புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
8 Posts - 3%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
4 Posts - 1%
mruthun
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 13 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 13 of 29 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 21 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 07, 2018 12:19 am

06.01.2018
 
நவராத்திரி 1964
 
படம் "சக்கை போடு போடு ராஜா" ன்னு ஓடுச்சாம். தெலுங்கு தயாரிப்பாளர் நாகேஸ்வர ராவ், இந்தப் படத்த வாங்கி அவரே ஹீரோவா நடிச்சாராம். இந்தியிலேயும் உருவாகி அதிலே சுனில்தத் நடிச்சிருந்தாராம்.
 
இதிலே ஒரு அதிசயம் என்னானா எம்.ஜி.ஆருக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சு போச்சாம். அவர வச்சு ஒரு படம் இயக்க APN முன்வந்தப்போ,
" 'நவராத்திரி' மாதிரி ஒரு கதையில நானும் நடிக்கணும்"னு சொன்னாராம் எம்.ஜி.ஆர். அதுக்குத்தான் MGRர வச்சு எடுத்த படம் 'நவரத்தினமாம்.   
 
'நவராத்திரி' யில ஒரு ஹீரோயின் ஒன்பது ஹீரோக்கள சந்திக்கிறாப்பல இருக்கும். 'நவரத்தின'த்தில ஒரு ஹீரோ ஒன்பது ஹீரோயின்கள சந்திக்கிறார்.
 
நாட்டிய கலைஞர்கள்  இருக்காங்களே, அவங்க டான்ஸ் ஆடும்போது மொகத்தில என்னமா  பீலிங்க்ஸ்  காட்டுறாங்க, காட்டுறாங்களா? அத மாதிரி  சினிமாவிலேயும்  செஞ்சா  என்னான்னு  ஏ.ப்பி.நாகராஜனுக்கு 
ஒரு எண்ணம் வந்துச்சாம். அப்டி மொகத்திலே நவரசங்களையும்       
காட்டணும்னா யாரை அவர் செலக்ட் பண்ணியிருப்பார்னு நெனக்கிறீங்க. அதே, அதே............................தான். நீங்க நெனக்கிறது சரிதாங்க. நடிகர் திலகம்தான். சிவாஜி ஒன்பது வேஷத்தில எப்டி நடிச்சிருப்பார் என்கிற ஆசை ஜனங்களோட எதிர்பார்ப்புல இருந்தாச்சாம். 
இந்த ஒன்பது வேஷங்களில தெருக்கூத்தாடி வேஷம் ரொம்ப நல்ல
ரோல்.  
 
ஹீரோ ரெடி. ஹீரோயின்? சிவாஜி என்ற சிங்கத்தை எதிர்த்து நடிக்க யாரை செலெக்ட் செய்றது? சாவித்திரியை செலெக்ட் செஞ்சது நல்லதா போச்சு. சரியாவும் இருந்துச்சு.
 
ஒம்போ...................து வேஷம் போட்டு நடிச்ச சிவாஜியை, ஒத்த பொண்ணா நின்னு, அந்த ஒம்போ............................. து வேஷத்துக்கும் ஈடு கொடுத்து சிவாஜியை ஓவர்டேக் செஞ்சு நடிச்சாருல்ல, சாவித்திரி.
 
அ............. ஒரு முக்கியமான விஷயம். 'நவராத்திரி' யும் 'முரடன் முத்து' வும் ஒரே சமயத்திலே உருவாகிக்கொண்டிருந்துச்சாம். அந்த சமயத்தில சிவாஜி நடிச்ச படங்கள ஒரு லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்,  அப்போதான் தெரிஞ்சுச்சாம் அவர் அதுவரைக்கும் 98 படங்கள்ல நடிச்சிருந்தார்னு. 
நாகராஜனுக்கு ஒரே ஆச்சரியமா போச்சாம். போச்சுடா! இப்போ பாருங்க. நவராத்திரியும், பந்துலுவின்  முரடன் முத்துவும் ஒரே சமயத்திலே உருவாகிக்கிட்டு இருந்துச்சாம். ரெண்டுமே ஒரே நாளிலே ரிலீசாவுறதுக்கு வேற  ரெடியா இருந்துச்சாம்.
 
இப்போ எந்த படத்த நூறாவது படம்னு அறிவிக்கிறதூன்னு நாகராஜன் பந்துலுகிட்டே பேசினாராம். ஆனா........... நாகராஜனுக்கு, புதுமையான கான்செப்ட் கொண்ட நவராத்திரியை தான் நூறாவது படமா அறிவிக்க ஆசைப்பட்டாராம். பந்துலு ஜென்டில்மேனாட்டம் ஒத்துக்கிட்டாராம். எப்படீன்னு கேக்குறீங்களா. இத படிச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு.  "முரடன் முத்து படத்தில, ஒரு காட்சி முன்னதாக ரிலீஸ் செஞ்சு அத 99 வது  படம்னு  அறிவிச்சுறலாம் " ன்னு பந்துலு சொன்னாராம்.
நாகராஜன் மனம் நெகிழ்ந்து போனாராம்.
 
அதேபோல ரெண்டு படங்களும் ஒரே நாள்ல ரிலீசாச்சாம். காலை காட்சியில முரடன் முத்துவும், பகல் காட்சி நவராத்திரியாம். இப்படியாக நவராத்திரி சிவாஜியின் நூறாவது படமாச்சாம். நல்லா இருக்குல்ல இந்த தகவல்? சிவாஜியின் சாதனையாச்சே. அதுவும் 12 வருட நடிப்பு பள்ளியில 100 படங்க நடிச்சிருந்தாராமே.
 
அந்த தெருக்கூத்து பாட்டுல தெருக்கூத்து கலைஞர்களை போல கவிதை நடை பாடல்கள பாடி நடிக்கணும்ல. சிவாஜி அத ஈ..................சியா செஞ்ஜிருவார்னு நாகராஜனுக்கு தெரியும். ஆனா............ சாவித்திரி எப்படி நடிக்க போறாரோன்னு நெனச்சாராம். அவர் மட்டுமில்ல. சிவாஜிக்கே சந்தேகம் வந்திருச்சாம். அவர் வேற தெலுங்கு பொண்ணாமே. அவர் எப்டி தமிழ்ல கவிதை பாட்டை பாடப் போறார்னு நெனச்சாங்களாம்.
 
சாவித்திரிக்கு ரிகர்சல் குடுத்தாராம் நாகராஜன். அம்புட்டுதான். அவர் டேக்கே  இல்லாம  கவிதை நடை பாட்டை அவரே பாடி நடிச்சார். அப்டித்தானே?  எல்லோரும் அசந்து போனாங்களாம்.
 
அவருக்கு தமிழக அரசு கொடுத்த 'நடிகையர் திலகம்' னு பட்டம் எந்த வருடத்திலே, எந்த படத்துக்கு கெடச்சுதுன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 07, 2018 8:27 pm

கொஞ்சம் பொறுங்கள்.நடிகையர் திலகம் (தெலுங்குவில் மகா நதி) படம் விரைவில் வருகிறது பார்த்துச் சொல்லலாம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 07, 2018 11:05 pm

07.01.2018

ஆமா மூர்த்தி, 

சாவித்திரியின் வாழ்க்கை  படமா வருது. தமிழ் & தெலுங்கில படமாக்கப்படுகிறது. தமிழிலும் 'மகாநதி' பேர்லியே ரிலீஸ் ஆகும்னு எதிர்பாத்தாங்களாம். ஆனா இல்ல. படப்பிடிப்பு எல்லாம் முடிஞ்சிருச்சாம்.  இறுதிக்கட்ட வேலையெல்லாம் நடந்துட்டு இருக்காம். 

தயாரிப்பு : வைஜெயந்தி மூவீஸ் 
டைரக்டர் : தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் 
இசை : மிக்கி J மேயர் 
சாவித்திரியாக : கீர்த்தி சுரேஷ் 
ஜெமினியாக : துல்கர் சல்மான் 

மகளிர் தினமான மார்ச் 8 2017 அன்னிக்கி, இந்தப் படத்தின் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுச்சாம். அப்போ ஜெமினி கணேசனாக நடிக்க யார் பேரையும் சொல்லலியாம்.  படக்குழு, முன்னணி நடிகர்களிடம் பேசியிருக்காங்க.  அதுக்கப்புறம்தான் இந்த துல்கர் சல்மானை செலெக்ட் செஞ்சாங்களாம். - மாலைமலர், சமயம், ஹிந்து, விகடன் 

சமந்தா பத்திரிகை நிருபராகவும், சாவித்திரி நடிச்ச சில முக்கிய படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அலூரி சக்ரபாணியாக  பிரகாஷ்ராஜ்  நடிக்கிறாங்களாம். 

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 08, 2018 12:40 am

சாவித்திரிக்கு  நடிகையர் திலகம் விருது தமிழக அரசு கொடுத்ததா? பக்கத்தில் அம்மா இருக்காங்க ,கலைமாமணி விருது கொடுத்ததாக சொல்றாங்க. நடிகர் திலகத்திற்கு பேசும்படம் பத்திரிக்கை நடிகர் திலகம் என கொடுத்ததாமே.நடிகையர் திலகம் விருது? தெரியலையே.
மதிய உணவு தயாராக காத்திருக்கிறது. அப்புறமா வர்றேன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 08, 2018 4:15 am

08.01.2018

புதிய பறவை 1964

இந்த படத்தில சிவாஜியோட அப்பாவா தாதா மிராசி நடிச்சிருக்காராமே. தாதா மிராசி டைரக்ட்டும்  செஞ்ச படம்.  நடிகர்களின் ட்ரெஸ் எல்லாம் சிங்கப்பூர் & இங்க்லாந்து நாடுகள்லே இருந்து தச்சு வந்துச்சாம். எந்த படம் 'புதிய பறவை' யா ஆச்சுன்னு தெரியுமாங்க? 

ரெபேக்கா 1940 --> Chase A Crooked Shadow 1958 --> சேஷ்  அங்க்கா 1963  [பெங்காலி  படம்] 1963  

இந்த பெங்காலி படத்தில் குட்டி குட்டியா மாத்தி வந்த படம் இந்த புதிய பறவை 1964.  

சஸ்பென்ஸ்  கதை. சிவாஜியின் முதல்  சொந்த தயாரிப்பு.  படப்பிடிப்பின் போது படமாக்கப்பட்ட முதல் பாட்டு  எது தெரியுமாங்க? "பார்த்த ஞாபகம் இல்லையோ........." 

ஆப்பிரிக்காவிலே இருந்து ஒரு மியூசிக் பார்ட்டி சென்னைக்கு அப்போ வந்திருந்துச்சாம். அந்த பார்ட்டியை  இந்த பாட்டுக்கு யூஸ் செஞ்சுக்கிட்டாங்களாம்.  "எங்கே நிம்மதி ............' இந்த பாட்ட பத்தி ஒரு விஷயம் என்னான்னு தெரியுமா? கிட்டத்தட்ட  நூற்றுக்கணக்கான வாத்திய கருவிகளை யூஸ் செஞ்சாங்களாம், 

இந்த பட ரிலீச பத்தி ஒரு விஷயம். பிரபுவுக்கு சொந்தமா சென்னையில 'சாந்தி' ன்னு ஒரு சினிமா தியேட்டர். இப்ப அது இல்ல. இந்த படத்த, அந்த தியேட்டர்லயே 1964 ல ரிலீஸ் செய்ய முடியலியாமே. அந்த சமயத்தில அந்த தியேட்டர்ல 'சங்கம்' னு ஒரு ஹிந்தி படம் ஓடிட்டு இருந்துச்சாம். பேரகன் னு ஒரு தியேட்டர். அதுலதான் புதிய பறவை ரிலீசாச்சாம். மொதல்ல நல்லாவே ஓடலியாம். அப்புறமா பிச்சுகிட்டு போச்சாம், 132 நாள். படமும் ஹிட், அம்புட்டு பாட்டும் ஹிட்டோ ஹிட். அதுலேயும் அந்த "எங்கே நிம்மதி ............." பாட்டு இருக்கே சொல்லவே வேணாம்.  அமோகமாக ஓடிய படம். 2010ல சாந்தி தியேட்டர்ல re-ரிலீஸ் செஞ்சு 50  நாள் வரை ஓடுச்சாம். 


1965ல 'சிங்கப்பூர் CID' ன்னு தெலுங்கு படம், அதுவும் ஓஹோ. 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 08, 2018 4:27 am

08.01.2018

பொம்மை 1964 


1936 ல சபோடேஜ்  னு ஒரு படம் பிரிட்டிஷ்ல வந்துச்சாம் . ஆல்பிரெட்  ஹிட்ச்ஹாக்னு  ஒருத்தர்  எடுத்தது. அவர் எப்போதும் மர்ம  படங்கள்தான் எடுப்பாராம், அவர் படம் எடுக்கும் ஸ்டைலையும், அவர் திரையில் கதைய  சொல்ற  முறையும் எஸ். பாலச்சந்தருக்கு ரொம்ப பிடிக்குமாம். சபோடேஜ்  கதைய நம்ம ஏரியாவுக்கு ஏத்தமாதிரி மாத்தி இந்த 'பொம்மை' யை எடுத்தாராம். 1963 லேயே  தயாரிகிவிட்ட இந்த படம் சில காரணங்களால அதுக்கு அடுத்த வருஷம்தான் ரிலீசாச்சாம்.  

ஒரு பொம்மைதான் இந்த படத்தின் ஹீரோவாம்.  அதுக்காக ஒரு நல்ல பொம்மையை தேடி பாலசந்தர் அலையோ அலையின்னு அலஞ்சாராம். எப்படியோ அவர் நெனச்ச மாதிரியான பொம்மை உள்ளூரிலேயே ஒரு கடையிலே கெடச்சுதாம். படம் போடு போடுன்னு போச்சாம். 
  
இந்த படத்தில P. சுசீலா கொஞ்ச நேரத்துக்கு வருவாராமே. ஆடியன்ஸ்  பயங்கரமா கை தட்டினாங்களாம். 


Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 9:48 am

பொம்மை 1964

கே .ஜே . ஜேசுதாஸ் அவர்களின் முதல் படம்

நீயும் பொம்மை நானும் பொம்மை

நன்றி நன்றி



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 11, 2018 1:14 pm

11.01.2018

குழந்தை நட்சத்திரங்கள்

யார் பையன் – டெய்சி ராணி

நான் வளர்த்த தங்கை – டெய்சி ராணி & ஹனி ராணி

மகாதேவி – மாஸ்டர் முரளி

எங்க பாப்பா, கற்பகம், வேட்டைக்காரன், எங்க வீட்டு பிள்ளை, கன்னித்தாய், நாடோடி, அம்மா எங்கே, இரு வல்லவர்கள் – ஷகிலா

கைதி கண்ணாயிரம் – பேபி சாவித்திரி

கல்யாணப் பரிசு – பாபு

தேவதாஸ் – பேபி சரஸ்வதி

திருவிளையாடல், கனிமுத்து பாப்பா – பேபி ஸ்ரீதேவி

நெஞ்சில் ஓர் ஆலயம் – குட்டி பத்மினி

வா ராஜா வா - மாஸ்டர் ஸ்ரீதர் 

அனாதை ஆனந்தன், குடியிருந்த கோயில் – மாஸ்டர் சேகர்

கண்ணே பாப்பா, பேசும் தெய்வம், அடிமைப்பெண் – பேபி ராணி

களத்தூர் கண்ணம்மா – கமலஹாசன்

ராமு – மாஸ்டர் ராஜ்குமார்

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 12, 2018 1:49 pm

12.01.2018 


Messege அனுப்பினதுக்கபுறம், paragaraph space ஏன் மாறுது? நம்பர் அடிச்சா தமிழ்  நம்பர் ஏன் வருது?

திருச்சியில எண்பது வயசுல ஒருத்தர்  இருந்தாராம். அவர் என்னான்னா,
ஆதிகாலத்திலே இருந்த நியூஸ் பேப்பர், புத்தகங்கள் 
எல்லா......................த்தையும் பத்................திரமா வச்சிருந்தாராம். அப்புறமா அதையெல்லாம் வித்துறலாம்னு நெனச்சு, பேப்பர்ல விளம்பரம் 
குடுத்தாராம். அதடைரக்டர் ஸ்ரீதர் பார்த்து, அவரே அத வாங்கிட்டாராம். 
அவர் வாங்கிய பேப்பர்ல 'சுதேசமித்திரன்' ல ஒரு செய்தி வந்திருந்துச்சாம். 

அதே................. மாதிரி 

1935, நவம்பர் 26. ஹிந்து பேப்பர் 

அன்னிக்கி ஒரு சுவாரஸ்.............................யமான நியூஸ். அந்த நியூஸை எல்லாரும் இன்டரெஸ்டிங்கா படிச்சாங்களாம். 

டெல்லில ஒரு ஒம்போது வயசுப்பொண்ணு, சாந்தாதேவி ன்னு பேர். அவளுக்கு முந்தைய பிறவியில நடந்ததெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குன்னு சொன்னாளாம். 

டெல்லியிலிருந்து 100 மைல் தூரத்திலுள்ள மதுராவில் வாழ்ந்தாளாம். அவள் புருஷன் பேரு Caseyன்னும், அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாவும் சொன்னாளாம். அவங்க வாழ்ந்த வீட்டைப் பற்றி, வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி, அவ குழந்தையை பற்றி எல்லாம் சொன்னாளாம். நிறைய பேர் நம்பல. 

பிரபல வக்கீல் ஒருத்தர். ஏன் இவள் சொல்றது உண்மையா இருக்கக்கூடாதுன்னு நெனச்சாராம்.  எப்படியோ அவள் கணவன்னு சொன்ன அந்த Casey யை தேடி போனாராம். தனியா இல்ல, சாந்தாதேவியை கூட்டிகிட்டு.  

அதிசயம் என்னான்னா, அவங்க போனப்போ, அவன் உயிரோடு இருந்தானாம், மகளும்தான். டெல்லியில இருந்த அவங்க ரெண்டு பேரையும் பார்த்த சாந்தாதேவி,  அவங்கள உடனே அடையாளம் தெரிஞ்சுக்கிட்டாளாம். முற்பிறவி கணவன்ட்டேயும், மகள்ட்டயும் அவள் முற்பிறவில ஒவ்வொரு நாளும் நடந்ததையும் சொல்லியிருக்கா. அவள் கணவனும், அவள் சொன்னதெல்லாம் உண்மைன்னு ஒத்துக்கிட்டானாம். 

அவனும், சாந்தாதேவி தன் மனைவியின் மறுபிறவிதான்னு நம்பிட்டானாம்.  

இதே..................... மாதிரி 1939 ல பாலக்காடு, கேரளா, ராஜஸ்தான் இந்த இடங்களிலேயும் இப்படிப்பட்ட சம்பவங்கள் வந்துச்சாம். 

பழைய பேப்பர்ல வந்த இப்படிப்பட்ட செய்திகள்தான் ஸ்ரீதருக்கு இன்ஸ்பிரேஷன் ஆச்சு ஈ................சியா ஜகண்டுபுடிச்சிருப்பீங்களே. அதே அதே அதே................ தான். 

நெஞ்சம் மறப்பதில்லை 1963

இந்த படத்தில நம்பியார் 120  வயதுடையவரா நடிச்சிருப்பாராம்.

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 13, 2018 12:16 am

13.01.2018 

உன்னைப்போல் ஒருவன் 1965 

விகடனில் வந்த ஜெயகாந்தனின் கதை ‘உன்னைப்போல் ஒருவன்’. அப்புறமா நாவலாக வெளியிட்டார். 

வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு ஜெயகாந்தன் கதைகள்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். அவருடைய கதைகள்ல ஒரு கதையை ஜெயகாந்தனே டைரக்ட் செஞ்சா, கிருஷ்ணமூர்த்தி தான் தயாரிப்பதாக சொன்னார். ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் நாவலை அவர்ட்ட காட்டினாராம். கிருஷ்ணமூர்த்திக்கு அந்தக் கதை புடிச்சு போச்சு. ஜெயகாந்தன்ட்ட, அந்த நாவலுக்கு திரைக்கதை எழுத சொல்லியிருக்கார். 

ஜெயகாந்தன் 15 நாள்ல திரைக்கதை எழுதி கிருஷ்ணமூர்த்தியை போய் பார்த்தாராம். அவர் அடுத்த நாள் வரச்சொல்லிட்டார்.

இவரும் அடுத்த நாள் போனார். ஜெயகாந்தனின் எதிர்பார்ப்பு வீணா போச்சு. “ஊஹும்” சொல்லிட்டார், கிருஷ்ணமூர்த்தி. இந்த மாதிரி படத்தை எடுத்தா, ஜனங்களுக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டாராம்.

அவர் என்னவோ கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளை வெலா.......வாரியா சொல்லியிருந்தார் போல. சமைக்கிறது, சாப்பிட்றது, தூங்க்றது இத பத்தியெல்லாம். பெங்காலி படம் மாதிரி எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம். பெங்காலி படத்தை இப்படித்தான் எடுப்பாங்க போல. பெரீ..............ய கும்பிடு போட்டுட்டு ஜெயகாந்தன் போய்ட்டாராம்.

ஜெயகாந்தன் சும்மா இருக்கல. இந்தப் படத்தை எப்படியா...........வது எடுத்தாகணும்னு பிடிவா.................தமாய் இருந்தாராம். 

தன் friends பலரை சந்திச்சு, அவங்ககிட்ட பணத்தை  share பண்ண சொன்னார். அவங்களும் கொடுத்தாங்க. இவரும் கொஞ்சம் பணத்தை போட்டார். படத்தை டைரக்ட் செய்ய ஆரம்பிச்சுட்டார். 1964 டைரக் ஷன் முடிஞ்சுது.

ஜெயகாந்தன் படத்தை ரிலீஸ் செய்யல. அப்போ எதுக்கு படத்தை எடுத்தார்னு கேக்குறீங்களா? படத்தை ரிலீஸ் செய்றதுக்கு முன்னால அந்த படத்தை தேசிய விருதுக்காக அனுபிச்சுட்டாராம். தேசிய விருதும் கெடச்சுதாம். 
கமர்ஷியல் படங்களா................. வந்துட்டு இருந்த ட்ரெண்டை மாத்தி, யதார்த்த வகையில வந்த சினிமாவில இந்தப் படம் முதல் படமாம். கதையும், அதை சொன்ன விதமும் புதுமையா இருந்துச்சாம்.  நடிச்சவங்க பிரபலமானவங்களா இல்ல.  அதனால அந்த படத்த யா..............ரும் வாங்க தயாரா இல்லியாம். ஜெயகாந்தனே இந்த படத்த 1965ல ரிலீஸ் செஞ்சாராம். இந்தப் படத்தில பாட்டே இல்லியாம்ல. ஒன்லி சிட்டிபாபுவின் பின்னணி இசை.

AVM செட்டியார் இந்தப் படத்தை பாத்துட்டு, ஆச்............சரியப்பட்டு போனாராம். உடனே இந்தக் கதையின் எல்லா..........வித உரிமைகளையும் கொடுக்க சொல்லி ஜெயகாந்தன்ட்ட கேட்டாராம். ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக சொன்னாராம். எதுக்குன்னா, அந்தக் கதை செட்டியாருக்கு புடிச்சிருந்துச்சு. அதனால பிரபலமானவங்களை நடிக்க வச்சு படத்தை மறுபடியும் எடுக்கலாம்னு முடிவு செஞ்சிருந்தாராம். இந்த விஷயம் தெரிஞ்ச ஜெயகாந்தன், தன் கதையை விற்க முடியாதுன்னுட்டாராம்.

பத்திரிகைகாரங்க இந்தப் படத்தைப் பத்தி பாராட்டிதான் எழுதினாங்களாம். சோவியத் யூனியன்ல இந்தப் படம் திரையிடப்பட்டதாமே.

படமும் தியேட்டருக்கு போச்சு.  இந்த தியேட்டர்காரங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? என்ன மாதிரி ட்ரிக் செஞ்சிருக்காங்கன்னு கேளுங்க.  கொஞ்ச டிக்கெட் மட்டும் வித்துட்டு, ஹவுஸ் புல் board ஐ வச்சுட்டாங்களாம்.  மீதி டிக்கெட் நிறைய இருந்துச்சாம்.  அப்போ ஜனங்க என்ன செஞ்சாங்க?  டிக்கெட் இருக்கிறத  தெரியாம, board ஐ மட்டும் பாத்துட்டு திரும்பி போய்ட்டாங்களாம். அப்புறமா அந்த board ஐ தியேட்டர்காரங்க எடுத்துருவாங்களாம்.  எப்படி இருக்கு பாருங்க!   அதுக்கப்புறம்  என்ன  செஞ்சாங்க?  தியேட்டருக்கு படம் பார்க்க யாரும் வரலேன்னு சொல்லி படத்த எடுத்துட்டாங்களாம். படத்தை பற்றி ஜனங்கள் பேசுறதுக்கு முன்னாலேயே, படத்தை தூக்கிட்டாங்களாம். ஜெயகாந்தன் ரொம்ப வருத்தப்பட்டாராம்.
- ஹிந்து

Heezulia

Sponsored content

PostSponsored content



Page 13 of 29 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 21 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக