புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
107 Posts - 49%
heezulia
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
7 Posts - 3%
prajai
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
234 Posts - 52%
heezulia
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
18 Posts - 4%
prajai
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 0%
Barushree
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_m10மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம்.


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 09, 2016 6:51 am

கடவுள் துகள்!

இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது?

ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது.

1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்பட்டது.

ஹிக்ஸ் சரி, அது என்ன போஸான்?

அணுவுக்கு உப அணு உண்டு என்று 1924-ம் ஆண்டே கண்டறிந்து கூறியவர் கொல்கத்தா வைச் சேர்ந்த சத்தியேந்திரநாத் போஸ்.

அதனை அங்கீகரித்து, அவர் பெயரையும் இணைத்துத்தான் மூலத் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர்.

‘துகள் இயற்பிய’லில் இது மிக அற்புதமான கண்டுபிடிப்பு என்பதால் பீட்டர் ஹிக்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லியோன் லெடர்மான் என்ற இயற்பியல் விஞ் ஞானி 1993-ல் ஹிக்ஸ் போஸானுக்குக் ‘கடவுள் துகள்’ (God particle) என்று பெயர் சூட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக் கினார் என்று ஆத்திகர்கள் கூறுகிறார்கள் அல்லவா? அவர்களைக் கேலி செய்வதற்காகவே அவர் அப்படி பெயர் சூட்டினார்.

‘இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக் கினார் என்று கூறுகிறீர்களே... இதோ இந்தத் துகள்தான் பிரபஞ்சத்தை உண்டாக் கியது. எனவே, இதுதான் கடவுள்’ என்று கூறுவதன் மூலம் ஆத்திகர்களைக் கேலி செய்வது அவர் நோக்கம். இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் உண்டாக்க வில்லை, இந்தத் துகள்தான் உண்டாக்கியது என்று ஆத்திகரைக் குத்துவது அவருடைய உள் நோக்கம்.

பீட்டர் ஹிக்ஸும் நாத்திகரே. அவருக்கே கூட லெடர்மான் இப்படிப் பெயர் சூட்டியது பிடிக்கவில்லை.

எப்படியோ, லெடர்மான் கேலியாகப் பெயர் வைத்தாலும் அவரே அறியாமல் ஆதிமூலத் துகளில் கடவுளுக்கு இடம் கொடுத்துவிட்டார். அதாவது கடவுளின் பொருளை அவர் பேருக்கே பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்.

இது கடவுளின் திருவிளையாடல்.

ஹிக்ஸ் போஸான் பற்றி ஆராய்ச்சி செய்வதற் காக சுவிட்சர்லாந்தில் செர்ன் என்ற இடத்தில் விஞ்ஞான ஆய்வுக் கூடம் அமைத்திருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் 2004 ஜூன் 18 அன்று ஆறடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலையை நிர்மாணித்திருக்கிறார்கள்.

‘கடவுள் துக’ளில் மறுபடியும் கடவுள்!

விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் நடராஜர் சிலையா?

சிவபக்தர் யாராவது வம்படியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டாரா? இல்லை, இதற்குக் காரணமாக இருந்தவர் பிரபல அமெரிக்க இயற் பியல் விஞ்ஞானி ப்ரிட்ஜாப் காப்ரா (Fritjof Capra).

இந்தப் பிரபஞ்சத்தில் உப அணுக்கள் இடை விடாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன (Cosmic Dance). இந்த ‘ஆட்ட’த்தின் ஆட்டத்தைத்தான் நடராஜரின் நடனம் குறியீட்டு வடிவத்தில் உணர்த்து கிறது என்பதை காப்ரா அறிந்து கொண்டார்.

செர்ன் ஆய்வுக் கூடத்தில் நடராஜர் சிலை நிர்மாணிக்க இவரே காரணகர்த்தாவாக இருந் தார். இந்தச் சிலையை இந்திய அரசுதான் அனுப்பிவைத்தது.

நடராஜர் சிலையின் பீடத்தில், ‘இயற்பியலின் தாவோ’ என்ற காப்ராவின் பிரபலமான புத்தகத் தில் இருந்து எடுத்த சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

அதில், ‘பிரபஞ்ஞத்தில் உப அணுக்களின் நடனத்தையே சிவபெருமானுடைய நடனம் உணர்த்துகிறது’ என்ற கருத்து காணப்படுகிறது.

நடராஜர் சிலை தமிழர்களுடை கலைவண்ணம்!

அணுவே பிரபஞ்சத்தின் அடிப்படை. அதைப் பிளக்க முடியாது என்று விஞ்ஞான உலகம் உறுதியாக நம்பிய காலத்திலேயே அணுவைப் பிளக்கலாம், அணுவுக்கும் மூலமான ஒரு பொருள் உண்டு என்று இந்திய ஞானியர் நெடுங்காலத்துக்கு முன்பே அறிவித்தனர்.

‘அணுவின் அணுவினை ஆதிப் பிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவின் அணுவினை அணுக வில்லார்க்கு

அணுவின் அணுவினை அணுகலு மாமே!’

இது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

அணுவுக்கும் அணுவாக இருப்பவன் இறை வன். அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் ஆதிமூலம். அணுவின் அணுவான உப அணு என்று கூறப்படுவதைக் கூட பிளக்கலாம். அதை ஆயிரம் கூறாகப் பிரித்துப் பார்த்தால் வரும் அணுவை யார் அணுகுகிறார்களோ, அவர்கள் மூல அணுவுக்கும் அணுவான இறைவனை அணுக முடியும் என்பது பாடலின் கருத்து.

விஞ்ஞானம் எங்கே நின்றுவிடுகிறதோ, அதற் கும் அப்பால் செல்லக்கூடியது மெய்ஞ்ஞானம்.

விஞ்ஞானம் எதை ஆதிமூலம் என்று கண்டுபிடித்தாலும் அது பவுதீக ஆதிமூலமே. அணுவுக்கும் அணுவாக இருப்பவனே இறைவன் என்று கூறுகிறார் திருமூலர்.

‘பரத்திற்கெல்லாம் பரம் நீ’

என்கிறார் கம்பர்.

‘நீயாதி பரம்பரமும்’

ஹிக்ஸ் போஸான் எப்படி உருவாயிற்று என்று விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை; சொல்ல முடியாது. அவர்கள் பார்வை பவுதீக எல்லைக்குள் மட்டுமே.

‘‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’’ என்ற இரணியனின் கேள்விக்கு அவன் மகன் பிரகலாதன், ‘‘அவன் எங்கும் இருப்பான்!’’ என்கிறான்.

‘‘இந்தத் தூணில் இருக்கிறானா?’’ என்று இரணியன் கேட்கிறான். அதற்குப் பிரகலாதன்,

‘சாணிலும் ஊன்ஓர் தன்மை

அணுவினைச் சதகூ றிட்ட

கோணினும் உளன்’

என்கிறான்.

கம்பன் அணுவை நூறாகப் பிளக்கலாம் என்று கூறுவதோடு அப்படிப் பிளந்து வரும் உப அணுவிலும் இறைவன் இருப்பான் என்கிறான். அதோடு இந்த மூல அணுவுக் குக் ‘கோண்’ என்று ஒரு புதிய கலைச் சொல்லால் பெயர் சூட்டவும் செய்கிறான்.

அணுவினும் சிறிய உப அணுவுக்குப் பரமாணு என்று பெயர் சூட்டியவர்கள் சமணர்கள்.

சமணர் நாத்திகர். ‘பரம்’ என்ற சொல் இறைவனையும் குறிக்கும். இங்கும் அவர் கள் அறியாமலே மூல அணுவில் இறைவன் பரமன் வந்து அமர்ந்துவிட்டான்.

‘God Particle’-ன் மொழிபெயர்ப்பே ‘பரமாணு’.

கி.மு.600-ம் ஆண்டுக் காலகட்டத்தி லேயே காஸ்யபர் முனிவர், ‘பிளக்கப்பட முடியாத இறுதி உப அணுவே பராமாணு’ என்றார்.

மத் பாகவத மகாபுராணத்தில், முனிவர் மைத்ரேயர், சடப் பொருளின் மிக மிகச் சிறிய துகள் பரமாணு என்று கூறிய கருத்து இடம்பெற்றுள்ளது.

வைசேஷிகர் ‘பரமாணுக்களே சடப் பொருளின் மிகச் சிறிய பகுதி. அதற்குள் வேறு எந்தப் பகுதிகளும் இல்லை. அவை படைக்கப்பட்டவை அல்ல. அவற்றை அழிக்கவும் முடியாது. ஆகவே நிரந்தரமானவை. இக்காரணங்களாலேயே அவை பரிமாணமற்றவை. இடத்தைப் பிடிக்காதவை. உள்ளும் புறமும் அற்றவை என்று கூடுதல் தகவல் தருகின்றனர். பரமாணுக்கள் பல வகையானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இவை எல்லாம் விஞ்ஞானிகளுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள்.

இந்த மெய்ஞ்ஞானியர்களின் கருத்துகள் வியப்பை ஊட்டுகின்றன.

பன்னெடுங்காலம் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மைகளை, மெய்ஞ்ஞானிகள் பன்னெடுங்காலத்துக்கு முன்பே எப்படிக் கூற முடிகிறது?

பிரபஞ்ச ரகசியங்களை மெய்ஞ்ஞானியர்க்கு இறைவன் உணர்த்துகிறான். அதனால்தான் விஞ்ஞானம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கும் உண்மைகளை நெடுங்காலத்துக்கு முன்பே மெய்ஞ்ஞானியர் கூறிவிடுகின்றனர்.

விஞ்ஞானம் மலையுச்சியை அடையக் கஷ்டப்பட்டுப் படியேறிச் செல்கிறது. மெய்ஞ்ஞானமோ ஒளிக் கிரணம் போல் பாய்ந்து மலையுச்சியை அடைந்துவிடுகிறது.

மெய்ஞ்ஞானம் பரமாணுவைக் கண்டால் அதில் பரமனைக் கண்டு பரமானந்தம் அடையும்.

விஞ்ஞானம் பரமாணுவைக் கண்டுபிடித்திருக் கிறது. இனி, அதை வைத்து உலகத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யும்.

இதுதான் மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம்.

கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

நன்றி யார்ல்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 09, 2016 6:54 am

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிரானவை என்றே பலர் கருதுகின்றனர். அது தவறு.

உண்மையில் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுபவை.

மெய்ஞ்ஞானம் அகத்தை விளக்குகிறது. விஞ்ஞானம் புறத்தை ஆராய்கிறது.

மெய்ஞ்ஞானம் படைத்தவனை விளக்குகிறது. விஞ்ஞானம் படைப்புகளை விளக்குகிறது.

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் கணவனும் மனைவியும் போன்றவை.

ஒரு காலத்தில் விஞ்ஞானிகள், மெய்ஞ் ஞானத்தை வெறுங்கற்பனை என்று ஏளனம் செய்து வந்தனர்.

இப்போது மெய்ஞ்ஞானம் ‘நாம் அறியாத, அறிய முடியாத பிரபஞ்ச ரகசியங்களை விளக்கு கிறது. நாம் அதனிடமிருந்து கற்க வேண்டியிருக் கிறது’ என்று கூறுகிறார்கள். நடராஜர் வடிவத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நடராஜர் வடிவம் குறியீடாக அமைக்கப் பட்டிருக்கிறது. அக்குறியீடு ஆழ்ந்த பிரபஞ்ச ரகசியங்களை உணர்த்துகிறது.

கலைகளில் முதலாவதாகத் தோன்றிய கலை தான் நடனம். அது மந்திர வித்தையின் பழமை யான வடிவம். நடனம் பரவசத்தை உண்டாக்கு கிறது. அது தன்னை அறியவும், தெய்வீகத்தை அனுபவிக்கவும் உதவுகிறது. இறுதியில் தெய்வீக சாரத்தில் கலக்கச் செய்கிறது.

இந்தியாவில் அது வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும் மதிக்கப்படுகிறது.

நடராஜரின் பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) இயக்கம், இயக்கமின்மை என்ற இரு தெய்வீக சக்தி கள் கலந்து ஆடுவதைக் குறிக்கும் குறியீடாகும்.

நடராஜர் ஒளிவட்டத்துக்குள் ஆடுகிறார். இந்த ஒளிவட்டம் படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய நெருப்பைக் குறிக்கும். இது பிரபஞ்சத்தையும் குறிக்கும்.

நடராஜர் மேல் வலக்கரத்தில் டமருகத்தை (உடுக்கை) ஏந்தியிருக்கிறார். டமருகம் ஓசையின் குறியீடு. இது ஓசையில் இருந்து பிரபஞ்சம் தோன் றியது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. இது கால ஓட்டத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

நடராஜரின் மேல் இடக்கரம் நெருப்பை ஏந்தியிருக்கிறது. இது அழிவின் குறியீடு.

இரண்டாவது வலக்கரம் அபய முத்திரை யைக் காட்டுகிறது. இது தர்மத்தைப் பின்பற்று கிறவர்களை தீமையில் இருந்தும், அஞ்ஞானத்தில் இருந்தும் இறைவன் காப்பாற்றுவான் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் இடக்கரம் தூக்கிய காலைச் சுட்டுகிறது. இது மோட்சத்தைக் குறிக்கிறது. மேலும், இக்கரம் யானையின் தும்பிக்கையைப் போல் அமைந்திருக்கிறது. இது காட்டில் யானை வழிநடத்திச் செல்வது போல் இறைவன் அறியாமைக் காட்டில் வழிநடத்திச் செல்வதை உணர்த்துகிறது.

நடராஜர் முயலகன் என்ற குள்ளனை மிதித்துக் கொண்டிருக்கிறார். முயலகன் அறியாமையின் குறீயீடு. இது இறைவன் அறியாமையை வெற்றி கொண்டதைக் குறிக்கும். முயலகனைத் தீமையின் குறியீடாகவும் கொள்ளலாம்.

நடராஜர் உடலைச் சுற்றியிருக்கும் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கிறது.

நடராஜரின் அவிழ்ந்து நாலா பக்கமும் ஆடும் சடை பால்வீதியை, நாள்களைக் கோள்களை அடித்துச் சிதற வைப்பதைக் குறிக்கும். ஊழிக் காலத்தில் இவையெல்லாம் அழிக்கப்படும் என்பது பொருள்.

நடராஜரின் நடனம் இரு வகைப்படும். ஒன்று, ஆனந்தத் தாண்டவம். இது, படைப்புச் செயல். மற் றொன்று ருத்ர தாண்டவம். இது, அழிவுச் செயல்.

நடராஜ நடனம் இறைவனின் ஐம்பெருஞ் செயல்களை (பஞ்ச கிரியா) குறிக்கிறது. அவை 1. ஆக்கல் 2. காத்தல் 3. அழித்தல், 4. மறைத்தல் 5. அருளல்.

இந்நடனம் காலச் சுழற்சியையும் குறிக்கிறது. பிரபஞ்ச உருவாக்கத்துக்குக் காரணமான ஹிக்ஸ் போஸானே, அதன் அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார். இதை மெய்ஞ்ஞானம் என்றோ சொல்லிவிட்டது.

சிதம்பரத்தில் நடராஜர் சிலை அமைக்கப் பட்டிருப்பதிலும் பொருள் உண்டு. ‘சித்’ என்றால் மனம். அம்பரம் என்றால் ஆகாயம்.

இறைவன் மனம் என்ற ஆகாயத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான் என்று பொருள்.

யாருடைய மனம் ஆகாயம் போல் விரிந்து பரந் திருக்கிறதோ, அங்கே இறைவனுடைய நடனம் நிகழும்.

இறைவனுடைய நடனம் ஒரே நேரத்தில் மனத் திலும் நடக்கிறது, ஆகாயத்திலும் நடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

நடராஜர் சிற்றம்பலத்தில் ஆடுகிறார், பேரம் பலத்திலும் ஆடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

மனம்தான் சிற்றம்பலம். ஆகாயம்தான் பேரம்பலம் என்று நான் கருதுகிறேன்.

நடராஜர் நடனத்தில் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், கலை மூன்றும் அற்புதமாக, அழகாகச் சங்கமம் ஆகியிருக்கிறது.

இந்தச் சிலையை ஒரு சாதாரணச் சிற்பி உரு வாக்கியிருக்க முடியாது. மெய்ஞ்ஞானத்திலும், கலையிலும், குறியீட்டிலும் வல்லவரான யாரோ ஒரு ஞானிதான் இதை உருவாக்கியிருக்க வேண்டும்.

சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுவதாகக் கூறப்படுகிறது. அவர் சாம்பல் மீது ஆடுகிறார் என்பதே இங்கே குறிக்கப்படும் பொருள்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பிறகு, எது எஞ்சுகிறதோ அதைக் குறிப்பது சாம்பல்.

படைப்புக்குக் காரணமாக, ஆதிமூலமாக இருந்த பரமாணுவே பிரபஞ்சம் அழிந்த பிறகும் எஞ்சியிருக்கும். அதில், இறைவன் இயங்கிக் கொண்டிருப்பான் என்பதையே சாம்பல் குறிப்பிடுகிறது என்பது என் கருத்து.

இதே கருத்தை வைணவமும் சொல்கிறது.

விஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைணவம் கூறுகிறது.

சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்றால் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள்.

இதிலிருந்து உருவான சொல்தான் ‘சேஷம்’.

பிரளயத்தில் எல்லாம் அழிந்த பின் எது எஞ்சுகிறதோ, அதில் இறைவன் உறங்கிக் கொண்டிருப்பான் என்பது பொருள்.

இங்கே ‘உறங்கிக் கொண்டிருப் பான்’ என்றால் மனிதர் மாதிரி உறங்கிக் கொண்டிருப்பான் என்று பொருள் அல்ல.

இதை ‘அறிதுயில்’ என்று வைண வம் கூறுகிறது. அதாவது, இறை வன் எல்லாம் அறிந்தபடியே உறங்குகிறான் என்று பொருள்.

பிரளயத்தில் எல்லாம் அழிந்து விடும். எனவே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற வேலைகள் இல்லாத தால் இறைவன் இயங்காமல் இருக்கிறான் என்பதையே உறக்கம் குறிப்பிடுகிறது.

அணுவுக்குள் எலெக்ட்ரான் இடை விடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. நியூட்ரான் அசைவற்று அமைதியாக இருக்கிறது.

நடராஜரை எலெக்ட்ரானின் குறியீடாகவும், விஷ்ணுவை நீயூட்ரானின் குறியீடாகவும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

பிரபஞ்சத்தை உருவாக்கியது ஹிக்ஸ் போஸான் பரமாணு என்று விஞ்ஞானம் கூறு கிறது. அந்தப் பரமாணுவையே உருவாக்கியது பரம்பொருள். அதாவது, இறைவன் என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது.

‘பூமியில் உள்ள யாவும் அழிந்தே

போகும். மிகுந்த கண்ணியமும்

பெருமையும் உடைய உமது

இறைவனின் திருமுகமே என்

றென்றும் நிலைத்திருக்கும்.’

(55.26,27)

என்று திருக்குரான் கூறுகிறது.

இங்கு திருமுகம் என்பது இறைவனுடைய மூலச் சத்தைக் (தாத்) குறிக்கும்.

சைவமும், வைணவமும் கூறும் அதே கருத் தையே இஸ்லாமும் கூறுகிறது. இதில் வியப்பேதும் இல்லை.

உண்மை ஒன்றே! அதை வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு குறியீட்டு மொழியில் சொல்கின்றன.

‘ஏகம் ஸத்; விப்ரா பஹூதா வதந்தி’ என்று ரிக் வேதம் கூறுகிறது.

‘உண்மை ஒன்றே; அதை ஞானியர் பல்வேறு விதமாகச் சொல்கிறார்கள்’ என்பது இதன் பொருள்.

சுய அறிவற்ற பரமாணு இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைத்தது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

சகல அறிவும், சகல வல்லமையும் உடைய பரம் பொருள்தான் (இறைவன்) இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது.

இதுதான் விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத் துக்கும் உள்ள வேறுபாடு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Mar 09, 2016 7:23 am

மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். SLBdLnshRrKfau3t2dSx+vol2(58)

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே— திருமந்திரம்


பாடல் மெட்டு : கட்டோடு குழல் ஆட ஆட.......










http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Mar 09, 2016 10:24 am

‘அணுவின் அணுவினை ஆதிப் பிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவின் அணுவினை அணுக வில்லார்க்கு

அணுவின் அணுவினை அணுகலு மாமே!’

இது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

அணுவுக்கும் அணுவாக இருப்பவன் இறை வன். அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் ஆதிமூலம். அணுவின் அணுவான உப அணு என்று கூறப்படுவதைக் கூட பிளக்கலாம். அதை ஆயிரம் கூறாகப் பிரித்துப் பார்த்தால் வரும் அணுவை யார் அணுகுகிறார்களோ, அவர்கள் மூல அணுவுக்கும் அணுவான இறைவனை அணுக முடியும்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Mar 09, 2016 10:30 am

இருப்பதை தெரிவிப்பது மெய்ஞானம் இருப்பதை வெளிபடுத்துவது விஞ்ஞானம் இருப்பது உண்மை ஆனால் வெளிபடுத்திணால்தான் உண்மை விளங்கும் என்பதே உண்மை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக