புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 25 of 29 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28, 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 03, 2018 1:38 pm

03.08.2018

தமிழ் சினிமா உலகத்ல ஓஹோன்னு இருந்தவங்கள்ல ஒரு சிலர், பின்னால ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கஷ்டப்பட்டாங்கன்னா, அவங்களுக்கு வந்த புகழ் மட்டும்தான் மிஞ்சி இருந்துச்சு. பணம் லேது, இல்ல, நோ பணம். இவ்ளோ புகழை கொடுத்த அதிர்ஷ்டம், மறுபடியும் எப்போ வரும்னு, வானத்தை எட்டி எட்டி பார்க்கும் விவசாயியை போல, எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு நம்பிக்கைதான்.

எல்லாரும் வாழ்றது அந்த ஒரு நம்பிக்கையை புடிச்சிட்டுதானே.

இதுல வேற, எப்ப நல்ல காலம் வரும்னு ஜோசியர்களை கேட்டுட்டு இருந்தாங்க. அப்டி ஜோசியத்தை நம்பி மோசம் போன சில சினிமாக்காரங்க.  

இப்டிபட்டவங்கள்ல ஒருத்தர்தான் BR பந்துலு. நடிகர் திலகத்தை வச்சு கப்பலோட்டிய தமிழன், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், மக்கள் திலகத்தை வச்சு ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களை டைரக்ட் செஞ்சவர்.

கப்பலோட்டிய தமிழன் படம் ரொம்ப நல்ல படம்னு ஜனங்கள் சொன்னாங்க. ஆனா போட்ட பணம் வரலியாம்ல. திண்..........................டாடி போய்ட்டாராம் பந்துலு.  அனாவசியமான செலவுகளை குறைக்கிற அளவுக்கு வந்துட்டாராம்.

சரி, எப்படியாவது பழைய நிலைக்கு வரணுமேன்னு நெனச்சார். MGRஐ வச்சு ஒரு படம் எடுக்கலாமேன்னு யோசிச்சார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் எடுக்க முடிவு செஞ்சார். MGRஐ போய் பார்த்து, விஷயத்தை சொல்லி, அட்வான்ஸ் குடுத்துட்டார். திரைக்கதையும் எழுத ஆரம்பிச்சுட்டார்.

எல்லாம் சரி, படத்தை எடுக்க பணம்? அதுக்கு என்ன செய்றது? படத்தை தயாரிப்பதுக்கான பணத்தை திரட்ட முடியாம இருந்துச்சாம்.

Friend ஒருத்தர் ஒரு ஜோஸியர்ட்ட கூட்டிட்டு போனாராம். அந்த ஜோஸியர் பந்துலுவோட ஒலைசுவடியை பாத்துட்டு சொன்னார்,

“உங்க எதிர்காலம் ப்ரகா.......................சமா இருக்கும். நீங்க எடுக்கப் போற படத்தோ.........................டு, உங்க கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்”

ஜோஸியர் சொன்னத கேட்ட பந்துலுவுக்கு படு குஷி.

படத்துக்கான ட்ரெஸ் வாங்க பெங்களூருக்கு போயிருக்கார். அந்த பாத்ரூம்ல வழுக்கி விழுந்து இறந்து போய்ட்டார்.  

இவர் இப்டீன்னா, இன்னொருத்தர், வித்துவான் வே. லட்சுமணன், கவிஞர், எழுத்தாளர். இவர் ஜோசியரும் கூடவாம். இவரும், மணியனும் சேர்ந்து நல்ல நல்ல படங்களை குடுத்திருக்காங்களாம். அதுல ஒண்ணு இதயவீணை, MGR நடிச்சது. ஓஹோ.......................ன்னு ஓடின படம்.

அதோடு விட்டிருக்கலாம்ல. ரெண்டு பேரும் சேந்து, இதய வீணை படத்தை, ஹிந்தில எடுக்க நெனச்சாங்களாம்.

இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேல?

எடுத்தாங்க. இதய வீணை படத்தை ஹிந்தியில எடுத்தாங்க. தர்மேந்திரா ஹீரோ. செலவு எவ்ளோங்க்றீங்க. ஒரு கோ...........................டி ருவா. என்ன ப்ரயோஜனம்? எல்லாமே போச்சு. படம் புஸ்வானம் ஆயிருச்சு.

திருநெல்வேலிக்கே அல்வாவான்னு சொல்வாங்க. ஒரு ஜோஸ்யருக்கே, வித்வான் வே லட்சுமனந்தான், இந்த நெலம. இதை பத்தி அவர்ட்ட கேட்டதுக்கு அவர் சொன்னார்,

“ஒருத்தருக்கு கெட்ட நேரம் வந்தா, எந்த கொம்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது”ன்னு ஒரு சமாளிஃபிகேஷன்.

இன்னொருத்தர், AK வேலன். இவர் எழுத்தாளர், புத்தகங்கள், சினிமாவுக்கு வசனங்கள் எழுதி பணம் சம்பாதிச்சார். புலவர். பணம் கையில் சேந்துச்சு. சும்மா இருக்க முடியாம, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கினார். இங்க பல சினிமா படங்கள் தயாராச்சு. விதி அவரை சும்மா விடலியே. கஷ்டம் வந்துச்சு. இவருக்கும் ஒரு ஜோஸியர் சொன்னார், தெனே.........................மும் புள்ளையார கும்டணுமாம். கஷ்டமெல்லாம் போயிருமாம்.

ஜோஸியர் சொன்ன மாதிரி, புள்ளையார கும்டுட்டு இருக்க வேண்டியதுதானே. ஒரு யானைய வாங்கி போட்டார். அதை தெனமும் கும்ட்டார். யானைக்கு தீனி போடணும்ல. போட்டார், பாப்பராயிட்டார். ஒரு கட்டத்தில அதுக்கு சாப்பாடு போட முடியாம போச்சு. யானைக்கு கோபம் வந்து, வர்றவங்க, போறவங்கள தொரத்த ஆரம்பிச்சுது.

என்னான்னு சொல்றது.

- ரமணி

Heezulia


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 1:45 pm

என்னான்னு சொல்றது. 

ஒன்னும் சொல்ல முடியாது  பைத்தியம் பைத்தியம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 03, 2018 3:46 pm

03.08.2018

அட, செந்தில், நம்ம ரெண்டு பேருக்கும் எவ்ளோ.................. ஒற்றுமை பாருங்க.

நான் "என்னான்னு சொல்றது" ன்னு எழுதினதுக்கப்புறம், இப்டித்தான், நீங்க எழுதினதை "ஒண்........................ணும் சொல்றதுகில்ல" ன்னு எழுதணும்னுதான் நெனச்சேன். நான் எழுதாம விட்டத, நீங்க எழுதிட்டீங்க பாருங்க. நான் நெனச்சத, உங்களுக்கு தெரிஞ்சிருக்கே.

Heezulia


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 4:10 pm

அதான் டெலிபதி 

நம்ம பசுபதியோட தம்பி



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 03, 2018 7:41 pm

படிக்க காலம் போதல பொருமையும் இல்லை
என்னங்க புத்தகம் படிப்பதுபோல ஆர்வம்குரையுது.
இணையத்தில் படிப்பதுபோல் இல்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 03, 2018 7:45 pm

ஈகரையில் உண்மை முகங்களை பதிந்தால் மிக
சிறப்பாய் அமையும் இருக்கும் எனலாம். பொய்
தோற்றம் நிலைப்தில்லை. உண்மையைச் சொல்.
உழைத்து உண். உத்தமனாவாய்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 20, 2019 8:26 pm

20.06.2019
தெரிஞ்சதும் தெரியாததும் 

ஏ.வி எம்.  சாதனைகள் 
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 0?ui=2&ik=25ecfa0c99&attid=0   தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 0?ui=2&ik=25ecfa0c99&attid=0

ஏ.வி.எம்.  நிறுவனம்  இந்திய  சினிமாவில  70 வருஷத்துக்கு மேலா நெலச்சு நிக்குது. 300 படங்களுக்கு மேலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  ஹிந்தி, பெங்காலினு பல மொழிகள்ல  படங்களை தயாரிச்சுது. இதே ஒரு பெரிய சாதனை, இல்லியா?  
விருதுகள் :  தங்க மெடல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ், வெள்ளி பதக்கம், சிறந்த பாடகிக்கான தேசிய விருது, சிறந்த ஜாலியான படத்துக்கான மத்திய அரசின்  தங்க பதக்கம், ஒரே படத்துக்கு நான்கு தேசிய விருது.
பின்னணி குரல் குடுக்கிறது, பின்னணி பாட்டு பாடுறதுன்னு இந்த ரெண்டையும்  தமிழ்  சினிமாவுக்கு கொண்டு வந்தது ஏ.வி.எம்.நிறுவனம்தான். 
ஏகப்பட்ட நட்சத்திரங்கள், டைரடக்கர்கள்,  இந்திய திரைக்கு அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம். 
இப்டி பல வகையில சினிமாவில சாதனை செஞ்சுட்டு இருந்த ஏ.வி.எம். நிறுவனம் சின்னத்திரையையும் விட்டு வைக்கல. பல தொடர்களை தயாரிச்சுது. 
AVM நிறுவனம்   சினிமாவுக்கு செஞ்ச தொண்டை பாராட்டி, மத்திய அரசு 2006ல ஸ்டாம்ப்        வெளியிட்டுச்சு.  

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 0?ui=2&ik=25ecfa0c99&attid=0   

பேபி தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 Emoji_u1f478தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 Emoji_u1f478தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 25 Emoji_u1f478  
 


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 15, 2020 1:40 pm

15.07.2020

என்ன, எல்லாரும் எப்டீ இருக்கீ.........................ங்க? நா டெய்லி வந்து ஒரு சைட் அடிச்சுட்டு போறேன். ஆனா எதையும் அனுப்பதான் டைம் பத்தல. 

யார்னு யோசிக்கிறீர்களா? நாந்தாங்க,


மெஹருன்னிஸா பேகம்ங்கிற , ஹீராஜான்ங்கிற பேபி.
இன்னொண்ணும் இருக்கே. Heezulia.
 
  

இன்னுமா ஞாபகத்த்துக்கு வரல. சரிங்க, பரவாயில்ல. ஏதோ ரொம்ப நா................ளக்கி  அப்புறம் ஏதோ ஒண்ணு அனுப்புறேன். படிச்சுதான் பாருங்களேன். 

MGR கூட எந்தெந்த ஹீரோயின், எந்தெந்த படத்ல நடிச்சாங்கங்கிறத ஞாபகப்படுத்தவா? 

இதெல்லாம் படிக்க எங்களுக்கெல்லாம் நேரமில்ல. 

அப்படீல்லாம் சொல்லலாமா? 

நேரம் போவலேன்னா படீங்க. நேரம் இல்லாதவங்க, நேரம் கெடச்சப்போ படிங்க. இப்ப ஓக்கேவா? 
 


Baby Heerajan 

P. பானுமதி
01. ராஜமுக்தி 1948
02. ரத்னகுமார் 1949
03. மலைக்கள்ளன்  1954
04. அலிபாபாவும் 40 திருடர்களும் 1956
05. மதுரைவீரன் 1956
06. தாய்க்குப்பின் தாரம் 1956
07. நாடோடி மன்னன் 1958
08. ராஜா தேசிங்கு 1960
09. கலையரசி 1963
10. காஞ்சித் தலைவன் 1963


அஞ்சலிதேவி
01. மர்மயோகி 1951
02. சர்வாதிகாரி 1951
03. சக்கரவர்த்தி திருமகள் 1957
04. மன்னாதி மன்னன் 1960


சரோஜாதேவி
 01. திருடாதே 1961
02. தாய் சொல்லை தட்டாதே 1961
03. மாடப்புறா 1962
04. தாயைக் காத்த தனயன் 1962
05. குடும்பத் தலைவன் 1962
06. பாசம் 1962
07. பணத்தோட்டம் 1963
08. தர்மம் தலை காக்கும் 1963
09. பெரிய இடத்துப் பெண் 1963
10. நீதிக்குப்பின் பாசம் 1963
11. என் கடமை 1964
12. பணக்கார குடும்பம் 1964
13. தெய்வத்தாய் 1964
14. படகோட்டி 1964
15. தாயின் மடியில் 1964
16. எங்க வீட்டுப் பிள்ளை 1964
17. கலங்கரை விளக்கம் 1965
18. ஆசைமுகம் 1965
19. அன்பே வா 1966
20. நான் ஆணையிட்டால் 1966
21. நாடோடி 1966
22. தாலி பாக்கியம் 1966
23. பறக்கும் பாவை 1966
24. பெற்றால்தான் பிள்ளையா 1966
25. அரசகட்டளை 1967


- தொட்ட்டட்ரும் 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 16, 2020 1:57 pm

16.07.2020 

MGR இன்னும் யார் யார் கூடலாம் நடிச்சிருக்கார்னு சொல்லணும்ல.

போன பதிவுல தொட்ட்டட்ரும்னு சொன்ன மாதிரி தொடரணும்ல.


ஜெயலலிதா

01. ஆயிரத்தில் ஒருவன் 1965
02. கன்னித்தாய் 1965
03. முகராசி 1966
04. சந்திரோதயம் 1966
05. தனிப்பிறவி 1966
06. தாய்க்குத் தலைமகன் 1967
07. அரசகட்டளை 1967
08. காவல்காரன் 1967
09. ரகசிய போலீஸ் 115 1968
10. தேர் திருவிழா 1968
11. குடியிருந்த கோயில் 1968
12. கண்ணன் என் காதலன் 1968
13. ஒளி விளக்கு 1968
14. கணவன் 1968
15. புதிய பூமி 1968
16. காதல் வாகனம் 1968
17. அடிமைப் பெண் 1969
18. நம் நாடு 1969
19. மாட்டுக்கார வேழம் 1970
20. என் அண்ணன் 1970
21. தேடி வந்த மாப்பிள்ளை 1970
22. எங்கள் தங்கம் 1970
23. குமரிக் கோட்டை 1971
24. நீரும் நெருப்பும் 1971
25. ஒரு தாய் மக்கள் 1971
26. ராமன் தேடிய சீதை 1972
27. அன்னமிட்ட கை 1972
28. பட்டிக்காட்டு பொன்னையா 1973


மஞ்சுளா

01. ரிக் ஷாகாரன் 1967
02. இதயவீணை 1972
03. உலகம் சுற்றும் வாலிபன் 1973
04. நேற்று இன்று நாளை 1974
05. நினைத்ததை முடிப்பவன் 1975


பத்மினி

01. மதுரை வீரன் 1956
02. ராஜராஜன் 1957
03. ராஜா தேசிங்கு 1960
04. மன்னாதி மன்னன் 1960
05. அரசிளங்குமரி 1961
06. ராணி சம்யுக்தா 1962
07. விக்ரமாதித்தன் 1962


இன்னும் ரெண்டு பேர் லிஸ்ட்டை அடுத்த பதிவுல தொடரும்னு தெரிவிச்சுக்கிறேன். 

Baby Heerajan


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 2:42 pm

எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி.

எல்லாரையும்போல் மக்கள் திலகத்தின் மனிதநேயம், அவரது உள்ளத்திலும்
உரிமையோடு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.
பத்மினியின் திருமணத்துக்கு முன்னே உருவான படம் ‘ராணி சம்யுக்தா’.

பிருதிவிராஜன், குதிரை மீதேறி விரைந்து வந்து சம்யுக்தாவைக் கவர்ந்து
செல்ல வேண்டும். அந்தக் காட்சி எடுக்கப்படாமல் இருந்தது. பத்மினி அதை
முடித்துத் தர வந்தபோது நிறை மாதக் கர்ப்பிணி.

திரையில் அது தெரியாதபடி மறைத்துப் படமாக்குவது முக்கியம். எம்.ஜி.ஆர்.
அப்போது எப்படி நடந்துகொண்டார் என்பதை பத்மினியின் வார்த்தைகளில்
வாசிக்கலாம்.

‘எம்.ஜி.ஆர். என்னை எப்போதும் ‘என்னம்மா தங்கச்சி, நல்லா இருக்கியா’ என்பார்.
நான் துணிச்சலாக குதிரை சவாரிக்குத் தயாரானேன். பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு
விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.
‘உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னம்மா நீ...?’
என்றார்.

கர்ப்பிணியை குதிரையில் எப்படி அழைத்துச் செல்வது, ஏதாவது பிசகாகிவிடுமோ
என்று எம்.ஜி.ஆருக்கு ஒரே கவலை. தலையணையெல்லாம் வைத்து, பயப்படாதீங்க
என்று எனக்கு தைரியம் சொல்லி, என்னை அந்த நிலையில் நடிக்கவைத்ததற்காக
பட அதிபரைத் திட்டினார்.

புரொடியூசருக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘பாவம்! வயிற்றில் குழந்தையோடு
இருக்கிறார். கஷ்டப்படுத்தாமல் காட்சியை எடுங்கள்’ என எச்சரிக்கை செய்தவாறே
உடன் நடித்தார்’.
--


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 25 of 29 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக