புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 9 of 40 •
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவை அலாரம்; கேமரா அல்ல!
சமீபத்தில், என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்புற கதவை, யாரோ திறந்து மூடியதும், 'கிணு கிணு...' என்ற அலார ஒலி கேட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர், 'பர்க்ளர்' அலாரம். அமெரிக்காவில் உள்ள என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை பொருத்தி இருந்தனர். இக்காலகட்டத்திற்கு இது ரொம்ப அவசியம்.
'இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கேமரா பொருத்தி என்ன பயன்? புகைப்படத்தை வைத்து, போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் வேறு மாநிலத்துக்கு ஓடி விடுவர் அல்லது நகைகளை விற்றோ, அடகு வைத்தோ விடுவர்.
'வீட்டைச் சுற்றி, மின்சார வேலியும் அமைக்க முடியாது; காரணம், யாராவது அதில் சிக்கி, ஏதேனும் ஆகிவிட்டால், நம் கதி அதோகதி தான்.
'இதை தவிர்க்க, 'பர்க்ளர்' அலாரத்தில் இரு விதமான, 'மெனு'க்கள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்படும் போதும், திருடர்கள் கதவை திறந்தோ, ஜன்னலை உடைத்தோ, உள்ளே வரும் போதும், அலாரம் உச்ச ஸ்தாயியில் ஒலித்து, திருடர்களை விரட்டி விடுகிறது.
'கம்பெனியின் அலுவலகத்திலும் அலார சத்தம் உடனடியாக பதிவாகும். இதன் மூலம் அவர்கள், போலீசுக்கு தகவல் தருவர். அலாரம் இருப்பது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதாலும், அடிக்கடி சோதனை செய்வதாலும், திருடர்கள் நம் வீட்டுக்கு வர யோசிப்பர். மேலும், திருடர்கள் வெளியில் தெரியும், 'ஸ்பீக்கரை' அல்லது 'ஒயர்'களை சிதைத்தாலும், உடனே, கம்பெனிக்காரர்களுக்கு எச்சரிக்கை சென்று விடும்...' என்று விளக்கினார்.
திருட்டை தவிர்க்க, அலாரம் பொருத்துதல் நல்லது தானே!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.
சமீபத்தில், என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்புற கதவை, யாரோ திறந்து மூடியதும், 'கிணு கிணு...' என்ற அலார ஒலி கேட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர், 'பர்க்ளர்' அலாரம். அமெரிக்காவில் உள்ள என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை பொருத்தி இருந்தனர். இக்காலகட்டத்திற்கு இது ரொம்ப அவசியம்.
'இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கேமரா பொருத்தி என்ன பயன்? புகைப்படத்தை வைத்து, போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் வேறு மாநிலத்துக்கு ஓடி விடுவர் அல்லது நகைகளை விற்றோ, அடகு வைத்தோ விடுவர்.
'வீட்டைச் சுற்றி, மின்சார வேலியும் அமைக்க முடியாது; காரணம், யாராவது அதில் சிக்கி, ஏதேனும் ஆகிவிட்டால், நம் கதி அதோகதி தான்.
'இதை தவிர்க்க, 'பர்க்ளர்' அலாரத்தில் இரு விதமான, 'மெனு'க்கள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்படும் போதும், திருடர்கள் கதவை திறந்தோ, ஜன்னலை உடைத்தோ, உள்ளே வரும் போதும், அலாரம் உச்ச ஸ்தாயியில் ஒலித்து, திருடர்களை விரட்டி விடுகிறது.
'கம்பெனியின் அலுவலகத்திலும் அலார சத்தம் உடனடியாக பதிவாகும். இதன் மூலம் அவர்கள், போலீசுக்கு தகவல் தருவர். அலாரம் இருப்பது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதாலும், அடிக்கடி சோதனை செய்வதாலும், திருடர்கள் நம் வீட்டுக்கு வர யோசிப்பர். மேலும், திருடர்கள் வெளியில் தெரியும், 'ஸ்பீக்கரை' அல்லது 'ஒயர்'களை சிதைத்தாலும், உடனே, கம்பெனிக்காரர்களுக்கு எச்சரிக்கை சென்று விடும்...' என்று விளக்கினார்.
திருட்டை தவிர்க்க, அலாரம் பொருத்துதல் நல்லது தானே!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் ஒரு விழா!
சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், 'மப்டி'யில் மூன்று காவலர்கள் வந்தனர்.
இரு சக்கர வாகனத்தில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகசம், அனைவரையும் அசர வைத்தது. 'இவர்கள் மட்டுமல்ல, பெண் காவலர்களுக்கும் இது போன்ற சாகசங்கள் அத்துப்படி...' என்றபடி, இரு பெண்களை அழைத்தார், காவல்துறை அதிகாரி.
அவர்கள், பெண்களிடம், எவ்வாறு திருடர்கள் சங்கிலி பறிப்பர் என்பதை, பல்வேறு விதமாக நிகழ்த்திக் காட்டி, அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு மற்றவரை உதவிக்கு அழைப்பது மற்றும் எப்படி எதிரியை தாக்குவது என்பதைப் பற்றியும் விளக்கினர்.
இறுதியில், அபார்ட்மென்ட்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும், அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இவை அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
டி.தவமணி, பெங்களூரு.
சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், 'மப்டி'யில் மூன்று காவலர்கள் வந்தனர்.
இரு சக்கர வாகனத்தில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகசம், அனைவரையும் அசர வைத்தது. 'இவர்கள் மட்டுமல்ல, பெண் காவலர்களுக்கும் இது போன்ற சாகசங்கள் அத்துப்படி...' என்றபடி, இரு பெண்களை அழைத்தார், காவல்துறை அதிகாரி.
அவர்கள், பெண்களிடம், எவ்வாறு திருடர்கள் சங்கிலி பறிப்பர் என்பதை, பல்வேறு விதமாக நிகழ்த்திக் காட்டி, அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு மற்றவரை உதவிக்கு அழைப்பது மற்றும் எப்படி எதிரியை தாக்குவது என்பதைப் பற்றியும் விளக்கினர்.
இறுதியில், அபார்ட்மென்ட்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும், அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இவை அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
டி.தவமணி, பெங்களூரு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அர்த்தமுள்ள புத்தாண்டு கொண்டாட்டம்!
கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று, என் நண்பன் போன் செய்து, 'உடனே புறப்பட்டு வா... ஆஸ்பத்திரிக்கு போகணும்...' என்று சொல்ல, என்னமோ ஏதோவென நினைத்து, அவசர அவசரமாக, அவன் வீட்டுக்கு சென்றேன்.
ஆனால், அவனோ, பிஸ்கட் பாக்கெட், பிரட், வாட்டர் பாட்டில்களை அட்டை பெட்டிகளில், அடுக்கியவாறு இருந்தான்.
'எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டே... இதையெல்லாம் எங்கே கொண்டு போகப் போற...' என்றேன்.
'புத்தாண்டுக்கு செலவுக்கு, எங்க அப்பா, 2,000 ரூபாயும், அம்மா, 1,000 ரூபாயும் தந்தாங்க; என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துச்சு. எல்லா பணத்தையும் போட்டு இதெல்லாம் வாங்கினேன். அரசு ஆஸ்பத்திரிக்கு போயி, ஏழை நோயாளிகளுக்கு இதை கொடுத்துட்டு வருவோம், வா...' என்றான்.
புத்தாடை, மது, வெடி என்று காசை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், என் நண்பன் விடிவெள்ளியாக தெரிந்தான்.
புத்தாண்டு கொண்டாடுவோர், இதுபோன்ற சேவையில் ஈடுபடலாமே!
எம்.வடுகநாதன், வேதாரண்யம்.
கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று, என் நண்பன் போன் செய்து, 'உடனே புறப்பட்டு வா... ஆஸ்பத்திரிக்கு போகணும்...' என்று சொல்ல, என்னமோ ஏதோவென நினைத்து, அவசர அவசரமாக, அவன் வீட்டுக்கு சென்றேன்.
ஆனால், அவனோ, பிஸ்கட் பாக்கெட், பிரட், வாட்டர் பாட்டில்களை அட்டை பெட்டிகளில், அடுக்கியவாறு இருந்தான்.
'எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டே... இதையெல்லாம் எங்கே கொண்டு போகப் போற...' என்றேன்.
'புத்தாண்டுக்கு செலவுக்கு, எங்க அப்பா, 2,000 ரூபாயும், அம்மா, 1,000 ரூபாயும் தந்தாங்க; என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துச்சு. எல்லா பணத்தையும் போட்டு இதெல்லாம் வாங்கினேன். அரசு ஆஸ்பத்திரிக்கு போயி, ஏழை நோயாளிகளுக்கு இதை கொடுத்துட்டு வருவோம், வா...' என்றான்.
புத்தாடை, மது, வெடி என்று காசை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், என் நண்பன் விடிவெள்ளியாக தெரிந்தான்.
புத்தாண்டு கொண்டாடுவோர், இதுபோன்ற சேவையில் ஈடுபடலாமே!
எம்.வடுகநாதன், வேதாரண்யம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்பளிப்பு கொடுக்க போகிறீர்களா?
சமீபத்தில், என் சகோதரி மகளுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வழக்கமாக, குழந்தைக்கு வேண்டிய, பேபி ஆயில், சோப் மற்றும் டிரஸ் உள்ளிட்ட பொருட்கள், பரிசாக வந்தன. அப்போது, ஆசிரிய நண்பர் ஒருவர் அளித்த பரிசுப் பொருள், மிகவும் பயனுள்ளதாகவும், மறக்க முடியாத பொருளாகவும் இருந்தது.
அது, வசம்பு, தேன், குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் சிறிய பாசி மணி மற்றும் கையில் அணிவிக்கும் திருஷ்டி கறுப்பு வளையல்கள் போன்றவைகள்!
சமய சஞ்சீவி போன்று தேடிப் பிடித்து, அவற்றை வாங்கிக் கொடுத்த நண்பரை, பாராட்டாதவர்கள் இல்லை. பரிசு என்றால் இதுவல்லவோ!
ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.
சமீபத்தில், என் சகோதரி மகளுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வழக்கமாக, குழந்தைக்கு வேண்டிய, பேபி ஆயில், சோப் மற்றும் டிரஸ் உள்ளிட்ட பொருட்கள், பரிசாக வந்தன. அப்போது, ஆசிரிய நண்பர் ஒருவர் அளித்த பரிசுப் பொருள், மிகவும் பயனுள்ளதாகவும், மறக்க முடியாத பொருளாகவும் இருந்தது.
அது, வசம்பு, தேன், குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் சிறிய பாசி மணி மற்றும் கையில் அணிவிக்கும் திருஷ்டி கறுப்பு வளையல்கள் போன்றவைகள்!
சமய சஞ்சீவி போன்று தேடிப் பிடித்து, அவற்றை வாங்கிக் கொடுத்த நண்பரை, பாராட்டாதவர்கள் இல்லை. பரிசு என்றால் இதுவல்லவோ!
ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!
என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.
அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.
ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!
பிரேமா கார்த்திகேயன், சென்னை.
என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.
அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.
ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!
பிரேமா கார்த்திகேயன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231072krishnaamma wrote:வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!
என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.
அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.
ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!
பிரேமா கார்த்திகேயன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிசய பிறவி!
சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,
தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.
எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,
தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.
எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231074krishnaamma wrote:அதிசய பிறவி!
சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,
தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.
எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
எல்லாம் சரிதான் , ஆனால் பிஸ்கட் திருடர்கள் உள்ள ஊர் ஆயிற்றே இது? .......'உங்களுக்கு என்று தனியாக வாங்கி வைத்திருக்கிறேன்' என்று யாராவது சொன்னால் முதலில் பயம் தானே வருகிறது...காலம் கெட்டு கிடக்கிறதே?...............நல்லது செய்பவர்களையும் சந்தேகிக்கத் தோன்றுகிறதே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபாஷ் கிராமம்!
சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.
விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.
எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.
விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.
எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231076krishnaamma wrote:சபாஷ் கிராமம்!
சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.
விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.
எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தலையெழுத்து............இவங்க போடும் சண்டை போறது என்று மாட்டை வைத்து வேறு சண்டையா?.........இதுக்கு ஒரு போர்டு, பஞ்சாயத்து.....அதுக்கு ஒரு சபாஷ் வேறு...........கடவுளே !.....
- Sponsored content
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 40
|
|