புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
2 Posts - 2%
mruthun
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனிதாவுக்கு அஞ்சலி !


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 03, 2017 9:22 am

நம்பவைத்துக் கழுத்தறுத்த நாடாளும் கும்பலொன்றின்
...நயவஞ்சக சூழ்ச்சிக்குப் பலியானாய் அனிதா !
எம்பிபிஸ் படிப்பெல்லாம் ஏழைக்கு இல்லையெனும்
...எழுதாத சட்டத்தை ஏனோநீ மறந்தாய் !
நம்பியுனைப் படிக்கவைக்க நல்லவராம் தந்தையினை
...நட்டாற்றில் தவிக்கவிட்டு நீமட்டும் கண்மூட
வெம்பியுளம் வேகுதம்மா ! வேதனையில் தவிக்குதம்மா !
...வெள்ளைமனம் கொண்டவளே ! வெந்துவிட்டாய் கனவுடனே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 9:37 am

என்ன கொடுமை சார் இது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 03, 2017 12:35 pm

Dr.S.Soundarapandian wrote:என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1247362

சுவரில் தலையை முட்டிக்கொள்ளும் அளவுக்கு என்கவிதை மோசமாக உள்ளதா ஐயா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 03, 2017 8:11 pm

இன்னிசை வெண்பா
======================
கண்ட கனவெல்லாம் கானல்நீர் ஆனதம்மா
கொண்ட பெருமுயற்சி கைவிட்டுப் போனதினால்
நீட்டென்னும் நச்சரவம் தீண்ட அனிதாவைக்
காட்டிடை வைத்தார் எரித்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 03, 2017 11:11 pm

நாம் விருப்பப்படுவது யாவும்
நமக்கு கிடைக்கவில்லை எனில்
தற்கொலைதான் தீர்வா?
அப்பிடி என்றால் இன்றைய உலகத்தின் 50 விழுக்காடு
மக்கள் மரணம் அடைந்து இருப்பார்கள்.
காதலில் தோல்வி, அலுவலக உயர் பதவி தோல்வி,
பிரதமர்/முதலமைச்சர் /அமைச்சர் ஆகமுடியாத தோல்வி,
மனைவியுடன் வாக்குவாதத்தில் தோல்வி ......
கூறிக்கொண்டே போகலாம்.
வெறுக்கத்தக்கது --செய்யவேண்டிய நேரத்தில் எதுவும் செய்யாமல்
அதை அரசியல் ஆக்குவது --ஆளும் கட்சி /ஆளாத கட்சி /கலைஞர்கள் போர்வையில்
கூத்தடிக்கும் கூத்தாடிகள்....இவர்கள் உண்மையிலேயே நலம்விரும்பிகள் இல்லை
என்பதே என் கருத்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 04, 2017 3:46 am

முகநூலில் கண்டது.

------------------------------------------------------------------------------------------------------------
Just to balance the arguments:
சில கேள்விகள் பல பதில்கள் .....
1.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
+2 ல 1200 க்கு 1176 அதாவது 96% மதிப்பெண் எடுக்க முடிந்தவரால், நீட் தேர்வில் எடுக்க முடிந்தது வெறும் 86 மதிப்பெண்கள் தான். அதுவும் 720 க்கு.
ஏன் இந்த நிலை? இத்தனைக்கும் 55% கேள்விகள் +1 பாடத்திலும், 45% +2 பாடத்திலும் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து இருந்த நிலையில் எப்படி
இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை தான் இவர் பெற்றார்?! காரணம் இவர் படித்தது அரசு பள்ளி இல்ல..Raja vignesh என்ற தனியார் பள்ளி. தமிழ்நாட்டில்
எத்தனை தனியார் பள்ளில +1 பாடம் நடத்துறாங்க..? உங்கள் சிந்தனைக்கே விட்டுறேன்.
2.இன்று அவரது சாவில் அரசியல் பண்ணும் கட்சிகள் Psg, meenakshi, SRM மெடிக்கல் காலேஜ்கள் ₹கோடி கணக்கில் மெடிக்கல் சீட்டை விற்ற போது
ஏன் வாய் திறக்கல?
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எம்புட்டு நேர்மைனா 
விஜயகாந்த் மச்சானுக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு,
பச்சமுத்து காலேஜ் தான் SRM னு சொல்லி தெரிய வேண்டியதில்லை....ராமதாஸ் சொந்தமா மெடிக்கல் காலேஜ் இருக்கு ....Dr. MGR University ல பெரும் பங்கு
யாருதுனு ஒங்களுக்கு தெரியும். இதுல என்னடா ஒரு கட்சி மட்டும் வரலயே. அவனுக அம்புட்டு யோக்கியனா இல்ல மறைக்குற நீ அயோக்கியனானு கோபப்பட
வேண்டாம்.. ஜெகத் ரட்சகன் தொடங்கி மெடிக்கல் காலேஜ் இல்லாத திமுக முக்கிய புள்ளிகள் யார் இருக்கா??!
3.இப்போது கூப்பாடு போடுற தமிழக 'அற நெறி' ஊடகங்கள் அப்போது ஏன் கள்ள மெளனம் சாதித்தன?
கோவை Psg College ல டொனேஷன் மட்டுமே ₹75 லட்சம் வாங்குனாங்க.. Meenakshi College ல ₹60 லட்சம், SRM சொல்லவே வேணாம் உங்களுக்கே தெரியும். அப்ப ஏன்
எந்த ஊடகமும் இதை பொது விவாதத்திற்கு எடுக்கல. அட உண்டியல் கட்சின்னு சொல்ற கம்யூனிஸ்ட் கூட மெளன விரதம் இருந்தார்களே ஏன்? Cheque வாங்கிட்டாங்களா..?
அதுசரி பச்சமுத்து நடத்துற SRM medical college ன் பகல் கொள்ளையை அவரது மகன் நடத்துற PuthiyathalaimuraiTV வெளிச்சம் போட்டு காட்டும் என நினைத்தால்.. நாம் தான்
குருடர்கள். (இந்த இடத்தில் ஒங்களுக்கு தனி ஒருவன் படம் நினைவுக்கு வந்தால்.. உண்மையை உணர தொடங்கி விட்டது உங்க மனது)
4.மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தது சரின்னு வச்சுக்குவோம். ஆனா SRM போன்ற கல்லூரிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்க்க காரணம்?
சரி மாணவர்கள் எதிர்த்தார்கள் ரைட்டு. இந்த SRM ஏன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினான்?? மன்னிக்கவும் அவன் போராடியது நீட் தேர்வை எதிர்த்து இல்ல
நீட் தேர்வு மூலம் அட்மிஷன் நடந்தா தன் management quota seats எப்படி அதிக விலைக்கு விற்பது..! அதனால் அவனுக்கு மட்டும் விலக்கு கேட்டு போராடினான். இதே போன்று
மத்த கல்லூரிகள் ஒன்று சேர்ந்து மறைமுகமாக நீட் தேர்வை தடுக்க பெரிய லாபி செய்து தோற்றார்கள் என்பதே உண்மை. ஏன்?? பின்ன ₹கோடி கணக்கில் விற்ற management seats
களை இன்று நீட் மூலம் வெறும் ₹12 செலவில் மாணவன் படிக்க முடிந்தால் அவனுக பொழப்பு என்னாவுறது..
5.உண்மையில் அனைத்து சாதியையும் உள்ளடக்கிய சமூக நீதி.. இந்த நீட் தேர்வால் நசுக்கப்பட்டுள்ளதா?
இதுதான் அடுத்த திட்டமிட்டு பரப்பப்படும் பொய். ஒரு சின்ன உதாரணம்.. கடந்த வருடம் medical seat பெற்ற sc மாணவர்கள் 94. இந்த வருடம் 135 இதுல எங்க தாழ்த்தப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட் இருக்கு??!
அடுத்த வாதம் OC category ல போன வருடம் 168 ஆனா இந்த முறை 515.. இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம்.
அதாவது அந்த 515 பேரும் brahmins or upper (forward) caste னு காட்ட முற்படுறாங்க. ஆனா உண்மையில் அதுல 36 பேர் sc, 201 பேர் BC, 179 MBC. இதுபோக மீதி 99 பேர்ல தான்
brahmin, chettiar உட்பட ஏனைய unreserved and upper castes வற்ராங்க. இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டது..

தொடர்கிறது........



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 04, 2017 3:51 am

6.நீட் தேர்வில் பிற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன? அங்கு ஏன் நீட் எதிரா ஒரு போராட்டமும் இல்ல??
தமிழ்னு வெறும் அரசியல் கோஷம் போட்ட நாம் இந்தியை எதிர்த்தோம் ஆனா ஆங்கிலத்துக்கு அடிமையானோம். இது சிலரது அரசியலுக்கு மட்டும் தான் பயன்பட்டது.
ஆனா கேரளா உட்பட எந்த மாநிலமும் இந்தியை எதிர்க்கல. நம்மில் எத்தனை பேருக்கு நவோதயா, இ-கல் வித்யாலயா பற்றி தெரியும். தரமான சிபிஎஸ்இ கல்வியை மிக
குறைந்த செலவில் அளிக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனத்தை ஏன் தமிழ்நாடு மட்டும் ஏற்கல?? அப்ப திமுக கட்சிக்காரர்கள் மட்டும் சிபிஎஸ்இ பள்ளி நடத்தலாமா??
உங்க சிந்தனைக்கே விட்டுறேன்
7. நீட் தேர்வில் அரசியல் செய்யும் கட்சிகளின் உண்மை நோக்கம் என்ன?
நீட் தேர்வு வந்தால் தங்கள் உறவினர், கட்சிக்காரர், நன்கொடை வழங்கும் பெரு முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தான் முழு மூச்சாக தமிழக கட்சிகள்
எதிர்க்கின்றன. உதாரணம், Psg medical college ல மு. க. ஸ்டாலினுக்கு என்று தனி கோட்டாவே உண்டு, புதுவை ஜிப்மர்ல வைகோவுக்கு ஒரு சீட் உண்டு ஆனா சில லட்சங்கள் செலவோடு.
8.அடுத்து கல்வித்துறை செய்ய வேண்டியது என்ன?
இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு
பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவனும்
9.நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கல அல்லது கேட்க முடியல?
10.நீட் தேர்வு என்ற ஒரு பிரச்சனை எப்போது, எதனால், யாரால் முளைத்தது?
9 & 10. இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்காத மாணவர்கள் மலேசியா, தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகள்ல இங்க management quota ல செலவு பண்றத விட குறைந்த
செலவில் படித்துவிட்டு MCI தேர்வு எழுதி டாக்குடராவது ஏற்புடையதா?? இதனால மருத்துவ தரம் எப்படி இருக்கும். அப்படின்னு சாட்டையடி கொடுத்த பின் தான் வேற
வழியின்றி கான்கிரஸ் அரசு நீட் வரைவை உருவாக்கியது.
அதை செயல்படுத்தியது பாஜக அரசு. இதனால தான் உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது. ஏன்னா அது எடுத்த நடவடிக்கை மிக சரி.. கட்டுக்கடங்காத
management fees, donation இதுல படித்து வர்றவன் எப்படி சேவை மனப்பான்மையோடு இருப்பான்??
இதுக்கு மேலயும் மோடி ஒழிக, நீட் வேண்டாம் என்றால்.. தயக்கமின்றி சொல்வேன் நீங்களும் சந்தர்ப்பவாதி தான்

.......................................................................................................................................................

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 04, 2017 10:11 am

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''


''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''


''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.''

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

அனில் சடகோபால்''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''  

''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''

"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''

''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''

நன்றி : விகடன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 04, 2017 8:29 pm

அநியாயம் அநியாயம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 05, 2017 9:17 pm

விகடனில் வெளியான நீட் தேர்வு சார்ந்து டெல்லி பேராசிரியர் அனில் சடகோபன் பேட்டிக்கு என்(மாரிதாஸ்) பதில்.
பதில் கொடுக்கும் முன்னர் நான் முன்னர் வெளியிட்ட அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்கிறேன் என்ற பதிவுக்கு வந்த பொதுவான
ஒரு கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு சடகோபன் அதாவது இடதுசாரிகள் ஆதரவாளரான அனில் சடகோபன் அவர்கள் பேட்டிக்கு பதில் தருகிறேன்.
கேள்வி :
ஏழை கிராமபுற மாணவர்கள் எப்படி தனியாக நீட் தேர்வை சந்திக்க கோச்சிங் கிளாஸ் சென்று படிக்க முடியும்? அவர்கள் எப்படி CBSE பாடத்திட்டதில்
வரும் நீட் தேர்வை எழுத முடியும்? {கேள்வி : பாலாஜி}
இந்த கேள்விக்கு மாரிதாஸ் பதில் சொல்லுங்க - பிஜேபிக்கு திராணி இருந்தால் பதில் கூறுங்கள் என்றனர் சிலர்.
பிஜேபிக்கு திராணி இல்லையா இருக்கா என்பது ஒருபுறம் இருக்கட்டும் -  இந்த கேள்வி கேட்ட உங்கள் அனைவருக்கும் முதலில் நீட் என்றால் என்னவென்று தெரியுமா????
எனவே நீட் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கா என்று நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள். அதன் Physics, Chemistry, Biology மூன்றின் பாடம் என்ன வித்தியாசம் என்று
ஒப்பிட்டது உண்டா??? எனவே நானும் கேள்வி கேட்பேன் என்று கேட்பது வீண். ஒரு கேள்வி கேட்கும் முன்னர் அது சார்ந்து நாமும் கொஞ்சம் தேடி படிப்பது நல்லது. அதுவே
அறிவார்தவர் செயல். சும்மா உணர்வை தூண்டும் வசனங்கள் வீண்.

சரி, நீட் தேர்வு என்றால் என்ன????
நீட் தேர்வுக்கு சிலபஸ் உருவாக்குவது MCI - medical council of india. எனவே இது முதலில் CBSE பாடத்திட்டம் என்பது அடிப்படை தவறு. medical council of india கீழ் மாணவர்கள்
மருத்துவம் படிக்க வரும் அனைவரும் இந்த அகில இந்திய அளவிலான தேர்வுக்கு தகுதியாக வேண்டும்என்று கேட்டு கொள்கின்றனர்.
CBSE Bord என்ன செய்கிறது என்றால் இந்த medical council of india வெளியிடும் சிலபஸில் அதை 95% வரை தன் பாடத்திட்டத்தில் சேர்த்து விடுகிறது. இதனால் தான் பலருக்கு
இந்த நீட் தேர்வு CBSE பாடத்திட்டம் போல் தெரிகிறது.
CBSE Bord எப்படி தன் பாடத்திட்டத்தை MCI அறிவித்த பாடத்திட்டத்துக்கு உயர்த்தியது???? அதே போல State Bord உயர்த்தி இருந்தால் வேலை முடிந்தது.
ICSE board , CBSE Bord ,  State Bord , matriculation board, Army Public Schoo என்று எல்லா பிரிவுகளுக்கு கீழ் வரும் அனைத்து பிரிவினரும் இப்படி தான் தயார்
ஆகிறார்கள்.
இது முதலில் புரிகிறதா ????
அடுத்து NEET வெறும் தேர்வு தான். தேர்வு முடிந்ததும்- இந்தாங்க வெற்றி பெற்ற மாணவர்கள் லிஸ்ட் என்று அந்த அந்த மாநிலத்திற்கு பட்டியலை கொடுத்துவிடுவார்கள்.
அதோடு அவர்கள் வேலை முடிந்தது. அதை வைத்து கொண்டு மாணவர்கள் சேர்க்கையை மாநிலங்கள் நடத்தி கொள்ளவேண்டும்.  நல்லா புரிந்து கொள்ளுங்கள் இப்போவும்
85% தமிழக மாணவர்கள் தான் இடம் ஒதுக்கபடுகிறது. நீட் தேர்வு மூலம் தமிழர்கள் வஞ்சிக்க படுவதாக எவனாது சொன்னா வாயிலேயே நாலு குத்து விடுங்க.
அதே இடஒதுக்கீடு முறை மேற்கொள்ளலாம் மாநில அரசுகள். இதில் நீட் எந்த பிரச்சனையும் வராது.
இது வரை முதலில் புரிகிறதா??? இது ஒன்றும் quantum physics இல்லை புரியாமல் போக. வெறும் தேர்வு திட்டவடிவம்.
எனவே கல்வி தரமாக இருக்க MCI தன் பாடத்திட்டத்தை வெளியிடும் பொது CBSE எப்படி  மாறுகிறதோ அதே போல தமிழ் நாடு , ஆந்திரா , கர்நாடகா என்று எல்லா
மாநிலங்களிலும் உள்ள state Board தங்கள் பாடத்திட்டத்தையும் மாற்றி இருந்தால் எதற்கு தனியா கோச்சிங்க கிளாஸ்????
இதனால் தான் மற்ற எந்த மாநிலமும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது புரிகிறதா?? இங்கே தமிழகத்தில் செய்வது அரசியல்..
ஆனால் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காமல் விட்டு விட்டோம். சரி ஒரு முறை அதற்கு விலக்கு வேண்டும் என்றோம். நீதிமன்றமும் சரி என்று போன வருடம் விட்டது.
ஆனால் இந்த வருடமும் நீதி மன்றம் போய் நிற்க- தவறு யாருடையது?????
எனவே முதலில் நீட் என்றால் என்னவென்று தெரிந்து விட்டு பின்னர் கேள்விகள் கேட்ட வாருங்கள். நீட் சிலபஸ் என்று தேடவும் - அதை பாருங்கள்  medical council of india என்று
தான் போட்டிருப்பான்.
ஆக தவறு செய்தது ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் என்பது அப்பட்டமாக தெரியும் போது இது எப்படி நீதிபதிகள் தவறாகும்??? இது எப்படி மத்திய அரசின் தவறாகும்???
மத்திய அமைச்சர்கள் அனுமதி அளிக்க முன்வந்தனர். அவர்களுக்கும் பிரச்சனை என்ன இருக்கு - அவர்களும் மக்களிடம் நல்ல பெயர் வாங்க தானே நினைபர். இதில் என்ன
வேண்டி இருக்கு பழிவாங்க???
அவர்கள் கொடுக்க முன்வந்த பொது வழக்கு நீதிமன்றம் சென்றால் அங்கெ "எல்லா மாநிலமும் நீட் தேர்வு எழுதுகிறது. எல்லா மாநிலமும் எந்த பிரச்சனையும் இல்லை. போன
முறை பாடத்திட்டம் மாற்றவில்லை என்று விலக்கு கேட்டது சரி. இந்த முறை வந்தால் என்ன அர்த்தம்??? மாணவர்கள் வாழ்கையில் அரசியல் செய்வது ஏற்க முடியாது" என்று
கட்டாயம் விரட்டி அடிப்பார்கள் தானே..
இது வழக்காக நீதி மன்றம் சென்றதுமே நான் கூறினேன் "நிதிபதிகளிடம் கட்டாயம் திட்டுவாங்கி விட்டு தான் வருவர்" என்றேன். அது நடந்தது.
வருஷம் வருஷம் எதையாது எடுத்து கிட்டு வந்து விலக்கு தாருங்கள் என்று நீங்கள் கேட்க "நீதிபதிகள் முட்டாள்கள் இல்லை". திராவிட கட்சிகள்  மக்களை முட்டாள் ஆக்கலாம்..
அது தானே 60வருடமாக பெரியார் வழி வந்த திராவிட கூட்டம் செய்கிறது.
----------------------------
தொடர்கிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக