புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:24 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 4:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 4:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 4:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 4:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 4:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 4:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 4:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 7:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:07 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:03 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 4:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 3:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 3:00 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 12:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 11:12 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 5:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 12:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 5:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 5:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 8:33 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:36 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:35 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:33 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:32 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:31 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:29 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:27 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:26 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 6:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
9 Posts - 64%
heezulia
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 21%
mruthun
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_m10இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Nov 15, 2016 6:40 pm

First topic message reminder :

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" என்றும் "முன்னறிவிப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு பதிலளிக்க வேண்டும்" என்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத் தகுந்தது.

அதே நேரத்தில், பிரதமர் மோடி அவர்களின் இந்த அதிரடியான, துணிச்சலான அறிவிப்பு இந்தியாவில் மாற்றத்தை விரும்பிய அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முன்னறிவிப்பில்லாமலும், கால அவகாசம் வழங்கப்படாமலும் இருந்ததே குழப்பத்திற்கும், அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாகவே இந்திய மக்கள் அனைவரும் மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

டிவிட்டர், முகப்புத்தகம், தமிழ் கருத்துக்களங்கள் போன்ற சமூக வலைத்தளங்களின் உதவியாலேயே மோடி அவர்கள் பிரதமராக ஆட்சிக்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பலமும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அதே சமூக வலைத்தள விமர்சகர்களின் விமர்சனத்திற்கும் இன்று ஆளாகிவிட்டாரே என்பதும் வருத்தமளிக்கிறது.

இதுபோன்ற பல சம்பவங்களால் ஓட்டுப்போடும் மக்களின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்குகிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்ததும் இதற்கு சான்றாகும். பலமான எதிர் கட்சியும், மக்களுக்கான பல நலத்திட்டங்களும் உருவாகியிருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு வகை செய்திருக்கிறது. ஆனாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் வாக்கு சேகரிப்பதைத்தவிர வேறு எதற்கும் மக்களை பொருட்டாகவே நினைப்பதில்லை என்பதற்கு சமீபத்தில் நடந்த பல சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன.

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆளாளுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்று அதிகாரத்தை கையிலெடுக்க முயலுகிறார்கள். தமிழக அரசியலில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கதாகும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப்போடுவது மக்களின் கடமை என்றும், உரிமை என்று வாய்கிழிய பேசுகிறார்கள். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுவது மட்டும்தான் மக்களின் கடமையா? இடையில் ஏற்படும் சிக்கல்களையும், மாற்றங்களையும் முடிவு செய்யும் உரிமை மக்களுக்கு இல்லையா? அல்லது ஐந்தாண்டுகளுக்கு இடையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மக்களிடம் கருத்தைக்கூட கேட்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் இது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? என்பது கேள்விக்குறியாகிறது. எல்லா நேரங்களிலும் ஆட்சியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளவேண்டியதுதானே? ஏன் தேர்தல் நடத்த வேண்டும், ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்? என்று மக்கள் பலர் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசியலுக்கும், ஆட்சிக்கும் வரத்துடிக்கும் அனைவரும் "இந்தியாவை வல்லரசாக்குவேன்! மாநிலத்தை முதல் மாநிலமாக்குவேன்! என்று புரட்சிக்குரல் கொடுப்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வல்லரசு என்றால் என்ன? முதல் மாநிலம் என்றால் எப்படி? என்பது இன்றுவரையில் என்னைப்போன்ற பலருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் இதெல்லாம் நடந்தால்தானே தெரிந்துகொள்வதற்கு? எனவே இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்கிறது! அடுத்து வரும் சந்ததிகள் இதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

எனக்கு நாற்பது வயதாகி விட்டது. இன்னும் 4 தேர்தலை என்னால் சந்திக்க முடியும் என்று நம்பிக்கையும் இருக்கிறது. அதன்பிறகு?.. அல்லது அதற்கு இடையில்?..... கடவுள்தான் முடிவு செய்யவேண்டும்! இந்திய பிரதமரே தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று பகிரங்கமாக குரல் கொடுக்கிறார் என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்? முகவரி தெரியாதவரையிலும், அடையாளம் தெரியாதவரையிலும்தான் என்னைப்போன்ற பலருக்கும் உத்திரவாதம்! ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு காலங்களுக்கு வாழ்ந்துவிடப்போகிறோம்? என்ன எடுத்துச்செல்லப் போகிறோம்? என்பதை உணரத்தொடங்கும் வரையில் இதேநிலைதான் நீடிக்கப் போகிறது! இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! இதைத்தான் அனுபவிக்கவேண்டும்! மறுக்கவோ, மாற்றவோ நம்மால் முடியாது.

ஆனால், இந்தியாவில் மாற்றத்தை கொண்டுவரப்போகிறேன் என்றும், கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்றும் பிரதமர் மோடி அவர்கள் துணிச்சலாக முன் வந்திருக்கும்போது அவருடன் ஒத்துழைக்க வேண்டியது இந்திய மக்களான நம் அனைவரின் கடமையாகும். ஆனால், வெறுமனே மோடி அவர்களின் செயல்களை மட்டும் ஆதரிக்காமல், மக்களின் சார்பாகவும் எனது பங்களிப்பாகவும் சில வேண்டுக்கோளை முன் வைக்க இருக்கிறேன். இதெல்லாம் பிரதமர் மோடி அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கு சென்றடையுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனது பங்களிப்பை செய்துவிட்டதாக ஒரு நிம்மதி கிடைக்கும்.

நான் ஒரு திரைப்பட நடிகனாக இருந்தால் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கலாம், அதிகமான சொத்துக்கள் உள்ளவனாக இருந்தால் இதையெல்லாம் ஒரு திரைப்படமாக தயாரித்து வெளியிடலாம், அல்லது அழகிய பெண்ணாகப் பிறந்திருந்தால் எனது புகைப்படத்துடன் சமூக இணைய தளங்களிலும், யூடியூப்பிலும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் என் மீது திருப்பலாம். ஆனால் இது எதற்குமே நான் தகுதி இல்லாதவனாக இருந்து விட்டேன்.

ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும். அரசியலில் போட்டியிட முடியும். அதற்குத்தான் எந்தத் தகுதியும் தேவை இல்லையே... ஆனால், படித்தவர்கள் மட்டும்தான் அரசியலில் பங்குபெற முடியும் என்று சட்டம் வரும்வரை என்னால் அதையும் செய்ய முடியாது. ஏனென்றால் முட்டாள்களுடன் வெகுதூரம் பயணிக்க முடியாது அல்லவா. எனவே என்னால் அரசியலில் நீண்ட காலம் பயணிக்க முடியாது. அரசியலில் பங்கு பெற்றால் நான் தவறுகளைத் திருத்தத் தொடங்கி விடுவேன். எல்லோரும் சேர்ந்து என்னைத் துரத்தத் தொடங்கி விடுவார்கள்! பிறகு போராட்டம்தான்! புரட்சிதான்! கடைசியில் அழிவுதான் மிஞ்சும். ஆனால் அதற்கான வயது எனக்கில்லையே... அது போகட்டும்.

பிரதமர் மோடி அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று தற்போது நடைமுறையில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களாக வெளியிட்டிருக்கிறார். ஆனால் இந்த மாற்றம் மட்டும் போதாது.... இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற மக்களின் கருத்தாக சில வேண்டுகோளை தொடர்ந்து இங்கும் இன்னும் பல சமூக வலைத்தளங்களிலும் முன்வைக்க இருக்கிறேன்.

பதிவை படித்தவர்களுக்கும், பங்கு பெறுபவர்களுக்கு நன்றி.!

தொடரும்!



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 21, 2016 2:40 am

ஆறு மாதம் கணக்கை  பராமரிக்காமல் இருந்தவர்>>> ஆறுமாதமாக
சாப்பிடாமல்தான்  இருந்தாரா? செலவு  செய்யாமலா எப்படி.  அதையும்
சற்று  யோசித்து பார்க்கனும். பைத்து வரவு  செய்யத்தானே
கணக்கு சும்மா  இருக்கவா.தற்போது  எப்படி செல்லா பணம்
புற்றீச்சல் போல்   க்யூவில்  வந்து காத்திருக்கிறது. அதை
கணக்கில் போட்டிருந்தால் >>தேவைக்கானதை மட்டும்  
எடுத்து வைத்திருந்தால் சிரமம் இல்லையே. பெரும் ஊழல்
பெருச்சாளிக்கள்  பதுக்கி வைத்திருந்தது>>> அரசுக்கு வரி
கட்டாமல் ஏமாற்றவே>>>> மற்றவர்கள் அப்படி அல்லவே.
கணக்கில் போட்டு எடுத்து செலவு செய்திருக்கலாமே.
ஒவ்வோர்  கிராமத்திலும்  அஞ்சலகவங்கி உள்ளது.அரசு
அளிக்கும் உதவித்தொகையைக்கூட  அதில் விட்டு வைக்காமல்
அப்படியே   வாங்கி ஆயிரம் ஆயிரமாக வீட்டில் சேர்த்து வைத்து
அதை மாற்ற தற்போது முதியவர்கள்  வந்து  க்யூவில் நிற்பது ஏன்?
சிரமப்படுவதும் ஏன்? எந்த சட்டத்தை யார்மதித்து நடக்கவிரும்பு
கிறார்கள் ஏமாற்றி பிழைக்கத்தானே காசுக்கு ஓட்டையும் விடாமல்
வாங்கி விடுகிறார்கள். தண்டனை அளிக்கவும் துணிவில்லை>>>>

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Nov 21, 2016 5:27 am

மத்திய அரசின் கருப்புப்பண ஒழிப்பு விவகாரம். ஓர் அலசல்!

பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது கருப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து ஒழிப்பதற்காகத்தான் என்று வைத்துக்கொண்டால், புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வியை பலரும் முன் வைக்கிறார்கள். ஒரு சிலரோ அதிமேதாவிகளைப்போல எந்த விவரமும் தெரியாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல் மத்திய அரசின் செயலை வரவேற்பதாகவும், எல்லாம் தெரிந்ததாகவும் பாராட்டுகிறார்கள்.

ஆனால், உண்மையிலேயே கருப்புப்பணத்தை ஒழிப்பதுதான் மோடியின் திட்டமாக இருந்தால், புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டதற்கு அதுதான் காரணம் என்பதை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். மேலும், மக்களை பழைய ரூபாய் நோட்டுக்குக்களை முதலில் வங்கியில் டெப்பாசிட் செய்துவிட்டு அதன் பிறகு சில நாட்களில் புதிய ரூபாய் நோட்டுக்களாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் பலரும் எந்த தயக்கமும் இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுக்குக்களை மாற்றுவதற்கு முன் வந்திருப்பார்கள். ஆனால் மத்திய அரசோ "விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்திலை பாக்கை" என்று அதிரடியாக அறிவித்தது மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும், புதிய ரூபாய் நோட்டுக்களில் எலக்ட்ரானிக்ஸ் சிக்னல் உள்ள சிப் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதிகமான ரூபாய்களை மாற்றினால் வருமான வரி பிடிக்கப்படும் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பல அறிவிப்புகளை வெளியிட்டு சிலரை பயமுறுத்தி, பலரை பதுங்க வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதாவது, அரசுக்கு வரி கட்டக் கூடாது என்பதற்காகத்தானே அதை பதுக்கி வைத்திருக்கிறார்கள். பின்பு, நான் புதிதாக ரூபாய் நோட்டு வெளியிட்டிருக்கிறேன், உன்னிடமுள்ள கணக்கில் வராத கறுப்புப் பணத்தையெல்லாம் கொண்டு வந்து கொடுத்து மாற்றிவிட்டு எனக்கு வரியை கட்டு. என்று சொன்னால் இது என்ன புத்திசாலித்தனம்? யார் இதை செய்வார்கள்? இதனால்தானே இன்று பலரும் பினாமிகளை பயன்படுத்துகிறார்கள்?. அரசுக்கு வரியாக 50,000 கொடுக்க வேண்டுமானால் பினாமிகளைப் பயன்படுத்தி 10,000 செலவு செய்தால் போதுமே கருப்பு வெள்ளையாகி விடாதா? வரி கட்டாமல் அரசை ஏமாற்றுபவர்கள் புத்திசாலித்தனம் இல்லாமலா ஏமாற்றுகிறார்கள்? இது மத்திய அரசுக்கு தெரிய வேண்டாமா? ஆனால், பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல மத்திய அரசு நடந்து கொள்ளுகிறது.

அதே நேரத்தில் கமிஷனுக்காக பினாமிகளாக செயல்படாதீர்கள் என்று மக்களை தடுக்கிறார்கள். ஆனால், கருப்புப்பணத்தை கையகப்படுத்தி 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். அதாவது "அடிச்சுக் கூட கேப்பாங்க ஆனால், யாருகிட்டயும் சொல்லிடாதே!" என்று சம்மந்தமே இல்லாமல் சொல்வதுபோல பல குழப்பங்களை மேலும் மேலும் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தைப் பற்றி இப்போது யார் கேட்டது? நான் எல்லாம் வீடு வாசல் இல்லாமல் ரோட்டுலயா நின்னுகிட்டு இருக்கேன்? என்று மக்கள் பலரும் குமுறுகிறார்கள். நாளைக்கு சாப்பிட அரிசி வாங்க இருக்கும் பணத்தை பயன்படுத்த முடியாம திண்டாடிகிட்டு இருக்கும்போது 2022 ல வீடு தருகிறார்களாம்! என்ன வேடிக்கை இதெல்லாம்?

மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?...
"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை போன்று அதிகமான கள்ள நோட்டுக்கள் நாட்டில் புலங்குகிறது. இதை கண்டுபிடிப்பதும், தடுப்பதும் சிரமமாக இருக்கிறது. அதனால் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி இன்றைய அறிவியல் டெக்னாலஜியை பயன்படுத்தி புதுவிதமான ரூபாய் நோட்டுக்களை தயாரித்து மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனவே இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெப்பாசிட் செய்யுங்கள். வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கை தொடங்குவதற்கு வசதியாக நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே விரைந்து செயல்படுங்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் டெப்பாசிட் செய்யவில்லையென்றால் உங்களிடமுள்ள பழைய ரூபாய்கள் ஏற்றுக்கொள்ளப்படாது." என்று அறிவித்திருந்தால் புதிய ரூபாய் நோட்டுக்குக்களை பார்க்கவும், பயன்படுத்தவும் மக்கள் ஆர்வத்துடன் எந்தவித தயக்கமும், குழப்பமும், பதட்டமும் இல்லாமல் முன் வந்திருப்பார்கள். அதன்பிறகு புதிய வங்கிக்கணக்கில் அதிகமான ரூபாய்கள் டெப்பாசிட் செய்யப்பட்ட நபர்களிடம் வரி வசூலித்திருக்கலாம். விசாரணை நடத்தியிருக்கலாம், எப்படியெல்லாமோ மிரட்டியிருக்கலாம்.

ஆனால், நான் உன்னை பிடிக்கப் போகிறேன் ஓடிவிடு என்பது போலவும், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துவிட்டு, இனிமேல் இவர்கள் எப்படி கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இது பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான திட்டமா? அல்லது மக்களை முட்டாள்களாக்கும் திட்டமா? என்பதும் சரியாக விளங்கவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் மத்திய அரசு இனிமேல் முறையாக கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவந்து, அதை ஒழித்து மக்களுக்கு உதவி செய்யவில்லையென்றால் மத்திய அரசை மக்கள் நம்பமாட்டார்கள்! என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதே நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரதமர் மோடியிடம் நேரடியாக விவாதத்தில் பங்குபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!!

இன்னமும் பிரதமர் மோடியின் மத்திய அரசை மக்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை!! ஆரம்பம் எப்படி இருந்தாலும் முடிவு மக்களுக்கு சாதகமாக அமைந்தால் மத்திய அரசுக்கு பலம் கூடும்!!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 23, 2016 2:25 pm

நாடாளுமன்றத்தில் நேரடியான விவாதத்திற்கு வரவேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் பிரதமர் மோடி அவர்களை அழைத்தபோது, அதைத் தவிர்த்துவிட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்தது பற்றிய மக்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக டிவிட்டர் மற்றும் இணையதளத்தில் தன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்கள். இதற்காக பிரத்தியேகமான ஒரு மொபைல் 'ஆப்'பையும் உருவாக்கியுள்ளார்கள். மக்கள் அனைவரும் பிரதமர் மோடி அவர்களிடம் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக பகிர்ந்து கொண்டு விவாதம் மேற்கொள்ளலாம்....

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Dec 04, 2016 12:40 am

நாம் நினைத்ததுபோலவே மத்திய அரசு இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனையை கையாளப்போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், அனைத்துப் பரிமாற்றங்களும் செல்போன் மூலம் நடைபெறும் என்பது......... எளிதான வழிதான். ஆனால், அது அவ்வளவு நம்பிக்கையான வழி முறை இல்லை! ஸ்வைப்பிங் முறையில் ஏதாவது கார்டுகளைக் கையாண்டால் கூட அதுவும் பாதுகாப்பான வழி இல்லை.

அதாவது, திடீரென்று பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தினால் படிப்பறிவில்லாத மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பதற்காக மத்திய அரசு செல்போன் மூலம் எளிமையாக பண பரிமாற்றத்தை செய்துகொடுக்க முடிவு செய்திருக்கலாம். ஆனால், இந்த எளிமையான முறை என்பது குற்றவாளிகளுக்கும், திருடர்களுக்கும் எளிமையாகி விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா. இதில்தான் அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும்.

உதாரணமா, நான் இரவிலோ, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ தனியாக செல்லும்போது ஒரு 10 பேரு வந்து வழி மறிச்சு, "எடுடா செல்போனை, பின் நம்பர் சொல்லு, உன் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எனக்கு டிராசபர் பண்ணு, இல்லேன்னா கொலை பண்ணிடுவேன்!" அப்படின்னு சொல்லி எல்லா பணத்தையும் ஒட்டுமொத்தமா சுருட்டிக்கிட்டு போய்ட்டா என்ன பண்ணுறது??........ ஒருவேளை, டிரான்ஸ்பர் நடந்த அக்கவுண்டை வச்சு கண்டுபிடிச்சுடலாம் என்று சொன்னால். சம்மந்தப்பட்ட நபர் இருந்தால்தானே கொள்ளை நடந்தது என்பது நமக்குத் தெரியும்? நபர் உயிரோடவே இல்லேன்னா?????...... ஒருவேளை, பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிக்காம செல்போன் அக்கவுண்ட் பாஸ்வோர்டை கேட்டுது தெரிந்துகொண்டு எங்காவது போயி பொருட்களாக வாங்கி கொண்டால்? எப்படி கண்டுபிடிப்பது.???? ஏனென்றால், பணம் என்ற ஒன்று இருந்தால் அது எங்கு இருக்கிறதோ அங்கு சென்று திருடுவார்கள். இப்ப பணமே இல்லேன்னா அவன் சும்மா இருப்பானா? எப்படி திருடலாம்? என்று முயற்சி செய்துகொண்டுதான் இருப்பான். அதை எப்படி தடுப்பது என்பது மிகவும் முக்கியம்.

எனவே அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, இதற்கெல்லாம் தீர்வு கண்டு பிடித்துவிட்டு, அதன் பிறகு பண பரிவர்த்தனையை டிஜிட்டல்-ல பண்ணினாலும் சரி, DTS ல பண்ணினாலும் சரி. நாங்கள் வரவேற்கிறோம்!!

துணிச்சல் நாயகளின் டிஜிட்டல் இந்தியா! திட்டம் வெற்றிபெற உறுதுணையாக செயல்படுவோம்!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Dec 04, 2016 2:06 am

ஜெயின் கற்பனைக்கு அளவே இல்லை போலும்,...  நல்லதையே நினைக்கனும் .
நல்லதையே  செய்யனும் .கற்பனையில் கதைஎழுதி அதை படமாகவும்
எடுத்து காட்டி  பண்பாட்டை  பாழாக்கும் சமூகமாக மாறிவிட்டது.. தற்போது
எல்லோரும் தலைவனாகவேண்டுமென  ஆசைபடுவதும்   அதிலும்  
ஜாதிக்கு இட ஒதுக்கீடு என்றும் புத்திக்கு  அல்ல என்றும் போராடும் கூட்டம்
நிறைந்து    விட்ட  தற்போது  எப்படிங்க... இதெல்லாம்>>>>>>>>>>>?????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 04, 2016 11:49 am

உதாரணமா, நான் இரவிலோ, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ தனியாக செல்லும்போது ஒரு 10 பேரு வந்து வழி மறிச்சு, "எடுடா செல்போனை, பின் நம்பர் சொல்லு, உன் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எனக்கு டிராசபர் பண்ணு, இல்லேன்னா கொலை பண்ணிடுவேன்!" அப்படின்னு சொல்லி எல்லா பணத்தையும் ஒட்டுமொத்தமா சுருட்டிக்கிட்டு போய்ட்டா என்ன பண்ணுறது??......

ஆம் மிகவும் சீரியஸான விஷயம்.
இப்பிடி செய்தால்தான் உண்டு .
1 . பண்டமாற்று முறையை அமுல் படுத்தலாம்
2 .இரவு நேரத்தில் 10 பேரா வந்து செலபோனை எடுடா என்கிற போது, போனை வெளியே தூக்கி எறிந்து விடலாம்
3 உயிரும் பணமும் முக்கியம் என்றால் செலபோனை வீட்டில் வைத்துவிட்டு செல்லலாம் .

ஒரு உண்மையான குடிமகனின் கஷ்டங்களை அரசு நினைத்துப்பார்க்கவில்லை என்று நினைக்கும் போது எனக்கு அழுகை அழுகை அழுகை வருகிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Dec 05, 2016 12:08 am

நாட்டில் பல தவறுகளுக்கு காரணமாக இருப்பது ஆட்சியாளர்களின் கையில் காவல்துறை செயல்படுவதுதான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றி பந்தாடுவதைத்தான் முதலில் செய்கின்றன.

அரசியல்வாதிகளுக்கு கீழே காவல்துறை செயல்படுவதால்தான் குற்றவாளிகளை முட்டிக்கு கீழே சுடவேண்டும் என்று கட்டிப்போடுகிறார்கள். எனவே காவல்துறையை தனி அரசாங்கமாக அறிவிக்க வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளும் தங்களுடைய கடமையை சரிவர செய்வார்கள். அதன் பிறகு குற்றவாளிகளையும், குண்டு வைப்பவர்களையும் நெத்திப் பொட்டில் சுடுவார்கள்!! சட்டமும் ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தியா வல்லரசாகும்!

தொடரும்!...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 05, 2016 3:11 am

காவல்துறையை தனி அரசாங்கமாக அறிவிக்க வேண்டும்.

என்னது இது !! எ..... ங்கே.....யோ...... இருக்கவேண்டியவங்க அய்யா நீங்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Dec 10, 2016 2:58 pm

தமிழக அரசியலில் பலமுறை ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். எனவே இனிமேல் வரக்கூடிய 5 ஆண்டுகள் என்பது திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் ஆட்சி செய்யலாம். ஆனால், அவர் இல்லாமல் வேறு யாராவது முதல்வராக வேண்டுமானால், எதிர் கட்சிதான் ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி இல்லையென்றால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, மறுதேர்தல்தான் நடத்த வேண்டும்!

எதிர் கட்சியின் பலம் இதில் தெரியவேண்டும் என்று மக்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்!!


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Dec 11, 2016 4:26 am

இனி   ராணுவத்தால்   மட்டுமே  >>>>>>>>>>>>முடியும்.
இல்லையேல்  பகலிலேயே  ஆடு  மாட்டைபோல் ....
என்னிக்கு போராட்டம் உண்ணாவிரதம்  மறியல்
வேலைநிறுத்தம் இல்லாமல் நிர்வாகம் செய்ய.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்து ஜாதி
ஒதுக்கீடு இன்றி நல்நிர்வாகம் செய்னும்னா
இக்குற்ற செயல்கள்  சுதந்திரத்திற்கு  கொஞ்சம் -----------

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக