேதா ஆர்மோனியம் வாசிச்சுட்டு இருந்தாராம். மர்ம வீரன் படத்தில வைஜயந்தி நடிச்சிட்டு இருக்கும்போது, இவர்தான் அந்த படத்துக்கு வேதாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தாராம்.
வேதாவுக்கு வைஜெயந்தியாலதான் சினிமாவுல முதல் சான்ஸ் கெடச்சுதா? எவ்ளோ................... தகவல் புதுசு புதுசா.................... கெடக்குது!!!
இரும்புத்திரை படத்தில வசுந்தராதேவியும், வைஜயந்தியும் அம்மா மகளாக நடிச்சாங்களாம்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷிய பிரதமர் புல்கானின், யூக்கோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் இவங்கல்லாம் இந்தியாவுக்கு வந்தப்போ, இந்திய அரசாங்கம் அவங்களுக்கு கொடுத்த வரவேற்பு விழாவில, வைஜெயந்தி டான்ஸ் இருந்துச்சாம்.
வைஜெந்தியுடன் நடிச்ச ஹீரோ :
MGR [பாக்தாத் திருடன்], சிவாஜி [சித்தூர் ராணி பத்மினி, இரும்புத்திரை, ராஜபக்தி], ஜெமினி கணேசன் [வஞ்சிக்கோட்டை வாலிபன், பெண், பார்த்திபன் கனவு, தேன்நிலவு], A நாகேஸ்வரராவ் [அதிசயப்பெண்], ஸ்ரீராம் [மர்ம வீரன்], TR ராமச்சந்திரன் [வாழ்க்கை].
இவர் வாங்கிய விருதுகள் :
பத்மஸ்ரீ [1968], தமிழக அரசின் கலைமாமணி விருது [1979], பாரத நாட்டியத்தில இவரின் பங்களிப்புக்கு சங்கீத நாடக அகாடமி விருது [1982], தியாகராஜ பாகவதர் விருது [2001], வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது [2002]
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை, 1998ல ப்ரிட்டிஷ் ஏஷியன் திரைப்பட விழாலயும், 2006ல பூனே சர்வதேச திரை விழாலயும், 2012ல பெங்களூர் சர்வதேச திரை விழாலயும் வாங்கினார்.
ஃபிலிம்ஃபேர் விருது [ஹிந்தி] : தேவதாஸ் 1956, சாதனா & மதுமதி 1958, கங்கா ஜமுனா & சங்கம் 1961, வாழ்நாள் சாதனையாளர் விருது 1996.
அகினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருது 2008.
- சினிமா எக்ஸ்ப்ரெஸ்
- இது தமிழ்
Heezulia
- GuestGuest
வைஜெயந்திமாலா எங்கிருந்தோ முளைக்கவில்லை. நீங்கள் அங்கே எழுதிய பதிவில் அவர் பற்றி தொடக்கத்தில் எழுதியதன் விளைவே அவர் முளைத்திருக்கிறார் அல்லது மொளச்சாங்க
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
02.03.2018
Feb 19ல லட்மிசுயை பற்றி எழுதி, யார்னு கேட்டேன். அதுக்கு பாலு சார் வைஜெயந்திமாலாவான்னு கேட்டாரு. அப்புறமா Dewaar ஹிந்தி படத்தில வைஜெயந்தி கமல் / ரஜினி கூட நடிக்க இருந்ததா சொல்லி, அந்த மேட்டர் Feb 20ஆம் தேதியோ............டு முடிஞ்சிருச்சு. இப்ப போயி, இத்தன நாள் கழிச்சி, திடீர்னு அவர் நடிச்ச படங்கள்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம section மாறி வந்திருக்கேன்னு கேட்டேன்.
இதை சொல்றீங்களே, நான் எழுதியது எப்டி இருக்கூன்னு ஒரு வார்த்த, ஒரு வார்த்தயாவது சொன்னீஹளா? இல்லியே.
உங்க பேச்சு கா மூர்த்தி.
Heezulia
Feb 19ல லட்மிசுயை பற்றி எழுதி, யார்னு கேட்டேன். அதுக்கு பாலு சார் வைஜெயந்திமாலாவான்னு கேட்டாரு. அப்புறமா Dewaar ஹிந்தி படத்தில வைஜெயந்தி கமல் / ரஜினி கூட நடிக்க இருந்ததா சொல்லி, அந்த மேட்டர் Feb 20ஆம் தேதியோ............டு முடிஞ்சிருச்சு. இப்ப போயி, இத்தன நாள் கழிச்சி, திடீர்னு அவர் நடிச்ச படங்கள்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம section மாறி வந்திருக்கேன்னு கேட்டேன்.
இதை சொல்றீங்களே, நான் எழுதியது எப்டி இருக்கூன்னு ஒரு வார்த்த, ஒரு வார்த்தயாவது சொன்னீஹளா? இல்லியே.
உங்க பேச்சு கா மூர்த்தி.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
13.03.2018
விந்தன்
நெஜமான பேரு கோவிந்தன். ஆறாங்க்ளாஸ் வரைக்கும்தான் படிச்சார். குடும்பச் சூழல். மேல படிக்க முடியல. அப்பாகூட கூலி வேலைக்கு போனார். இந்த வேலைல்லாம் செய்ய பிடிக்கல கோவிந்தனுக்கு. ஆனாலும் ஒரு கட்டாயம். அவர் அப்பாவுக்கு, மகன் படிக்க ஆசைப்பட்றது தெரிஞ்சுது. சரீன்னுட்டு நைட் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டார்.
அப்புறமா மகனுக்கு ட்ராயிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்கிறது தெரிஞ்சுது. சென்னை ஓவியக் கல்லூரில சேர்த்தார். ஆனா அங்கேயும் தொடர்ந்து படிக்க வசதியில்லாம போச்சு. குடும்பத்தை வேற காப்பாத்தணுமே. என்ன செய்யலாம்? தமிழரசு பிரிண்ட்டிங் ப்ரெஸ்ல போய் சேந்துட்டார். அங்க என்ன வேல..............? அச்சு கோக்கிற வேல. கொஞ்ச நாளாச்சு. இங்கிருந்து அவருக்கு transfer.
எங்க.............? ஆனந்த விகடன் ப்ரஸ்ல. இங்கயும் கோக்குற வேலைதான்.
கல்கியின் கையெழுத்து கடவுளுக்கும், கல்கிக்கும் தவிர வேற யா..............ருக்கும் புரியாதுன்னு கல்கியே சொல்லியிருக்காராம். அவர் எழுத்தையே விந்தன் கம்போஸ் செஞ்சுர்வாராம். இது கல்கீக்கு ஆச்சரியமா இருந்துச்சாம். இங்க வேல செஞ்சுட்டே.......... சுதேசமித்திரன் இதழுக்கு கவிதைல்லாம் எழுதினார், கோவிந்தன். ஏன்னு தெரியல, அங்க இருந்து கல்கி பிரஸ்ஸுக்கு போயிட்டார்.
இதென்ன, ப்ரெஸ் ப்ரெஸ்ஸா இப்டி அலைறாரு.
இங்க இருந்துட்டே, கல்கி வார இதழ்ல பாப்பாங்களுக்கான குட்டி குட்டி........ கதைங்க, அறிவுக்களஞ்சிய கட்டுரைங்க எழுதினார். எந்த பேர்ல எழுதினார். பொம்பள பேர்ல. அது யார் பேரோ தெரியல. விஜி. இந்த பேர்லதான் பாப்பா மலர்ல எழுதினார். இதை படிச்சவங்களுக்கு பிடிச்சுபோச்சு. கல்கி ஆசிரியருக்கும். அவர் கோவிந்தனை பாராட்டி, விஜிங்க்ற பேரை, விந்தன்னு மாத்தினதோடு விடாம, கல்கி இதழின் ஆசிரியர்களோட ஆசிரியரா இவரையும் சேத்துகிட்டார், கல்கி கிருஷ்ணமூர்த்தி. துணை ஆசிரியரா கொஞ்ச நாள் இருந்திருக்கார்.
பாட்டாளி மக்களின் கஷ்டங்களை, எளிய தமிழ்ல எழுதினார். சரித்திர நாவல் எழுதலியாம். ஆனா பார்த்திபன் கனவு [1960] படத்துக்கு அட்டகாசமா வசனம் எழுதினார். இந்த படம் கல்கியோடது. அதனால தனக்கு வாழ்வு கொடுத்த கல்கிக்கு மரியாதை கொடுக்கிறதுக்கு விந்தன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதினாராம்.
‘பாலும் பாவையும்’னு இவரோட ஒரு நாவல். இதை படமாக்க விந்தனுக்கு ஆசை. அதனால பத்திரிகைலே இருந்த வெளிய வந்துட்டார். சினிமாவுக்கு போய்ட்டார்.
விந்தன் சினிமாவுக்கு வந்த சமயத்தில, கண்ணதாசன் famous ஆகல. பட்டுக்கோட்டையார் சினிமா ஃபீல்டுக்கே.............. வரலியாம். அந்த சமயத்தில TR ராஜகுமாரி, விந்தனின் எழுத்துக்களுக்கு ரசிகையாம். ராஜகுமாரியின் சகோதரர் TR ராமண்ணா ஒரு படத்தை தயாரிச்சார். அதுதான் 1953 ல வந்த வாழப் பிறந்தவள். இந்த படத்துக்கு திரைக்கதையை விந்தன் எழுதட்டும்னு ராஜகுமாரி ராமண்ணாட்ட சொன்னார். விந்தனும் எழுதினார்.
அன்பு [1953] படத்துக்கு – வசனம்
பாட்டு – “சுத்தாத இடமில்லே கேட்காத பேரில்லே
சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே”
இந்தப் பாட்டு ஒரு ஏழையின் பசியை பற்றி சொல்லுது.
கூண்டுக்கிளி! 1954 – திரைக்கதை & வசனம் எழுதினார்.
இவர் இந்தப் படத்துக்காக எழுதிய மூணு பாட்ல,
“சரியா தப்பா” பாட்டு வரிகளை censor அதிகாரிங்க கொஞ்சம் மாத்தினாங்களாம்.
“கொஞ்சும் கிளியான பெண்ணை
கூட்டுக் கிளியாக்கிவிட்டு
கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா” – இப்படி மொதல்ல இருந்துச்சு.
அப்புறமா, “கொஞ்சும் கிளியான பெண்ணை
கூட்டுக் கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா” – இப்படி மாத்திபுட்டாங்க.
கத்திரிக்கோல் “கட் கட் கட்”னு சொன்ன நாலு வரீங்க :
“மண்ணும் பொன்னும் மாயை என்று மக்களுக்கு சொல்லிவிட்டு
பெண்ணை பார்த்து கண்ணடித்தல் சரியா தப்பா
விண்ணுலக ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு
கண்ணியமாய் காதலித்தல் சரியா தப்பா”
குழந்தைகள் கண்ட குடியரசு [1959] – வசனம்
பார்த்திபன் கனவு [1960] – வசனம், பாட்டுகள்
“சினிமா, அரசியல், பத்திரிக்கை உலகத்தில, எனக்கிருந்த மாயையை நீக்கிய மகத்தான ஒளிக்கீற்றுக்கு பெயர் விந்தன்” – இப்படி ஜெயகாந்தன் சொல்லியிருந்தார்.
பத்திரிகைலே இருந்து வெளியே வந்துட்ட விந்தனுக்கு, M நடேசனும், மாவன்னா ஆச்சாரியும் க்ளோ..............ஸ் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ரெண்டு பேரும் PU சின்னப்பா தயாரிச்ச ‘வானவிளக்கு’ என்கிற படத்துக்கு விந்தனை வசனம் எழுத சொன்னாங்க. அவரும் எழுதினார். ஆனா என்ன பிரயோஜனம்? படம் பொட்டிலியே தூங்கிருச்சு.
விந்தன் 7 படங்களுக்கு வசனம், பாட்டூங்க எழுதினார். அப்புறமா ‘மனிதன்’ ங்கற ஒரு பத்திரிகையை ஆரம்பிச்சார். ‘தெருவிளக்கு’ ங்கற தலைப்பில, இந்த பத்திரிகையில தன்னுடைய சினிமா அனுபவங்களை தொடராக எழுதினார்.
அவரோட சினிமா அனுபவங்கள்ல, எத எழுதினாரோ, என்னத்த எழுதினாரோ, ஏதோ உண்மைய எழுதியிருக்கார் போல. இதுக்கு எதிர்ப்பு. தொடர்ந்து எழுத முடியாம போச்சு. இவர் சினிமாவில இருந்தும், எழுதுக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டதுக்கு காரணம், இதுமாதிரி சினிமா உலகத்தை பற்றி உண்மையை மட்டும் எழுதுனதுதானாம். ஆனா இலக்கியத்துக்கு செஞ்ச வேலை எல்லாராலும் பேசப்பட்டுச்சாம்.
- ஹிந்து
Heezulia
விந்தன்
நெஜமான பேரு கோவிந்தன். ஆறாங்க்ளாஸ் வரைக்கும்தான் படிச்சார். குடும்பச் சூழல். மேல படிக்க முடியல. அப்பாகூட கூலி வேலைக்கு போனார். இந்த வேலைல்லாம் செய்ய பிடிக்கல கோவிந்தனுக்கு. ஆனாலும் ஒரு கட்டாயம். அவர் அப்பாவுக்கு, மகன் படிக்க ஆசைப்பட்றது தெரிஞ்சுது. சரீன்னுட்டு நைட் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டார்.
அப்புறமா மகனுக்கு ட்ராயிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்கிறது தெரிஞ்சுது. சென்னை ஓவியக் கல்லூரில சேர்த்தார். ஆனா அங்கேயும் தொடர்ந்து படிக்க வசதியில்லாம போச்சு. குடும்பத்தை வேற காப்பாத்தணுமே. என்ன செய்யலாம்? தமிழரசு பிரிண்ட்டிங் ப்ரெஸ்ல போய் சேந்துட்டார். அங்க என்ன வேல..............? அச்சு கோக்கிற வேல. கொஞ்ச நாளாச்சு. இங்கிருந்து அவருக்கு transfer.
எங்க.............? ஆனந்த விகடன் ப்ரஸ்ல. இங்கயும் கோக்குற வேலைதான்.
கல்கியின் கையெழுத்து கடவுளுக்கும், கல்கிக்கும் தவிர வேற யா..............ருக்கும் புரியாதுன்னு கல்கியே சொல்லியிருக்காராம். அவர் எழுத்தையே விந்தன் கம்போஸ் செஞ்சுர்வாராம். இது கல்கீக்கு ஆச்சரியமா இருந்துச்சாம். இங்க வேல செஞ்சுட்டே.......... சுதேசமித்திரன் இதழுக்கு கவிதைல்லாம் எழுதினார், கோவிந்தன். ஏன்னு தெரியல, அங்க இருந்து கல்கி பிரஸ்ஸுக்கு போயிட்டார்.
இதென்ன, ப்ரெஸ் ப்ரெஸ்ஸா இப்டி அலைறாரு.
இங்க இருந்துட்டே, கல்கி வார இதழ்ல பாப்பாங்களுக்கான குட்டி குட்டி........ கதைங்க, அறிவுக்களஞ்சிய கட்டுரைங்க எழுதினார். எந்த பேர்ல எழுதினார். பொம்பள பேர்ல. அது யார் பேரோ தெரியல. விஜி. இந்த பேர்லதான் பாப்பா மலர்ல எழுதினார். இதை படிச்சவங்களுக்கு பிடிச்சுபோச்சு. கல்கி ஆசிரியருக்கும். அவர் கோவிந்தனை பாராட்டி, விஜிங்க்ற பேரை, விந்தன்னு மாத்தினதோடு விடாம, கல்கி இதழின் ஆசிரியர்களோட ஆசிரியரா இவரையும் சேத்துகிட்டார், கல்கி கிருஷ்ணமூர்த்தி. துணை ஆசிரியரா கொஞ்ச நாள் இருந்திருக்கார்.
பாட்டாளி மக்களின் கஷ்டங்களை, எளிய தமிழ்ல எழுதினார். சரித்திர நாவல் எழுதலியாம். ஆனா பார்த்திபன் கனவு [1960] படத்துக்கு அட்டகாசமா வசனம் எழுதினார். இந்த படம் கல்கியோடது. அதனால தனக்கு வாழ்வு கொடுத்த கல்கிக்கு மரியாதை கொடுக்கிறதுக்கு விந்தன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதினாராம்.
‘பாலும் பாவையும்’னு இவரோட ஒரு நாவல். இதை படமாக்க விந்தனுக்கு ஆசை. அதனால பத்திரிகைலே இருந்த வெளிய வந்துட்டார். சினிமாவுக்கு போய்ட்டார்.
விந்தன் சினிமாவுக்கு வந்த சமயத்தில, கண்ணதாசன் famous ஆகல. பட்டுக்கோட்டையார் சினிமா ஃபீல்டுக்கே.............. வரலியாம். அந்த சமயத்தில TR ராஜகுமாரி, விந்தனின் எழுத்துக்களுக்கு ரசிகையாம். ராஜகுமாரியின் சகோதரர் TR ராமண்ணா ஒரு படத்தை தயாரிச்சார். அதுதான் 1953 ல வந்த வாழப் பிறந்தவள். இந்த படத்துக்கு திரைக்கதையை விந்தன் எழுதட்டும்னு ராஜகுமாரி ராமண்ணாட்ட சொன்னார். விந்தனும் எழுதினார்.
அன்பு [1953] படத்துக்கு – வசனம்
பாட்டு – “சுத்தாத இடமில்லே கேட்காத பேரில்லே
சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே”
இந்தப் பாட்டு ஒரு ஏழையின் பசியை பற்றி சொல்லுது.
கூண்டுக்கிளி! 1954 – திரைக்கதை & வசனம் எழுதினார்.
இவர் இந்தப் படத்துக்காக எழுதிய மூணு பாட்ல,
“சரியா தப்பா” பாட்டு வரிகளை censor அதிகாரிங்க கொஞ்சம் மாத்தினாங்களாம்.
“கொஞ்சும் கிளியான பெண்ணை
கூட்டுக் கிளியாக்கிவிட்டு
கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா” – இப்படி மொதல்ல இருந்துச்சு.
அப்புறமா, “கொஞ்சும் கிளியான பெண்ணை
கூட்டுக் கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா” – இப்படி மாத்திபுட்டாங்க.
கத்திரிக்கோல் “கட் கட் கட்”னு சொன்ன நாலு வரீங்க :
“மண்ணும் பொன்னும் மாயை என்று மக்களுக்கு சொல்லிவிட்டு
பெண்ணை பார்த்து கண்ணடித்தல் சரியா தப்பா
விண்ணுலக ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு
கண்ணியமாய் காதலித்தல் சரியா தப்பா”
குழந்தைகள் கண்ட குடியரசு [1959] – வசனம்
பார்த்திபன் கனவு [1960] – வசனம், பாட்டுகள்
“சினிமா, அரசியல், பத்திரிக்கை உலகத்தில, எனக்கிருந்த மாயையை நீக்கிய மகத்தான ஒளிக்கீற்றுக்கு பெயர் விந்தன்” – இப்படி ஜெயகாந்தன் சொல்லியிருந்தார்.
பத்திரிகைலே இருந்து வெளியே வந்துட்ட விந்தனுக்கு, M நடேசனும், மாவன்னா ஆச்சாரியும் க்ளோ..............ஸ் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ரெண்டு பேரும் PU சின்னப்பா தயாரிச்ச ‘வானவிளக்கு’ என்கிற படத்துக்கு விந்தனை வசனம் எழுத சொன்னாங்க. அவரும் எழுதினார். ஆனா என்ன பிரயோஜனம்? படம் பொட்டிலியே தூங்கிருச்சு.
விந்தன் 7 படங்களுக்கு வசனம், பாட்டூங்க எழுதினார். அப்புறமா ‘மனிதன்’ ங்கற ஒரு பத்திரிகையை ஆரம்பிச்சார். ‘தெருவிளக்கு’ ங்கற தலைப்பில, இந்த பத்திரிகையில தன்னுடைய சினிமா அனுபவங்களை தொடராக எழுதினார்.
அவரோட சினிமா அனுபவங்கள்ல, எத எழுதினாரோ, என்னத்த எழுதினாரோ, ஏதோ உண்மைய எழுதியிருக்கார் போல. இதுக்கு எதிர்ப்பு. தொடர்ந்து எழுத முடியாம போச்சு. இவர் சினிமாவில இருந்தும், எழுதுக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டதுக்கு காரணம், இதுமாதிரி சினிமா உலகத்தை பற்றி உண்மையை மட்டும் எழுதுனதுதானாம். ஆனா இலக்கியத்துக்கு செஞ்ச வேலை எல்லாராலும் பேசப்பட்டுச்சாம்.
- ஹிந்து
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
14.03.2018
கோவைத் தம்பி
இவரோட சொந்த ஊர் கோயம்புத்தூர்ல, தெலுங்கு பாளையம்.
இந்த ஊர்ல தெலுங்கு பேசுற ஜனங்கள் நிறைய பேர் இருக்கிறாங்களோ?
இவர் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும்போது, அந்த ஊர்ல MGR படம் வந்துச்சு.
என்ன படம்னு சொல்லாம சும்மானாத்துக்கும் MGR படம் வந்துச்சுன்னா என்ன அர்த்தம்? அறிவிருக்கா உனக்கு? என்ன படம்னு மொதல்ல சொல்லு.
மலைக்கள்ளன். இந்த படந்தாங்க. கோவை தம்பி இந்தப் படத்தை பார்த்ததுக்கப்புறம், MGRஇன் பரம்............ம ரசிகராயிட்டார்.
‘கலையும் நாமும்” ங்கறத பற்றி பேச கோவை தம்பி படிச்ச காலேஜுக்கு MGR வந்திருந்தார். அம்புட்டுதான், நேர்ல பாத்துட்டார்ல கோவை. MGR மேல பைத்................தியமாவே ஆயிட்டார். பள்ளிப் பருவத்திலேயே, மாநிலத்திலேயும், மாவட்டத்திலேயும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளை வாங்கினார் கோவைத் தம்பி.
அப்புறமா என்ன ஆச்சுன்னா, ஊடால என்னல்லாமோ நடந்து, கோவை தம்பி அரசியல்வாதி ஆயிட்டார். இப்ப, கேக்கவா வேணும். இது தவிர, கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், MGRஇன் சினிமாவும், கோவைக்கு கலை மேல ஆசை வந்திருச்சு. இதன் காரணமாக, அவரே நாடகங்களை எழுதினாரு................, அந்த நாடகங்களுக்கு வசனம் எழுதினாரு....................., அதுல நடிக்கவும் செஞ்சாரு................
அப்பாடா, சொல்லிட்டியா? இப்டி புள்ளி புள்ளியா...................வச்சு நீட்டி....................... நீட்டி சொல்லாம, சீக்கிரமா சொல்லு. அட ச்சே, புள்ளிக்கும் புள்ளியா? ஒன்ன திருத்.................தவே முடியாது.
டைரக்டர் R சுந்தரராஜன். கோவை தம்பி சினிமால அடி எடுத்து வைக்கிறதுக்கு இவர்தான் காரணம். அவர்ட்ட ஒரு கதை இருக்குன்னும், அதை கோவை தம்பி படமாக தயாரிக்கணும்னும் சொன்னார். அரசியல்ல இருந்துட்டு படத்தை தயாரிக்கிறது சரிப்பட்டு வருமான்னு கோவை தம்பிக்கு ஒரு சந்தேகம்.
அரசியல்ல இருந்துட்டே, அப்போ சினிமா வேலைகளையும் செஞ்சுட்டு இருந்தவர் இராம. அரங்கண்ணல். இவர்ட்ட கோவை தம்பி ஆலோசனை கேட்டார். அவரும், இதுல என்ன இருக்கு. செய்யலாமே..........ன்னுட்டார். கோவைத் தம்பியும் கதையை அவரிடமே சொல்ல சொன்னார். சுந்தரராஜனும் அரங்கண்ணல்ட்ட கதையை சொன்னார். அவருக்கு புடிச்சு போச்சு.
அதனால கோவைத் தம்பி அந்த படத்தை தயாரிக்க ரெடியாயிட்டார். படத்துக்கு என்ன பேர் வச்சாங்க? பயணங்கள் முடிவதில்லை. பூர்ணிமா ஜெயராம் & மோகன் நடிச்சது, MGR ஆசீர்வதிச்சு, மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ்னு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இதுல பயணங்கள் முடிவதில்லை படம் உருவாச்சு. மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ்ல எடுத்த படமெல்லாம் ஓஹோ.......................ன்னு ஓடுச்சு.
இந்தப் படத்துக்கும் MGRக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அப்புறமா சொல்றேன்.
இந்தப் படம் போ..............டு போடுன்னு போட்ட வேகத்தில, இவர் தயாரிச்ச ரெண்டாவது படம் இளமைக் காலங்கள். சசிகலா, மோகன் நடிச்சது. இந்தப் படமும் நல்லாவே ஓடுச்சாம். கோவைத் தம்பி வெற்றி படங்களை தயாரிப்பவர்னு பேரையும் வாங்கிட்டார்.
நான் பாடும் பாடல், இந்தப் படம் 25 வாரங்கள் ஓடி, மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ் படம்னா, வெற்றிகரமாகத்தான் ஓடும்னு பேரு.
மணிரத்னம் கூட சேர்ந்து இதயகோயில் படத்தை தயாரிச்சார் கோவைத் தம்பி. இந்தப் படத்தில கோவைக்கும், இளையராஜாவுக்கும் மனசுல தாபம் வந்துருச்சாம். அச்சச்சோ மாத்தி சொல்லிட்டேனா. என்னவோ சொல்வாங்களே, ஆ.....................ங், மனஸ்தாபம், ஆமா ஆமா அதுதான். அது வந்துருச்சாம். அந்த இஸ்த்தாபம் வந்தது மட்டுமில்ல, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில சினிமா உறவு போச்சு. அது என்னான்னு வேற சந்தர்ப்பத்தில சொல்றேன்.
அடுத்தது உயிரே உனக்காக படம். லட்சுமிகாந்த் ப்யாரேலால், ஹிந்தியில ம்யூசிக் போட்றவர். இந்தப் படத்துக்கு ம்யூசிக் அவர்தான். நதியா, மோகன் நடிச்சது. நூ...................று நாள் ஓடுச்சு.
ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தை நிறைய தடவை பார்த்து, அவரை வச்சு ஒரு படம் தயாரிக்கணும்னு கோவைக்கு ஆசை வந்துச்சு. பேச்சு வார்த்தையும் நடந்துச்சு. சிவாஜி அப்பாவும், கமல் மகனாவும் நடிக்க வைக்க நெனச்சாங்க. ஆனா அந்த சமயத்தில கமல் பயங்...................கர பிஸி. அதனால கோவையின் ஆசை நிறைவேறாம போச்சு.
75 நாள் ஓடிய மண்ணுக்குள் வைரம். கோவைத்தம்பி தயாரிச்சதுதான். இதுபத்தியும் அப்புறமா சொல்றேன்.
உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், உழைத்து வாழ வேண்டும், செம்பருத்தி, போன்ற பல படங்கள் கோவைத்தம்பியின் மதர்லாண்ட் பிக்ச்சர்ஸாரின் தயாரிப்புதான்.
தாதாசாகிப் பால்கேயின் 100வது பிறந்த நாள் விழா மும்பையில் 2009ல நடந்துச்சாம். இந்த விழாவில கோவைத் தம்பிக்கு தாதா சாகிப் பால்கே கழக விருதும், நினைவு பரிசும் வழங்கப்பட்டுச்சாம். இந்த விருதை AVM சரவணன், ஃபிலிம் ச்சேம்பர் தலைவர் KR கங்காதரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் இவங்கல்லாம் சேர்ந்து அந்த விருதை கோவைத் தம்பிக்கு கொடுத்தாங்களாம்.
கோவைத் தம்பிதான் இந்த விருதை வாங்கிய முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்.
- நம்ம கோயம்புத்தூர் &
- ரமணி
Heezulia
கோவைத் தம்பி
இவரோட சொந்த ஊர் கோயம்புத்தூர்ல, தெலுங்கு பாளையம்.
இந்த ஊர்ல தெலுங்கு பேசுற ஜனங்கள் நிறைய பேர் இருக்கிறாங்களோ?
இவர் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும்போது, அந்த ஊர்ல MGR படம் வந்துச்சு.
என்ன படம்னு சொல்லாம சும்மானாத்துக்கும் MGR படம் வந்துச்சுன்னா என்ன அர்த்தம்? அறிவிருக்கா உனக்கு? என்ன படம்னு மொதல்ல சொல்லு.
மலைக்கள்ளன். இந்த படந்தாங்க. கோவை தம்பி இந்தப் படத்தை பார்த்ததுக்கப்புறம், MGRஇன் பரம்............ம ரசிகராயிட்டார்.
‘கலையும் நாமும்” ங்கறத பற்றி பேச கோவை தம்பி படிச்ச காலேஜுக்கு MGR வந்திருந்தார். அம்புட்டுதான், நேர்ல பாத்துட்டார்ல கோவை. MGR மேல பைத்................தியமாவே ஆயிட்டார். பள்ளிப் பருவத்திலேயே, மாநிலத்திலேயும், மாவட்டத்திலேயும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளை வாங்கினார் கோவைத் தம்பி.
அப்புறமா என்ன ஆச்சுன்னா, ஊடால என்னல்லாமோ நடந்து, கோவை தம்பி அரசியல்வாதி ஆயிட்டார். இப்ப, கேக்கவா வேணும். இது தவிர, கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், MGRஇன் சினிமாவும், கோவைக்கு கலை மேல ஆசை வந்திருச்சு. இதன் காரணமாக, அவரே நாடகங்களை எழுதினாரு................, அந்த நாடகங்களுக்கு வசனம் எழுதினாரு....................., அதுல நடிக்கவும் செஞ்சாரு................
அப்பாடா, சொல்லிட்டியா? இப்டி புள்ளி புள்ளியா...................வச்சு நீட்டி....................... நீட்டி சொல்லாம, சீக்கிரமா சொல்லு. அட ச்சே, புள்ளிக்கும் புள்ளியா? ஒன்ன திருத்.................தவே முடியாது.
டைரக்டர் R சுந்தரராஜன். கோவை தம்பி சினிமால அடி எடுத்து வைக்கிறதுக்கு இவர்தான் காரணம். அவர்ட்ட ஒரு கதை இருக்குன்னும், அதை கோவை தம்பி படமாக தயாரிக்கணும்னும் சொன்னார். அரசியல்ல இருந்துட்டு படத்தை தயாரிக்கிறது சரிப்பட்டு வருமான்னு கோவை தம்பிக்கு ஒரு சந்தேகம்.
அரசியல்ல இருந்துட்டே, அப்போ சினிமா வேலைகளையும் செஞ்சுட்டு இருந்தவர் இராம. அரங்கண்ணல். இவர்ட்ட கோவை தம்பி ஆலோசனை கேட்டார். அவரும், இதுல என்ன இருக்கு. செய்யலாமே..........ன்னுட்டார். கோவைத் தம்பியும் கதையை அவரிடமே சொல்ல சொன்னார். சுந்தரராஜனும் அரங்கண்ணல்ட்ட கதையை சொன்னார். அவருக்கு புடிச்சு போச்சு.
அதனால கோவைத் தம்பி அந்த படத்தை தயாரிக்க ரெடியாயிட்டார். படத்துக்கு என்ன பேர் வச்சாங்க? பயணங்கள் முடிவதில்லை. பூர்ணிமா ஜெயராம் & மோகன் நடிச்சது, MGR ஆசீர்வதிச்சு, மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ்னு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இதுல பயணங்கள் முடிவதில்லை படம் உருவாச்சு. மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ்ல எடுத்த படமெல்லாம் ஓஹோ.......................ன்னு ஓடுச்சு.
இந்தப் படத்துக்கும் MGRக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அப்புறமா சொல்றேன்.
இந்தப் படம் போ..............டு போடுன்னு போட்ட வேகத்தில, இவர் தயாரிச்ச ரெண்டாவது படம் இளமைக் காலங்கள். சசிகலா, மோகன் நடிச்சது. இந்தப் படமும் நல்லாவே ஓடுச்சாம். கோவைத் தம்பி வெற்றி படங்களை தயாரிப்பவர்னு பேரையும் வாங்கிட்டார்.
நான் பாடும் பாடல், இந்தப் படம் 25 வாரங்கள் ஓடி, மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ் படம்னா, வெற்றிகரமாகத்தான் ஓடும்னு பேரு.
மணிரத்னம் கூட சேர்ந்து இதயகோயில் படத்தை தயாரிச்சார் கோவைத் தம்பி. இந்தப் படத்தில கோவைக்கும், இளையராஜாவுக்கும் மனசுல தாபம் வந்துருச்சாம். அச்சச்சோ மாத்தி சொல்லிட்டேனா. என்னவோ சொல்வாங்களே, ஆ.....................ங், மனஸ்தாபம், ஆமா ஆமா அதுதான். அது வந்துருச்சாம். அந்த இஸ்த்தாபம் வந்தது மட்டுமில்ல, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில சினிமா உறவு போச்சு. அது என்னான்னு வேற சந்தர்ப்பத்தில சொல்றேன்.
அடுத்தது உயிரே உனக்காக படம். லட்சுமிகாந்த் ப்யாரேலால், ஹிந்தியில ம்யூசிக் போட்றவர். இந்தப் படத்துக்கு ம்யூசிக் அவர்தான். நதியா, மோகன் நடிச்சது. நூ...................று நாள் ஓடுச்சு.
ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தை நிறைய தடவை பார்த்து, அவரை வச்சு ஒரு படம் தயாரிக்கணும்னு கோவைக்கு ஆசை வந்துச்சு. பேச்சு வார்த்தையும் நடந்துச்சு. சிவாஜி அப்பாவும், கமல் மகனாவும் நடிக்க வைக்க நெனச்சாங்க. ஆனா அந்த சமயத்தில கமல் பயங்...................கர பிஸி. அதனால கோவையின் ஆசை நிறைவேறாம போச்சு.
75 நாள் ஓடிய மண்ணுக்குள் வைரம். கோவைத்தம்பி தயாரிச்சதுதான். இதுபத்தியும் அப்புறமா சொல்றேன்.
உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், உழைத்து வாழ வேண்டும், செம்பருத்தி, போன்ற பல படங்கள் கோவைத்தம்பியின் மதர்லாண்ட் பிக்ச்சர்ஸாரின் தயாரிப்புதான்.
தாதாசாகிப் பால்கேயின் 100வது பிறந்த நாள் விழா மும்பையில் 2009ல நடந்துச்சாம். இந்த விழாவில கோவைத் தம்பிக்கு தாதா சாகிப் பால்கே கழக விருதும், நினைவு பரிசும் வழங்கப்பட்டுச்சாம். இந்த விருதை AVM சரவணன், ஃபிலிம் ச்சேம்பர் தலைவர் KR கங்காதரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் இவங்கல்லாம் சேர்ந்து அந்த விருதை கோவைத் தம்பிக்கு கொடுத்தாங்களாம்.
கோவைத் தம்பிதான் இந்த விருதை வாங்கிய முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்.
- நம்ம கோயம்புத்தூர் &
- ரமணி
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
24.03.2018
சினிமாவில நடிக்கணும்னு சிலருக்கு ஆசை, டைரக்டணும்னு சிலருக்கு ஆசை இப்படி ஒவ்வொருத்தரும் சினிமாவுக்குள்ள நுழையணும்ங்கற ஆசை சிலருக்கு இருக்கும். ஆனா அப்டி போறவங்க எல்லாரும் நிலைச்சு இருக்காங்களா, புகழ் அடைறாங்களான்னா, இல்ல. அப்டி புகழ் அடையாதவங்கள்ல ஒருத்தர்தான் ரமேஷ்.
மோசஸ் திலக், கராத்தே மணி இவங்ககிட்ட கராத்தே கத்துக்கிட்டவர். அதனால தன் பேரை 'கராத்தே ரமேஷ்'ன்னு வச்சுக்கிட்டார். இவருக்கு சொந்த ஊர் வேலூர். பல இடங்கள்ல கராத்தே ஸ்கூல் நடத்திட்டுஇருந்தார்.
நீறு பூத்த நெருப்பு படம். இதை வடலூரான் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிச்சுது. K விஜயன் டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்ல விஜயகாந்த் நடிப்பதாக இருந்துச்சு. அவர் கால்ஷீட்டும் கொடுத்தார். ஆனா, அவர் நடந்துக்கிட்டது வேற மாதிரி. இங்க கால்ஷீட் கொடுத்துட்டு..........................., வேற ஒரு படத்ல நடிக்க போய்ட்டார். அதுவும் வெளியூருக்கு. தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரத்துக்கு பயங்.....................கர எரிச்சல்.
எரிச்சலா? பயங்கர கோபமா இருக்குமோ?
ஏதோ................ ஒண்ணு. நீ சப்ஜெக்ட்டுக்கு வா.
வடலூரார் கோவத்துல என்ன செஞ்சார்? என்ன செய்ய முடியும்? விஜயகாந்தை தேடி போகவா முடியும்? வேற ஒரு ஹீரோவை தேடி போகலாம்ல? இதைத்ததான் வடலூராரும் செஞ்சார்.
விஜயகாந்துக்கு சினிமா சண்டை மட்டும்தானே தெரியும். நிஜமாவே கராத்தே, குங்ஃபூ தெரிஞ்சு வச்சிருக்கும் ஒருத்தரை ஹீரோவா நடிக்க வைக்கலாம்னு வடலூரார் நெனச்சார். தேடவும் ஆரம்பிச்சார்.
அப்போ, குமுதம் இதழ்ல, ரமேஷின் போட்டா போட்டு, அவரை பற்றிய தகவலும் வந்திருச்சு. மூணு கராத்தே போட்டிகளில் ஜெயிச்சு, தேசிய விருதாக, தங்க மெடல்கள் வாங்கியிருந்ததாவும். தைவானின் உலக கராத்தே போட்டி நடந்துச்சு. இந்தியாவின் சார்பில் ரமேஷ் அதுல கலந்துகிட்டதாவும் குமுதத்தில தகவல் வந்திருந்துச்சு.
இதை படிச்ச வடலூரார், ஒரு தயாரிப்பாளரை அனுப்பி, ரமேஷை சென்னைக்கு கூட்டியாற சொன்னார். ஆனா, ரமேஷ் தனியா வரல. படை புடை சூ...........ழ வந்தார். அதாவது, தன் கராத்தே மாணவர்களோடு வந்தார். வடலூரார் முன்னால, கராத்தே சண்டைகளை செஞ்சு காட்னார்.
அதுக்குத்தான் மாணவர்களை கூட்டியாந்தாரோ? இருக்கலாம், இருக்கலாம்.
உடனே 'நீறு பூத்த நெருப்பு 1983' படத்துக்கு ஹீரோ ரமேஷ். பாசமலர் படம் மாதிரி இந்தப் படம். அண்ணன் தங்கச்சி படங்க. ஆனா படம் படு flop. ஹீரோவாத்தான் நடிக்க ஆரம்பிச்சுட்டோமே, இனிமே நல்லபடியா வாழலாம்னு, சந்தோஷப்பட்டு ரமேஷுக்கு சர்ர்ரியான அடி. முதல் படமே ஓடாததால், மத்தவங்க அவரை கண்டுக்கல. அவரோட சண்டை காட்சியெல்லாம் நல்லா தான் இருந்துச்சு. ஆனா திரைக்கதை சரியில்லாம போச்சு.
பெரிய பெரிய டைரக்டர்களை எல்லாம் போய் பார்த்தார். ஆனா வேஸ்ட். கொம்பேறி மூக்கன், வேங்கையின் மைந்தன் ஆகிய படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்டியே......................... மூணு வருஷம் ஆச்சு.
அண்டா, குண்டா பாத்திரமாவது வேண்டாம், ஏதாவது டம்ளர், டபரா? எத்துவும் கிடைக்கல. சரி, இதுக்கு மேல சும்மா இருந்தா சரியா வராதுன்னுட்டு, 1986ல, திரைப்பட ஸ்டண்ட் நடிகர் சங்கத்தில் போய் சேர்ந்துட்டார். அதனால, பல படங்கள்ல, சண்டை காட்சிகள்ல வந்துட்டு போனார். அதுவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள்.
விஜயகாந்துக்கு பதில் நடிக்க வந்துட்டு, கேப்டன் பிரபாகரன், கூலிக்காரன் படங்களில், விஜயகாந்திடமே அடி, உதை வாங்கினார். நீறு பூத்த நெருப்பு படத்ல, விஜயசாந்தியின் அண்ணனாக நடிச்சார். ஆனா விஜயசாந்தி நடிச்ச தெலுங்கு படத்ல, விஜய்சாந்திட்ட அடி, உதை வாங்கினார்.
என்னவோ அவர் தலையெழுத்து. என்ன செய்ய முடியும்?
சரி, சரி, அவர் தலையெழுத்தை பத்தி நீ ஏன் கவலைப்பட்ற? நீ ஓம்பாட்டுக்கு சொல்லு.
அப்டி நடிக்கும்போது அவர் கண்ல கண்ணீரே வந்துருச்சாம். பின்ன அவருக்கு மனசு கஷ்டப்படத்தானே செய்யும்.
சரத்குமார், கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் இவங்களுக்கெல்லாம் டூப்பு போட்டிருக்காராமே. விஜய், அஜீத், மாதவன், ஆர்யா இவங்க படங்களிலும் சண்டை காட்சிகள்ல வந்திருக்கார். சந்திரமுகி படத்தில, ரஜினியின் முதல் சண்டை ஸீன்ல வந்திருக்காராம்.
"நாம நினைக்கிறது கிடைக்கலேன்னா, கிடைக்கிறதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் புத்திசாலித்தனம். என் அனுபவம் அது"ன்னு மத்தவங்கட்ட சொல்லுவாராம், ரமேஷ்.
இப்போ தமிழகத்தில, அம்பதுக்கும் மேலான கராத்தே ஸ்கூல் நடத்திட்டு இருக்கார். இதுவரைக்கும் பத்தா.................யிரம் மாணவர்கள் பயிற்சி எடுத்திருக்காங்க.
- ராஜசேகர்
Heezulia
சினிமாவில நடிக்கணும்னு சிலருக்கு ஆசை, டைரக்டணும்னு சிலருக்கு ஆசை இப்படி ஒவ்வொருத்தரும் சினிமாவுக்குள்ள நுழையணும்ங்கற ஆசை சிலருக்கு இருக்கும். ஆனா அப்டி போறவங்க எல்லாரும் நிலைச்சு இருக்காங்களா, புகழ் அடைறாங்களான்னா, இல்ல. அப்டி புகழ் அடையாதவங்கள்ல ஒருத்தர்தான் ரமேஷ்.
மோசஸ் திலக், கராத்தே மணி இவங்ககிட்ட கராத்தே கத்துக்கிட்டவர். அதனால தன் பேரை 'கராத்தே ரமேஷ்'ன்னு வச்சுக்கிட்டார். இவருக்கு சொந்த ஊர் வேலூர். பல இடங்கள்ல கராத்தே ஸ்கூல் நடத்திட்டுஇருந்தார்.
நீறு பூத்த நெருப்பு படம். இதை வடலூரான் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிச்சுது. K விஜயன் டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்ல விஜயகாந்த் நடிப்பதாக இருந்துச்சு. அவர் கால்ஷீட்டும் கொடுத்தார். ஆனா, அவர் நடந்துக்கிட்டது வேற மாதிரி. இங்க கால்ஷீட் கொடுத்துட்டு..........................., வேற ஒரு படத்ல நடிக்க போய்ட்டார். அதுவும் வெளியூருக்கு. தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரத்துக்கு பயங்.....................கர எரிச்சல்.
எரிச்சலா? பயங்கர கோபமா இருக்குமோ?
ஏதோ................ ஒண்ணு. நீ சப்ஜெக்ட்டுக்கு வா.
வடலூரார் கோவத்துல என்ன செஞ்சார்? என்ன செய்ய முடியும்? விஜயகாந்தை தேடி போகவா முடியும்? வேற ஒரு ஹீரோவை தேடி போகலாம்ல? இதைத்ததான் வடலூராரும் செஞ்சார்.
விஜயகாந்துக்கு சினிமா சண்டை மட்டும்தானே தெரியும். நிஜமாவே கராத்தே, குங்ஃபூ தெரிஞ்சு வச்சிருக்கும் ஒருத்தரை ஹீரோவா நடிக்க வைக்கலாம்னு வடலூரார் நெனச்சார். தேடவும் ஆரம்பிச்சார்.
அப்போ, குமுதம் இதழ்ல, ரமேஷின் போட்டா போட்டு, அவரை பற்றிய தகவலும் வந்திருச்சு. மூணு கராத்தே போட்டிகளில் ஜெயிச்சு, தேசிய விருதாக, தங்க மெடல்கள் வாங்கியிருந்ததாவும். தைவானின் உலக கராத்தே போட்டி நடந்துச்சு. இந்தியாவின் சார்பில் ரமேஷ் அதுல கலந்துகிட்டதாவும் குமுதத்தில தகவல் வந்திருந்துச்சு.
இதை படிச்ச வடலூரார், ஒரு தயாரிப்பாளரை அனுப்பி, ரமேஷை சென்னைக்கு கூட்டியாற சொன்னார். ஆனா, ரமேஷ் தனியா வரல. படை புடை சூ...........ழ வந்தார். அதாவது, தன் கராத்தே மாணவர்களோடு வந்தார். வடலூரார் முன்னால, கராத்தே சண்டைகளை செஞ்சு காட்னார்.
அதுக்குத்தான் மாணவர்களை கூட்டியாந்தாரோ? இருக்கலாம், இருக்கலாம்.
உடனே 'நீறு பூத்த நெருப்பு 1983' படத்துக்கு ஹீரோ ரமேஷ். பாசமலர் படம் மாதிரி இந்தப் படம். அண்ணன் தங்கச்சி படங்க. ஆனா படம் படு flop. ஹீரோவாத்தான் நடிக்க ஆரம்பிச்சுட்டோமே, இனிமே நல்லபடியா வாழலாம்னு, சந்தோஷப்பட்டு ரமேஷுக்கு சர்ர்ரியான அடி. முதல் படமே ஓடாததால், மத்தவங்க அவரை கண்டுக்கல. அவரோட சண்டை காட்சியெல்லாம் நல்லா தான் இருந்துச்சு. ஆனா திரைக்கதை சரியில்லாம போச்சு.
பெரிய பெரிய டைரக்டர்களை எல்லாம் போய் பார்த்தார். ஆனா வேஸ்ட். கொம்பேறி மூக்கன், வேங்கையின் மைந்தன் ஆகிய படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்டியே......................... மூணு வருஷம் ஆச்சு.
அண்டா, குண்டா பாத்திரமாவது வேண்டாம், ஏதாவது டம்ளர், டபரா? எத்துவும் கிடைக்கல. சரி, இதுக்கு மேல சும்மா இருந்தா சரியா வராதுன்னுட்டு, 1986ல, திரைப்பட ஸ்டண்ட் நடிகர் சங்கத்தில் போய் சேர்ந்துட்டார். அதனால, பல படங்கள்ல, சண்டை காட்சிகள்ல வந்துட்டு போனார். அதுவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள்.
விஜயகாந்துக்கு பதில் நடிக்க வந்துட்டு, கேப்டன் பிரபாகரன், கூலிக்காரன் படங்களில், விஜயகாந்திடமே அடி, உதை வாங்கினார். நீறு பூத்த நெருப்பு படத்ல, விஜயசாந்தியின் அண்ணனாக நடிச்சார். ஆனா விஜயசாந்தி நடிச்ச தெலுங்கு படத்ல, விஜய்சாந்திட்ட அடி, உதை வாங்கினார்.
என்னவோ அவர் தலையெழுத்து. என்ன செய்ய முடியும்?
சரி, சரி, அவர் தலையெழுத்தை பத்தி நீ ஏன் கவலைப்பட்ற? நீ ஓம்பாட்டுக்கு சொல்லு.
அப்டி நடிக்கும்போது அவர் கண்ல கண்ணீரே வந்துருச்சாம். பின்ன அவருக்கு மனசு கஷ்டப்படத்தானே செய்யும்.
சரத்குமார், கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் இவங்களுக்கெல்லாம் டூப்பு போட்டிருக்காராமே. விஜய், அஜீத், மாதவன், ஆர்யா இவங்க படங்களிலும் சண்டை காட்சிகள்ல வந்திருக்கார். சந்திரமுகி படத்தில, ரஜினியின் முதல் சண்டை ஸீன்ல வந்திருக்காராம்.
"நாம நினைக்கிறது கிடைக்கலேன்னா, கிடைக்கிறதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் புத்திசாலித்தனம். என் அனுபவம் அது"ன்னு மத்தவங்கட்ட சொல்லுவாராம், ரமேஷ்.
- ராஜசேகர்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
31.03.2018
நான் அனுப்பினதில் எதையாவது திருத்தணும்னாலும், நீக்கணும்னாலும் முடியல. மேற்கோள் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்ல. இதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன்.
அதனால
'சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்'ன்னு
ஒரு தலைப்பு கொடுத்து, இங்க இருந்த கராத்தே ரமேஷை பற்றிய பதிவை, அங்க போட்டிருக்கேன்.
Heezulia
நான் அனுப்பினதில் எதையாவது திருத்தணும்னாலும், நீக்கணும்னாலும் முடியல. மேற்கோள் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்ல. இதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன்.
அதனால
'சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்'ன்னு
ஒரு தலைப்பு கொடுத்து, இங்க இருந்த கராத்தே ரமேஷை பற்றிய பதிவை, அங்க போட்டிருக்கேன்.
Heezulia
- Sponsored content
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 12
|
|