புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_m10அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:08 pm

என் நண்பரின் மகள், மிக அழகாக இருப்பாள். சாதாரண அழகல்ல, தேவதை மாதிரி என்று கூட கூறுவேன். இவள் என்னிடம் கூறிய செய்தி...

'அங்கிள்... இது வரை, 22 ப்ரப்போஸ்களை அதாவது, 'நான் உன்னை காதலிக்கிறேன் கண்ணே...' என்ற கோரிக்கைகளை நிராகரித்திருப்பேன், தாங்க முடியலை இந்தப் பசங்களோட தொல்லை! அசடு வழிஞ்சவங்க பட்டியல், இன்னும் அதிகம்...' என்று கூறிய போது, அசந்து போனேன்.

சென்னையில் உள்ள பிரபலமான தொழிற் கல்லூரியில், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி இவள். இவளது அழகிற்கு இருக்கும் ஆற்றலை விட, முகத்தில் அமிலம் வாங்காமல், 22 ஆண்களின் காதல் கணைகளை நிராகரித்து விட்ட வெற்றிகரமான செயல் தான், என்னை அதிகம் வியக்க வைத்தது.

இவளது அழகு, இவளின் முதல் ஆயுதம் என்றால், செய்த அலட்சியம், இரண்டாவது ஆயுதம். இவ்வளவு இளம் வயதில், அலட்சியம் எனும் பொல்லாத ஆயுதத்தை என்னமாய் கையாண்டிருக்கிறாள்...

காரணம், அலட்சியப்படுத்துவது என்பது, பிறரைக் காயப்படுத்தும் செயல். ஆனால், இதை காயப்படாமலும், காயப்படுத்தாமலும் கையாண்ட அழகு தான், இவளது அழகைவிட, மேலான அழகு என்பேன்.

ஒரு பெண், ஓர் ஆணின் செயல்களை, காதல் முயற்சிகளை அல்லது வார்த்தைகளை பொருட்படுத்துகிறாள் என்கிற போதுதான், இந்த ஒருதலைக் காதலனின் ஊக்கம் அதிகமாகிறது. உதாசீனப்படுத்தும் போது, 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்...' என்று எட்டாத திராட்சையை, நிராகரிக்கிற நரி போல், அவன் ஆகி விடுகிறான்.

காதல் விவகாரம் மட்டுமல்ல, நம்மை சீண்டிப் பார்க்கிறவர்களையும், நாம் மென்மையாக உதாசீனப்படுத்தும் போது தான், 'சே... இவன் நம்மைக் கண்டுக்கவே மாட்டேன் என்கிறானே...' என்று இவர்கள் சோர்வு அடைய ஆரம்பிக்கின்றனர்.

தம் செயல்களால், பிறர் பாதிக்கப்படுகிறார், எரிச்சலடைகிறார் என்று அறிகிற போது, இதை, நம் எதிராளிகள், பெரிய தூண்டுதலாக எடுத்து, மேலும் துன்புறுத்த ஆரம்பிக்கின்றனர்.

மாறாக, 'உங்களுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை; உங்களுக்கு ஈடு இணை இல்லை: உங்களுக்கு ஒருபோதும் நான் சமமாவேனா... உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா... நான் தானா அகப்பட்டேன்... என்னை விட்டு விடுங்கள்...' என்று மன்றாடுகிற போது தான், 'அப்படி வா வழிக்கு...' என்று குரூர சந்தோஷம் அடைந்து, நம்மை துன்புறுத்தும் பட்டியலிலிருந்து நீக்கி விட முன் வருகின்றனர்.

அதேநேரத்தில், எப்போது மண்டியிட, நாம் தயாரில்லையோ, அப்போதே, நாம் அலட்சியத்தை, ஆயுதமாக எடுத்துக் கொள்வதைக் தவிர வேறு வழியில்லை. நாம், இவர்களை அலட்சியப்படுத்துவது என, முடிவு செய்து விட்டால், அலட்சியப்படுத்துகிறோம் என்பது, வெளிப்படையாக தெரியாதபடி நடந்து கொள்ள வேண்டும்.
இதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பது, மிக முக்கியம்.

இவருக்கும், நமக்கும் இடையே, பொதுவான மனிதர்கள், அவ்வப்போது நம்மைக் கடந்து போவர். இவர்களிடம், 'உங்கள் ஆள், என்னை சும்மா சீண்டிப் பார்க்கிறார்; இது, என்னிடம் நடக்காது.

அந்தாளை, நான் சட்டை செய்யவே மாட்டேன் தெரியும்ல... உங்கள் ஆளின் பாச்சாவெல்லாம், என்னிடம் பலிக்காது தெரிஞ்சுக்குங்க; சொல்லியும் வையுங்க...' என்பது போல், ஏதும் பேசி வைக்கக் கூடாது. இது, 'வா... இன்னும் எனக்குத் தொந்தரவு கொடு...' என்று சிவப்புக் கம்பளம் விரித்து, பன்னீர் தெளித்து, சாமரம் வீசி, வெற்றிலை, பாக்கு வைத்து, வரவேற்பதற்கு சமம்.

மாறாக, 'அவரெங்கே... நானெங்கே...' என்று அடக்கி வாசித்து விட வேண்டும். மாறாக, 'ஐ டோன்ட் கேர்...' என்று மட்டும் கூறி விட்டால் போச்சு! ஓய்ந்து கிடந்த தொந்தரவுகள், புதுப்பிக்கப்படும். பரணில் கிடந்த கோப்புகள், மேஜைக்கு வந்து விடும்.

'என்னய்யா இந்தாளு... எதுன்னாலும் கண்டுக்கவே மாட்டேங்குறான். இவன் போக்கே புரியலையே... இந்தாளோட கொள்கையே, கொஞ்சம் கூட பிடிபடலையே... இடிச்ச புளி மாதிரி இருக்கானேய்யா...' என்று எதிராளியை புலம்பவும், குழப்பவும் வைத்து விட வேண்டும். இதிலேயே முக்கால்வாசிப் பணி முடிந்தது.

லேனா கூறிவிட்டார்... 'இனி, அலட்சியமே என் வாழ்வின் பிரதானக் கொள்கை...' என்று எவரும் புறப்பட்டு விடக் கூடாது. கீழ்க்கண்ட வாக்கியம் தான், இக்கட்டுரையிலேயே, அடிக்கோடு இடப்படவேண்டிய செய்தி...

குடும்பம், தொழில், கடமை, புகழ், பொருள், உடல்நலம், சமூக அக்கறை மற்றும் மனிதநேயம் இவையே நம் லட்சியம்; மற்றவையெல்லாம் நமக்கு அலட்சியம்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:12 pm

டைந்துவிடக் கூடிய லட்சியத்திற்கு பெரிதும் உதவுவது லட்சியம்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 9:29 am

ஒரு ஆணின் காதலை  நிராகரிக்க , பெண் ஒன்றும் செய்யவேண்டியதில்லை ; பேசாமல் இருந்தாலே போதும் ! அவன் புரிந்துகொண்டு போய்விடுவான் .

22 பேர் காதலித்தார்கள் ; வழிந்தவர்கள் இன்னும் அதிகம் என்று எண்ணிக்கை சொல்லும்போதே , இந்தப் பெண்ணும் சபலப் பட்டிருக்கிறாள் என்பது புரிகிறது . இந்தக் காலத்தில் காதலை நிராகரிப்பது ஒரு சாதனை அல்ல ; ஒருவனைக் காதலித்து , பெற்றோர் அனுமதியுடன் கல்யாணம் செய்வதுதான் சாதனை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக