புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதியின் அம்சமே ஸ்ரீ பொன்னியம்மன்-Purasavakkam Chennai


   
   
Balamurugan Jayakumar
Balamurugan Jayakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/06/2016

PostBalamurugan Jayakumar Mon Jun 06, 2016 11:20 am

திருக்கயிலை செல்ல யாருக்கு அம்மனே தேரோட்டி வருவாள்? ⚛

ஸ்ரீ பொன்னியம்மனுக்கு
☄ஒரு சாதாரணமாக அபிஷேகங்கள் செய்து,
☄திலகம் இட்டு,
☄அலங்காரங்கள் செய்து,
☄ பொங்கல் படைத்து
☄தனக்குத் தெரிந்த பொன்னியம்மன் பாடல்களை பாடுவோர்களுக்கு

திருக்கயிலாயம் செல்ல
☄அவளே தேரோட்டி வருகின்றாள் பாதாள பொன்னியம்மன்.

பாதாள பொன்னியம்மனின் பெரும் சக்தியும், கருணையும்
☄வாய்விட்டுக் கூறுதல் யாராலும் இயலாத ஒன்றே.

இது ஸ்ரீ அகஸ்தியர் வாக்கு

ஶ்ரீ சரஸ்வதியின் அம்சமே ஸ்ரீ பொன்னியம்மன்

ஞானப் பைங்கிளி என்றால் அது சரஸ்வதியைத்தான் குறிக்கும்.

பொன்னியம்மனை “அருள் ஞானப் பைங்கிளியே” என்று பெரியவர்கள் கூறுவதால்,
☄பொன்னியம்மனே சரஸ்வதியின் பூரண அம்சத்தைப் பூண்டவள் என்பது விளங்கும்.

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு இவளை வணங்குவது விசேஷம்.

பாடல்:-

நெஞ்சிருந்து நினைவளிப்பாய் நிலையளிப்பாய்

வஞ்சமிலா மனத்தோரின் மலராய் ஆனாய்

தஞ்சமென வந்தோரின் சஞ்சலத்தைப் போக்கிடுவாய்

அஞ்சுகமே! ஆரணங்கே! அருள் ஞானப் பைங்கிளியே!

குருவருள் கூடிடில் திருவருள் கூடும்

ஒரு வருடத்தின் சாரதா நவராத்திரி உற்சவத்தின்போது
☄“நவராத்திரியில் ஸ்ரீ பொன்னியம்மன் மஹிமை” என்ற தலைப்பில்
☄இந்த ஆலயத்தில் வாத்தியார் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.

நவராத்திரி உற்சவ தினங்களில்
☄எல்லா அம்மன் ஆலயங்களிலும்
☄அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அலங்கரிப்பது உண்டு.

வாத்தியார் அருளியபடி, இதில்
☄முதல் நாளில் அம்பிகையை ஸ்ரீ பொன்னியம்மன் என அலங்கரித்து வழிபட வேண்டும்.

ஒவ்வொரு அமாவாசைக்கு அடுத்த பிரதமைத் திதி முதல்,
☄அந்தந்த மாத நவராத்திரி பிறக்கும்.
☄இவ்வாறு 12 மாதங்களுக்குமான நவராத்திரிகள் உண்டு

இதன்படி பார்த்தோமானால், நாளை பிரதமை திதி.
☄இந்நாளில் பாதாள பொன்னியம்மன் ஆலயத்தில் தரிசிப்பது எவ்வளவு பொருத்தமாக வருகின்றது – குருவருளால்

அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பதுபோல.

வாத்தியாரின் அவதார திருநட்சத்திர விழாவினை

அவர் அருளிய திருக்கோயிலில்

உலகின் அனைத்து அம்பிகையையும் பொன்னியம்மனாய் உருவகித்து வழிபடும் மாதாந்திர நவராத்திரி பிரதமை திதியில்

ஸ்ரீ பாதாள பொன்னியம்மன் ஆலயத்தில் கொண்டாடி வழிபடுவதும் குருவருளாலே.

காசிக்குச் சென்ற பலன் பெற

காசிக்குச் செல்வதற்கு உரித்தான பணம், பொன் போன்ற வசதிகள் அனைத்தும் இருந்தாலும்
☄காசிக்குச் செல்ல முடியாதவர்கள் ஏராளம் உண்டு.

ஆனால் இத்தகையோரும், பொன்னியம்மனைப் பார்த்தால்
☄ காசிக்குச் சென்று வந்த பலனை அடைந்து விடலாம்

♻Reference:- ஸ்ரீ பொன்னியம்மன் மஹிமை ☄ஸ்ரீ அகஸ்திய விஜயம் வெளியீட்டில் சிறிய புத்தகம்
☄பக்கம் 45

தொப்புள் முதல் பாதம் வரை ஏற்படும் நோய் நிவர்த்திக்கு

உச்சி முதல் தொப்புள் வரை உள்ள நோய்களை ஒரு குறிப்பிட்ட தேவதை நிவர்த்தி செய்கின்றது.

தொப்புள் முதல் பாதம் வரை ( கருப்பை, சூலை, மேகம் போன்ற நோய் ) ஏற்படுகின்ற அனைத்து நோய்களையும் அன்னை பொன்னியம்மன் அறவே நீக்குகின்றாள்.

பாடல்

அரனாக பொன்னியவள் அடிபாதாள நோய்கள் எல்லாம்

தெருள் நாத சிவசக்தி தீர்த்திடுவாள் சிங்காரி, அருட்ஜோதி

கலைவாணி, கர்ப்ப நோய்கள் எல்லால் அருள் ஞானக்

கலையரசி கணப்பொழுதில் போக்கிடுவாளே!

இத்தகைய நோய் நொடிகளைத் தீர்க்கின்ற உத்தமச் சக்தி பாதாள பொன்னிய்ம்மன் ஒருவளே.

கர்ப்பம் தாங்கி இருக்கின்ற தாய்மார்களும் சரி;

கர்ப்பம் தாங்கப் போகின்ற தாய்மார்களும் சரி;

யாராக இருந்தாலும் அன்னை பொன்னியம்மனை வணங்கினால் நிச்சயம் காப்பாள்.

சூது, வாது அனைத்தும் கடந்து இருக்கின்றவர்களுக்கு
☄அவள் உத்தம மலராய் இருக்கின்றாள்

“பொங்கல் பொங்குதல்”

♻வாத்தியாரின் அருளுரைகள் ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜூலை 2011லிருந்து

பலரும் ஒன்று சேர்ந்து
☄ஆலயங்களில்
☄ஆன்மார்த்தமாய்ப் படைப்பதே
☄சத்சங்கப் பூர்வப் படையல்.

இதில் விளையும் பல பானைப் பொங்கலின் நறுமணமும்,
☄ அருள் சுரப்பும்
☄மிகவும் அரிய பலன்களை
☄ துரிதமாய் அளப்பரிய அளவில்
☄சமுதாயத்திற்கு வார்க்க வல்லது.

அடுப்பில் புனிதமாய் மங்களகரமாய்ப் பொங்கும் பாலும், பொங்கல் சோறும் -
☄அரிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் போன்றே -
☄வானம், ஆகாச மார்கமாக
☄உலக ஜீவன்களை, அகில உலக ஜீவ சமுதாயத்தை அடைகின்றது.

பாலும் பொங்கலும் அடுப்பில் நன்கு பொங்குகையில் ஏற்படும் நறுமணமானது
☄பலத்த ஆன்ம சக்திகள் நிறைந்ததாய் விண்ணையும் அடையும்

✅கண்களுக்கு நேத்திர சக்திக் குளிர்ச்சியையும்

✅மனதுக்கு சாந்தத்தையும்

✅உடலுக்கு நல் ஆரோக்கியத்தையும்

✅உள்ளத்திற்குத் தூய்மையையும்

✅சமுதாயத்திற்கு ஒற்றுமையையும் தருவதாகும்.

மங்களகரமான பொங்கல் பானை, மற்றும் பொங்கல் பொங்கும் புனிதமான காட்சியும் இதன் தரிசனமும்

“ மங்கள சக்தி ” எனும் புனிதத்தைப் புனிதத்தாலேயே தரிசிக்கின்றன.

பொங்கல் வைப்பதற்கான முக்கிய குறிப்புகள்

1⃣பொங்கல் வைக்கும் இடத்தை பசுஞ்சாணத்தால் நன்கு மெழுகி

2⃣ பச்சரிசி மாவினால் கோலம் (முடிந்தால் சூரியக் கோலம்) இட்டு

3⃣அதன் மேல் அடுப்பு அல்லது மூன்று கற்கள் வைத்து (முடிந்தால் புதிய அடுப்பு)

4⃣ஹோமத்திற்கு உரித்தான சமித்துக் குச்சிகளை பயன்படுத்தி (சிராய் போன்ற விறகுகளை தவிர்த்து)

5⃣கற்பூரத்தினால் சமித்துக்களை ஹோமம் போல ஏற்றி

6⃣புதுப்பானை, புது மூடியில் திருநீறு, மஞ்சள், குங்குமம் இட்டு

7⃣சூரிய ஹோரையில், சூரிய ஒளி படும் வகையில்

பொங்குகின்ற இடத்தில் கங்கையை தரிசிப்பது

கங்கையின் பூர்ணத்துவத்தை முழுமையாகப் பெற்றவளே ஸ்ரீ பாதள பொன்னியம்மன்.

இமயமலை சென்று கங்கை பொங்குவதை தரிசிக்க முடியாதவர்கள் ஸ்ரீ பொன்னியம்மனை தரிசிப்பதால்

அதே அனுக்கிரகத்தை நமக்கு ஸ்ரீ பொன்னியம்மன் அருள்வாள்

ஸ்ரீ பொன்னியம்மனை தரிசித்தாலே அனைத்தும் கிட்டி விடும்.

பெரியவர்கள் அருளியுள்ள பாடல்

மங்களத்தின் நங்கையே மதியணிந்த மங்கையே

பொங்குகின்ற கங்கையே பொன்னியான மங்கையே

எங்கும் உள்ள சங்கை தீர எண்ணுகின்ற நங்கையே

புரசைவாக்கம் ஸ்ரீ கங்காதீஸ்வரருக்கும் பொன்னியம்மனுக்கும் உள்ள ஆன்மீகத் தொடர்பு

பெரியவர்கள் அருளியுள்ள பாடல்

காரணத்துடன் நின்ற ஓர் ஆதியை

பூரணுத்துடன் (கங்கை) நின்ற தாய் (ஒர்) பொன்னியை

நாரணனுடன் பிறந்த தங்கையைக் கண்டு

நதி முடி சூடினனைக் காணுதல் முறையே

ஸ்ரீ பாதாள பொன்னியம்மனை தரிசனம் செய்த பிறகுதான்

ஸ்ரீ கங்காதீஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்,

அப்பொழுதுதான் ஸ்ரீ கங்காதீஸ்வரரின் அனுக்கிரகத்தை நாம் பரிபூரணமாகப் பெற முடியும்

பாதாள பொன்னியம்மன் பெயர் வரக் காரணம்

” பா ” “ தாள்” பொன்னி
☄( பாதாள் பொன்னி ) என்பதே இவள் உண்மைப் பெயர்.

பாக்கள் (பாடல்கள்) அனைத்தும்
☄தாழ்ந்து, பணிந்து, என்றும் இப்பூவுலகில் ஒளி வீசி வாழ
☄இவளிடம் பொன் முத்திரை பெறுவதால்
☄“ பாதாள் பொன்னி” என்பதே இவள் இயற்பெயராய் அமைந்தது.

“தான்” என்ற அகந்தையைப் போக்குபவள் பொன்னியம்மனே

நமக்குப் பூரணமாய் ஞானம் கிடைக்க வேண்டும் என்றால் தான் என்ற அகந்தை முழுமையாக அகல வேண்டும்.

நம் மனதில் உள்ள ”தான்” என்ற அகந்தையைப் போக்குபவள் பொன்னியம்மனே.

எனவே நாம் “தஞ்சம்” என்று அவள் திருவடியைச் சரணடைய வேண்டும்.

பெரியவர்கள் அருளியுள்ள பாடல்

ஓம்காரப் பொன்னி ஒளிக் கீற்றால் வாழ்வளித்து

ஓம்காரப் பெருநிலையால் ஒளி வீசி, உலகம் உய்ய

ஓம்காரத் தத்துவத்தில் ஒளி வீசும் பாதாள பொன்னி

ஆம்காரம் களைந்திடுவாள் அன்னையே! அபயம் அம்மா!

அகங்காரம் என்பது ஆங்காரம் (ஆம்காரம்) என மருவி வந்துள்ளது.



c .r. jayakumar
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 2:42 pm

அய்யா ,இது உங்கள் சொந்தப் பதிவா ?
அல்லது வேறு ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா ?
வேறு ஊடகம் என்றால் ,அதற்கு பெயரை குறிப்பிட்டு நன்றி கூறவும்.
ஈகரை விதிமுறைகளை முதலில் படிக்கவும் . அதை அனுசரிக்கவும் .

இந்த பதிவு சம்பந்தமில்லாத மின்னூல் தரவிறக்கப் பகுதியில் வந்துள்ளதே . கவனமாக செயல்படவும் .
உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் திருத்தும் பணியை ,நிர்வாகத்திற்கு தரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் .

ரமணியன்

உங்களுடைய இந்த பதிவு ஆன்மீகப் பகுதிக்கு மாற்றப்படுகிறது .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 06, 2016 6:01 pm

சரஸ்வதியின் அம்சமே ஸ்ரீ பொன்னியம்மன்-Purasavakkam Chennai 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:02 am

T.N.Balasubramanian wrote:அய்யா ,இது உங்கள் சொந்தப் பதிவா ?
அல்லது வேறு ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா ?
வேறு ஊடகம் என்றால் ,அதற்கு பெயரை குறிப்பிட்டு நன்றி கூறவும்.
ஈகரை விதிமுறைகளை முதலில் படிக்கவும் . அதை அனுசரிக்கவும் .

இந்த பதிவு சம்பந்தமில்லாத மின்னூல் தரவிறக்கப் பகுதியில் வந்துள்ளதே . கவனமாக செயல்படவும் .
உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் திருத்தும் பணியை ,நிர்வாகத்திற்கு தரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் .

ரமணியன்

உங்களுடைய இந்த பதிவு ஆன்மீகப் பகுதிக்கு மாற்றப்படுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1209938

ரொம்ப ஆர்வமாய் தொடர்ந்து ஒரே பகுதி இல் பதிவுகள் போடுகிறார் என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2016 6:03 am

ஆர்வக் கோளாறு என்றிடுவோம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 10:31 am

T.N.Balasubramanian wrote:ஆர்வக் கோளாறு என்றிடுவோம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210048

ம்ம்.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக