புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
46 Posts - 59%
heezulia
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
41 Posts - 59%
heezulia
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
செஞ்சோற்றுக் கடன்! Poll_c10செஞ்சோற்றுக் கடன்! Poll_m10செஞ்சோற்றுக் கடன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செஞ்சோற்றுக் கடன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 4:21 pm

''சுரேஷ்... என்னாச்சு, ஏன் ஒரு மாதிரியா இருக்கே...'' என்று கேட்டவாறு, தனியாக உட்கார்ந்திருந்த சுரேஷை, நெருங்கினான் மணி.
''ஒண்ணுமில்லே...'' என்றான்.

''ஒண்ணுமில்லன்னு உன் உதடு தான் சொல்லுது; முகம் சொல்லலயே... உன் சுபாவம் என்னன்னு எனக்கு தெரியாதா... சில்லரை சிதறினாப்புல, எப்போதும், 'கலகல'ன்னு இருப்ப. இப்ப சத்தமில்லாம, ஓரமா ஒதுங்கி உட்கார்ந்திருக்கியே என்ன விஷயம்,'' என்று கேட்டவன், ஏதேச்சையாக அவன் பாக்கெட்டில் துருத்தியபடி இருந்த கவரைப் பார்த்து, ''என்ன இது...'' என்று உரிமையுடன் எடுத்தான்.

விரித்து படித்தவன் திகைப்புடன், ''என்ன சுரேஷ்... நாலு லட்சம் ரூபாய் கடனை கட்டச் சொல்லி, பைனான்ஸ் கம்பெனியில இருந்து நோட்டீஸ் வந்திருக்கு... எப்ப, எதுக்கு வாங்கின...'' என்றான்.

''நான் வாங்கல... சுந்தரபாண்டியன் வாங்கின கடன். ஷுரிட்டி கையெழுத்து போட்ட பாவத்துக்கு, என் தலையில வந்து விடிஞ்சிருக்கு,'' என்றபடி, காகிதத்தை வாங்கி மடித்து, பழையபடி பாக்கெட்டில் வைத்தபடியே, ''சுந்தர நீ கூட பாத்திருப்பே... கேரம் போர்டு டோர்னமென்ட்டுக்கெல்லாம் வருவான்...''
''ஓ... அந்த சுருள் முடி சுந்தரா...''

''அவன் தான்; ரெண்டு வருஷம் முன்ன, ஒருநாள் என்னை அவசரமா கூப்பிட்டான். அன்னைக்கு, நான் லீவு; வீட்டில் தான் இருந்தேன். படத்துக்கோ, பார்ட்டிக்கோ கூப்புடறான்னு நினைச்சு கிளம்பினா, அவன் என்னை நேரா பைனான்ஸ் கம்பெனியில கொண்டு போய் மேனேஜர் எதிர்ல, உட்கார வச்சுட்டான். அவருகிட்ட என் வேலை, வருமானம், வசதி பத்தியெல்லாம் அவிழ்த்து விட்டான். ஏன் இப்படி பேசறான்னு புரிய ஆரம்பிச்சதுமே, என் முன் ஒரு கட்டு அப்ளிகேஷனை வச்சிட்டாங்க...''
''நீயும் கையெழுத்து போட்டுட்டே...''

''வேற என்ன செய்யச் சொல்றே... 'ஒரு கையெழுத்து போடு சுரேஷ்... மத்ததெல்லாம் வெளியில போயி பேசிக்கலாம்'ன்னு சொல்லி, என் கையில பேனாவ திணிச்சான். என் கையை பிடிச்சு, அவனே கையெழுத்து போடக் கத்துக் குடுக்குறவன் மாதிரி போட வச்சான்.

''வெளியில வந்ததும், 'நண்பா... நீ மறுக்க மாட்டேங்கற நம்பிக்கையில் தான், இந்த காரியத்தை செய்துட்டேன். மாமியார் வீட்ல, ஒரு மாதிரியா பேசிட்டாங்கடா... சம்பாதிக்க லாயக்கில்லாத ஆள்; உட்கார்ந்து தின்னு, உடம்ப வளர்க்கத் தான் தெரியுது அப்படி இப்படின்னு... நான் ஒண்ணும் கையாலாகாத ஆளில்லன்னு காட்டணுமில்ல. அதான், லோன் எடுத்து, கார் வாங்கி டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு எடுத்தேன். கியாரண்டிக்கு ஆள் கேட்பாங்களேன்னு யோசிச்சப்ப, உன் ஞாபகம் வந்தது. கையெழுத்து போட்டதுக்கு ரொம்ப நன்றி'ங்கிறான்...

''சொன்னது போலவே கார் எடுத்து, ஓட்டிக்கிட்டிருந்தான். அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல; நானும் இடம் மாறி வந்துட்டேன். கிட்டத்தட்ட மறந்தே போய்ட்டேன்னு வை. நாலு நாட்கள் முன்னாடி தான், அவன் ஞாபகம் வந்து, பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைக்கறேன்... நோட்டீஸ் வருது...''
''போய் பாத்தியா... என்ன சொன்னான்...''

''போனேன்... வீட்ல அவன் மாமியார் மட்டும் தான் இருந்தாங்க. மத்த யாரையும் காணோம். அவங்ககிட்ட, சுந்தரை பாக்கணும்ன்னு சொன்னேன். 'நாங்க பார்த்தே நாலு மாசமாச்சு'ன்னாங்க. ஏதோ பிரச்னைன்னு மட்டும் புரிஞ்சுது. அவசரமா அவனை பாக்கணும்ன்னு சொல்லி, எனக்கு வந்த நோட்டீசை காட்டினேன்.

'அவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை'ன்னாங்க. 'இப்படி சொன்னா எப்படிங்க; இப்ப, நானும் நெருக்கடியான நிலையில இருக்கேன். நாலு லட்சம் ரூபாய் கட்டச் சொல்லி, எனக்கு நோட்டீஸ் வந்திருக்கு. கட்டலன்னா, நான் உள்ள போக வேண்டியிருக்கும். சுந்தரோட அத்தைங்கற முறையில, கொஞ்சம் பொறுப்பா பதில் சொல்லுங்க'ன்னு சொன்னேன்.''

''அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?''
''சொல்லல... செஞ்சாங்க. கட்டிப் போட்டிருந்த நாயை அவிழ்த்து விட்டாங்க.''
''அடப்பாவி... சும்மாவா வந்தே...''

''வேற என்ன செய்ய முடியும். மீறிப் பேசினா, ஆண் துணை இல்லாத வீட்டுல வந்து கலாட்டா செய்றான்னு கூப்பாடு போடலாம்... ஏன் கைய புடிச்சு இழுத்தேன்னு கூட புகார் கொடுக்கலாம்... அப்புறம் சுந்தரப் பற்றி வெளியில விசாரிச்சேன். கடன் தொல்லை; தொழிலில் வருமானமும் கட்டுபடியாகல. அதனால, வந்த விலைக்கு காரை வித்துட்டு, தலைமறைவாயிட்டான்,''

என்ற சுரேஷை, பரிதாபமாக பார்த்து, ''ஏண்டா இப்படி இருக்க... முன்ன ஒரு தரம் பாலான்னு ஒருத்தனுக்கு, டூ வீலர் வாங்க கையெழுத்து போட்டே! அவன் டிமிக்கி கொடுக்க, நீ தானே உன் ரெண்டு வருஷ சம்பளத்தை தாரை வார்த்தே... அடி பட்டும் உஷாராக வேணாமா... உன்னை பைனான்ஸ் கம்பெனியில வச்சு கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்தினப்போ, முடியாதுன்னு சட்டுன்னு எழுந்து வந்திருக்க வேணாமா... பைக் கடன், சில ஆயிரம்; கார் கடன், பல லட்சமாச்சே...'' என்றான் ஆற்றாமையுடன் மணி.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 4:22 pm

''அது தான் என் கவலை... எனக்கே இப்ப பண நெருக்கடியா இருக்கு; இந்த நிலையில இப்படி ஆயிடுச்சு. இப்ப என்னால ஒரு லட்சம் ரூபா வரை புரட்ட முடியும். அதை போய் கட்டிட்டு, மீதித் தொகைய, கொஞ்சம் கொஞ்சமா கட்டுறேன்னு தவணை கேட்டு வாங்க வேண்டியது தான்,'' என்றான் சுரேஷ்.

''என்னடா தலையெழுத்து...'' சட்டென்று சீறினான் மணி.
''வேறென்ன செய்றது...''

''ஸ்டேஷனுக்கு போ; நானும் வர்றேன். இன்ஸ்பெக்டர்கிட்ட நடந்ததை சொல்லி, அவங்ககிட்ட உதவி கேட்போம். அவங்க ஏதாவது நடவடிக்கை எடுப்பாங்க; இல்லன்னா சட்டப்படி அந்த பைனான்ஸ் கம்பெனிக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப முடியுமான்னு பாப்போம்,'' என்றான் மணி.

''இதையெல்லாம் நான் யோசிக்காமலா இருப்பேன்...''
''அப்படின்னா நீ போலீஸ்ல புகார் கொடுத்துட்டியா...''
''அவனே தலைமறைவா இருக்கான். போலீச விட்டு தேட விட்டா, அது, வேற மாதிரி போயி, அவன் வாழ்க்கை மொத்தமா பாழாயிடுமோன்னு இருக்கு,'' என்றான் சுரேஷ்.

''இது என்னடா அநியாயம்... உன்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காம, சிக்கல்ல மாட்டி விட்டு, உன்கிட்ட, இதுபத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிருக்கான். அவனுக்கு போயி பரிதாபப்படுறே...''
''என்ன செய்யட்டும்... அவன் யாரோ, எவரோ இல்லயே... பாலாவும், இந்த சுந்தரபாண்டியும் ஒரு நேரத்தில, எனக்கு செய்த உதவி, உனக்கும் தெரியும் தானே...

''போக திசை தெரியாம, ஆதரிக்க ஆளில்லாம, அனாதையா நின்னப்ப, கூப்பிட்டு சோறு போட்டவங்க. அப்பாவுக்கு என்னை ஏனோ பிடிக்காது. நான் எது செஞ்சாலும் திட்டு, அடி தான்; விசாரணையே கிடையாது. அப்படியொரு ஹிட்லர் அவதாரம். ஒருமுறை, செய்யாத தப்புக்கு, என்னை அடி அடின்னு அடிச்சு, தூக்கி தெருவுல வீசிட்டாரு... ஊரே நின்னு என்னை வேடிக்கை பார்த்துச்சு. அப்பாவுக்கு பயந்து, சொந்தக்காரங்க கூட என்னை காப்பாத்த முன் வரலை.

''என் விளையாட்டு தோழர்களான இந்த சுந்தரும், பாலாவும் தான் என்னை தூக்கிகிட்டு போனாங்க. 'இனி, எங்க வீடு தான் உன் வீடு; இங்க தான் சாப்பிடணும், எங்க கூடத்தான் இருக்கணும்'ன்னு சொல்லி, எனக்காக அவங்க பெத்தவங்க கிட்ட கெஞ்சி, சம்மதம் வாங்கி காப்பாத்தினாங்க. ஒருநாள், ரெண்டு நாளில்ல; ஆறு மாசம் அவங்க சாப்பாட்டிலிருந்து, டிரஸ் வரைக்கும் பங்கு வச்சு, என்னை கவனிச்சாங்க. அப்புறம், அப்பா மனசு மாறி, என்னை கூட்டிக்கிட்டாரு.

''இன்னைக்கு, நானும் ஒரு குடும்பஸ்தனா, ஒரு வேலையில சேர்ந்து, சொந்தக்கால்ல நிக்கறேன்னா, அது யாரால... அன்னைக்கு அவங்க என்னை கவனிக்கலன்னா, என் கதி என்னாகியிருக்கும். ஆத்திரத்துல, கோபத்துல நான் எங்காவது குளம், குட்டைன்னு தேடிப் போகாம தடுத்தது அவங்க தானே! அதை நினைக்கணும்ல,'' என்றான் சுரேஷ்.

மணிக்கு மனம் கனத்து போயிற்று. அவன் தலையை வாஞ்சையுடன் தடவி, ''முதல் நாள் செய்த உதவிய, மறுநாளே மறந்து போகிற இந்த உலகத்துல, சின்ன வயசில் உதவிய நண்பர்களுக்காக, நன்றி மறக்காம, அவங்களுக்காக பெரிய சுமைய, தலையில் போட்டுக்கற பாரு... நீ நல்லாயிருப்படா,'' என்றான்.
''என் நண்பனையும், சேர்த்து வாழ்த்து; அவனும் நல்லா இருக்கணும்ல,'' என்றவாறு வேலையில் ஆழ்ந்தான் சுரேஷ்.

மாலை வீடு திரும்பிய போது, சுரேஷின் மனைவி ஒரு கடிதத்தை கொடுத்து, ''கொரியரில் வந்தது,'' என்றாள்.

பிரித்து பார்த்ததில், அவன் பெயருக்கு, 50,000 ரூபாய்க்கு ஒரு டிராப்ட்டும் கூடவே, ஒரு கடிதமும் இருந்தது.
அன்புள்ள சுரேஷ்,

ஒரு இக்கட்டான நிலையில், யாருக்கும் சொல்லாமல் தலைமறைவாகி விட்டேன். உன்னை சிக்கலில் மாட்டி விட்டேனே என்று, எனக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். இத்துடன், ஒரு தொகைக்கு டி.டி., அனுப்பியுள்ளேன்; மீதி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி, கடன் வாயிலிருந்து விலகிய பின், உன்னை வந்து சந்திப்பேன்.

— இப்படிக்கு,
சுந்தரபாண்டியன்.

கடிதத்தை படித்த சுரேஷின் விழிகள், கண்ணீரை உதிர்த்தது.

படுதலம் சுகுமாரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 4:32 pm

அருமையான கதை அம்மா. 
சந்தர்ப்பம் சூழ்நிலைகள் மனிதனின் உண்மை குணாதிசியத்த காட்டிடும். உதவி செய்தால் நிச்சயம் நன்மை மட்டுமே கிடைக்கும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 4:49 pm

சசி wrote:அருமையான கதை அம்மா. 
சந்தர்ப்பம் சூழ்நிலைகள் மனிதனின் உண்மை குணாதிசியத்த காட்டிடும். உதவி செய்தால் நிச்சயம் நன்மை மட்டுமே கிடைக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1195082

ஆமாம் சசி..............நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 22, 2016 6:19 pm

நல்ல கருத்துள்ள கதைமா பகிர்வுக்கு நன்றீ

நல்லது செய்தால் நல்லதே நடக்கும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 22, 2016 7:28 pm

சுருள்முடி சுந்தர் செய்தது தவறு .ஊரைவிட்டு ஓடும் முன்பாக ,சுரேஷைக் கண்டு பேசியிருக்கவேண்டும் .சுருள்முடி சுந்தரின் மாமியாரும் அவனைப்பற்றி நல்லவிதமாகச் சொல்லவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 24, 2016 12:28 am

ஜாஹீதாபானு wrote:நல்ல கருத்துள்ள கதைமா பகிர்வுக்கு நன்றீ

நல்லது செய்தால் நல்லதே நடக்கும்.

நன்றி பானுபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 24, 2016 12:28 am

M.Jagadeesan wrote:சுருள்முடி சுந்தர் செய்தது தவறு .ஊரைவிட்டு ஓடும் முன்பாக ,சுரேஷைக் கண்டு பேசியிருக்கவேண்டும் .சுருள்முடி சுந்தரின் மாமியாரும் அவனைப்பற்றி நல்லவிதமாகச் சொல்லவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1195143

அட ஆமாம் ஐயா, நீங்க சொன்னதும் தான் தோன்றுகிறது, ஏன் 2 வருஷமாய் இந்த நண்பகளிடம் தொடர்பு விட்டுப்போச்சு?................... அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 24, 2016 5:30 am

செஞ்சோற்றுக் கடன் என்பது ?????. நாடு நம்மை படைத்துள்ளது. நாம் நாட்டுக்காக செய்வதை செய்து செஞ்சோற்றுக்கடனை கழிக்கலாம். எப்படீங்கிரிங்களா@ கயமை ஊழல் அதிகாரிகளை \அரசியல் வாதிகளை அகற்ற திருந்தவைக்க ஏதேனும் உத்தி இருந்தால் கூறுங்க . அதுவே நாம் நாட்டுக்கு செய்யும் செஞ்சோற்று கடனாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 24, 2016 3:41 pm

செஞ்சோற்றுக் கடன்! 103459460 செஞ்சோற்றுக் கடன்! 3838410834
-
படுதலம் சுகுமாரன்
-
இவரது ஒற்றைத்துணுக்கு ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்தது.
-
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்
சிறுகதைகளில் முத்திரை பதிப்பவர்
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக