புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
2 Posts - 3%
Rutu
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
1 Post - 2%
manikavi
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
2 Posts - 9%
viyasan
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
1 Post - 4%
Rutu
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
1 Post - 4%
manikavi
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_m10தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 09, 2015 1:21 am

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திடீர் அதிரடி உத்தரவின் பின்னணி:

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் என்.குமார் (30), கடந்த 2011 மே 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கூடுதல் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி குமாரின் மனைவி மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விபத்து நடந்தபோது குமார் ஹெல்மெட் அணியாததால் பலத்த தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

சாலை விபத்தில் குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது. செய்த தர்மம் தலைதாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்று தமிழில் சொல்லப்படுகிறது. தர்மம் தலையைக் காக்கிறதோ, இல்லையோ, ஹெல்மெட் அணிந்தால் அது நிச்சயம் தலையைக் காக்கும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.

நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோரை தினமும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 6,419 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி பார்த்தால், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தமிழகத்தில் மட்டும் தினமும் 17 பேர் இறக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம், வெறுமனே அபராதம் மட்டும் விதிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமாகும்.

இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகவோ அல்லது ஊழல் செய்வதாகவோ புகார் வந்தால், அதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்று வரும் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக உள்துறை முதன்மை செயலாளரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ஐ மீறுவதாக இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்.

முக்கிய சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

துண்டுப்பிரசுரம், குறும்படம்

ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விற்பனையாகும் ஹெல்மெட் அணிவதே ஆபத்தானது என்று நினைக்கிறேன்! ஹெல்மெட்டை கையாலே வளைத்து ஒடித்து விடலாம் பொலிருக்கிறது. அதன் தரம் அவ்வளவு கேவலமாக உள்ளது. இவ்வாறான ஹெல்மெட் அணிந்த ஒருவர் கீழே விழுந்தால் அந்த உடைந்து மண்டையைக் கிழித்துவிடும்.

மேலும் காவல்துறையினர் பிரத்யேக வருமானத்திற்கும் இந்த உத்தரவு வழிவகை செய்துள்ளது!




தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 1:27 am

இதே போல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் , பயணம் செய்வோர் அனைவரும் seat.பெல்ட் அணிய வேண்டும் என்று சாலை விதி கொண்டு வர வேண்டும் . அப்போது தான் விபத்து ஏற்பட்டாலும் உயிர் எழுப்பு இருக்காது .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 7:13 am

shobana sahas wrote:இதே போல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் , பயணம் செய்வோர் அனைவரும் seat.பெல்ட் அணிய வேண்டும் என்று சாலை விதி கொண்டு வர வேண்டும் . அப்போது தான் விபத்து ஏற்பட்டாலும் உயிர் எழுப்பு இருக்காது .
மேற்கோள் செய்த பதிவு: 1142960

சீட் பெல்ட் அணிவது நல்லதுதான் .
ஆனால் , சென்னை நகரில் ,காரில் போகும் போது, குறுகிய /மேடு பள்ளங்கள் உள்ளத் தெருக்கள் ,வண்டிகளின் எண்ணிக்கை உங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி , அதி வேக அபாயத்தை தவிர்க்கிறது .
ஹைவேயில் போகும்போது சீட் பெல்ட் உதவிகரமாக இருக்கும் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 09, 2015 7:40 am

தருமம் தலை காக்கும் ; தக்க சமயத்தில் உயிர் காக்கும் .

தருமம் மட்டுமல்ல

ஹெல்மெட்டும் தலைகாக்கும் ; விபத்து நடந்தால் உயிர்காக்கும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 10:02 am

ஆண்டாண்டு காலமா இப்படியேத்தான் சொல்றாங்க..
காச வாங்கிட்டு கண்டுக்காம விட்டுபுடுறாங்க.....இதற்கு முன்பு கூட இந்த சட்டம் கட்டாயமாக்கப் பட்டது...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 09, 2015 10:09 am

தீவிரவாதம், தொழில்சாலை விபத்துகளைக் காட்டிலும் அதிக உயிர் பலி ஆவது சாலை விபத்துகளில் தான்.

ஒரு விபத்தை தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளில்  உள்ள பல நிலைகளில், தனிநபர் பாகாப்பு கருவிகள் (ஹெல்மட், சீட் பெல்ட்  போன்றவைகள்) கடைநிலையில் தான் உள்ளது. இதற்கு முன்னர் பல படிநிலைகள் உள்ளது. ஆனால் வழக்கம் போல் ஊடகமும், அரசும் மக்களை திசைதிருப்பி ஹெல்மெட் போட்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என்று பரப்புகிறது.

உண்மையில் விபத்து நடப்பதற்கு முக்கியமான காரணிகள் முறையற்ற பயிற்சியில் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்களும், முறையற்ற சாலைகளும், சாலைக் குறியீடுகளும் தான்.
மது போதை கூட குறைந்த சதவீதம் தான்..ஆனால் மேற்சொன்ன காரணங்கள் தான் பெரும்பாலான விபத்துக்கு காரணிகள். இவைகளைப் பற்றி நாம் பேசுவதே இல்லை.

அதுமட்டுமல்ல வாகனத்தின் அடிப்படை பாதுகாப்பு கருவிகளைப் பற்றி நாம் கவலைப் படுவதே இல்லை.  சமீபத்தில் ஏற்படுத்த இருந்த வாகன திருத்தச் சட்டம் ஏதோ ஒரு காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.. இங்கு தயாரிக்கும் பிரபல நிறுவன வாகனங்களும் உலக அரங்கில் லாயக்கற்றவை என்பதை நாம் எப்போது உணர்வது ?? இறப்புக்கு விதியை மட்டுமே குறை கூறி வாழ்ந்து மதியால் செய்ய வேண்டிய மாற்றத்தை செய்யாத வரை இது போன்ற விபத்துகள் தொடரும்.



சதாசிவம்
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jun 09, 2015 11:20 am

ஹெல்மெட் கண் துடைப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 09, 2015 11:59 am

விதிமுறைகளை கடைமையே என்று பயன்படுத்தாமல் , நமது பாதுகாப்பு மற்றும் அடுத்தவர்களின் பாதுகாப்புக்காக என்று நினைத்தோமானால் அனைவருக்கும் நல்லது.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:40 pm

ராஜா wrote:விதிமுறைகளை கடைமையே என்று பயன்படுத்தாமல் , நமது பாதுகாப்பு மற்றும் அடுத்தவர்களின் பாதுகாப்புக்காக என்று நினைத்தோமானால் அனைவருக்கும் நல்லது.

மேற்கோள் செய்த பதிவு: 1143023

இந்த நல்லெண்ணம் , ஒழுங்குடைமையின் முதல் படி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Tue Jun 09, 2015 12:41 pm

இந்த ஆண்டு ஹெல்மெட் விற்பனை இலக்கை அடைந்தவுடன் ஹெல்மெட்
சட்டம் கண்டிப்பாக அணியும்  தூங்கி விடும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக