by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
மலேசிய செய்திகள்
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி தனது விருப்பமான பிரதமர் வேட்பாளர் அல்ல என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது விளக்கினார்.
மாறாக, தன்னிடம் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை என்று அந்த லங்காவி எம்.பி. சொன்னார்.
நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கந்தார், புதன்கிழமை இரவு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் வேட்பாளர்களாக அஸ்மினையும் அவரது மகன் முக்ரிஸையும் தேர்வு செய்ததாக வெளியான ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து மகாதீர் இவ்வாறு கூறினார்.
“நான் எந்தப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், சொல்லிதான் ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர், நான் அஸ்மினுடன் நல்ல உறவில் இருப்பதால், அஸ்மின் எனது வேட்பாளர் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.
“(ஆனால்) … அவர் எனது வேட்பாளர் அல்ல. இது மக்கள் கருத்து என்று நான் சொல்கிறேன், அதாவது, பிரதமராக அஸ்மின் தகுதி பெற்றவர் என,” என்று அவர் இன்று ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அந்தப் பெஜுவாங் கட்சித் தலைவர் மேலும் கூறுகையில், மூன்று பெயர்களைப் பிரதமர் வேட்பாளர்களாகக் குறிப்பிடுமாறு கேட்டபோது, ஜெர்லுன் எம்.பி.யான முக்ரிஸின் பெயரையும் குறிப்பிட வேண்டி வந்ததாகக் கூறினார்.
“அவர் (ஹரித்) மூன்று பெயர்களை விரும்பினார், நான் என்ன சொல்வது என்று தெரியாத நிலையில், அவர்களில் ஒருவர் முக்ரிஸ் என குறிப்பிட வேண்டியிருந்தது,” என்று மகாதீர் சொன்னார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நேற்று, 424,541 தடுப்பூசி மருந்தளவுகளுடன், நாட்டில் தினசரி கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள், 400,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
திங்களன்று, தினசரி தடுப்பூசிகள் 421,479 மருந்தளவுகளாக இருந்தன.
நேற்று, 260,286 முதல் மருந்தளவுகளும், 164,255 இரண்டாவது மருந்தளவுகளும் வழங்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா ஒரு கீச்சகப் பதிவில் கூறினார்.
52,551 இரண்டாவது மருந்தளவு தடுப்பூசிகளுடன், சரவாக் மிக உயர்ந்த அளவிலான தடுப்பூசிகளைப் பெற்ற மாநிலமாக உள்ளது, அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (25,696), கோலாலம்பூர் (23,707), சபா (9,864), பினாங்கு (7,195) மற்றும் பஹாங் (7,038) உள்ளன.
இதற்கிடையில், பிப்ரவரி 23-ஆம் தேதி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்) செயல்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12,212,730 மருந்தளவுகளாகும் என்று டாக்டர் ஆதாம் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தற்போது காசாவில் சூழ்நிலை நிச்சயமற்றதாக இருப்பதால், எகிப்த் கெய்ரோவில் உள்ள மனிதாபிமான மிஷன் 4 பாலஸ்தீனம் (எச்எம்4பி) குழுவை மலேசியா திரும்புமாறு துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவுறுத்தினார்.
நேற்று, பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான உதவிக்குழுவுக்குத் தலைமையேற்று சென்றுள்ள, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ நலன்புரி பணியகத்தின் (பி.கே.யூ.எம்.) தலைவருமான அப்துல் அஜீஸ் அப்துல் இரஹீமுடன் நடந்த மெய்நிகர் சந்திப்பின் போது இஸ்மாயில் சப்ரி இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.
“நிலைமை சீராக இருந்தால், அவர்கள் மீண்டும் காசாவுக்குச் செல்லலாம். ஒவ்வொருவரும் தியாகம் செய்கிறார்கள், அந்தத் தியாகத்தில் ஒரு சோதனையும் இருக்கிறது.
“ஒவ்வொரு முயற்சியும் தியாகமும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவோம்,” என்று நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ஓர் இடுகை மூலம் தெரிவித்தார்.
கடந்த மே மாதம், இஸ்ரேலிய இராணுவத்தால் தாக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மலேசியர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்குப் பணம், உணவு பொருட்கள் மற்றும் மருந்து வடிவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க, எச்எம்4பி பணிக்குழு ஜூன் 19-ம் தேதி தொடங்கப்பட்டது.
பெர்னாமா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோலாலம்பூர், ஜூலை 22 – காஜாங்கில், போலீஸ் நிலையத்திற்குள் ஆட்டம் பாட்டம் என கேளிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், போதைப் பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்தின் ஓர் அறையை ‘குட்டி டிஸ்கோ’ தளமாக மாற்றி கும்மாளமிட்ட , நான்கு போலீஸ் அதிகாரிகளும், நான்கு பெண்களும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என, புக்கிட் அமானின் உயர்நெறி கட்டொழுங்கு துறையின் இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மாட் ( Datuk Azri Ahmad ) தெரிவித்தார்.
தொடக்க முடிவில், ஒரு போலீஸ் அதிகாரி THC வகை போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை என இந்தத் தீர்மானங்களைச் சமர்ப்பித்த புருவாஸ் நாடாளுமன்றத்திற்கான ஜசெக உறுப்பினர் இஙே கூ ஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானங்கள் ஜூலை 19-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
மலேசிய அரசியலமைப்பு சட்டம் விதி 150 (3) வரையறுத்தபடி அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், எனவே அவைத் தலைவர் அசார் ஹாருண் இந்தத் தீர்மானங்களை நிராகரிக்க முடியாது எனவும் இஙே மேலும் குறிப்பிட்டார்.
இஙே சமர்ப்பித்துள்ள தீர்மானங்கள் ஜனவரியில் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் மற்றும் மேலும் மூன்று அவசர கால சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதால் ஜூலை 26 நாடாளுமன்றக் கூட்டத்தின் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு கடுமையான மோதலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதையே ஜசெகவின் தீர்மானங்கள் காட்டுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோலாலம்பூர் : ஆளும் தேசியக் கூட்டணியையும், பிரதமர் மொகிதின் யாசினையும் ஆட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் அகற்றுவது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் – காரணம் எந்தக் கட்சிக்கும் அதற்கான பெரும்பான்மை இல்லை என வீடமைப்புத் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் (படம்) கூறியுள்ளார்.
சுரைடா பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமாவார். பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சுரைடா, அஸ்மின் அலியோடு இணைந்து பெர்சாத்து கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.
எனவே, அடுத்த பொதுத் தேர்தல் வரை அனைத்துக் கட்சிகளும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் – பிரதமரின் ஆட்சி தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் சுரைடா கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் மொகிதின் யாசினை பிரதமர் பதவியில் இருந்து அகற்றும் இன்னொரு முயற்சியை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும், இந்த முயற்சிக்கு அம்னோ ஒத்துழைப்பு வழங்குமா என்பது இன்னும் தெரியவில்லை.
அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதால் அம்னோ திருப்தியடைந்து விடுமா அல்லது ஏற்கனவே அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவின்படி மொகிதின் அரசாங்கத்திற்கு ஆதரவு தராமல் விலகிக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியை சந்தித்துப் பேசியிருப்பதும் பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (147,386) உள்ளது.
மேலும், இன்று 144 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 7,718- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 10,094 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 456 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
வகை அடிப்படையில் முறிவு
வகை 5 – (மோசமான நிலை, சுவாசக் கருவியின் உதவி தேவை) : 29 நேர்வுகள் (0.2%)
வகை 4 – (உயிர்வளி உதவி தேவை) : 74 நேர்வுகள் (0.5%)
வகை 3 – (நிமோனியா) : 102 நேர்வுகள் (0.6%)
வகை 2 – (இலேசான அறிகுறிகள்) : 7,095 நேர்வுகள் (45.6%)
வகை 1 – (அறிகுறிகள் இல்லை) : 8,273 நேர்வுகள் (53.1%)
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (7,672), கோலாலம்பூர் (2,063), கெடா (937), ஜொகூர் (722), நெகிரி செம்பிலான் (682), பினாங்கு (530), சபா (516), சரவாக் (461), பஹாங் (457), மலாக்கா (452), பேராக் (415), கிளந்தான் (372), திரெங்கானு (229), புத்ராஜெயா (41), லாபுவான் (21), பெர்லிஸ் (3).
மேலும் இன்று, 30 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 7 பணியிடத் திரளைகள் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தடுப்பூசி மையங்களில், ஆடைக் குறியீடுகள் குறித்த விதிகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அதிகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர், டாக்டர் எம். சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்.
முன்னதாக, இரண்டு பிபிவி-க்களில் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்காத இருவரை உபசரிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு பிபிவி, தனது முகநூலில் ஆடைகள் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்தது.
மலேசியாகினியிடம் பேசிய சுப்பிரமணியம், அத்தகைய விதிமுறைகள் தேவையில்லை என்று கூறினார்.
“உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எந்தவிதமான நடத்தை விதிகளும் இருக்கக்கூடாது. அவர்களுக்குத் தடுப்பூசி நியமனம் இருக்கும் வரை, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
“இப்போது முக்கிய முன்னுரிமை, முடிந்தவரைப் பலருக்குத் தடுப்பூசி போடுவதுதான். மக்களைப் புறக்கணிப்பதற்கான நேரம் இதுவல்ல,” என்றார் அவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|