புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
74 Posts - 44%
heezulia
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
71 Posts - 43%
prajai
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
10 Posts - 5%
prajai
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
8 Posts - 4%
Jenila
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
3 Posts - 1%
jairam
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 11:31 am

எல்லோரும் அறிய வேண்டிய / ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டிய
பெரும் அளவில் உதவக்கூடிய தமிழ் இலக்கண சிறு குறிப்பு .
நன்றி ,Jagadeesan அவர்களே .

ரமணியன்

பிகு : கவிதை களஞ்சியம் பகுதியில் இருந்து ,தகவல் களஞ்சியம் /பொது அறிவுக்கு
மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 12:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 12:40 pm

தொடர்ச்சியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் ! இரமனியன் மற்றும் அய்யாசாமி ராம் அவர்கள் கொடுத்த ஊக்கத்திற்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jul 20, 2015 1:01 pm

நல்ல முயற்சி, தொடருங்கள் ஐயா.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 1:53 pm

எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?

தொடருங்கள்  jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 7:48 am

T.N.Balasubramanian wrote:எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?

தொடருங்கள்  jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151719

அருமையாக சொன்னீர்கள் ரமணி அய்யா ...ரமணீயன் அய்யா .
தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 11:15 am

shobana sahas wrote:தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .


நீங்க எழுதிருக்கறதை பார்த்தாலே தெரியுது



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இலக்கணம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:47 pm

அருமை யான திரி ஜகதீசன் ஐயா..தொடருங்கள்................உங்களை தொடரக்காத்திருக்கோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 21, 2015 12:58 pm

"ய், ர், ழ் " ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து மட்டுமே ஒற்றெழுத்துக்கள்   வரவேண்டும் என்று பார்த்தோம் .இப்பொழுது சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போமா !

"ய்," அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துகள்
--------------------------------------------------------------------------
புலிபோலப் பாய்ந்தான் .
தாய்ப்பாசம்
நாய்க்குட்டி
பாலைக் காய்ச்சினாள்
ஆய்ச்சியர் குரவை
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்

"ர் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
பார்த்த ஞாபகம் இல்லையோ ?
கூர்ந்து நோக்கினான்
மோர்க்குழம்பு
வேர்க்கடலை

" ழ் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
வாழ்க்கை
வாழ்ந்து கெட்டவன்
கீழ்ப்பாக்கம்
யாழ்ப்பாணம்
வாழ்த்தினான்

சரி மாணவர்களே ! இப்பொழுது ஒரு கேள்வி . தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் .

பாய் கடை  ஆனால் பாய்க் கடை .

இதன் பொருள் என்ன ? சாகுல் ஹமீது நீ சொல் பார்க்கலாம் .

" ஐயா ! முஸ்லிம் மக்களை " பாய் " என்று கூப்பிடுவார்கள் .எனவே பாய் கடை என்றால் முஸ்லிம் ஒருவர் நடத்துகின்ற கடை என்று பொருள் . பாய்க்கடை என்றால் படுக்கின்ற பாய்களை விற்கின்ற கடை என்று சொல்லாம் .

அருமையான விளக்கம் என்று சொல்லி சாகுல் ஹாமீதைத் தட்டிக் கொடுத்தார் ஆசிரியர் .

மாணவர்களே ! இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது ? இரு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுந்தால்  ஒரு பொருளும் ,, ஒற்று மிகவில்லைஎன்றால் வேறொரு பொருளும் கிடைக்கும் என்பது தெரிகிறது . எனவே தமிழ் மொழியில் நாம் எழுதும்போது மிகவும்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . ஒற்று போடக்கூடாத இடத்தில் போட்டாலும் , போடவேண்டிய இடத்தில் போடாமல் விட்டாலும்  பொருட் குற்றம் உண்டாகும் .

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் . ( தெரிந்து செயல்வகை-406 )

என்ற குறளின் பொருள் இதற்கும் பொருந்தும்

மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .

மருந்து கடை - மருந்தைக் கடை  (  கடைதல்  - தொழிற்பெயர் )
மருந்துக் கடை -  மருந்தை விற்கும் கடை

வேலை தேடு - ஒரு வேலையை தேடு
வேலைத் தேடு - வேல் என்ற ஆயுதத்தைத் தேடு

நடுகல் - செத்தார்க்கு நடப்படுகின்ற கல்
நடுக்கல் - நடுவில் உள்ள கல்

சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு

கைமாறு - ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றுவது .
கைம்மாறு - நன்றிக்கடன்

பொய் சொல் - பொய் சொல்வாயாக ! ( ஏவல் )
பொய்ச்சொல் - பொய்யான சொல்

ஆசிரியர் : மீண்டும் நாளை பார்ப்போம் .

மாணவர்கள் : நன்றி  ஐயா !

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக