புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
Page 5 of 12 •
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
First topic message reminder :
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முனைவர் ப.குணசுந்தரி wrote:
இனி தொடர்ந்து ஒவ்வொரு செவ்விலக்கிய நூல்களில் இருந்தும் இவ்வுறுப்பு தொடர்பான பதிவை இத்தொடர் முன்வைக்கும்.
மிகவும் அருமை..! கவனமுடன் ஊன்றி படிக்க வேண்டி இருந்தாலும், சுவாரசியமாய் இருக்கிறது. தொடருங்கள். மேலும் ஜெகதீசன் ஐயா மற்றும் singai அவர்களின் பங்களிப்பும் வெகு அருமை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
ஆண்கள் அன்றும்-போர் வெற்றியின் போதும் விழாக்களின் போதும் மாலை அணிவது,இன்றும் மேடைகளில் மாலை அணியும் வழக்கம் உள்ளதைக் காணலாம்.
ஆனால் இந்தக் குறள் ஆண்கள் மாலை அணிவதைக் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
கோட்டுப்பூச் சூடினும்.. என்பது, காதலன் காதலிக்கு பூமாலையை சூடுகிறான்.அப்போதும் சந்தேகம் கொண்டு இப்படி மாலையை சூட்டியதும் வேறொரு பெண்ணுக்கு காட்டுவதற்காகவே சூட்டினான் என பொய்க் கோபத்துடன் கூறுவதாக பொருள் கொள்வதே சரி எனப்படுகிறது.
அப்படி காதலன் மாலை அணிவிப்பதற்குக் காரணம் வள்ளுவனே சொல்கிறான்,
கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்
படாஅ முலைமேல் துகில்!
அத்துடன் ,வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும், தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே, என்ற கம்பரின் சொல்லையும் கவனிக்கலாம்.சீதையை பார்த்த இராமன் எங்கு நோக்கினான்?அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.அவன் எங்கே நோக்கினான்?
அதனால் பெண்களே துப்பட்டாவை சரியாகப் போடுங்கள். எங்களை ஆண்களின் கண்கள் பார்க்கும் பார்வை ??? எங்கே நிலைக்கிறது முதலில்?
ஆனால் இந்தக் குறள் ஆண்கள் மாலை அணிவதைக் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
கோட்டுப்பூச் சூடினும்.. என்பது, காதலன் காதலிக்கு பூமாலையை சூடுகிறான்.அப்போதும் சந்தேகம் கொண்டு இப்படி மாலையை சூட்டியதும் வேறொரு பெண்ணுக்கு காட்டுவதற்காகவே சூட்டினான் என பொய்க் கோபத்துடன் கூறுவதாக பொருள் கொள்வதே சரி எனப்படுகிறது.
அப்படி காதலன் மாலை அணிவிப்பதற்குக் காரணம் வள்ளுவனே சொல்கிறான்,
கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்
படாஅ முலைமேல் துகில்!
அத்துடன் ,வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும், தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே, என்ற கம்பரின் சொல்லையும் கவனிக்கலாம்.சீதையை பார்த்த இராமன் எங்கு நோக்கினான்?அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.அவன் எங்கே நோக்கினான்?
அதனால் பெண்களே துப்பட்டாவை சரியாகப் போடுங்கள். எங்களை ஆண்களின் கண்கள் பார்க்கும் பார்வை ??? எங்கே நிலைக்கிறது முதலில்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]singai wrote:ஆண்கள் அன்றும்-போர் வெற்றியின் போதும் விழாக்களின் போதும் மாலை அணிவது,இன்றும் மேடைகளில் மாலை அணியும் வழக்கம் உள்ளதைக் காணலாம்.
ஆனால் இந்தக் குறள் ஆண்கள் மாலை அணிவதைக் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
கோட்டுப்பூச் சூடினும்.. என்பது, காதலன் காதலிக்கு பூமாலையை சூடுகிறான்.அப்போதும் சந்தேகம் கொண்டு இப்படி மாலையை சூட்டியதும் வேறொரு பெண்ணுக்கு காட்டுவதற்காகவே சூட்டினான் என பொய்க் கோபத்துடன் கூறுவதாக பொருள் கொள்வதே சரி எனப்படுகிறது.
உரைவேந்தர் பரிமேலழகர் , மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் , டாக்டர்.முவ ,கலைஞர், சாலமன் பாப்பையா போன்ற தமிழறிஞர்கள்
" கோட்டுப்பூ சூடினும் "என்ற சொற்களுக்குத் தலைவன் தனக்குத் தானே கோட்டுப்பூ சூடிக் கொண்டதைத்தான் குறிப்பிடுகின்றனர்.
தலைவி , தலைவன்மீது பொய்க்கோபம் கொண்டுள்ளாள் .இந்தநிலையில் அவனைத் தன்தலையில் பூச்சூட அனுமதிப்பாளா என்ற கேள்வியும் எழுகிறதல்லவா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
singai wrote:........ வள்ளுவனே சொல்கிறான்,
கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்
படாஅ முலைமேல் துகில்!
அத்துடன் ,வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும், தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே, என்ற கம்பரின் சொல்லையும் கவனிக்கலாம்.சீதையை பார்த்த இராமன் எங்கு நோக்கினான்?அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.அவன் எங்கே நோக்கினான்?
அதனால் பெண்களே துப்பட்டாவை சரியாகப் போடுங்கள். எங்களை ஆண்களின் கண்கள் பார்க்கும் பார்வை ??? எங்கே நிலைக்கிறது முதலில்?
![சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" வருமுன் காப்போம் " என்றுசொல்வார்கள் . ஒரு வியாதி வந்தபிறகு ,அதற்கு வைத்தியம் செய்வதைவிட , அந்த வியாதியே வராமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா !
நரைமயிர் வந்தபிறகு , அதற்கு Godrej Dye அடிப்பதைவிட , அந்த நரைமயிரே வராமல் முன்னெச்சரிக்கையாக இருந்தால் செலவு மிச்சமாகுமே ! அதற்கான வழிமுறைகளை புலவர் பிசிராந்தையார் சொல்வதைக் கேளுங்கள் .
“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”
- புறம்: 191. பாடியவர் பிசிராந்தையார்
ஆண்டுகள் பல கடந்தும் நரை மூப்பு இல்லாமல் வாழ்தலை எப்படி சாத்தியமாக்கினீர்கள்? என்று என்னைக் கேட்பீர்களானால்.. கேளுங்கள்.. இவையனைத்தும் தான் என் இளமைக்கான காரணிகள்.
அன்பும் மாட்சிமையும் பொருந்திய மனைவி, நற்குணங்களும் அறிவும் நிரம்பிய குழந்தைகள், தன்னைப் போன்றே பொறுப்புணர்வு மிகுந்த சகோதரர்கள், மக்களை அலைக்கழிக்காது நன்மைகள் செய்யும் நல்லரசு , இவையனைத்திற்கும் மேலாய் நூல் பல கற்று, கற்றவை குறித்த கர்வங்கள் ஏதுமின்றி அடக்கமும் கொள்கைப் பிடிப்பும் மிகுந்த சான்றோர்கள் பலர் நான் வாழும் ஊரில் வாழ்கிறார்கள். எனவே நான் நரைமூப்பு இல்லாமல் நலமாக இருக்கிறேன் என்கிறார் பிசிராந்தையார் .
எதிர்பேசா மனைவி , குடும்பத்தின் நிலையறிந்து நடக்கும் பிள்ளைகள் , உறுகண் களையும் உடன்பிறப்புக்கள் , எள் என்று சொல்லுமுன்னே எண்ணெயாய் நிற்கும் பணியாளர்கள் , கொடுங்கோன்மையற்ற அரசு , ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் வாழ்கின்ற ஊர் - இவையெல்லாம் இருந்தால் ஒருவன் நூறு ஆண்டுகள் நரைதிரை இன்றி வாழலாம் என்பதே இப்பாடலின் கருத்து .
நரைமயிர் வந்தபிறகு , அதற்கு Godrej Dye அடிப்பதைவிட , அந்த நரைமயிரே வராமல் முன்னெச்சரிக்கையாக இருந்தால் செலவு மிச்சமாகுமே ! அதற்கான வழிமுறைகளை புலவர் பிசிராந்தையார் சொல்வதைக் கேளுங்கள் .
“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”
- புறம்: 191. பாடியவர் பிசிராந்தையார்
ஆண்டுகள் பல கடந்தும் நரை மூப்பு இல்லாமல் வாழ்தலை எப்படி சாத்தியமாக்கினீர்கள்? என்று என்னைக் கேட்பீர்களானால்.. கேளுங்கள்.. இவையனைத்தும் தான் என் இளமைக்கான காரணிகள்.
அன்பும் மாட்சிமையும் பொருந்திய மனைவி, நற்குணங்களும் அறிவும் நிரம்பிய குழந்தைகள், தன்னைப் போன்றே பொறுப்புணர்வு மிகுந்த சகோதரர்கள், மக்களை அலைக்கழிக்காது நன்மைகள் செய்யும் நல்லரசு , இவையனைத்திற்கும் மேலாய் நூல் பல கற்று, கற்றவை குறித்த கர்வங்கள் ஏதுமின்றி அடக்கமும் கொள்கைப் பிடிப்பும் மிகுந்த சான்றோர்கள் பலர் நான் வாழும் ஊரில் வாழ்கிறார்கள். எனவே நான் நரைமூப்பு இல்லாமல் நலமாக இருக்கிறேன் என்கிறார் பிசிராந்தையார் .
எதிர்பேசா மனைவி , குடும்பத்தின் நிலையறிந்து நடக்கும் பிள்ளைகள் , உறுகண் களையும் உடன்பிறப்புக்கள் , எள் என்று சொல்லுமுன்னே எண்ணெயாய் நிற்கும் பணியாளர்கள் , கொடுங்கோன்மையற்ற அரசு , ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் வாழ்கின்ற ஊர் - இவையெல்லாம் இருந்தால் ஒருவன் நூறு ஆண்டுகள் நரைதிரை இன்றி வாழலாம் என்பதே இப்பாடலின் கருத்து .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எனக்கும் இந்த நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கிறது. நானும் தலைவன் தனக்கு தானே பூச்சூடி கொள்வதாக தான் படித்ததாக நினைவு. சந்தேகம் விலக விளக்கம் ப்ளீஸ்!M.Jagadeesan wrote:உரைவேந்தர் பரிமேலழகர் , மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் , டாக்டர்.முவ ,கலைஞர், சாலமன் பாப்பையா போன்ற தமிழறிஞர்கள்singai wrote:ஆண்கள் அன்றும்-போர் வெற்றியின் போதும் விழாக்களின் போதும் மாலை அணிவது,இன்றும் மேடைகளில் மாலை அணியும் வழக்கம் உள்ளதைக் காணலாம்.
ஆனால் இந்தக் குறள் ஆண்கள் மாலை அணிவதைக் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
கோட்டுப்பூச் சூடினும்.. என்பது, காதலன் காதலிக்கு பூமாலையை சூடுகிறான்.அப்போதும் சந்தேகம் கொண்டு இப்படி மாலையை சூட்டியதும் வேறொரு பெண்ணுக்கு காட்டுவதற்காகவே சூட்டினான் என பொய்க் கோபத்துடன் கூறுவதாக பொருள் கொள்வதே சரி எனப்படுகிறது.
" கோட்டுப்பூ சூடினும் "என்ற சொற்களுக்குத் தலைவன் தனக்குத் தானே கோட்டுப்பூ சூடிக் கொண்டதைத்தான் குறிப்பிடுகின்றனர்.
தலைவி , தலைவன்மீது பொய்க்கோபம் கொண்டுள்ளாள் .இந்தநிலையில் அவனைத் தன்தலையில் பூச்சூட அனுமதிப்பாளா என்ற கேள்வியும் எழுகிறதல்லவா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல வேளை இப்போது அவர் இல்லை.M.Jagadeesan wrote:எதிர்பேசா மனைவி , குடும்பத்தின் நிலையறிந்து நடக்கும் பிள்ளைகள் , உறுகண் களையும் உடன்பிறப்புக்கள் , எள் என்று சொல்லுமுன்னே எண்ணெயாய் நிற்கும் பணியாளர்கள் , கொடுங்கோன்மையற்ற அரசு , ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் வாழ்கின்ற ஊர் - இவையெல்லாம் இருந்தால் ஒருவன் நூறு ஆண்டுகள் நரைதிரை இன்றி வாழலாம்..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
நானும் நீங்கள் சொல்வதை போலவே புரிந்து கொண்டேன். ஆனால் எனக்குப் புரியாதது திருவருட்பா உரையில் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் விளக்கம் தான். அவர்கள் விளக்கத்தின் அடிப்படையில் எனது மேற்சொன்ன கருத்தாக அமைந்துள்ளது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே கேட்டிருந்தேன். அல்லது அவர் கொடுத்த விளக்கம் எனக்குப் புரியவில்லையா? பொறுமையாக படிக்க வேண்டியது இலக்கியம்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தோழமைக்கு வணக்கம்
ஜெகதீசன் ஐயா அவர்கள்
கோட்டுப் பூச் சூடினும் காயும்-'ஒருத்தியைக்
காட்டிய சூடினீர்!' என்று.
என்ற குறளுக்கு எடுத்துக்காட்டிய விளக்கம் சரியானதே. ஏனென்றால் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசனார், ஞா. தேவநேயப் பாவாணர், கலைஞர் போன்றோரின் உரைகள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன. மேலும் புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் இடம்பெறும் பத்து குறளையும் எடுத்துக்கொண்டால் தலைவிக்குத் தலைவன்மீது கோபம் உள்ள காரணத்தினால் அவள் அவனின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குறை காண்பதாகவே வரும்.
1. பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்;
நண்ணேன்-பரத்த!-நின் மார்பு.
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக்
கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை
நான் தழுவ மாட்டேன்.
2. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்ப தறிந்து.
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.
4. 'யாரினும் காதலம்' என்றேனா, ஊடினாள்-
‘யாரினும்! யாரினும்!’ என்று
"யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக்
கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக
எடுத்துக்கொண்டு "யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்" எனக்கேட்டு
ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
5. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்" என்று நான் சொன்னவுடன்
"அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது
நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?" எனக் கேட்டுக்
கண்கலங்கினாள் காதலி.
6. 'உள்ளினேன்' என்றேன்; ‘மற்று என் மறந்தீர்’ என்று என்னைப்
புல்லாள், புலத்தக்கனள்.
"உன்னை நினைத்தேன்" என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்."
"அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க
முடியும்?" எனக்கேட்டு "ஏன் மறந்தீர்?" என்று அவள் ஊடல் கொண்டாள்.
7. வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள்,
‘யார் உள்ளித் தும்மினீர்?’ என்று.
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே
என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்" என்று கேட்டு,
முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.
8. தும்முச் செறுப்ப, அழுதாள், ‘நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ?’ என்று.
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக்
கொள்வதைப் பார்த்த அவள் "ஓ" உமக்கு நெருங்கியவர் உம்மை
நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?" எனக் கேட்டு அழுதாள்.
9. தன்னை உணர்த்தினும் காயும், ‘பிறர்க்கும் நீர்
இந் நீரர் ஆகுதிர்!’ என்று.
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே
அவள் "ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?"
என்று சினந்தெழுவாள்.
10. நினைத்திருந்து நோக்கினும், காயும், ‘அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர்?’ என்று.
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை
கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு
உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.
இப்படி ஒவ்வொரு செய்கையிலும் குறை கண்டறிகின்ற காரணத்தினால் அவன் சூட்டிக்கொண்ட மாலைக்கே புதிதாகப் பொருள்கொண்டு கோபம் கொண்டாள் என்று கருதுவதே பொருத்தமாக இருக்கின்றது. கோபம் கொண்டுள்ள போது அவன் அருகே வந்தாலே நீயார் எனக் கேட்கும் தலைவி பூச் சூட்ட அனுமதித்திருப்பாள் என்று எண்ணுவது பொருந்தவில்லை எனக்கும்.
ஜெகதீசன் ஐயா அவர்கள்
கோட்டுப் பூச் சூடினும் காயும்-'ஒருத்தியைக்
காட்டிய சூடினீர்!' என்று.
என்ற குறளுக்கு எடுத்துக்காட்டிய விளக்கம் சரியானதே. ஏனென்றால் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசனார், ஞா. தேவநேயப் பாவாணர், கலைஞர் போன்றோரின் உரைகள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன. மேலும் புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் இடம்பெறும் பத்து குறளையும் எடுத்துக்கொண்டால் தலைவிக்குத் தலைவன்மீது கோபம் உள்ள காரணத்தினால் அவள் அவனின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குறை காண்பதாகவே வரும்.
1. பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்;
நண்ணேன்-பரத்த!-நின் மார்பு.
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக்
கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை
நான் தழுவ மாட்டேன்.
2. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்ப தறிந்து.
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.
4. 'யாரினும் காதலம்' என்றேனா, ஊடினாள்-
‘யாரினும்! யாரினும்!’ என்று
"யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக்
கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக
எடுத்துக்கொண்டு "யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்" எனக்கேட்டு
ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
5. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்" என்று நான் சொன்னவுடன்
"அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது
நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?" எனக் கேட்டுக்
கண்கலங்கினாள் காதலி.
6. 'உள்ளினேன்' என்றேன்; ‘மற்று என் மறந்தீர்’ என்று என்னைப்
புல்லாள், புலத்தக்கனள்.
"உன்னை நினைத்தேன்" என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்."
"அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க
முடியும்?" எனக்கேட்டு "ஏன் மறந்தீர்?" என்று அவள் ஊடல் கொண்டாள்.
7. வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள்,
‘யார் உள்ளித் தும்மினீர்?’ என்று.
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே
என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்" என்று கேட்டு,
முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.
8. தும்முச் செறுப்ப, அழுதாள், ‘நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ?’ என்று.
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக்
கொள்வதைப் பார்த்த அவள் "ஓ" உமக்கு நெருங்கியவர் உம்மை
நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?" எனக் கேட்டு அழுதாள்.
9. தன்னை உணர்த்தினும் காயும், ‘பிறர்க்கும் நீர்
இந் நீரர் ஆகுதிர்!’ என்று.
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே
அவள் "ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?"
என்று சினந்தெழுவாள்.
10. நினைத்திருந்து நோக்கினும், காயும், ‘அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர்?’ என்று.
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை
கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு
உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.
இப்படி ஒவ்வொரு செய்கையிலும் குறை கண்டறிகின்ற காரணத்தினால் அவன் சூட்டிக்கொண்ட மாலைக்கே புதிதாகப் பொருள்கொண்டு கோபம் கொண்டாள் என்று கருதுவதே பொருத்தமாக இருக்கின்றது. கோபம் கொண்டுள்ள போது அவன் அருகே வந்தாலே நீயார் எனக் கேட்கும் தலைவி பூச் சூட்ட அனுமதித்திருப்பாள் என்று எண்ணுவது பொருந்தவில்லை எனக்கும்.
- Sponsored content
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 12
|
|