புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
91 Posts - 63%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
1 Post - 1%
viyasan
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
19 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....


   
   

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 19 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 19 SxCdjytQQzO4vVLM3L0G+001




சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 02, 2016 10:45 pm

நூற்றியெட்டு சுற்று முடியவும், அர்த்த ஜாம பூஜை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. மலைகோயில் என்பதால் இந்த பூஜை ஆறு மணிக்கே செய்துவிடுகிறார்கள்.

இறைவனை உளமார தரிசித்துவிட்டு பிரசாதத்துடன் வந்து ஓய்வாக அமர்ந்தோம் மடத்தினுள்.சற்று நேரத்திற்கு பின் காற்றோட்டமாக வெளித்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டோம்.

மடத்தின் தலைவர் மாலை மூன்று மணியளவிலேயே எங்களிடமும் விடைபெற்று சென்று விட்டிருந்தார். திண்ணையில் அமர்ந்த படி மடத்தின் உள்ளவர்களோடு பேசிக்கொண்டும், வெளியில் வேடிக்கை பார்த்தபடியும் பொழுதை கழித்துக்கொண்டிருந்தோம்.

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விஷயங்கள் அவர்களிடம் பேசியதில் இருந்து பெறப்பட்டவை தான். இரவு உணவிற்கு என்ன சிற்றுண்டி தயாரிக்கட்டும் என்று கேட்டார்கள். எதுவானாலும் பரவாயில்லை. உங்கள் வசதி படி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார் இவர்.

ஆனால், அவரோ விடவில்லை. உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி தலைவரின் உத்தரவு. ஆகவே உங்கள் விருப்பம் தான் என்றார்கள். தலைவரின் பண்பு மிகவும் போற்றத்தக்கது. அப்போதே அந்த பண்பிற்காக மனம் கசிந்தது.

இவரும் நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதுவே எங்களுக்கும் போதுமானது.... என்று சொல்லிவிட்டார். அதே போல காலை டிபனுக்கும் கேட்டார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தால் காலையில் பொங்கல், கிச்சடி, உப்புமா என்று தயாரிப்பார்கள். கூட்டம் அதிகமில்லை எனில் மூன்று வேலையும் சாதம் தான். இரவிலும் இப்படித்தான் சிற்றுண்டி தயாரிப்பார்கள். சென்ற முறை வந்த போது அப்படித்தான் சாப்பிட்டோம்.
இப்போது மற்ற மடங்களில் சிலர் தங்கி இருந்தாலும், இந்த மடத்தில் நாங்கள் மட்டுமே இருந்ததால் எங்கள் விருப்பம் அறிந்து உணவிட விழைந்தார்கள்.

அதனால், மறுநாள் காலையும் சாதமே போதுமானது என்று இவர் சொல்லிவிட்டார்.

அதன் பிறகு, எட்டு மணிக்கு சாப்பிட அழைத்தார்கள். சென்றமர்ந்து உணவருந்தினோம். தக்காளி தொக்குடன் சாம்பார், ரசம் மற்றும் அப்பளமுடன். மோரும் இருந்தது.

மறுநாள் முதல் கால பூஜையாக அதிகாலை மூன்று மணிக்கு சந்தன மகாலிங்கத்திற்கு எங்களது அபிஷேகம் இருந்ததின் பொருட்டு விரைவாக எழுந்திருக்க வேண்டி இருந்ததினால் நாங்களும் சாப்பிட்டுவிட்டு மடத்திலேயே படுத்துக்கொண்டோம்.

மணி எட்டரை தான் ஆகியிருந்தது என்றாலும் அதீத கால் வலியினால் தூக்கம் வரவில்லை. மலையேறி வந்ததும் அல்லாமல் நூற்றியெட்டு சுற்று வேறு சுற்றியதால் (நான் சுற்றவில்லை) விமந்தனிக்கு தான் நல்ல கால்வலி. எனக்கும் தான்.

Combiflame நானே கொண்டு சென்றிருந்ததால் ஆளுக்கு ஒன்றினை போட்டுக்கொண்டோம். அதன் பிறகு தான் ஒரு ஒன்றரை மணி நேரமாவது கொஞ்சம் தூங்கினாள்.

மடத்திலும் வலிநிவாரணி மாத்திரைகள் வைத்திருக்கிறார்கள். தேவைபடுவோர் கேட்டும் வாங்கிக்கொள்ளலாம்.

அதற்கு முன், மணி ஒன்பதரை இருக்கும் அப்போது பத்து, பதினோரு பேர்கள் மடத்திற்கு வந்தார்கள். வந்தவர்கள் மாலை ஐந்தரை மணிக்கு ஏற ஆரம்பித்தவர்களாம்.

மலைக்கு பரிச்சமான ஒருவருடன் ஏறியிருகிறார்கள். ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன். அதில் முதலில் வந்தவர்கள் பெண்களும் மற்றும் அந்த குழந்தையும் தான்.

வந்தவுடனே மடத்தவர்கள் அவர்களை சாப்பிட அமரவைத்து பரிமாறினார்கள். கால்வளியினால் தூங்க முடியாமலும், பெசுகுரல் சத்தத்தினாலும் எழுந்தமர்ந்து கொண்டு வந்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.




சதுரகிரி பயணம்..... - Page 19 IG1zBMluS0Sx14AuY8kJ+001




சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Jun 03, 2016 3:04 pm

சித்தி...... உங்கள் எழுத்துக்களில் உள்ள வார்த்தைகள் அருமை

உண்மையில் சூப்பருங்க சூப்பருங்க

சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் அருளை அனைவரும் பெறுகின்றனர்.....




வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 03, 2016 10:40 pm

ஸ்ரீரங்கா wrote:சித்தி...... உங்கள் எழுத்துக்களில் உள்ள வார்த்தைகள் அருமை

உண்மையில் சூப்பருங்க சூப்பருங்க

சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் அருளை அனைவரும் பெறுகின்றனர்.....
பிழையில்லா தமிழ். சூப்பருங்க வாழ்த்துக்கள்.!



சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 03, 2016 10:44 pm

ருட்டில் எப்படி தனியாக வந்தார்கள் என்று அந்த குழுவில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். அப்போது தான் தெரியும் அவர்கள் வழித்துணையோடு தான் வந்திருக்கிறார்கள் என்று.

அப்படியும் அவர்களுடன் வந்த இரண்டு ஆண்களும் பின்தங்கி விட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் சொன்னார்கள். அடுத்த இருபது நிமிட இடைவெளியில் அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

வந்தவர்கள் என்னுடன் பேசிய பெண்ணின் தந்தை மற்றும் கணவர். எப்படி வழிதெரிந்து வந்தீர்கள் என்று என்னுடன் பேசி பெண் தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு அந்த பெரியவர் வழித்துணையாக தங்களுடன் பைரவர் வந்ததாக சொன்னார்.

எனக்கு மனமெல்லாம் சிலிர்த்துப்போனது. ஏன் நமக்கு மட்டும் இப்படி ஒரு வாய்ப்பு அமைய மாட்டேன்கிறது... அருள் புரிய மாட்டாயா இறைவா – மனம் அரற்றியது. அவ்வளவு துர்பாக்கியசாலியா நாம்... என்ற என் ஏக்கம் என் மீதே கழிவிரக்கம் ஏற்படுத்தியது.

ஆனால், அறிவு சட்டென சுதாரித்துக்கொண்டு விட்டது. சென்ற முறையே இப்படி எதிர்பார்த்ததின் பலனைத்தான் அனுபவித்தாகிவிட்டது. மறுபடியும் அந்த சிந்தனை வேண்டாம். பூர்வ ஜென்ம கர்ம வினைகளின் படி நடக்கும் இந்த நிகழ்வுகள் பிராப்தம் இருப்பவர்களுக்கே நிகழக்கூடியது என்பதை மறுபடியும் மனதில் ஓட்டிப்பார்த்தபோது கொஞ்சம் தெளிந்தது. மனதையும் தேற்றிக்கொண்டேன்.

அதன் பிறகு இன்னும் ஒரு இருபது நிமிடங்கள் கழித்து, ஒரு நாலைந்து ஆண்கள் மடத்திற்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் எழுந்ததும் அவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.

முதலில் வந்த குழு சாப்பிட்டதும் பத்தரை மணியளவில் சந்தன மகாலிங்க சந்நிதிக்கு புறப்பட்டு சென்று விட்டார்கள். மறுநாள் முதல் கால பூஜையில் கலந்து கொள்ள ஏதுவாக அங்கிருக்கும் மடத்தில் தங்கிக்கொள்வதாக சொன்னார்கள். வழியில் பாலத்தில் பார்த்துப்போகும் படி எச்சரித்தும் அனுப்பினார்கள் மடத்தின் வாசிகள்.

நாங்கள் அங்கு சந்தன மடத்தில் தங்காததன் காரணம்.

அதிகாலை எழுந்தவுடன் குளிப்பதற்கு மறுபடியும் அந்த கும்மிருட்டில் கீழே (சுந்தர மகாலிங்கம்) இறங்கி வந்து தான் குளிக்க வேண்டும். மேலே கழிப்பிட வசதி இல்லை. குளிக்காமல் பூஜையில் கலந்து கொள்வதாக இருந்தால் மேலே தங்கலாம். ஒவ்வொருமுறையும் மிக நெட்டாக இருக்கும் முன்னூறு, நானூறு படிகளை ஏறி, ஏறி இறங்க முடியாத காரணமும் ஒன்று. மேலும் மலையின் மேலே மின் வசதி கிடையாது.

ஒரு வழியாக அனைவரும் சென்ற பிறகு, மடத்திலிருப்போரும் தூங்குவதற்கு ஆயத்தமார்கள். மறுபடியும் நிசப்தம் சூழ்ந்தது. நானும் கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று நினைத்தபோது மணி பதினொன்றரை ஆகியிருந்தது.

சரியாக ஒரு மணிநேரம் கழித்து எழுந்து பிள்ளைகளை எழுப்பி உருட்டிக்கொண்டு செல்வதற்குள் மணி ஒன்றாகிவிட்டிருந்தது. குளிக்கும் இடத்திற்கு முன்னாலேயே குழாய்கள் இருக்கிறது. கொண்டு சென்ற பக்கெட்டில் தண்ணீர் பிடித்து தலைக்கு ஊற்றிக்கொண்டோம்.

சென்ற முறை வந்த போது நல்ல பனி. தண்ணீரும் கடுமையாக சில்லிட்டு இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. தண்ணீர் ஜில்லென்று இருந்தாலும் ஐஸ் போலில்லை. ஒரு வேளை இங்கும் குளோபல் வார்மிங் எபெக்டோ ...?




சதுரகிரி பயணம்..... - Page 19 3LovIdoRqry2BeQhRHUA+001




சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 03, 2016 10:53 pm

வயசு கூடுதில்ல உணர்வு குறைஞ்சிருக்குமோ புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 03, 2016 11:28 pm

ம்..... கோபம் கோபம்



சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 03, 2016 11:36 pm

Haa haa haa




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 12:14 am

குளித்து முடித்து தயாராகி மடத்திற்கு வந்த போது இரவு மணி இரண்டு.  மற்றவர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். அவர்களின் தூக்கம் கலையாதபடி ஓசைப்படாமல் இரண்டு டார்ச்களை எடுத்துக்கொண்டு ஓசைபடாமல் கிளம்பினோம்.

மேலே பூஜைக்காக இரண்டரை மணிக்கெல்லாம் எங்களை வரச்சொல்லி இருந்தார்கள். சரியான இருட்டு. முன்னே செல்லும் டார்ச் வெளிச்சத்தை தவிர வேறு வெளிச்சம் ஏதுமில்லை.

சதுரகிரி பயணம்..... - Page 19 VMvIWz0XRRGZhwrBpJih+DSCN2437

மெதுவாக ஏறி சந்தனலிங்க ஆலயத்தின் சித்தர்கள் தோரணவாயில் வந்துவிட்டோம். ஆளரவம் இல்லை. மின்வசதி இல்லாத காரணத்தினால் எங்கும் கும்மிருட்டு. மலையில் பூசாரிகள் யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 19 Qu5m84vRC6TsHUkANjyv+DSCN1554
2014  -ல் எடுத்த படம். நேரம்: இரவு 7.00 மணி

முதலில் ஏறிவிட்ட இவர் தான் கோயில் கேட்டை தட்டினார். சற்று நேரம் கழித்து, கோயிலின் உள்ளே சோலார் விளக்குகள் சோகையாய் எரிய ஆரம்பித்தது. உடனே கோயிலை சேர்ந்த ஒருவர் வந்து கேட்டை திறந்து விட்டார். நாங்களும் உள்ளே சென்று சந்தன மகாலிங்க சந்நிதி முன்பு அமர்ந்தோம்.

ஒருவர் ஒவ்வொரு சன்னிதியாக தயார்செய்ய ஆரம்பித்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் எங்களுக்கு சுட, சுட கருப்பட்டி காபி வந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 19 Z8DSD3URWilWMQo8qc5s+IMG_20160409_025319

கொஞ்சம், கொஞ்சமாய் சந்தன மகாலிங்கத்தில் மற்றும் கீழே தங்கி இருந்தவர்கள் அனைவரும் கோயிலுக்கு வர ஆரம்பித்து இருந்தார்கள்.

அபிஷேகமும் துவங்கி விட்டார்கள். சுற்றிலும் சந்தனமும், பன்னீரும் மனமனமத்தது. அபிஷேகப்பால் கொஞ்சம் சேகரித்து அங்கிருக்கும் அனைத்து பக்தர்கலோடும் பகிர்ந்து கொண்டோம். கண்ணும், மனமும் குளிர குளிர பெருமானை தரிசித்தோம். அபிஷேகம் முடிந்து சிவபுராணத்தோடு, உயிர்வரை ஊடுருவும் சங்கொலி முழங்க பூஜை முடிந்து ஆரத்தி காட்டினார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 19 PX96NGyxSam9Pepg7hxa+img_1
சந்தன மகாலிங்க கோயிலின் தோற்றம்
நன்றி: இணையம்

மற்ற சந்நிதிகளுக்கும் பூஜை முடிந்து பிரசாதங்களை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். அதற்குள்ளாக பக்தர்கள் எல்லாம் கிளம்ப ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். அடுத்த அபிஷேகம் சுந்தர மகாலிங்க சந்நிதியில் இருக்கிறதே......




சதுரகிரி பயணம்..... - Page 19 Za4ioseZS2KrIqI2qPMg+001




சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 06, 2016 12:24 am

அந்த சூழலில் கருப்பட்டி காப்பி தேவாமிர்தம்




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 12:30 am

ஆமாம், ஆனால் மிக அதிகமான இனிப்பு கொஞ்சம் திகட்டிவிட்டது.



சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக