புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
75 Posts - 60%
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
70 Posts - 60%
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் செய்வாள் பத்தினி


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:02 pm

First topic message reminder :

கொலையும் செய்வாள் பத்தினி


கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்


கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?

சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .

படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .

இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 10, 2016 7:02 pm

உண்மைதான்.தொலைக்காட்சி நாடகங்கள் இன்றைய மனிதர்களை வழி நடத்தி செல்லும் போது, மக்கள் அந்த வழியில் செல்வதும், மேலும் மோசமாக மாறுவதற்குமே வழி உண்டு. முக்கியமாக தொலைக்காட்சி இணையம்,சினிமா போன்றவை சமூகப் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் தவிர மாற மாற்ற வழி இருப்பதாக தெரியவில்லை.

உண்மையில் சொல்லப்போனால் இந்தத் தளத்தில் -பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்- என்ற தலைப்பிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களைப் பார்த்த பின்னரே உள்ளே நுழைந்தேன்.

ஆனால் கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.

பத்தினி எனச் சொல்லிவிட்டு எதிர்மறையாக கொலையை செய்வாள் என்பது பொருந்தாது.தன்னை பலாத்காரம் செய்ய முனைந்தால் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்கிறது இன்றைய சட்டம். தன் மானத்தைக் காப்பாற்ற கொலை செய்யவும் துணிவாள் எனவும் கொள்ளலாம்.

ஆனால் உண்மையான அர்த்தம் தன் கணவனுக்கும் குடும்பத்திற்கும் வரும் எந்தத் துயரையும் அழித்து செயல்படுவாள் எனவும்,வறுமை,துயரம், கல்லாமை,இல்லாமை அனைத்தையும் கொன்று குடும்பத்தை உயர்த்தி நல்ல மனைவியாக இருப்பாள் எனவும் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும். பத்தினி என்ற சொல்லாடலை பயன்படுத்தாமல் வேறு சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் உயிர்கொலை செய்வாள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்

இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 8:10 pm

நன்றி முர்த்தி . நல்ல அலசல் .
பதி  --பத்தினி ----கணவன் --மனைவி என கொள்க .
பத்தினி --பதிவிரதை ,கற்புக்கரசி என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் .

எழுதிய பதிவு , சமீபத்தில் ,தினசரியில் வந்த செய்தியை பின்னணியாகக் கொண்டது .
கல்யாணம் ஆகி ,இரு குழந்தைகளின் தாய் , தன்னுடைய +12 வகுப்பு காதலனை , 12 வருடங்களுக்கு பிறகு பார்த்து ,தொடர்பு உண்டாக்கிக் கொண்டு , வக்கீல் கணவனை , கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்தவள்.

இன்னொரு செய்தியில் , TV நடிகை , ஏற்கனவே மணம் முடித்து , அதை மறைத்து இன்னொரு திருமணம் முடித்து , பணம் பறிக்க முயல , முதல் கணவரும் இரெண்டாம் கணவரும் கோர்டில் நடிகை மீது கேஸ் போட்டு உள்ளனர் .இரு கணவன்மார்களும் , தங்களுடைய சொத்தையும் பணத்தையும் பறிப்பதிலேயே அவள் குறியாக இருந்தால் என்று குறிப்பிட்டுள்ளனர் .

இன்றைய TV களில் வரும் சீரியல்களில் பெண்களை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறார்கள் . பெண்கள் அமைப்புகள் கண் மூடி இருப்பதேன் எனத் தெரியவில்லை .

உங்கள் விவரிப்புகள் கற்புக்கரசி களுக்கும் பதிவ்ரதைகளுக்கும் பொருந்தும் .

கற்புக்கரசிகள் ,பதிவ்ரதைகள் யாவரும் பத்தினிகளே.
ஆனால் பத்தினிகள் யாவரும் கற்புக்கரசிகள் /பதிவிரதைகள் இல்லை

விளக்கம் புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்  .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 8:35 pm

நல்ல விளக்கம் அய்யா.

எதிர் மறை பொருள் தருவதாகவும் எடுத்துக் கொண்டால் தலைப்பு சரியே.




avatar
Guest
Guest

PostGuest Fri Jun 10, 2016 11:07 pm

ஐயா! உங்கள் எழுத்தை அப்படியே வழிமொழிந்து ஏற்றுக் கொள்கிறேன்.எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.
நான் சொன்னது கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி பற்றியது. அந்தப் பழமொழி எந்த உயிர்கொலையும் செய்வாள் -மனைவி-பத்தினி -எந்த சொல்லாக இருப்பினும்- என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பது மட்டுமே.நன்றி..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 11:38 pm

@மூர்த்தி கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.

என்னைப் பொருத்தவரை, தன்னுடைய காதல் கணவனுக்காக கொலையும் செய்யத் துணிவாள் பத்தினி/மனைவி என்று தான் பொருள் கொள்வேன் மூர்த்தி புன்னகை.............கணவன் மேல் கொண்ட அன்பால் , கொலை பழியையும் ஏற்பாள்  என்றும் கொள்ளலாம் புன்னகை

கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்

இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.


நான் மேலே கூறிய கருத்தைப் பார்த்தால், அதில்  பத்தினிக்காக சொல்லப்பட்டதும் நல்லது தானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jun 11, 2016 7:52 am

ஒழுக்கம் என்றால் என்ன. எங்கே கிடைக்கும் என்று கேட்கும் காலமுங்க. தன் இஷ்டப்படி ஆடை உடுத்த சுதந்திரம் என்றும்., எதிரில் வருபவர்தான் கண்ணை மூடிக்கனு போகனும் சொல்ரகாலமாய் போச்சுங்க>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 8:50 am

இதற்குப் பொருத்தமான பதில் சிலப்பதிகாரத்தில் உள்ளது.

" கொலையும் செய்வாள் பத்தினி " என்ற வாக்கியத்தில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மை என்றாலும் அது பத்தினிப் பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது .

பாண்டியன் நெடுஞ்செழியனும் , அவனது மனைவி கோப்பெருந்தேவியும் உயிர் துறந்த பின்னும் , கண்ணகியின் சீற்றம் தணியவில்லை . கோவலன் கொலையுண்ட மதுரை நகரையே அவள் வெறுத்தாள்.
" கோநகர் சீறினேன் " என்ற சொற்கள் அவள் மதுரை மண்ணையே வெறுத்தாள் என்பதைக் காட்டுகின்றன.




பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ -

நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-


தீக் கடவுள் கண்ணகி முன்பு தோன்றி " யாரையெல்லாம் எரிப்பது எனக் கேட்க

‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’

என்று கண்ணகி பதில் உரைக்கின்றாள் .

இப்போது சொல்லுங்கள் !

கண்ணகி செய்தது கொலைதானே ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 9:15 am

கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2016 9:53 am

-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 11:07 am

T.N.Balasubramanian wrote:கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210669

கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக