புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
2 Posts - 2%
prajai
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Rutu
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Pradepa
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
18 Posts - 2%
prajai
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
8 Posts - 1%
Rutu
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10கண்ணுக்கு மை எதற்கு? Poll_m10கண்ணுக்கு மை எதற்கு? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுக்கு மை எதற்கு?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 1:50 pm

காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்கள்; தவறு.

கண்ணில்லை என்றால் காதல் இல்லை.

கண்தான் காதலை உண்டாக்குகிறது.

கண்தான் காதலின் வாசல்.

கண் வழியாகத்தான் நுழைந்து இதயத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

சீதை இராமனைப் பார்த்தாள். காதல் உண்டாகி விட்டது. அவன் அவள் இயத்திற்குள் போய் விட்டான்.

அவன் எப்படி உள்ளே போனான்?

‘‘கண் வழியாகத்தான் நுழைந்திருக்கிறான், திருட்டுப் பயல்!’’

‘கண்வழி நுழையுமோர்

கள்வனே கொலாம்.’

அந்தக் காலத்திலிருந்தே பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிகலன் களால் தங்களை அலங்கரித்துக் கொள் வார்கள்.

எல்லாம் ஆண்களைக் கவர்வதற்காகத்தான்.

வெண்ணிலாவுக்கு வெள்ளையடிப்பதுபோல் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண் களும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வயதானவர்களும் அலங்கரித்துக் கொள் கிறார்கள்.

நெடுங்காலமாகச் செய்து செய்து பெண்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழக்கம் இது.

‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று கேட்கிறார் வள்ளுவர்.

‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு

அணி எவனோ ஏதிலதந்து.’

நகைகள் அணிந்த அழகியை வருணிக்க வந்த காளிதாசன் ‘நகைகள் இவளை அணிந்திருக்கின்றன’ என்கிறார்.

பெண்கள் இரண்டே இரண்டு அங்கங்களில்தான் நகைகள் அணிவதில்லை. ஒன்று உதடு, மற்றொன்று கண்.

இவற்றில் நகைகள்தாம் அணிவதில்லையே தவிர, இவற்றிலும் அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

உதட்டில் சிவப்பு வண்ணம் ஏற்றிக்கொள்கிறார் கள். கண்ணில் கறுப்பு மை தீட்டிக்கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் புலவர்கள் பெண்களின் கண்களை வருணிக்கும்போது ‘உண்கண்’ என்பார்கள். அதாவது ‘உண்ணும் கண்’.

இது ‘மை உண்ணும் கண்’ என்று விரியும். ஆனால் ‘உண்கண்’ என்று மட்டுமே எழுதுவார்கள்.

அதாவது மற்றதையும் உண்ணும் என்பது குறிப்பு. எதை?

இராமனும் சீதையும் முதன்முறையாகச் சந்திக்கிறார்கள்.

அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றையொன்று கவ்வி உண்கின்றன.

‘கண்ணொடு கண்ணினைக்

கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும்’

- என்கிறார் கம்பர்.

அதாவது ‘கண்களை உண்ணும் கண்கள்’ என்கிறார் கம்பர்.

‘கண்ணிரண்டும்

ஆளை விழுங்கும்

அதிசயத்தைக் கூறுவனோ?’

- என்கிறார் பாரதியார்

‘ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை.

‘கண்டார் உயிருண்ணும்

தோற்றத்தாள் பெண்தகைப்

பேதைக்கு அமர்த்தன கண்’

அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.

ஷாஜஹானும் மும்தாஜும் அரண்மனைப் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘கண்ணே! உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’ என்று ஷாஜஹான் கேட்டான்.

‘‘உண்டே! பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்’’என்றார் மும்தாஜ்.

‘பெண்ணே!

உன் கண்ணை

இரக்கக் கண்ணீரால்

அலங்கரி

மையால்

அலங்கரிக்காதே

ஏனெனில்

மை கரைந்துவிடும்’

- என்று நான் எழுதியிருக்கிறேன்.

இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:

‘அவள் மை தீட்டக்

கையில்

கோலெடுத்துவிட்டாள்

யாருடைய விதி

எழுதப்படப் போகிறதோ?’

திருக்குறளில் ஒரு சுவையான குறள்.

வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.

‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.

தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.

‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து’

எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப் புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.

இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:

l

‘கண்ணில் ஏன்

மை தீட்டவில்லை

என்கிறாயா, தோழி!

சொல்கிறேன்

l

மை போட்டு

மயக்கினேன்

மயங்கிவிட்டார்

இன்னும் எதற்கு மை?

l

கண்ணுக்குள்

என் காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?

l

என் சூரியனை

இருட்டடிப்புச்

செய்யலாமா?

l

வீட்டிற்குள்ளே அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்?

l

அவரையே தீட்டி

அழகு பெற்ற கண்ணுக்கு

மையலங்காரம் வேண்டுமா?

l

கண்ணை விட

மென்மையானவர்

காதலர்

கோல் பட்டால்

வலிக்காதோ?

l

அவர்தான்

சிக்கிவிட்டாரே

பிறகு எதற்கு வலை?

l

அவரை வைத்த இடத்தில்

வேறொன்றை வைப்பது

கற்புக்கு இழுக்கல்லவா?’

****கவிக்கோ அப்துல் ரகுமான்***

நன்றி யார்ல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 2:12 pm

கண்ணுக்கு மை எதற்கு? 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக