புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 2%
prajai
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
383 Posts - 49%
heezulia
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
26 Posts - 3%
prajai
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுக்கு மை எதற்கு?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 1:50 pm

காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்கள்; தவறு.

கண்ணில்லை என்றால் காதல் இல்லை.

கண்தான் காதலை உண்டாக்குகிறது.

கண்தான் காதலின் வாசல்.

கண் வழியாகத்தான் நுழைந்து இதயத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

சீதை இராமனைப் பார்த்தாள். காதல் உண்டாகி விட்டது. அவன் அவள் இயத்திற்குள் போய் விட்டான்.

அவன் எப்படி உள்ளே போனான்?

‘‘கண் வழியாகத்தான் நுழைந்திருக்கிறான், திருட்டுப் பயல்!’’

‘கண்வழி நுழையுமோர்

கள்வனே கொலாம்.’

அந்தக் காலத்திலிருந்தே பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிகலன் களால் தங்களை அலங்கரித்துக் கொள் வார்கள்.

எல்லாம் ஆண்களைக் கவர்வதற்காகத்தான்.

வெண்ணிலாவுக்கு வெள்ளையடிப்பதுபோல் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண் களும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வயதானவர்களும் அலங்கரித்துக் கொள் கிறார்கள்.

நெடுங்காலமாகச் செய்து செய்து பெண்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழக்கம் இது.

‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று கேட்கிறார் வள்ளுவர்.

‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு

அணி எவனோ ஏதிலதந்து.’

நகைகள் அணிந்த அழகியை வருணிக்க வந்த காளிதாசன் ‘நகைகள் இவளை அணிந்திருக்கின்றன’ என்கிறார்.

பெண்கள் இரண்டே இரண்டு அங்கங்களில்தான் நகைகள் அணிவதில்லை. ஒன்று உதடு, மற்றொன்று கண்.

இவற்றில் நகைகள்தாம் அணிவதில்லையே தவிர, இவற்றிலும் அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

உதட்டில் சிவப்பு வண்ணம் ஏற்றிக்கொள்கிறார் கள். கண்ணில் கறுப்பு மை தீட்டிக்கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் புலவர்கள் பெண்களின் கண்களை வருணிக்கும்போது ‘உண்கண்’ என்பார்கள். அதாவது ‘உண்ணும் கண்’.

இது ‘மை உண்ணும் கண்’ என்று விரியும். ஆனால் ‘உண்கண்’ என்று மட்டுமே எழுதுவார்கள்.

அதாவது மற்றதையும் உண்ணும் என்பது குறிப்பு. எதை?

இராமனும் சீதையும் முதன்முறையாகச் சந்திக்கிறார்கள்.

அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றையொன்று கவ்வி உண்கின்றன.

‘கண்ணொடு கண்ணினைக்

கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும்’

- என்கிறார் கம்பர்.

அதாவது ‘கண்களை உண்ணும் கண்கள்’ என்கிறார் கம்பர்.

‘கண்ணிரண்டும்

ஆளை விழுங்கும்

அதிசயத்தைக் கூறுவனோ?’

- என்கிறார் பாரதியார்

‘ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை.

‘கண்டார் உயிருண்ணும்

தோற்றத்தாள் பெண்தகைப்

பேதைக்கு அமர்த்தன கண்’

அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.

ஷாஜஹானும் மும்தாஜும் அரண்மனைப் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘கண்ணே! உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’ என்று ஷாஜஹான் கேட்டான்.

‘‘உண்டே! பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்’’என்றார் மும்தாஜ்.

‘பெண்ணே!

உன் கண்ணை

இரக்கக் கண்ணீரால்

அலங்கரி

மையால்

அலங்கரிக்காதே

ஏனெனில்

மை கரைந்துவிடும்’

- என்று நான் எழுதியிருக்கிறேன்.

இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:

‘அவள் மை தீட்டக்

கையில்

கோலெடுத்துவிட்டாள்

யாருடைய விதி

எழுதப்படப் போகிறதோ?’

திருக்குறளில் ஒரு சுவையான குறள்.

வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.

‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.

தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.

‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து’

எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப் புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.

இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:

l

‘கண்ணில் ஏன்

மை தீட்டவில்லை

என்கிறாயா, தோழி!

சொல்கிறேன்

l

மை போட்டு

மயக்கினேன்

மயங்கிவிட்டார்

இன்னும் எதற்கு மை?

l

கண்ணுக்குள்

என் காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?

l

என் சூரியனை

இருட்டடிப்புச்

செய்யலாமா?

l

வீட்டிற்குள்ளே அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்?

l

அவரையே தீட்டி

அழகு பெற்ற கண்ணுக்கு

மையலங்காரம் வேண்டுமா?

l

கண்ணை விட

மென்மையானவர்

காதலர்

கோல் பட்டால்

வலிக்காதோ?

l

அவர்தான்

சிக்கிவிட்டாரே

பிறகு எதற்கு வலை?

l

அவரை வைத்த இடத்தில்

வேறொன்றை வைப்பது

கற்புக்கு இழுக்கல்லவா?’

****கவிக்கோ அப்துல் ரகுமான்***

நன்றி யார்ல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 2:12 pm

கண்ணுக்கு மை எதற்கு? 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக