புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
Page 9 of 12 •
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
First topic message reminder :
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முனைவர் அவர்களுக்கு ,
கவரிமான் என்று ஒரு மான் உண்டு ; அது தன் மயிர்த் திரளிலிருந்து ஒன்றை இழந்தாலும் உயிர் வாழாது என்று சிலர் கூறுவர். இது தவறான கருத்து.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம் - 969 )
பொருள் :
========
குளிர்காப்பாம் மயிரை நீங்கினால் ,குளிர் தாங்கமுடியாது உயிரை விடும் கவரிமா என்னும் விலங்கினைப்போல , சிலர் மானக்கேடு வருமெனின் தம் உயிரை விட்டுவிடுவர் .
எனவே கவரிமா என்பதே " கவரிமான் "ஆயிற்று .
கவரிமான் என்று ஒரு மான் உண்டு ; அது தன் மயிர்த் திரளிலிருந்து ஒன்றை இழந்தாலும் உயிர் வாழாது என்று சிலர் கூறுவர். இது தவறான கருத்து.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம் - 969 )
பொருள் :
========
குளிர்காப்பாம் மயிரை நீங்கினால் ,குளிர் தாங்கமுடியாது உயிரை விடும் கவரிமா என்னும் விலங்கினைப்போல , சிலர் மானக்கேடு வருமெனின் தம் உயிரை விட்டுவிடுவர் .
எனவே கவரிமா என்பதே " கவரிமான் "ஆயிற்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கவரிமா என்ற விலங்கினைப் போல் எனில் ........
கவரிமா வும் கவரிமானும் வெவ்வேறா ?
ரமணியன்
கவரிமா வும் கவரிமானும் வெவ்வேறா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
கவரிமான் என்ற ஒரு மான் இனமே கிடையாது. அதன் உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினால் உயிரை விட்டுவிடும் என்பதெல்லாம் கற்பனைச் செய்திகள் . அன்னம் என்ற பறவை , பாலையும் நீரையும் கலந்து வைத்தால் , அவற்றைத் தனித்தனியே பிரித்துவிடும் என்பதும் தவறான கருத்து. அதுபோலத்தான் இதுவும் .
கவரிமான் என்ற ஒரு மான் இனமே கிடையாது. அதன் உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினால் உயிரை விட்டுவிடும் என்பதெல்லாம் கற்பனைச் செய்திகள் . அன்னம் என்ற பறவை , பாலையும் நீரையும் கலந்து வைத்தால் , அவற்றைத் தனித்தனியே பிரித்துவிடும் என்பதும் தவறான கருத்து. அதுபோலத்தான் இதுவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
ஐயா வணக்கம்.
மயிர் எனும் சொல் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு மற்றும் காப்பியங்களிலும் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் மயிர் என்பது அமங்கலச் சொல் என்பது போன்ற பதிவை இதுவரை நான் பார்க்கவில்லை. படிப்பின் தொடர்ச்சியில் பதிவு கிடைத்தால் எழுதுகிறேன்.
தொடர்ந்து தாங்கள் குறளை எடுத்துக்காட்டி கேட்டிருக்கும் கேள்விகள்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ( மானம் - 964 )
இக்குறளில் " மயிரனையர் " என்ற சொல்லுக்குப் பதிலாக " முடியனையர் " என்ற சொல்லைப் பெய்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . ஏன் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை ?
வள்ளுவர் காலத்தில்
" முடி " என்னும் சொல் வழக்கிலில்லையா ? " முடி " என்னும் சொல் மன்னனின் மணிமுடியை மட்டுமே குறித்ததா ?
" முடி திருத்தகம் " என்று இக்காலத்தில் விளம்பரப் பலகையில் பார்க்கிறோம். இந்த " முடி " என்னும் சொல் "மயிர் " கருத்திலே எப்போதிருந்து வழக்கில் வந்தது ? – என்பன.
வள்ளுவர் காலத்தில் முடி எனும் சொல் திருக்குறளின்வழி ஆய்வுசெய்தால் அச்சொல் தனித்து வரவில்லை. அச்சொல்லோடு தொடர்படைய சொற்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு,
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் - 517:1
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் - 640:1
முடிந்தாலும் பீழை தரும். – 658:2
சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு – 671:1
முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் – 676:1
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் – 908:1
சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் – 1024:1
மேல் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் அடிகளில் இருந்து நிறைவேற்றுதல் நிறைவேறாமை என்ற பொருளில் முடியுடன் தொடர்புடைய சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறதே அன்றி மயிர் எனும் பொருளில் எடுத்தாளப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்து, முடி எனும் சொல் மயிர் எனும் பொருளில் எப்போதிருந்து வழக்கில் வந்தது என்பதைப் பதிவுகள்வழி கண்டறிய கால அவகாசம் தேவை. இக் கேள்வி என் ஆய்வோடு தொடர்புடையது என்பதனால் உறுதியாகத் தங்களுக்குப் பதில் எழுதுகிறேன்.
தொடர்ந்து கேள்வி எழுப்புங்கள். நன்றி.
மயிர் எனும் சொல் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு மற்றும் காப்பியங்களிலும் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் மயிர் என்பது அமங்கலச் சொல் என்பது போன்ற பதிவை இதுவரை நான் பார்க்கவில்லை. படிப்பின் தொடர்ச்சியில் பதிவு கிடைத்தால் எழுதுகிறேன்.
தொடர்ந்து தாங்கள் குறளை எடுத்துக்காட்டி கேட்டிருக்கும் கேள்விகள்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ( மானம் - 964 )
இக்குறளில் " மயிரனையர் " என்ற சொல்லுக்குப் பதிலாக " முடியனையர் " என்ற சொல்லைப் பெய்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . ஏன் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை ?
வள்ளுவர் காலத்தில்
" முடி " என்னும் சொல் வழக்கிலில்லையா ? " முடி " என்னும் சொல் மன்னனின் மணிமுடியை மட்டுமே குறித்ததா ?
" முடி திருத்தகம் " என்று இக்காலத்தில் விளம்பரப் பலகையில் பார்க்கிறோம். இந்த " முடி " என்னும் சொல் "மயிர் " கருத்திலே எப்போதிருந்து வழக்கில் வந்தது ? – என்பன.
வள்ளுவர் காலத்தில் முடி எனும் சொல் திருக்குறளின்வழி ஆய்வுசெய்தால் அச்சொல் தனித்து வரவில்லை. அச்சொல்லோடு தொடர்படைய சொற்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு,
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் - 517:1
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் - 640:1
முடிந்தாலும் பீழை தரும். – 658:2
சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு – 671:1
முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் – 676:1
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் – 908:1
சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் – 1024:1
மேல் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் அடிகளில் இருந்து நிறைவேற்றுதல் நிறைவேறாமை என்ற பொருளில் முடியுடன் தொடர்புடைய சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறதே அன்றி மயிர் எனும் பொருளில் எடுத்தாளப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்து, முடி எனும் சொல் மயிர் எனும் பொருளில் எப்போதிருந்து வழக்கில் வந்தது என்பதைப் பதிவுகள்வழி கண்டறிய கால அவகாசம் தேவை. இக் கேள்வி என் ஆய்வோடு தொடர்புடையது என்பதனால் உறுதியாகத் தங்களுக்குப் பதில் எழுதுகிறேன்.
தொடர்ந்து கேள்வி எழுப்புங்கள். நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
ஐயா வணக்கம்.
ரமணியன் ஐயா அவர்கள் வினவிய கவரிமாவும் கவரிமானும் வெவ்வேறா ? என்ற கேள்விக்குரிய பதிலாக
கவரிமா என்பதே " கவரிமான் "ஆயிற்று என்ற தங்களின் விளக்கம் சரியானதே. கவரிமான் என்ற ஒருவிலங்கு இல்லை.அப்படியென்றால் கவரிமா என்பது எத்தகைய விலங்கு என்பதை அறிவதற்கான சிறுவிளக்கம்.
கவரி என்பது குட்டைக்கால்களுடன் குட்டைக் கழுத்தும் குட்டைக் காதும் குட்டை வாலும் கொண்ட எருமைக் குடும்பத்தைச் சார்ந்த விலங்கு. இதன் தோல் முழுவதும் மயிர் அடர்ந்திருக்கும். ………….. உடலில் வியர்வைச் சுரப்பிகள் மிகக் குறைவு. இவ்விலங்கு இந்தியா, நேபாள், சீனா, திபெத் ஆகிய நாடுகளில் இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் பனிப்படர்ந்த மலைச்சிகரங்களிலும் காணப்படுகிறது. ……… கவரி ஆங்கிலத்தில் YAK எனவும் YARK எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் Bos primigenius Taurus, Bos primigenius indicus என்பனவாகும் . இமயமலை அடிவாரத்தில் வசிக்கம் கவரியைப் பழக்கி வீட்டு விலங்காக வளர்க்கும் வழக்கம் இமயமலை அடிவார மக்களிடத்தில் இன்றும் காணப்படுகிறது. திபெத்தியர்களும் சீனர்களும் காஷ்மீர்க்காரர்களும் கவரியை வீட்டு விலங்காக வளர்க்கின்றனர். கவரியின் பாலை உணவாகக்கொள்கின்றனர். கவரி வாகனமாகவும் வண்டியிழுக்கவும் பயன்படுகிறது. … ………… இன்றைக்கும் கவரியிலிருந்து பெறப்படும் கவரி மயிர் விசிறிகளும் போலி மயிரும் உலகளாவ விற்பனை செய்யப்படுகின்றன.
கவரியிலிருந்து பெறப்படும் போலிமயிர் Yak hair எனவும் ஒவ்வாமை காரணமாக கவரிமயிர் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கென கவரிமயிர் போன்று போலியாகத் தயாரிக்கப்படும் போலிமயிர் Yaki hair எனவும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது .
கவரிக்கு வியர்வைச் சுரப்பிகள் மிகவும் குறைவு. அதன் உடல் அடர்ந்த மூவகை மயிர்த் தொகுதியைக் கொண்டிருக்கிறது. இதனால் குளிர்காலத்தில் கவரியின் உடலில் வெப்பம் தக்கவைக்கப்படுகிறது. இதே தகவமைப்பால் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தைக் கவரியால் தாங்க முடிவதில்லை. கவரியால் தாங்க முடிந்த வெப்பம் 16 டிகிரிதான். கோடைகாலத்தில் இமயமலையில் கவரி நீர்நிலைக்கு அருகில் அமைந்துள்ள சோலைகளில் அதிகமாய் உணவுண்ணாது அசையாது இருந்து காலத்தைக் கடத்தும். பதிற்றுப்பத்தும் புறநானூறும் நரந்தம் உண்டு நீர்நிலைக்கு அருகில் ஓய்ந்து படுத்திருக்கும் கவரிக் கூட்டத்தைத் தங்கள் பாடலடிகளில் குறித்திருக்கின்றன. (தகவலுக்கு நன்றி : கவரி கருமை காளமேகம் தமிழாய்வுக் கட்டுரைகள் - க. கதிரவன் , இராசகுணா பதிப்பகம்)
நன்றி.
ரமணியன் ஐயா அவர்கள் வினவிய கவரிமாவும் கவரிமானும் வெவ்வேறா ? என்ற கேள்விக்குரிய பதிலாக
கவரிமா என்பதே " கவரிமான் "ஆயிற்று என்ற தங்களின் விளக்கம் சரியானதே. கவரிமான் என்ற ஒருவிலங்கு இல்லை.அப்படியென்றால் கவரிமா என்பது எத்தகைய விலங்கு என்பதை அறிவதற்கான சிறுவிளக்கம்.
கவரி என்பது குட்டைக்கால்களுடன் குட்டைக் கழுத்தும் குட்டைக் காதும் குட்டை வாலும் கொண்ட எருமைக் குடும்பத்தைச் சார்ந்த விலங்கு. இதன் தோல் முழுவதும் மயிர் அடர்ந்திருக்கும். ………….. உடலில் வியர்வைச் சுரப்பிகள் மிகக் குறைவு. இவ்விலங்கு இந்தியா, நேபாள், சீனா, திபெத் ஆகிய நாடுகளில் இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் பனிப்படர்ந்த மலைச்சிகரங்களிலும் காணப்படுகிறது. ……… கவரி ஆங்கிலத்தில் YAK எனவும் YARK எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் Bos primigenius Taurus, Bos primigenius indicus என்பனவாகும் . இமயமலை அடிவாரத்தில் வசிக்கம் கவரியைப் பழக்கி வீட்டு விலங்காக வளர்க்கும் வழக்கம் இமயமலை அடிவார மக்களிடத்தில் இன்றும் காணப்படுகிறது. திபெத்தியர்களும் சீனர்களும் காஷ்மீர்க்காரர்களும் கவரியை வீட்டு விலங்காக வளர்க்கின்றனர். கவரியின் பாலை உணவாகக்கொள்கின்றனர். கவரி வாகனமாகவும் வண்டியிழுக்கவும் பயன்படுகிறது. … ………… இன்றைக்கும் கவரியிலிருந்து பெறப்படும் கவரி மயிர் விசிறிகளும் போலி மயிரும் உலகளாவ விற்பனை செய்யப்படுகின்றன.
கவரியிலிருந்து பெறப்படும் போலிமயிர் Yak hair எனவும் ஒவ்வாமை காரணமாக கவரிமயிர் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கென கவரிமயிர் போன்று போலியாகத் தயாரிக்கப்படும் போலிமயிர் Yaki hair எனவும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது .
கவரிக்கு வியர்வைச் சுரப்பிகள் மிகவும் குறைவு. அதன் உடல் அடர்ந்த மூவகை மயிர்த் தொகுதியைக் கொண்டிருக்கிறது. இதனால் குளிர்காலத்தில் கவரியின் உடலில் வெப்பம் தக்கவைக்கப்படுகிறது. இதே தகவமைப்பால் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தைக் கவரியால் தாங்க முடிவதில்லை. கவரியால் தாங்க முடிந்த வெப்பம் 16 டிகிரிதான். கோடைகாலத்தில் இமயமலையில் கவரி நீர்நிலைக்கு அருகில் அமைந்துள்ள சோலைகளில் அதிகமாய் உணவுண்ணாது அசையாது இருந்து காலத்தைக் கடத்தும். பதிற்றுப்பத்தும் புறநானூறும் நரந்தம் உண்டு நீர்நிலைக்கு அருகில் ஓய்ந்து படுத்திருக்கும் கவரிக் கூட்டத்தைத் தங்கள் பாடலடிகளில் குறித்திருக்கின்றன. (தகவலுக்கு நன்றி : கவரி கருமை காளமேகம் தமிழாய்வுக் கட்டுரைகள் - க. கதிரவன் , இராசகுணா பதிப்பகம்)
நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர்ச்சி
கூந்தல் விறலியர்
மன்னனின் கொடைச் சிறப்பின் பதிவைக் கண்டிருக்கிறோம். அதுபோல அவனிடம் பரிசு பெற்ற பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் ஆகியோர் பெரும் பரிசுப்பொருட்களைத் தாம் மட்டுமே பயன்படுத்தாமல் தம் சுற்றத்தவருக்கு வழங்கி வாழும் முறைமையை அறிந்திருக்கிறோம். ஆனால் பரிசில்பெற்று வந்த பாணன் ஒருவன் தம்முடன் இருப்பவரை நோக்கித் தம்மை நாடிவருகின்றவர்க்கு உணவு சமைக்கக் கூறுவது குறித்த பதிவு ஒன்றினைக் காணும் வாய்ப்பினைப் பதிற்றுப்பத்தே வழங்கியுள்ளது. பாடவும் ஆடவும் செய்கின்ற விறலியர் உணவு சமைப்பதைக் கூறும் பாடல் இது.
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிகதிற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகில்நகை, மடவரல்
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!
(பதிற். இரண்டாம் பத்து 18:1 – 6)
இப்பாடலின் பெயர் கூந்தல் விறலியர் என்பது. இதற்கு விளக்கம் கூறும் பகுதியில் உரையாசிரியர் முனைவர் அ. ஆலிஸ்
வந்தார்க்குச் சோறு விரைவில் தருதல் பொருட்டு அடுப்புத் தொழிலுக்குரியர் அல்லாதவரும் தம் கலைத்திறமையைக் காட்டிப் பரிசில் பெறும் வரிசை மகளிருமான மகளிரும் அடுப்புத் தொழிலினை மேற்கொள்க என்றதனால் இச்சிறப்புக் கருதி இப்பாடலுக்குக் கூந்தல் விறலியர் என்பது பெயராயிற்று என்பர். ( பதிற்றுப்பத்து பக். 37 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
கலைத்திறமையைக் காட்டும் விறலியர் இருண்ட வளைந்த தழைத்தல் பொருந்திய ஐந்து பகுதிகளையுடைய கூந்தலை உடையவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகிறது. (ஐந்து பகுதிகளை உடைய கூந்தல் என்பது குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்பன). தேடினால் இதுபோன்ற இலக்கியப் பதிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் தம் பாடலில் வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாக முடிந்திருக்கின்ற விறலியர் தம் பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து மன்னனுக்கு ஆதரவாகப் பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர் என்று விறலியரின் பாடல் திறமையைக் குறிப்பிடுகின்றார். அப்பாடல் வருமாறு
வண்டுகள் கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட
(பதிற். ஐந்தாம் பத்து 46:4 – 6)
காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் எனும் பெண்பாற் புலவர் ஆறாம்பத்தின் நான்காம் பாடலில் விறலியர் மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறும் போது அவர்களின் தோற்றம் எப்படி இருந்தது என்பது பற்றியும் குறிப்பிடுகின்றார்.
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத்தோள்
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலை
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்
மின்இழை விறலியர் நின்மறம் பாட
(பதிற். ஆறாம்பத்து 54:3 – 6)
வருணனையில் விறலியரின் தோள், கண், மார்பு, அல்குல் எனத் தொடரும் வரிசையில் கூந்தலும் இடம்பெறுகின்றது. பதிற்றுப்பத்தில் விறலியரைச் சுட்டவரும் பாடல்களில் அவர்களின் கூந்தல் மலர் சூடியிருப்பதனால் வண்டுகள் மொய்க்க மணமுடையதாக இருப்பதையும் கொண்டை மற்றும் ஐம்பிரிவுகளாக்கி அழகுபட வைத்திருப்பதையும் காணமுடிகிறது.
கூந்தல் களைதல்
கணவனை இழக்கும் பெண்கள் மங்கல அணி மட்டுமல்லாது கூந்தலையும் இழப்பதைப் புறநானூற்றில் கண்டோம். அதைப் போன்றே பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகமும் இக்கருத்தைப் பதிவு செய்கின்றது.
சேரன் செங்குட்டுவன் கற்பின் கனலி என்று போற்றப்படுகின்ற கண்ணகிக்குச் சிலை எடுப்பதற்காக இமயம் செல்கின்றான். தன்னைத் தடுத்து பகைப்போரை எல்லாம் வெற்றி கொள்கிறான். தான் நினைத்தது போன்றே கல்லெடுத்துத் திரும்பும் வழியில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டியெடுப்பதுடன் கணவரை இழந்தமையால் மங்கல அணிகளை நீக்கிய அந்நாட்டுப் பெண்களின் மணமுடைய கற்றைக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அதனைக் கொண்டு, பகைமன்னனின் யானைகளை வண்டியில் பூட்டி அதன் மூலம் வெற்றிகொண்ட காவல் மரத்தைத் தன் நாட்டிற்குக் கொண்டுவருவதோடு வழி நெடுக தன்னை எதிர்த்தோரை எல்லாம் அழித்து வாகை சூடிய வீரமுள்ள குட்டுவனைப் பரணர் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார் என்று கூறி பதிகம் நிறைவுபெறுகிறது.
பதிகத்தில் செங்குட்டுவனிடம் தோற்ற பகைமன்னன் நாட்டுப் பெண்கள் பற்றிக் கூறும்போது
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர்
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி ………………..
(பதிற். ஐந்தாம் பத்து, பதிகம். 15 – 17)
என்கிறது. இதற்கு உ.வே.சா அவர்கள் கணவனை இழந்த மகளிர் இழை கழித்தல், “மெல்லியன் மகளிருமிழைகழித் தனரே’’ (புறம். 224: 17) வாலிழையென்றது முத்தாரத்தை, நறும்பல் பெண்டிரென்றது அவருடைய இயற்கை மணத்தைக் கூறியபடி. ஐம்பாலாதலின் பல்லிருங் கூந்தலென்றார். (குறுந். 19:5 உரை ஒப்பு) என்று குறிப்புரை எழுதிச் செல்கிறார்.
உ.வே.சா அவர்கள் சுட்டிக்காட்டும் புறநானூற்றுப்பாடலில் கரிகாலன் இறந்த போது மெல்லிய இயல்புடைய உரிமை மகளிரும் அருங்கல அணி முதலான அணிகளை நீக்கினர் என்று வருகின்றது. (புறநானூறு. பக் 532, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) கூந்தலைக் களைந்தனர் என்ற நேரடிப் பதிவு இல்லை என்றாலும் அருங்கல அணி முதலான அணிகளை நீக்கினர் என்று கூறுவனவற்றுள் மயிர்களைதலும் இருந்திருக்கும். ஏனென்றால் கணவன் இறந்த போது மயிர் களைந்தனர் என்பதற்கான சான்றுகளை முன் தொடரில் கண்டோம். (புறம். 25,250,280)
அதுபோன்றே தோற்ற மன்னனை இழிவுபடுத்த அவர்களுடைய மகளிர்தம் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்த நன்னன் இழிசெயலும் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தோம். (நற். 270)
இந்நிலையில், செங்குட்டுவன் தோற்ற பகை நாட்டுப் பெண்களின் கூந்தலைக் கொய்து கயிறு திரித்தானா? அல்லது அப்பெண்கள் தம் கணவருக்காக வேண்டாமென்று கழித்துவிட்ட கூந்தலைக் கயிறாக்கினானா? என்பது புலப்படவில்லை.
பாடலில் அணிகலன் கழிக்கப்பட்டது கூறப்பட்டுள்ளதே அன்றி இக்கருத்து தெளிவுபடுத்தப்படவில்லை. முனைவர் அ. ஆலிஸ் அவர்கள் இவ்வடிகளுக்குக் கணவன் இறந்தமையால் அவன் மனைவியராகிய நல்ல பல பெண்கள் தூய அணிகலமாகிய முத்தாரத்தை நீக்கினர். அப்பெண்டிரது பலவாகிய கரிய கூந்தலைக் கொண்டு திரிக்கப்பட்ட கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டினான் என்று உரை எழுதுகிறார். (பதிற்றுப்பத்து, பக். 168, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
இவர் உரையிலும் கூந்தல் பெண்களால் களையப்பட்டதா? அல்லது சேரன் தன் வஞ்சம் கருதி கழித்தானா? என்ற தெளிவில்லை.
இப்பதிகம் சுட்டிக் காட்டும் பல தகவல் சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படைக் காதையிலும் (27:117 – 126, 179 – 191) நடுகற்காதையிலும் (28: 90 – 109) பதிவு செய்யப்படுகிறது.
இக்காதைகளில் சேரன் கண்ணகிக்குக் கல்லெடுத்து மீளும்போது ஆரியப் பேடியுடன் மறத்திறன் ஒழியாத அரசர்தம் மேம்பட்ட மொழியினைப் பெறாமல் மறுத்துரைக்கும் ஆயிரவரையும் உயிர் பிழைக்கத் தவவேடமிட்டுத் தப்பிச் செல்லக் கருதியவரையும் தோற்ற கனக விசயரையும் வெல்லும் போர்க்களத்தில் இருந்து தமிழ் மன்னர்களாகிய சோழ பாண்டியர் காண தமிழகம் கொண்டு வந்த செயலே இழிவாகக் கருதப்பட்டதெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பகை நாட்டுப் பெண்களின் கூந்தலைக் கயிறாகத் திரித்த செயல் பற்றிய பதிவு இடம்பெறவில்லை.
ஆதலின் ஒருபக்கம் கண்ணகியைப் பெருமைப்படுத்துவதற்காக இமயம் சென்று கல்லெடுத்து கோயில் கட்டக் கருதும் சேரமன்னன் மறுபக்கம் தோற்ற பகை மன்னர்களை இழிவுபடுத்த போரில் கணவனின் இழப்பால் மங்கல அணியைக் கழித்து நிற்கும் பெண்களின் கூந்தலை அறுத்துக் கயிறாக்கி யானைகளை வண்டியில் பூட்டியிருப்பானா? என்பது எண்ணுதற்குரியது. அவ்விழி செயலைச் சேரன் செய்திருந்தால் வரலாற்றில் நன்னனைப் போன்ற இழி பதிவே அவனுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம். எனினும் இப்பதிவு மேலும் ஆய்தற்குரியது.
தொடரும்.................
கூந்தல் விறலியர்
மன்னனின் கொடைச் சிறப்பின் பதிவைக் கண்டிருக்கிறோம். அதுபோல அவனிடம் பரிசு பெற்ற பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் ஆகியோர் பெரும் பரிசுப்பொருட்களைத் தாம் மட்டுமே பயன்படுத்தாமல் தம் சுற்றத்தவருக்கு வழங்கி வாழும் முறைமையை அறிந்திருக்கிறோம். ஆனால் பரிசில்பெற்று வந்த பாணன் ஒருவன் தம்முடன் இருப்பவரை நோக்கித் தம்மை நாடிவருகின்றவர்க்கு உணவு சமைக்கக் கூறுவது குறித்த பதிவு ஒன்றினைக் காணும் வாய்ப்பினைப் பதிற்றுப்பத்தே வழங்கியுள்ளது. பாடவும் ஆடவும் செய்கின்ற விறலியர் உணவு சமைப்பதைக் கூறும் பாடல் இது.
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிகதிற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகில்நகை, மடவரல்
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!
(பதிற். இரண்டாம் பத்து 18:1 – 6)
இப்பாடலின் பெயர் கூந்தல் விறலியர் என்பது. இதற்கு விளக்கம் கூறும் பகுதியில் உரையாசிரியர் முனைவர் அ. ஆலிஸ்
வந்தார்க்குச் சோறு விரைவில் தருதல் பொருட்டு அடுப்புத் தொழிலுக்குரியர் அல்லாதவரும் தம் கலைத்திறமையைக் காட்டிப் பரிசில் பெறும் வரிசை மகளிருமான மகளிரும் அடுப்புத் தொழிலினை மேற்கொள்க என்றதனால் இச்சிறப்புக் கருதி இப்பாடலுக்குக் கூந்தல் விறலியர் என்பது பெயராயிற்று என்பர். ( பதிற்றுப்பத்து பக். 37 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
கலைத்திறமையைக் காட்டும் விறலியர் இருண்ட வளைந்த தழைத்தல் பொருந்திய ஐந்து பகுதிகளையுடைய கூந்தலை உடையவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகிறது. (ஐந்து பகுதிகளை உடைய கூந்தல் என்பது குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்பன). தேடினால் இதுபோன்ற இலக்கியப் பதிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் தம் பாடலில் வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாக முடிந்திருக்கின்ற விறலியர் தம் பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து மன்னனுக்கு ஆதரவாகப் பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர் என்று விறலியரின் பாடல் திறமையைக் குறிப்பிடுகின்றார். அப்பாடல் வருமாறு
வண்டுகள் கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட
(பதிற். ஐந்தாம் பத்து 46:4 – 6)
காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் எனும் பெண்பாற் புலவர் ஆறாம்பத்தின் நான்காம் பாடலில் விறலியர் மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறும் போது அவர்களின் தோற்றம் எப்படி இருந்தது என்பது பற்றியும் குறிப்பிடுகின்றார்.
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத்தோள்
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலை
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்
மின்இழை விறலியர் நின்மறம் பாட
(பதிற். ஆறாம்பத்து 54:3 – 6)
வருணனையில் விறலியரின் தோள், கண், மார்பு, அல்குல் எனத் தொடரும் வரிசையில் கூந்தலும் இடம்பெறுகின்றது. பதிற்றுப்பத்தில் விறலியரைச் சுட்டவரும் பாடல்களில் அவர்களின் கூந்தல் மலர் சூடியிருப்பதனால் வண்டுகள் மொய்க்க மணமுடையதாக இருப்பதையும் கொண்டை மற்றும் ஐம்பிரிவுகளாக்கி அழகுபட வைத்திருப்பதையும் காணமுடிகிறது.
கூந்தல் களைதல்
கணவனை இழக்கும் பெண்கள் மங்கல அணி மட்டுமல்லாது கூந்தலையும் இழப்பதைப் புறநானூற்றில் கண்டோம். அதைப் போன்றே பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகமும் இக்கருத்தைப் பதிவு செய்கின்றது.
சேரன் செங்குட்டுவன் கற்பின் கனலி என்று போற்றப்படுகின்ற கண்ணகிக்குச் சிலை எடுப்பதற்காக இமயம் செல்கின்றான். தன்னைத் தடுத்து பகைப்போரை எல்லாம் வெற்றி கொள்கிறான். தான் நினைத்தது போன்றே கல்லெடுத்துத் திரும்பும் வழியில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டியெடுப்பதுடன் கணவரை இழந்தமையால் மங்கல அணிகளை நீக்கிய அந்நாட்டுப் பெண்களின் மணமுடைய கற்றைக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அதனைக் கொண்டு, பகைமன்னனின் யானைகளை வண்டியில் பூட்டி அதன் மூலம் வெற்றிகொண்ட காவல் மரத்தைத் தன் நாட்டிற்குக் கொண்டுவருவதோடு வழி நெடுக தன்னை எதிர்த்தோரை எல்லாம் அழித்து வாகை சூடிய வீரமுள்ள குட்டுவனைப் பரணர் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார் என்று கூறி பதிகம் நிறைவுபெறுகிறது.
பதிகத்தில் செங்குட்டுவனிடம் தோற்ற பகைமன்னன் நாட்டுப் பெண்கள் பற்றிக் கூறும்போது
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர்
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி ………………..
(பதிற். ஐந்தாம் பத்து, பதிகம். 15 – 17)
என்கிறது. இதற்கு உ.வே.சா அவர்கள் கணவனை இழந்த மகளிர் இழை கழித்தல், “மெல்லியன் மகளிருமிழைகழித் தனரே’’ (புறம். 224: 17) வாலிழையென்றது முத்தாரத்தை, நறும்பல் பெண்டிரென்றது அவருடைய இயற்கை மணத்தைக் கூறியபடி. ஐம்பாலாதலின் பல்லிருங் கூந்தலென்றார். (குறுந். 19:5 உரை ஒப்பு) என்று குறிப்புரை எழுதிச் செல்கிறார்.
உ.வே.சா அவர்கள் சுட்டிக்காட்டும் புறநானூற்றுப்பாடலில் கரிகாலன் இறந்த போது மெல்லிய இயல்புடைய உரிமை மகளிரும் அருங்கல அணி முதலான அணிகளை நீக்கினர் என்று வருகின்றது. (புறநானூறு. பக் 532, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) கூந்தலைக் களைந்தனர் என்ற நேரடிப் பதிவு இல்லை என்றாலும் அருங்கல அணி முதலான அணிகளை நீக்கினர் என்று கூறுவனவற்றுள் மயிர்களைதலும் இருந்திருக்கும். ஏனென்றால் கணவன் இறந்த போது மயிர் களைந்தனர் என்பதற்கான சான்றுகளை முன் தொடரில் கண்டோம். (புறம். 25,250,280)
அதுபோன்றே தோற்ற மன்னனை இழிவுபடுத்த அவர்களுடைய மகளிர்தம் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்த நன்னன் இழிசெயலும் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தோம். (நற். 270)
இந்நிலையில், செங்குட்டுவன் தோற்ற பகை நாட்டுப் பெண்களின் கூந்தலைக் கொய்து கயிறு திரித்தானா? அல்லது அப்பெண்கள் தம் கணவருக்காக வேண்டாமென்று கழித்துவிட்ட கூந்தலைக் கயிறாக்கினானா? என்பது புலப்படவில்லை.
பாடலில் அணிகலன் கழிக்கப்பட்டது கூறப்பட்டுள்ளதே அன்றி இக்கருத்து தெளிவுபடுத்தப்படவில்லை. முனைவர் அ. ஆலிஸ் அவர்கள் இவ்வடிகளுக்குக் கணவன் இறந்தமையால் அவன் மனைவியராகிய நல்ல பல பெண்கள் தூய அணிகலமாகிய முத்தாரத்தை நீக்கினர். அப்பெண்டிரது பலவாகிய கரிய கூந்தலைக் கொண்டு திரிக்கப்பட்ட கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டினான் என்று உரை எழுதுகிறார். (பதிற்றுப்பத்து, பக். 168, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
இவர் உரையிலும் கூந்தல் பெண்களால் களையப்பட்டதா? அல்லது சேரன் தன் வஞ்சம் கருதி கழித்தானா? என்ற தெளிவில்லை.
இப்பதிகம் சுட்டிக் காட்டும் பல தகவல் சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படைக் காதையிலும் (27:117 – 126, 179 – 191) நடுகற்காதையிலும் (28: 90 – 109) பதிவு செய்யப்படுகிறது.
இக்காதைகளில் சேரன் கண்ணகிக்குக் கல்லெடுத்து மீளும்போது ஆரியப் பேடியுடன் மறத்திறன் ஒழியாத அரசர்தம் மேம்பட்ட மொழியினைப் பெறாமல் மறுத்துரைக்கும் ஆயிரவரையும் உயிர் பிழைக்கத் தவவேடமிட்டுத் தப்பிச் செல்லக் கருதியவரையும் தோற்ற கனக விசயரையும் வெல்லும் போர்க்களத்தில் இருந்து தமிழ் மன்னர்களாகிய சோழ பாண்டியர் காண தமிழகம் கொண்டு வந்த செயலே இழிவாகக் கருதப்பட்டதெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பகை நாட்டுப் பெண்களின் கூந்தலைக் கயிறாகத் திரித்த செயல் பற்றிய பதிவு இடம்பெறவில்லை.
ஆதலின் ஒருபக்கம் கண்ணகியைப் பெருமைப்படுத்துவதற்காக இமயம் சென்று கல்லெடுத்து கோயில் கட்டக் கருதும் சேரமன்னன் மறுபக்கம் தோற்ற பகை மன்னர்களை இழிவுபடுத்த போரில் கணவனின் இழப்பால் மங்கல அணியைக் கழித்து நிற்கும் பெண்களின் கூந்தலை அறுத்துக் கயிறாக்கி யானைகளை வண்டியில் பூட்டியிருப்பானா? என்பது எண்ணுதற்குரியது. அவ்விழி செயலைச் சேரன் செய்திருந்தால் வரலாற்றில் நன்னனைப் போன்ற இழி பதிவே அவனுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம். எனினும் இப்பதிவு மேலும் ஆய்தற்குரியது.
தொடரும்.................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முனைவர் அவர்களே !
தங்களுடைய நீண்ட நெடிய பதிவை இன்னும் நான் படிக்கவில்லை . படித்தபின் கருத்திடுகின்றேன் . அதற்கு முன்பாக ஓர் ஐயம் .
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'
என்ற இராமாயணப் பாடலில் வருகின்ற கள்ளிருக்கும் மலர்க் கூந்தலும் , தேம்பாய் கூந்தலும் ஒன்றா ?
மேலும்
' தடவியதோ இராமன் வாளி ' என்று சொல்லாமல் " தடவியதோ ஒருவன் வாளி " என்று ஏன் சொல்லவேண்டும் ?
தங்களுடைய நீண்ட நெடிய பதிவை இன்னும் நான் படிக்கவில்லை . படித்தபின் கருத்திடுகின்றேன் . அதற்கு முன்பாக ஓர் ஐயம் .
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'
என்ற இராமாயணப் பாடலில் வருகின்ற கள்ளிருக்கும் மலர்க் கூந்தலும் , தேம்பாய் கூந்தலும் ஒன்றா ?
மேலும்
' தடவியதோ இராமன் வாளி ' என்று சொல்லாமல் " தடவியதோ ஒருவன் வாளி " என்று ஏன் சொல்லவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம்.
ஐயா கம்பராமாயணத்தில் கள் எனும் சொல் உள்ள பாடல்களாகக் கீழ்வரும் பாடல்களே இருக்கின்றன.
கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது - 1501.
கள் அவிழ் கோதை - தேன் சொரியும் மலர் மாலையணிந்த; -852.
கள்உற தேனைப்போல்; கனிந்த - சிவந்த; - 4871.
கள் மணி வள்ளத்துள்ளே - கள்ளினை வார்த்த அழகிய கிண்ணத்தின் உள்ளே; -978.
கள்வாய் அரக்கி- கள்ஒழுகும் வாயை உடைய அங்கார தாரை; - 4823.
கள்ளை கவர் கண்ணியன் - தேனைஉண்கின்ற மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; - 2133.
கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; - 3103.
தாங்கள் எடுத்துக்காட்டியிருக்கும்
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'
எனும் இப்பாடலைத் தாங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள். பாடல் எண்ணும் படலமும் குறிப்பிட்டால் கருத்துசொல்ல ஏதுவாக இருக்கும். ஏனென்றால் தாங்கள் எழுப்பியுள்ள
' தடவியதோ இராமன் வாளி ' என்று சொல்லாமல் " தடவியதோ ஒருவன் வாளி " என்று ஏன் சொல்லவேண்டும் ?
என்ற கேள்விக்குரிய பதிலைத் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலைக் கொண்டு மட்டும் பொருள் கூற இயலாது. அப்பாடலுக்கு முன் பின் உள்ள பாடல்களைக் கொண்டு பதில் தர முயற்சிக்கின்றேன்.
நன்றி.
ஐயா கம்பராமாயணத்தில் கள் எனும் சொல் உள்ள பாடல்களாகக் கீழ்வரும் பாடல்களே இருக்கின்றன.
கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது - 1501.
கள் அவிழ் கோதை - தேன் சொரியும் மலர் மாலையணிந்த; -852.
கள்உற தேனைப்போல்; கனிந்த - சிவந்த; - 4871.
கள் மணி வள்ளத்துள்ளே - கள்ளினை வார்த்த அழகிய கிண்ணத்தின் உள்ளே; -978.
கள்வாய் அரக்கி- கள்ஒழுகும் வாயை உடைய அங்கார தாரை; - 4823.
கள்ளை கவர் கண்ணியன் - தேனைஉண்கின்ற மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; - 2133.
கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; - 3103.
தாங்கள் எடுத்துக்காட்டியிருக்கும்
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'
எனும் இப்பாடலைத் தாங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள். பாடல் எண்ணும் படலமும் குறிப்பிட்டால் கருத்துசொல்ல ஏதுவாக இருக்கும். ஏனென்றால் தாங்கள் எழுப்பியுள்ள
' தடவியதோ இராமன் வாளி ' என்று சொல்லாமல் " தடவியதோ ஒருவன் வாளி " என்று ஏன் சொல்லவேண்டும் ?
என்ற கேள்விக்குரிய பதிலைத் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலைக் கொண்டு மட்டும் பொருள் கூற இயலாது. அப்பாடலுக்கு முன் பின் உள்ள பாடல்களைக் கொண்டு பதில் தர முயற்சிக்கின்றேன்.
நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர் - 4 சமூக விழுமியம் குறுந்தொகையிலிருந்து
முன்தொடர் சுருக்கம்
அரசியாக இருந்தாலும் குடிகளாக இருந்தாலும் பெண்கள் கணவன் என்றைக்கும் விரும்பும் தங்கள் கரிய, நீண்ட சுருண்ட கூந்தலை மென்மையுடையதாகவும் மணமுடையதாகவும் துவராத் தன்மையுடனும் வைத்திருப்பதையே விரும்புவதனைக் காணமுடிகிறது. மேலும் கண்ணகிக்குச் சிலை எடுக்கச் சென்ற சேரமன்னன் தோற்றோரை இழிவுபடுத்த அவர்தம் மகளிரின் கூந்தலைக் கொய்து கயிறாக்கும் இழிசெயலைச் செய்தானா? அல்லது கணவரை இழந்ததால் அந்நாட்டுப் பெண்கள் நீக்கிய கூந்தலைக் கயிறாக்கினானா? என்ற ஐயப்பாட்டுடன் தேடுதல் தொடர்ந்தது. இனி……………………..
தொடர் – 4
குறுந்தொகையில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது.
முன்தொடர் சுருக்கம்
அரசியாக இருந்தாலும் குடிகளாக இருந்தாலும் பெண்கள் கணவன் என்றைக்கும் விரும்பும் தங்கள் கரிய, நீண்ட சுருண்ட கூந்தலை மென்மையுடையதாகவும் மணமுடையதாகவும் துவராத் தன்மையுடனும் வைத்திருப்பதையே விரும்புவதனைக் காணமுடிகிறது. மேலும் கண்ணகிக்குச் சிலை எடுக்கச் சென்ற சேரமன்னன் தோற்றோரை இழிவுபடுத்த அவர்தம் மகளிரின் கூந்தலைக் கொய்து கயிறாக்கும் இழிசெயலைச் செய்தானா? அல்லது கணவரை இழந்ததால் அந்நாட்டுப் பெண்கள் நீக்கிய கூந்தலைக் கயிறாக்கினானா? என்ற ஐயப்பாட்டுடன் தேடுதல் தொடர்ந்தது. இனி……………………..
தொடர் – 4
குறுந்தொகையில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மண்டோதரி புலம்பல் :
====================
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்த வாறோ
கள்ளிருக்கும் மலர்கூந்தல் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி
யுத்தகாண்டம் - இராவணன் வதைப்படலம் - பாடல் 237
====================
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்த வாறோ
கள்ளிருக்கும் மலர்கூந்தல் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி
யுத்தகாண்டம் - இராவணன் வதைப்படலம் - பாடல் 237
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 12
|
|