புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 5:18 pm

First topic message reminder :

மகா பெரியவா

காலுக்கு கீழே உள்ள மூலிகை!

பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக  இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள்.  அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான்.  ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.
ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள்.  இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி,  பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.


நன்றி மின்னஞ்சல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:29 am

யினியவன் wrote:ஆறறிவு இருப்பதால் மனிதன் என அழைக்கலாம்
ஆறறிவும் இயங்கினால் ஞானி என போற்றலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1190132

நிஜம்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 29, 2016 9:58 pm

ஐயா அனைத்தையும் அறிந்ததால் தான் மகா பெரியவர்.கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது ஐயா. இன்னும் தகவல்கள் இருந்தால் பகிரவும் ஐயா. நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 29, 2016 10:00 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:ஆறறிவு இருப்பதால் மனிதன் என அழைக்கலாம்
ஆறறிவும் இயங்கினால் ஞானி என போற்றலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1190132

நிஜம்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
[url=http://www.eegarai.net/t127410p30-iii#1190233]மேற்கோள் செய்த பதிவு: 1190233[
[size=34]உண்மை அண்ணா. அருமை 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 9:34 pm

மஹா பெரியவா (தொடர்)IV --தெய்வம் தந்த சோறு

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட அலமேலு ,சேலத்தில் இருந்து காஞ்சிபுரம் வந்தார் .மடத்து குடியிருப்பில் தங்கிக்கொண்டு ,சமையல் வேலைக்கு சென்றார் தினமும் காஞ்சி பெரியவரை தரிசனம் செய்வதை கடமையாக கொண்டார் .ஐம்பது வயதில் காஞ்சிபுரம் வந்த  அவருக்கு எழுபது வயது ஆனது . அதன் பின் வேலைக்கு செல்ல முடியவில்லை . பக்கத்து தெருவில் உள்ள வசந்தாவின் ஆதரவுடன் பொழுதை கழித்தார் .
ஒரு முறை வசந்தாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் திருச்சி செல்ல நேர்ந்தது .இந்த நேரத்தில் அலமேலு பாட்டிக்கு ஜுரம் வந்து விட்டது .பசியால் வாடிய அவர் கவனிப்பார் இன்றி படுக்கையில் கிடந்தார் .வாய் மட்டும் "பெரியவா , பெரியவா"என்று அவரது திருநாமத்தை முணுத்து முணுத்துக் கொண்டே இருந்தது .

திடிரென்று பாட்டி பாட்டி ,என்று சப்தம் கேட்டது .தட்டு தடுமாறி எழுந்த பாட்டி கதவை திறந்தார் . அங்கு வசந்தாவின் மகள் காமாட்சி  நின்றாள் .கையில் சாப்பாடுக் கூடை இருந்தது .
"என்னப் பாட்டி ஒடம்பு தேவலையா " என்றாள் சிறுமி.
தலை அசைத்தாள் பாட்டி .
சிரித்தப்படியே காமாட்சி," பாட்டி ,இந்த கூடையில் ரசம் சாதம் இருக்கு . சாப்பிட்டுட்டு நிம்மதியாய் இருங்கோ .நான் பாட்டு கிளாசுக்கு போயிட்டு வரேன் " என்று சொல்லிட்டு ஓடினாள் .
கூடைக்குள் சாதத்துடன் ,மிளகு ரசம் ,சுட்ட அப்பளம் ,உப்பு நார்த்தங்காய் , வெந்நீர் , காய்ச்சல் மாத்திரை என அனைத்தும் இருந்தது  வசந்தாவின் பாசத்தை எண்ணி நெகிழ்ந்து விட்டார் பாட்டி .
நன்றாக சாப்பிட்டு ,மாத்திரையும் போட்டுக் கொண்டதால் காய்ச்சல் விட்டது .வசந்தாவை பார்க்க , பாட்டி புறப்பட்டார் .
வீடு பூட்டி இருந்தது
"திருச்சியில் இருந்து இன்னும் வசந்தா  வரலையே " என்றார் பக்கத்து வீட்டுப் பெண் .
பாட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை .
காமாட்சி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாளே !அது எப்பிடி ? என்ற கேள்வி எழுந்தது .
அந்த சிந்தனையுடன் பாட்டி பெரியவரை தரிசிக்க சென்றார் .அவரது காலில் விழுந்தார் .
எப்பிடி இருக்கேள் ?காய்ச்சல் தேவலையா ? என்று  கேட்டார் .
தான் காய்ச்சலில் அவதிப்பட்டது எப்பிடி தெரிந்தது ? என்று புரியாமல் திகைத்தார் !
மிளகு ரசம் ,சாதம் வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா ?" என்று கேட்டு மேலும் வியப்பில் ஆழ்த்தினார், பெரியவா .
பாட்டி வாய் அடைத்து நின்றார் .
சிரித்த பெரியவா , ,திருச்சிக்கு போன காமாட்சி இன்னும் வரலை .இந்த காஞ்சிபுரத்தை ஆட்சி செய்யற காமாட்சிதான் உன்னைத்  தேடி வந்தா " என்று கோவில் இருக்கும் திசையை காட்டினார்.
அலமேலு பாட்டி அப்பிடியே சிலையாகிப் போனார் . உலகநாயகியான காமாட்சியையே,தன்  பக்தைகாக   அனுப்பிய ,
பெரியவரின் மகிமையை எடுத்து சொல்ல வார்த்தைகளே இல்லை .
------------------------------------------------------------------
நன்றி ஆன்மீக மலர் :வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 10:09 am

மகான்கள் கண்ணுக்கு அனைத்தும் தெரியும் என்பதை நிரூபிக்கும் பகிர்வு ஐயா. நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:32 am

ம்ம்...பெரியவரின் மகிமையை எடுத்து சொல்ல வார்த்தைகளே இல்லை...............ரொம்ப சத்தியமான வார்த்தைகள்................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2016 9:13 am

krishnaamma wrote:ம்ம்...பெரியவரின் மகிமையை எடுத்து சொல்ல வார்த்தைகளே இல்லை...............ரொம்ப சத்தியமான வார்த்தைகள்................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1191718

ஆம் சொல்ல வார்த்தைகளுக்கு பஞ்சம்
சொல்லிக் கொண்டே இருக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2016 9:14 am

சசி wrote:மகான்கள் கண்ணுக்கு அனைத்தும் தெரியும் என்பதை நிரூபிக்கும் பகிர்வு ஐயா. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1191709

அவர் ஒரு சித்தப் புருஷர் ., சசி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2016 3:57 pm

பெரியாரும் மகா பெரியவரும்----மகா பெரியவா V ----(தொடர்)

காஞ்சி பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார் லஸ்  அருகில் .

அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்கு திராவிடர் கழகத்தினர் , கழி கட்டைகளுடன்
தயாராக ,அவர் போகும் வழியில் இருந்தார்கள் .காஞ்சி பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்து விட்டால் அதைத்  தாங்கிக் கொள்ளமுடியாதே என்கிற பதைப்போடு , டி டி கே , சதாசிவம் போன்றோர் கையை பிசைந்துக் கொண்டு நிற்கிறார்கள் . பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள் .இருந்தாலும் அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்கிற பயத்தில் அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள் .

பெரியவர் புன்னகைக்கிறார் .," ஏன்  வீணா பயப்படறேள் ? அவ என்னை ஒண்ணும் பண்ண மாட்டா என்று சொல்லி விட்டு அருகே இருக்கும் அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்துவிட்டு , மேலே நடக்கத் தொடங்குகிறார் .கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்.. திக் . !என்ன ஆகப் போகிறதோ என்ற படபடப்பு !
அதே நேரத்தில் , .. ஈ வே ரா பெரியார் அங்கே வருகிறார் . திராவிடர் கழகத்தொண்டர்களை பார்த்து  உரத்த குரலில் ,:"எல்லோரும் கட்டைகளை கீழே போட்டுட்டு , ஒதுங்கி நில்லுங்க . பெரியவரை வழி மறிக்கிறது , தாக்குறது எல்லாம் கூடாது . சொல்லிட்டேன் . அவர் எங்கே போகணுமோ அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாமல் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டியது உங்கப் பொறுப்பு " என்று கட்டளை இடுகிறார் .அந்தக் கணீர்க்குரல் பெரியவருக்கும்  அவரை சுற்றி நிற்கும் அனைவருக்கும்  கேட்கிறது .

நாந்தான்  சொன்னேனே பார்த்தீர்களா ! என்பது போல் , பெரியவர் தன் அருகில் இருப்பவர்களைபார்த்துப் புன்னகை பூத்தப்படி, தொடர்ந்து நடக்கிறார் .  பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு , பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு போய் விடுகிறார்கள் .

இந்த சம்பவம் நடக்கும் போது கூடவே இருந்தவர் லக்ஷ்மி நாராயணன்  இதை விவரித்தப் போது அன்றைக்கு இருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது .

இந்த சம்பவத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை , காஞ்சி பெரியவர் "மேனா " என்னும் சொல்லக்கூடிய  சிவிகையில்தான் சென்று கொண்டு இருந்தார் .சிவிகை என்பது பல்லக்கு . பழைய காலத்தில் திரைப்படங்களில்  இளவரசியை பல்லக்கில் வைத்து , முன்னால் நாலு பேர் பின்னால் நாலு பேர் தூக்கி செல்வதைப் பார்த்து இருக்கலாம் .

பெரியவரையும்  அதுபோல் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள் .

ஒரு முறை ,பெரியவர் அது போல் மேனாவில்  சென்று கொண்டு இருந்தபோது , வழியில் மேடைப் போட்டுப் பெரியார் பேசிக் கொண்டு இருக்கிறார் .. மற்றவர்கள் சிரமப்பட்டு தூக்கி செல்ல , சொகுசா உட்கார்ந்துப் போறாரே , இவரெல்லாம்  துறவியா ? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனை கேவலமானது . துறவி என்றால் எல்லா சுகத்தையும் துறக்கவேண்டும்  இப்பிடி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து செல்லும் இவரை எப்பிடி துறவி என ஒப்புக்கொள்ளமுடியும் ?

என்று பெரியார் முழங்கிக் கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது .
அவ்வளவுதான் .மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர் .
" அவர் ஏதோ சொல்றார் , அதை பெரிசா எடுத்துக்காதீங்கோ . உங்களை சுமந்துண்டு போறதை நாங்கள் பாக்கியமா  கருதுகிறோம்  என்று மடத்தை சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள் .
இல்லை அவர் சொல்லறதுதான் சரி!   சுகத்தை துறக்காதவன் துறவியே இல்லை .இனிமே இந்த மேனா வேண்டாம் . இனி நான் எங்கே போகணும்னாலும்   நடந்துதான் நடக்கப் போகிறேன் .என்று தீர்மானமான முடிவெடுத்து விட்டார் .காஞ்சிப் பெரியவா .

கடைசி வரையிலும் அந்த முடிவில் இருந்து மாறவேயில்லை  
அவர் கால்கள் தெம்பு இருக்கும் வரை நடந்துக் கொண்டே இருந்தன .  


ஜய ஜய சங்கரா ஹரஹர சங்கரா !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 09, 2016 4:19 pm

I நல்ல பதிவு ஐயா. பகுத்து அறிந்து தெரிந்து கொண்டு பேசுபவர் பெரியார். கொள்கையில் பிடிவாதமானவர். பெரியாவா கண்டால் மரியாதை தானாக ஏற்படும். இராமலிங்க அடிகளார் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்து இருந்தனர்,அவருக்கு வேண்டாதவர்கள். ஆனால் நீதிமன்றம் சென்றதுடன் நீதிபதி எழுந்து நின்று வரவேற்றனர் அது தான் அவரின் தெய்வீக தன்மை. அது போல பெரியவா விஷயத்திலும் நடந்துள்ளது. நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக