புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைமுகம்: என்னை இயக்குவது நகைச்சுவை! - நடிகை வினோதினி
Page 1 of 1 •
-
‘எங்கேயும் எப்போதும்’படத்தில் தங்கையின் காதலை
அங்கீகரிக்கும் அக்கா கதாபாத்திரத்தில் தொடங்கி,
சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில்
ஜூனியர் வக்கீலாக வந்து கவர்ந்தது வரை, பல வண்ணக்
கதாபாத்திரங்களில் யதார்த்தக் கலைஞராக மிளிர்பவர்
வினோதினி.
இவரைத் திரைப்படக் கலைஞராகத் தெரிந்த அளவுக்கு தீவிர
நாடகாசிரியராக, நாடக இயக்குநராக, நடிப்பைச் சொல்லித்
தரும் ஆசிரியராகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன்
உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
நாடகம் வழியே திரைப்படத்துக்கு வந்தவர் நீங்கள் என்று
தெரியும். அந்தப் பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
அதிக சுதந்திரம் தரும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்
நான். அப்பா எம்.பி.ஏ. படித்தவர். மார்க்கெட்டிங் துறையில்
பொது மேலாளராகப் பணியாற்றிவந்தவர். அம்மா, சென்னை
எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து
ஓய்வு பெற்றவர். அப்பா ஆங்கிலப் புத்தகங்களை விரும்பிப்
படிப்பார். அம்மா தமிழ்ப் புத்தகங்களைப் படித்துக்
கொண்டேயிருப்பார். இருவர் வழியாகவும் எனக்கு வாசிப்புப்
பழக்கம் ஏற்பட்டது.
அது பள்ளி நாடகங்களில் நடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
பள்ளி நாடகங்களில் கிடைத்த கைதட்டல் எனக்குள் ஒலித்துக்
கொண்டேயிருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் பயோ-
கெமிஸ்ட்ரி படித்தேன். அதன் பிறகு அந்தப் படிப்பு பிடிக்காமல்
போய்விட்டது. உடனே எம்.பி.ஏ. மனிதவளம் படித்தேன்.
அதன் தொடர்ச்சியாக எம்.எஸ்.சி. சைக்காலஜி படித்தேன்.
பிறகு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு
அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது
நாடகம் என்னை நிம்மதியாக வேலை செய்யவிடவில்லை.
அதனால் வேலையை விட்டுவிட்டு, கூத்துப்பட்டறையில்
இணைந்தேன். பிறகு ஞாநி, வெளி ரங்கராஜன், மெட்ராஸ்
பிளேயர்ஸ் போன்ற பல குழுக்களின் நாடகங்களில்
பங்கேற்றிருக்கிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக நாடகமே வாழ்க்கை என்றாகிவிட்டது.
-
--------------------------------
-
வேலையை விட்டுவிட்டு நாடகத்துக்கு வந்தபோது வீட்டில்
எதிர்ப்பு இருந்ததா?
இல்லாமலா? அம்மா வேலைக்குச் செல்லும் பெண். நாடகத்தில்
பணம் கிடைக்காது என்ற யதார்த்தம் தெரிந்தால் யார்தான்
அனுப்புவார்கள். மனிதவள அதிகாரியாகக் கைநிறைய சம்பளம்
வாங்கிக்கொண்டிருந்தவள் திடீரென நாடகத்தில் நடிக்கிறேன்
என்று வேலையை விட்டுவிட்டு வந்தது அவர்களுக்கு
அதிர்ச்சியாகவே இருந்தது.
நாடகத்தில் நடிக்கிறோம் என்றால் “சீரியல் பேர் என்ன?” என்று
கேட்பவர்கள்தான் இன்றைக்கும் நம்மைச் சுற்றி அதிகமாக
இருக்கிறார்கள். இல்லை இல்லை ‘இது தியேட்டர்’ என்றால்
‘தேவி தியேட்டரா இல்லை. சத்தியம் தியேட்டரா’ என்று
கேட்பார்கள். நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பலருக்கு தியேட்டர்
என்றால் என்னவென்றே தெரியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் நாடகத்துக்கு வந்தேன்.
ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது.
இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவி என்றும் உங்களைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்களே?
இல்லை. நான் கூத்துப்பட்டறையில் இயங்கியபோது, நான் பங்கேற்று
நடித்த பல நாடகங்களைப் பார்க்க பாலு சார் வந்திருக்கிறார்.
அவர் ‘சினிமா பட்டறை’ என்ற பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி
வந்தார். அங்கே தேசிய நாடகப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த
பாலகிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார். அவருடைய
உதவியாளர்களில் ஒருவராக நானும் அங்கே நடிப்பு சொல்லித்தரும்
ஆசிரியையாக இருந்தேன். அப்படித்தான் நான் பாலு சாருக்கு
அறிமுகமானேன்.
அவரது ‘தலைமுறைகள்’ படத்தில் அவருடைய மகளாக நடிக்கும்
அரிய வாய்ப்பை எனக்குத் தந்தார்.
-
-----------------------------------------
நடிப்பை நிகழ்த்துவது, நடிப்பைச் சொல்லித்தருவது இரண்டில்
எதை அதிக விருப்பத்துடன் செய்ய நினைப்பீர்கள்?
இரண்டுமே ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒருங்கிணைந்து
செல்லக்கூடிய கலை வெளிப்பாடுகள்தான். நடிப்பு என்பது எனக்கு
எந்த வழிமுறைகள் வழியாகச் சொல்லித்தரப்பட்டதோ
அப்படித்தான் மற்றவர்களுக்கு என்னால் சொல்லித்தரத் தெரியும்.
நடிப்பை ஒருவர் செய்துகாட்டி, அதை இமிடேட் செய்து அப்படியே
நடிப்பது என்ற முறை நடிப்புத் திறமை கிடையாது. எந்தவொரு
ஒரு விஷயத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தத் தெரிந்த
கலைஞன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான்.
நமக்காகவே கடவுள் அளித்த உடல்மொழியிலிருந்து
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் அந்தக் கலைஞனை
வெளிப்பட வைக்கும் நீண்ட செயல்முறையில் உணரப்படுவதுதான்
நடிப்பு. அது சிலருக்கு உடனே வசப்பட்டுவிடலாம். சிலருக்குக் கால
அவகாசம் பிடிக்கலாம்.
தொடர்ச்சியான ஈடுபாட்டால் மட்டுமே நடிப்பைக் கண்டடைய முடியும்.
என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பதில் உடல்மொழியே
வார்த்தைகளை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
நாடக வட்டாரத்தில் உங்கள் நகைச்சுவை உணர்வு பற்றி அதிகம்
சிலாகிக்கிறார்களே?
அடிப்படையில் நான் ஒரு ஹ்யூமர் ரைட்டர். என்னிடம் ஒரு டார்க்
ஹ்யூமர் இருந்துகொண்டே இருக்கிறது. இது எனது படைப்புகளிலும்
கதாபாத்திரங்களிலும் இயல்பாக வெளிப்பட்டுவிடுகிறது.
எனது நாடகக் குழுவின் தற்போதைய தயாரிப்பு ‘நாகர்கோவில்
எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’ இந்த நாடகம் முழுக்க
முழுக்க நகைச்சுவையான நவீன அரங்க நிகழ்வு.
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து ஆங்கில நாடக விழாவை ‘தி இந்து’
குழுமம் நடத்திவரும் நிலையில், அதில் தமிழ் நாடகங்களுக்கு இடமளிக்க
வேண்டும் என்று முதல் தமிழ் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பை எனக்கு
வழங்கினார்கள். அது ‘சாத்தூர் சந்திப்பு’ என்ற நகைச்சுவை நாடகம்.
இந்த ஆண்டு இந்து நாடக விழாவில் ‘ஆயிரத்து ஒரு இரவுகள்’ என்ற
நாடகத்தை நிகழ்த்தினோம்.
இந்த முக்கியமான வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்க காரணமாக
இருந்தது ‘தி இந்து’ நாடகவிழாவில் முதன் முதலில் நாங்கள் நிகழ்த்திய
‘தி கிராண்ட் ரிகர்சல்’ என்ற ஆங்கில நகைச்சுவை நாடகம். இது பம்மல்
சம்மந்த முதலியார் எழுதிய ‘சபாபதி’ வரிசையில் வரக்கூடிய
‘ஓர் ஒத்திகை’ என்ற நாடகத்தின் மீள் உருவாக்க வடிவம். தொடக்கமும்
முடிவு இல்லாமல் இருந்த அந்த நாடகத்துக்கு அவற்றை எழுதி, மூத்த
தெருக்கூத்துக் கலைஞர் ஆ. கு. ஏழுமலையின் ஆடலும் பாடலும் கொண்ட
நிகழ்வை நாடகத்தின் ஒருபகுதியாக இணைத்து, அந்த நாடகத்தை எ
ழுதி, இயக்கியிருந்தேன்.
‘சாத்தூர் சந்திப்பு’, ‘ஓர் ஒத்திகை’ ஆகிய இரண்டு நாடகங்களையும்
இணைத்து ஒரே நாடகமாக ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் நாடகக்
கம்பெனியும்’ என்ற தலைப்பில் இந்தியாவின் பல நகரங்களில்
மேடையேற்றிவருகிறோம். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
திரையில் உங்கள் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்துவிட்டதா?
இல்லை. இந்தக் கேள்விக்கு ஏமாற்றம் என்ற பதிலைச் சொல்வதில்
எனக்குத் தயக்கமில்லை. வர்த்தகமாக இருக்கும் சினிமாவில் ஒரு நடிப்புக்
கலைஞராகத் திரையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மகிழ்வுடன்
ஏற்று நடிக்கிறேன்.
-
-------------------------------------------------
ஆர்.சி.ஜெயந்தன்
இந்து டாக்கீஸ், தி இந்து
மேற்கோள் செய்த பதிவு: 1224482ayyasamy ram wrote:
திரையில் உங்கள் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்துவிட்டதா?
இல்லை. இந்தக் கேள்விக்கு ஏமாற்றம் என்ற பதிலைச் சொல்வதில்
எனக்குத் தயக்கமில்லை. வர்த்தகமாக இருக்கும் சினிமாவில் ஒரு நடிப்புக்
கலைஞராகத் திரையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மகிழ்வுடன்
ஏற்று நடிக்கிறேன்.
-
-------------------------------------------------
ஆர்.சி.ஜெயந்தன்
இந்து டாக்கீஸ், தி இந்து
திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. கொடுக்கப்படும் கதாபாத்திரமாக மாறிவிட்டாலே திறமை தானாகே வெளிப்படும்.
பாத்திரத்திற்கேற்ற திறமை வெளிப்படுமானால், திறமையைத் தேடிப் பாத்திரங்கள் ஓடி வரும்.
வினோதினி அம்மையார் கவலை கொள்ள வேண்டாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|