புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:30 pm

First topic message reminder :

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்

மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர்.

தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர்.

தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.

சேகரிப்பு

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்தெர்மாகோல் அட்டை ஒன்றுகூட தண்ணீருக்குள் இல்லை. கரையில் இருந்து, 100 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டிருந்தன. வைகை அணை உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில் பணியாளர்கள், நேற்று அட்டைகளை ஒன்று விடாமல் சாக்கு மூட்டைகளில் சேகரித்தனர்.


'ஐடியா தந்தது அமைச்சர் ராஜு'

தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், ''மதுரை குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அமைச்சர் ராஜு, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் ஆலோசனைப்படியே, தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்படும் திட்டம், வைகை அணையில் துவக்கப்பட்டது. முதலில் சோதனை ஓட்டம் தான் நடந்துள்ளது. அதுவே வேதனையாகி விட்டது. இதனால், இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்திட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 24, 2017 6:24 am

இந்த நிகழ்வினால் பலிகடா ஆக்கப்படவர்
-
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துபாண்டியை
அதிரடியாக மாற்றம் செய்தது அரசு
-
அவர் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற
உள்ளாராம்...!!
-


avatar
Guest
Guest

PostGuest Tue Apr 25, 2017 6:06 pm

அவர்களின் முயற்சி தவறாகப்படவில்லை. தவறான பொருளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.Thermocol என்ற polystyrene க்குப் பதிலாக  polypropylene தினால் ஆனவற்றைப் படுத்தி இருக்க வேண்டும்.அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்தி (Hexprotect /Armor Ball ….) கோடை காலத்தில் நீச்சல் குளம் முதல் பெரிய நீர் நிலைகளையும் ஆவியாவதில் இருந்து தடுக்கிறார்கள். இந்த முறையில் செலவு மிகக் குறைவாகவும்,90-99 % நீர் ஆவியாவது தடுக்கப்படுவதாகவும் நீண்ட காலம் பயன் படுத்த முடியும் என்றும் கண்டிருக்கிறார்கள். இந்த முறை பல ஆண்டுகளாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Floating_ball_cover_reservoir1

இதைவிட முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை முறைகளையும் கிராமப் புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.அந்த இயற்கை முறை 60-70 % பயன் தருவதாக சொல்லப்படுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 25, 2017 7:04 pm

மூர்த்தி wrote:அவர்களின் முயற்சி தவறாகப்படவில்லை. தவறான பொருளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.Thermocol என்ற polystyrene க்குப் பதிலாக  polypropylene தினால் ஆனவற்றைப் படுத்தி இருக்க வேண்டும்.அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்தி (Hexprotect /Armor Ball ….) கோடை காலத்தில் நீச்சல் குளம் முதல் பெரிய நீர் நிலைகளையும் ஆவியாவதில் இருந்து தடுக்கிறார்கள். இந்த முறையில் செலவு மிகக் குறைவாகவும்,90-99 % நீர் ஆவியாவது தடுக்கப்படுவதாகவும் நீண்ட காலம் பயன் படுத்த முடியும் என்றும் கண்டிருக்கிறார்கள். இந்த முறை பல ஆண்டுகளாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Floating_ball_cover_reservoir1

இதைவிட முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை முறைகளையும் கிராமப் புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.அந்த இயற்கை முறை 60-70 % பயன் தருவதாக சொல்லப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1240058

நதியின் பரப்பளவு அதிகம் ஆயிற்றே , viability பார்க்கவேண்டும் அல்லவா ?
மேலும் அவைகளை பரப்புவதிலும் அவைகளை பரப்பிய நிலையில் பாதுகாப்பதிலும்
அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென எண்ணுகிறேன் .கரையோர அடர்ந்த மரங்கள்
சிறிது ஆவியாதலை தடுக்கும்.
கிருஷ்ணா நதி சென்னைக்கு வரும் கால்வாயை சோலார் பேனல் போட்டு மூடுவதால்
மின்சாரம் கிடைக்கும்: நீர் ஆவியாதலை தடுக்கலாம். நீர் திருட்டையும் தடுக்கலாம்.
கால்வாயில் பண்ணுவது போல் நதியில் பண்ணுவது முடியாது /
சரியில்லை என்றே என் மனதில் படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 25, 2017 9:04 pm

வைகை அணையில் இந்த முயற்சி நடந்திருக்கிறது ; வைகை நதியில் அல்ல . அணையில் தண்ணீர் தேங்கித்தானே ( Stagnant Water ) இருக்கும் . ஓடும் நீரை மூட முடியாது .

ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நீர் மேலாண்மை வல்லுனர்களிடம் கேட்டிருந்தால் தக்க யோசனைகளை வழங்கியிருப்பார்கள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:57 pm

மூர்த்தி wrote:அவர்களின் முயற்சி தவறாகப்படவில்லை. தவறான பொருளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.Thermocol என்ற polystyrene க்குப் பதிலாக  polypropylene தினால் ஆனவற்றைப் படுத்தி இருக்க வேண்டும்.அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்த முறையைப் பயன்படுத்தி (Hexprotect /Armor Ball ….) கோடை காலத்தில் நீச்சல் குளம் முதல் பெரிய நீர் நிலைகளையும் ஆவியாவதில் இருந்து தடுக்கிறார்கள். இந்த முறையில் செலவு மிகக் குறைவாகவும்,90-99 % நீர் ஆவியாவது தடுக்கப்படுவதாகவும் நீண்ட காலம் பயன் படுத்த முடியும் என்றும் கண்டிருக்கிறார்கள். இந்த முறை பல ஆண்டுகளாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு - Page 2 Floating_ball_cover_reservoir1

இதைவிட முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை முறைகளையும் கிராமப் புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.அந்த இயற்கை முறை 60-70 % பயன் தருவதாக சொல்லப்படுகிறது.

நீச்சல் குளம் பரவாயில்லை மூர்த்தி..........ஆனால் இங்கு??????புன்னகை ....அது தான் பிரச்சனை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:57 pm

T.N.Balasubramanian wrote:யோஜனை கேட்டால், நண்பர் அனுப்பிய நகைச்சுவையை பாருங்கள்.

 "மனைவி : ஏங்க. பைப்பே திறந்தால். ஜவ்வரிசியாக வருகுதுங்க !
கணவன்: ஜவ்வரிசி இல்லேடி அமைச்சர் போட்ட தெர்மோகோல்டி"    

புன்னகை  புன்னகை ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:58 pm

ayyasamy ram wrote:சுமார் 1.5 ஏக்கர் பரப்பில் மட்டுமே தெர்மாகோல்
அட்டைகளை பரப்பினர்
-
செலவு ரூபாய் எட்டாயிரம் மட்டுமே...!!

-
ஆனால் ஊடகங்கள் பத்து லட்சம் ரூபாய் செலவு
என எந்த அடிப்படையில் தெரிவித்துள்ளன என
தெரியவில்லை...!!
--------------------------------
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது
அங்குள்ள ஆற்றில் நீர் ஆவியாதலை தடுக்க காற்று நிரப்பப்பட்ட
பந்துகள் ஆற்றில் மிதக்கவிடப்பட்டன,

இது வெற்றியடைந்து உலகப்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
--

பதத்துலட்சம் என்று அமைச்சரே தன் வாயால் tv பேட்டி இல் சொன்னார் அண்ணா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:59 pm

ayyasamy ram wrote:இந்த நிகழ்வினால் பலிகடா ஆக்கப்படவர்
-
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துபாண்டியை
அதிரடியாக மாற்றம் செய்தது அரசு
-
அவர் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற
உள்ளாராம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1239804

ம்ம்...பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 29, 2017 3:39 am

அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோலை மிதக்க விடும் திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை டேப்களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.
அணைப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மோகோல்கள் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. நீர் ஆவியாதலைத் தடுக்க இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியா?
இதுகுறித்து அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீர்நிலைகளில் உள்ள நீர் கொதிநிலையை அடையும்போது ஆவியாவதில்லை. அதற்கு முன்னதாகவே ஆகிறது. இதற்கு திட, திரவ, வாயு நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பார்வையாளர் அரங்கில் ரசிகர்கள் அமர்ந்திருக்கின்றனர். போட்டி தொடங்கப் போகிறது. அவர்கள் லேசாக கால்களை நீட்டியபடியோ, கைகளை அசைத்தபடியோ இருக்கலாம். இது திட நிலை, அதாவது மூலக்கூறுகள் மிகக் குறைந்த இயக்கத்தில் இருப்பது.
அடுத்து இடைவேளையின்போது சில ரசிகர்கள் எழுந்து வெளியே செல்வர்; சிலர் கழிப்பறைக்குச் செல்லலாம். அது ஓரளவு இயக்கத்துடன் கூடிய திரவ நிலை. வாயு நிலையில் பெரும்பாலான மூலக்கூறுகள் இயக்க நிலையில் இருக்கும். உதாரணத்துக்கு கடைசி பால் சிக்ஸரின்போது அனைத்து ரசிகர்களும் எழுந்து, ஆடிப்பாடி ஆரவாரம் செய்வது.
இந்த நிலையில்தான் நீர் ஆவியாகிறது. குறிப்பாக நீர்நிலைகளின் மேற்பரப்பில் இருக்கும் நீர், அதன் உச்சபட்ச இயக்க ஆற்றலில் வாயு நிலையை அடைந்து ஆவியாகிவிடுகிறது. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மூலக்கூறுகள் இயங்கும் திசையும் முக்கியம். அவை நீருக்கு மேலே, காற்றை நோக்கிச் சென்றால்தான் வாயு நிலைக்குச் செல்கிறது. அவை நீருக்கு உள்ளேயே பயணித்தால் நீர் ஆவியாவதில்லை.
தெர்மாகோல் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டம் சரியானதா?
இல்லை. இந்திய நீர் வாரியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தெர்மோகோல், கடுகு எண்ணெய் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டங்கள் சாத்தியமற்றவை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான நீர்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
எனில் சிறிய அளவிலான குளங்கள், தேக்கங்களில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாமா?
குளமே பெரிய அளவிலான நீர்நிலைதான். நீர்நிலைகளில் தெர்மோகோல் பயன்பாடு சாத்தியமில்லை. வேண்டுமெனில் வீட்டு மொட்டை மாடி தண்ணீர்த் தொட்டி, ப்ரிஜ் ஆகியவற்றில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாம்.
தெர்மோகோலின் பயன் என்ன? அது எப்படி உருவாக்கப்படுகிறது?
பாலிஸ்டைரீன் தான் தெர்மாகோல் எனக் கூறப்படுகிறது. மண்ணில் மக்காத மற்றும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் வகையிலான பொருட்களில் இதுவும் ஒன்று. இதன் துகள்கள் சுவாசக் குழாய்க்குள் சென்றாலோ, தெர்மாகோல் எரியும் புகையை சுவாசித்தாலோ கடுமையான உடல்நலக் கேடுகள் ஏற்படும்.
தெர்மோகோல் ஒரு குறை வெப்ப கடத்தி. அதனால் வெளிப்புற வெப்பம் உள்ளே செல்லாமல் அரணாக இருக்கிறது. அதனாலேயே ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களில் தெர்மோகோல் பயன்படுத்தப்படுகிறது.
முன்னாட்களில் நீர் ஆவியாதலைத் தடுக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினர்?
அதற்கான தேவையே அப்போது இருக்கவில்லை. பழங்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகியது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் சராசரி ஆயுளும் அதிகரித்தது. இதனால் தற்போது நீரின் தேவை அதிகமாகியுள்ளது. அதனால்தான் நீர் ஆவியாதலைத் தடுத்து, நீரைச் சேமிக்க முயல்கிறோம்.

தொடரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 29, 2017 3:42 am

குஜராத்தின் நர்மதா கால்வாயின் மேல் போர்த்தப்பட்ட சோலார் தகடுகள் திட்டம் எப்படிப்பட்டது?
அது நல்ல திட்டம்தான். அறிவுபூர்வமானதும்கூட. ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் ஆராய வேண்டும். பொதுவாக நம் நாட்டில் நீர்நிலைகளை மூடுவதில்லை. சூரிய ஒளி வெளியிடும் புற ஊதாக் கதிர்கள் நீரில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்தனர்.
என்னென்ன வழிகளில் நீர் ஆவியாதலைத் தடுக்க முடியும்?
நீர் 3 காரணிகளால் ஆவியாகிறது.
1. காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையேயான வெப்பநிலை வேறுபாடு (நேர்த்தகவில்)
2. காற்றின் ஈரப்பதம். (நேர்த்தகவில்)
3. காற்றின் சலனம். காற்று வேகமாக அடிக்கும்போது ஆவியாதல் அதிகமாக இருக்கும். முதல் இரண்டு காரணிகளையும் நாம் மாற்ற முடியாது. காற்றின் சலனத்தை மட்டுப்படுத்த சில வழிமுறைகள் இருக்கின்றன.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீர்நிலைகளைச் சுற்றிலும் புதர்ச்செடிகளை (bush) வளர்க்க வேண்டும். அதற்கு அடுத்த அடுக்கில் தூறுச்செடிகளை (shrub- சற்றே நீண்ட புதர்) உருவாக்க வேண்டும். இவை காற்றைத் தடுக்கும் அரணாகச் செயல்படும். அதற்கடுத்த அடுக்கில் பெரிய மரங்களை வளர்க்க வேண்டும், அவை வீசும் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும். இதன்மூலம் நீரின் மேற்பரப்பு ஆவியாதலைப் பெருமளவு தடுக்கலாம்.
ஆனால் இது நமக்கு குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக