புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
7 Posts - 64%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 22 of 34 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 02, 2016 8:38 am

'அருந்துதல் , பருகுதல் , குடித்தல் ஆகிய சொற்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை .

அருந்துதல் - உண்டல் , கவ்வி விழுங்குதல்

பருகுதல் - குடித்தல் , உண்ணுதல்

குடித்தல் -  பருகுதல்

இந்தத் திரியில் இதுபற்றி ஏற்கனவே விவாதித்துள்ளோம் .

பால் சாப்பிட்டான் என்று சொல்லாமல் பால் குடித்தான் என்றே சொல்லவேண்டும் .

அசோக  வனத்தில் இருந்த சீதை இராமனை எண்ணி வருந்துகிறாள் . " மெல்லிய வெற்றிலையை இராமன் அருந்துவானே ! இனிமேல் அதை யார் கொடுக்க அருந்துவானோ ? " என்று எண்ணி வருந்துகிறாளாம் . இதைக் கம்பன் சொல்லுவதைக் கவனியுங்கள் .

அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் ?' என்று
                                அழுங்கும்;
'விருந்து கண்டபோது என்  உறுமோ ?' என்று
                                விம்மும்;
'மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு ?'
                             என்று மயங்கும் -
இருந்த மா நிலம்செல் அரித்து எழவும் ஆண்டு
                             எழாதாள்.

" அடகு " என்றால் வெற்றிலை .

அனுபவித்துக் குடித்தலை " பருகுதல் " என்று சொல்லலாம் .

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது .

என்ற குறளை நோக்குக .

" ஆற்று நீரை அள்ளி அள்ளிப் பருகினான் ." என்று சொல்கிறோம் .

" அவள் அழகைக் கண்களால் பருகினான் . " என்றும் சொல்கிறோம்


வள்ளுவர்  " உண்ணற்க கள்ளை " என்றே குறிப்பிடுகிறார் . ஆனால் இக்காலத்தில் " குடிகாரன் " என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம் .

" அவன் குடித்திருக்கிறான் " என்று சொல்கிறோம் .


ஆகவே இடம் நோக்கி இச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதே நமது கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 02, 2016 8:49 am

நன்றி அய்யா... பூஞ்சியம் என்ற சொல் வடமொழி சொல் என்று கூறு கின்றனர.

சுழியம் என்பது தமிழ் சொல்லா??
ஹிந்தியில் சூன்ய என்று கூறுகிறார் கள்??

ஆனால் மலேசிய வாழ் தமிழர்கள் பூஞ்சியத்தை "கோசம்" என்று அழைக்கிறார்கள் "கோசம்" சரியான தமிழ் சொல்லா???



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 02, 2016 10:25 am

பூஜ்ஜியம் என்பது வடமொழிச் சொல்லாகும்.

சிறப்பு " ழ " வந்திருப்பதால் " சுழியம் " தமிழ்ச் சொல்லே .

" சூன்யம் " என்ற சொல்லுக்கு " வெற்றிடம் " என்ற பொருளும் , உண்டு .

கோசம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். கோசம் என்றால் உறை/கூடு, புதையல் என்று பொருள்.

0,1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என்றும் , அதை அரேபியர்கள் கற்று , அவர்கள்மூலமாக உலகம் முழுமைக்கும் பரவியது என்றும் , அதனால் இவ்வெண்கள் " அராபிய எண்கள் " என்று அழைக்கப்படுகின்றன என்பார் கணித அறிஞர்கள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2016 12:23 pm

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 3838410834 நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 02, 2016 12:51 pm

நன்றி கிருஷ்ணம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 02, 2016 12:58 pm

வைப்பகம்/ஈடகம் விளக்கம் வேண்டும் அய்யா

வைப்பகம் என்றால் வங்கி என்றுதானே பொருள் ..???



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 02, 2016 2:40 pm

வைப்பகம் என்றால் வங்கிதான்.

அய்யன் வள்ளுவர் " வைப்புழி " என்பார் . புழி என்றால் இடம் .

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி .

பொருள் :
========

ஏழைகளின் பசியை நீக்குக . அவ்வாறு நீக்குதலே ஒருவன் தன் பொருளைப் பாதுகாப்பாக சேர்த்து வைக்கத்தக்க இடமாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 04, 2016 8:52 am

மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் - எது சரி ?

மகரத்தை இறுதியில் கொண்ட சொல்லின் முன்பாக வேற்றுமை உருபு வந்தால் " அத்துச் " சாரியை பெற்றுவரும் .

மரத்தை வெட்டினான் என்று வரும் .

"வாழ்க வளமுடன் "என்று எழுதுவதைவிட "வாழ்க வளத்துடன் " என்று எழுதுவது நல்லது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 04, 2016 9:32 am

சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 04, 2016 9:52 am

கார்த்திக் செயராம் wrote:சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1213994

ஜன்னல் என்பது போர்த்துக்கீசிய சொல்லாகும் .

சாளரம் ,பலகணி ,காலதர் ஆகிய சொற்கள் ஜன்னலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 22 of 34 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக