புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
8 Posts - 3%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 21 of 29 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 12, 2018 10:39 pm

12.02.2018


K சங்கர், GN வேலுமணியுடன் இயக்கிய ஒரு படம். சங்கர் - MGRக்கான முதல் படம் பணத்தோட்டம்.

இந்தப் படத்துக்கு மொதல்ல வச்ச பேர் ‘பூவிலங்கு’. BS ராமையாவின் நாடகமாம் பூவிலங்கு. இந்தக் கதை சுந்தந்திர போராட்ட காலத்தில் உள்ளதாம். இதை தழுவிதான் இந்தப் படம் எடுக்கப்பட்டதாம். பாசுமணி திரைக்கதை வசனம் எழுதினாராம். மொதல்ல இந்தப் படத்துக்கான வெளம்பரத்தில, MGR ப்ரிட்டிஷ் காலத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்கிறமாதிரி இருந்துச்சாம். அப்புறமா கதையே மாறிப்போச்சாம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்க்ல, MGRன் நடிப்பு சங்கருக்கு பிடிக்காம போச்சாம். நிறைய டேக் எடுத்துட்டு இருந்தாராம். MGR சிரிச்சாராம். சங்கரை தனியே கூப்ட்டு போனாராம். “என்ன சார், எத்தன டேக்தான் எடுப்பீங்க.. நீங்க பெரிய பெரிய நடிப்பெல்லாம் பார்த்திருப்பீங்க. அதமாதிரி எங்கிட்டேயும் நீங்க எதிர்பார்த்தா எப்படி சார்? என்னால இவ்வளவுதான் சார் முடியும். ஓவர் ஆக்டிங் எனக்கு தெரியாது. எடுத்து முடிங்க”ன்னு சொன்னாராம். இது பற்றி தெரிஞ்சவங்க, சங்கரும், MGRஉம் இனி சேரமாட்டாங்கன்னு நெனச்சாங்க. அவங்க நெனப்பு சரியில்லாம போச்சாம்.



Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 14, 2018 8:25 pm

உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாதது.



இந்தப் பாடலைப் பாடியது யார்?

பாடகி சரளா அம்மையார் யார் தெரியவில்லையே !

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Feb 17, 2018 11:53 pm

17.02.2018

சரளாதானே, யார், கோவை சரளாவா? அந்தம்மா மாதிரி தெரியலியே. ஓ.........ஹோ நீங்க பாடகி சரளாவை சொல்றீங்களா? விஷால் சமாச்சாரம் படிச்சுட்டு, இவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்னு கேக்குறீங்களா? 

எனக்கு இவரைப் பற்றி தெரிந்த ஒரே............... விஷயம் இவர் நாகூர் EM ஹனீஃபா இசைக்குழூல சேர்ந்துட்டு, அவருடன் இஸ்லாமிய பாட்டுக்களை பாடிட்டு இருந்தவர். இம்புட்டுதான் தெரியும். 

அதுக்குன்னு இதோடு விட்டுருவேனா? கேட்டுட்டீங்களே. தேடாம இருக்க முடியுமா? கெடச்சதை எழுதியிருக்கேன். படிங்க. 

இவர் ரத்தக்கண்ணீர், தூக்குமேடை இந்த நாடகங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்காராம். 

சரளாவின் கணவர் அம்பி சுமாமிநாதன். அவரது 16 வயசிலிருந்தே ஹனீஃபா க்ரூப்ல தபேலா வாசிச்சுட்டு இருந்தவராம். சரளா என்னான்னா அம்பியை லவ்வோ 
லவ்வி கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. அதனாலதான் ஹனீஃபா குழுல பாட ஆரம்பிச்சாரு போல. 

அப்புறமா எப்படியோ சினிமால பாட வந்துட்டார். 

இவர் பாடிய சில சினிமா பாட்டுக்கள் : 

நூறாண்டு காலம் வாழ்க - பேசும் தெய்வம் 
நந்தன் வந்தான் கோயிலிலே - நினைவில் நின்றவள் 
என்னடி செல்ல கண்ணு - தேன்மழை 
வருவாயோ வேல்முருகா - ஏன் 
உனக்கென்னாத்தானே இந்நேரமா - பொண்ணு ஊருக்கு புதுசு 
சிந்தனையில் மேடை கட்டி - திருமலை தென்குமரி 
ஊரும் சதமல்ல - அன்னை அபிராமி 

சுசீலா, LR ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன், SPB, PBS இவங்களோடல்லாம் பாடியிருக்கார். 


அம்பி இறந்த பின்னால கச்சேரிகளில் பாடறதை நிப்பாட்டிட்டாராம். அதனால பாடுற சான்ஸ் இல்லாம போயிருச்சு. 76 வயசாகியும், அவர் குரல், முந்தி இருந்த மாதிரியே, சின்ன வயசுக்காரங்க பாட்ற மாதிரியே இருக்குதாம். 


- தந்தி, புதிய தலைமுறை, அவள் விகடன்.

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 18, 2018 12:25 am

உங்கள் டுவிட்டர் பக்கத்தில் பாடலைக் கேட்டேன். படத்திற்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லையே என்பதால் கேட்டேன் . இப்போதுதான் தெரிந்தது அவர் சினிமாப் பாடகியும் கூட என்பது.நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 10:10 am

சரளா அவர்கள் பற்றி நிறைய அரிய தகவல்கள், அருமை
நன்றி பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 4:45 pm

26.02.2018 

ஊமைப்படங்களின் காலம் முடிஞ்சு, பம்பாய்ல பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. முதல் பேசும் படம், 'ஆலம் ஆரா.' இந்தப் படத்தை தயாரிச்சவர்,  அர்தேசிர் இராணி.

இவர் பிராந்திய மொழிகள்லேயும் படம் எடுக்க ஆசைப்பட்டாராம். அந்த வரிசையில, ஒரு தமிழ் படத்தை தயாரிக்க, பேசி நடிக்க, ஒரு தமிழ் நடிகை தேவைப்பட்டார். நடிகையைத் தேடிய ஆர்தேஷிர்இராணி,  டி.பி.ராஜலஷ்மியை தனது 'காளிதாஸ்' படத்ல நடிக்க வச்சார்.
1931ஆம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் பேசும் படமான 'காளிதாஸ்'   ராஜலஷ்மி கதாநாயகியாக நடிச்சு ரிலீஸ் ஆச்சுனு எல்லாருக்கும் தெரியும்னு வைங்க. படத்தின் ஒரு பாட்டை கொடுத்து பாடச் சொன்னாங்க. திருவையாறு மண்ணில் பிறந்தவராச்சே. பாடி அசத்தினார். பாட்டு நல்லா இருக்கவே, இன்னொரு பாடலைக் கொடுத்து, டான்ஸ் ஆடிட்டே........... பாடணும்ன்னாங்க.

'எனக்கு ஆட வராதே'னு  சொல்லிபுட்டார் ராஜலஷ்மி. 'உன்னால முடியும், திறமை இருக்கிறது. ட்ரை செஞ்சா வராதா..? யூ கேன் டூ it மா'ன்னு  ஊக்கம் கொடுத்தார், படத்தின் டைரக்டர். 'மன்மத பாணமடா, மாரினில் பாயுதடா' ங்கற அந்த பாட்டு, மதுரை பாஸ்கரதாஸ் சுவாமி எழுதியது. தாமேலே, தன் திறமை மேல நம்பிக்கை இருந்த ராஜலஷ்மி, 'ஆடித்தான் பாக்கலாமே...' னு  தெரிஞ்ச அளவுக்கு ஆடியிருக்கிறார். அதுவே சிறந்த நடனமாயிருச்சு.  ராஜலஷ்மியின் சினிமா பிரவேசம் இத்தனை சாகஸங்களுடன் நடந்துச்சு.

'காளிதாஸ்' படத்தில் இன்னொரு சுவாரஸ்யம் உண்டு. அதுல கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி தமிழ்ல பேசினார், பாடினார்; கதாநாயகன் தெலுங்குல பேசினார். மற்ற சில நடிகருங்க ஹிந்தீல வசனம் பேசினாங்க. ஆக இப்படி பல மொழிப்படமாக அது அமஞ்சிருச்சு. எது எப்படியோ அதுவே தமிழின் முதல் பேசும் படம்னு சினிமா வரலாற்ல பதிவாயிருச்சுல்ல.

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 7:00 pm

15.02.2018 

MGR ஐ சுட்டதனால எம்.ஆர். ராதாவுக்கு சிறைத்தண்டனை கெடச்சுதுல்ல. அப்போ அவர்கூட ஒரு இங்கிலீஷ்காரரும் இருந்தாராம். அவருக்கு ராதா கேசரியும், சாம்பாரும் சமைச்சு போட்டாராம். [இது என்னங்க காம்பினேஷன், கேசரியும், சாம்பாரும்?]  அது அந்த இங்கிலிஷ்காரருக்கு ரொம்ப புடிச்சு போச்சாம். 

ஒரு நாள் பேச்சுவா..........க்கில ராதா, "ஏன்யா வெள்ளக்காரா, உங்க ஊர்ல எப்படி? 30 வருஷமா வக்கீலா இருக்கிறவர்தான் ஜட்ஜா வருவாரா?" ன்னு கேட்டுபுட்டாராம். அதுக்கு அந்த வெள்ளைக்காரர், "ஆமா எங்க ஊரிலும் அதே........... பழக்கம்தான்" ன்னாராம். 

ராதா கெக்கே................... பிக்கேன்னு சிரிச்சிருக்கார்.  அப்பறம் கேட்டாராம், "அதெப்டிய்யா, பொய்யை மட்டுமே தொழிலாய் வச்சுக்கிட்டு வாதாடி சம்பாதிக்கிற ஒருத்தர், ஜட்ஜா வந்து உக்காந்ததும், "மை lord"ன்னு சொல்றோமே..............., இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமாய்யா?" ன்னு ஒரு போடு போட்டாராம்.  இங்கிலீஸ்காரர் யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். 
ஜெயில்ல இருந்துகிட்டுகூட  சும்மா இருந்தாரா பாருங்க. 

Heezulia   மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 10:53 am

03.03.2018

உலகத்தில் உயர்ந்த மனிதன்னு சிவாஜி நிரூபிச்ச படம் உயர்ந்த மனிதன் [1968].

உத்தர புருஷ். இது ஒரு வங்க மொழி படம். இந்த படத்தை தமிழ்ல எடுக்க AVM நிறுவனம் விரும்புச்சு. கதையின் உரிமையை வாங்கியாச்சு. கதை வேணுமே. யாரை வச்சு எடுக்கலாம்? ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி கொடுத்துட்டார்.  யாரை நடிக்க வைக்கிறது? Discuss செஞ்சாங்க. 

செட்டியாரின் மகன் சரவணன், சிவாஜியை suggest செஞ்சார். செட்டியாரும் ஒட்..............டனே “உம்” சொல்லிட்டார். ஆனா அந்த சமயத்தில, AVMக்கும், சிவாஜிக்கும் ஏதோ லே..........சான லடாய். அதெல்லாம் பரவாயில்லன்னு நெனச்சு, சரவணன், முருகன், குமரன் மூணு பேரும், சிவாஜியை சந்திக்க, அவரோட வீட்டுக்கு போனாங்க. 

உத்தர் புருஷ் படத்தை சிவாஜிக்கு போட்டு காட்டினாங்க. ஆனா அவர் என்ன சொன்னார்னாக்கா, “நான் ஹீரோவா நடிக்க புடிக்கல. அதுல வர்ற டாக்டரா நடிக்கிறேன். சின்ன வேஷம்தான் பரவாயில்ல. கெஸ்ட்டா நடிக்கிறேன்”ன்னு சொல்லிட்டார். 

என்ன இவர் இப்டீ சொல்றார்னு மூணு பேரும் யோசிச்சாங்க. சரவணன் விடல. அவர்ட்ட பேசி கீசி, சம்மதிக்க வச்சுட்டார். கதாநாயகனாக சிவாஜி நடிச்சுட்டார். ஆனா முழு............ மனசோடு இல்ல. வேண்டா.............. வெறுப்போடுதான் நடிச்சார். ஆனாலும் படம் எப்படி? தூள் இல்ல? 


- பரணி

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 11:14 am

03.03.2018 

மனிதன் [1987] – மனித நேயம் நிறைந்த ரஜினியை மனசுல வச்சு வைக்கப்பட்ட பேர். படம் ஓஹோ. ஆனா 1953 ல இதே பேர்ல வந்த படம்..... வேஸ்ட்டா போச்சாம். அதனால் ரஜினியின் படத்துக்கு மனிதன்னு பேர் வைக்க வேணாம்னு சொன்னாங்களாம். AVM கேக்கல. மனிதன்ங்கற அதே பேரை ரஜினி படத்துக்கும் வச்சுட்டார்.

‘சுட்டாலு உன்னாரு ஜாக்கிரதா’. இது ஒரு தெலுங்கு படம். இதன் உரிமையை AVM வாங்கினார். ரஜினியை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். ரஜினிகூட பேசினார். அவர் என்னான்னா, ‘ஐயய்யோ, இந்தப் படமா? ஏற்கனவே நான் இந்தப் படத்தை பார்த்துட்டேன். இது எனக்கு செட்டே.....................ஆகாது. கமலை வேணும்னா நடிக்க வச்சுக்கோங்க.” ன்னுட்டார். சரவணன் விட்................டலயே. “நீங்கதான் நடிச்சாகணும்”னு கம்ப்..................பெல் பண்ணி சொல்லிட்டார்.

அந்தப் படத்தை விசுட்ட போட்டு காட்டினாங்க. அவரும் பார்த்தார். படத்தில நல்ல விஷயங்களை எல்லாரும் சேர்ந்து ஆராய்ச்சி செஞ்சாங்க. படத்தில அங்கங்க கொஞ்சம் changes பண்ண சொன்னார் விசு. ரஜினிக்கு ஏத்த மாதிரி படம் இருக்கணும்ல? இத்தன ஏற்பாடுகள் எந்த படத்துக்குன்னுதானே யோசிக்கிறீங்க. அதுதா.....................ன் ரஜினியின்  போக்கிரி ராஜா [1982].    நூ.................று நாள் ஓடிய படம்.

- பரணி

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 3:20 pm

03.03.2018

சகலகலா வல்லவன் [1982] – கமலுக்காகவே இந்தப் பேர் வைக்கப்பட்டுச்சாம்.

AVM தயாரிச்ச ப்ரமாண்டமான படங்கள்ல இதுவும் ஒண்ணு. வெள்ளி விழா படம். இந்த படத்தில ஒரு சண்டை ஸீன். அந்த சண்டை ஸீன்ல, அந்த லோகஷன்ல, சுவத்தில MGR படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்கும். அதை பார்த்த ரசிகர்கள், பயங்கரமா கைதட்டி விசிலடிச்சாங்க. இது ஒண்ணும் ஆச்சரியமில்ல.

AVMஇன் ரஜினி நடிச்ச பாயும் புலி படம். அதுலேயும் ஓர் சண்டை காட்சி. சுவத்தில MGR போஸ்ட்டர். ஷூட்டிங்க்கு முன்னால இந்த போஸ்ட்டரை ரஜினி பாத்திருக்கார். அந்த போஸ்ட்டரை ரஜினி எடுக்க சொல்லிட்டார். “எம்படத்தை பார்க்க வர்றவங்க, என்னை மட்டும்தான் பார்க்கணும். MGRங்கற பெரிய மனுஷர் மூலமா நான் பிரபலமாவது எனக்கு புடிக்கல.”ன்னு சொல்லிட்டாராம். அவர் விருப்பப்படியே MGR போஸ்ட்டரை எடுத்துட்டாங்களாம். வேற வழி?


- பரணி 

Heezulia

Sponsored content

PostSponsored content



Page 21 of 29 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக