புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
34 Posts - 37%
heezulia
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
1 Post - 1%
mruthun
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
106 Posts - 46%
ayyasamy ram
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
77 Posts - 33%
Dr.S.Soundarapandian
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_m10கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat 30 May 2015 - 12:48

சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம் இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் அறிய மாட்டார்கள் .


சினிமாக்காரர்கள் ரசிகர் மன்றங்கள் முலமாகவும் , அரசியல்வாதிகள் கட்சிக் கிளைகள் மூலமாகவும் , ஆன்மீகவாதிகள் மடக் கிளைகள் மூலமாகவும் தொடர்ந்து துதிபாடப்படுகிறார்கள். ஒவ்வொரு ரசிகர் மன்றமும் , கட்சிக் கிளையும் , மடக் கிளையும் குறிபிடத்தக்க அளவு அங்கத்தினரைக் கொண்டு செயல்பட்டு கதாநாயக துதிபாடல் வற்றிப்போய்விடாமல் வளர்க்கப்படுகிறது. சமூக அளவில் பெரும் குற்றமாக கருதப்படுவதையோ , சமூக அளவில் மிகக்கேவலமாக மதிப்பிடப்படுவதையோ இந்தத் தலைவர்களாக கொண்டாடப்படுபவர்கள் செய்யும் போது இவர்களை

இந்தத்துதிபாடிகள் குற்றவாளிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் செய்த குற்றத்திற்கு , கேவலமான செயலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவார்கள். இந்த இடத்தில் தான் துதிபாடிகள் அடிமைகளாக மாறுகிறார்கள்.


தனிமனித துதிபாடல் எங்கெல்லாம் வளர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் எதிர்நிலைகள் தொடர்ந்து இயங்குகின்றன. ஒரு அரசியல்வாதிக்கு மாற்றாக மற்றொரு அரசியல்வாதி , ஒரு சினிமாக்காரருக்கு மாற்றாக மற்றொரு சினிமாக்காரர் ,ஒரு ஆன்மீகவாதிக்கு மாற்றாக மற்றொரு ஆன்மீகவாதி , ஒரு கலைஞருக்கு மாற்றாக மற்றொரு கலைஞர் , ஒரு விளையாட்டு வீரருக்கு மாற்றாக மற்றொரு விளையாட்டு வீரர் என்று எதிர்நிலைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. எதிர்நிலைகள் காரணமாக இருபிரிவினருக்கும் இடையே மோதல்கள் உருவாகின்றன. தான் தலைவனாக நினைத்து துதிபாடும் ஒரு மனிதனை , இன்னொரு மனிதன் தரக்குறைவாக பேசும் போது அவனிடம் பெருங்கோபம் உண்டாகிறது.

இந்தக் கோபம் மோதலுக்கு வழிவகுக்கிறது.


இந்தத் தனிமனித துதிபாடல் ஒரு மனிதனின் சுயத்தை அழித்து ஒரு சார்புநிலையை உருவாக்கிவிடுகிறது

தான் துதிபாடும் ஒருவர் எது செய்தாலும் சரிதான் என்ற மூடத்தனத்தை இந்த சார்புநிலை உருவாக்குகிறது. இந்தச் சார்புநிலை தான் ஆபத்தானது. பெரும் பாதிப்புகளை உருவாக்கக்கூடியது . அவ்வளவு எளிதாக தான் துதிபாடும் ஒருவரை மாற்றமாட்டார்கள் இந்தத் துதிபாடிகள். தனிமனித துதிபாடலில் முகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சினிமாக்காரர்களின் , அரசியல்வாதிகளின் , ஆன்மீகவாதிகளின் விதவிதமான கோணங்களில் படம்பிடிக்கப்பட்ட முகங்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் காட்டப்படுவதன் மூலம் இந்தத் துதிபாடல் அறுபடாமல் தொடர்ந்து பேணப்படுகிறது. இந்த முகங்களைக் காட்டி துதிபாடலை வளர்ப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் தான் அதிகளவில் முகங்களைத் தொடர்ந்து காட்டி துதிபாடலை வளர்க்கின்றன.


சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கணும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் இந்த தொல்லைக்காட்சிகள் தான் முக்கிய காரணம்.சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகளவிலும் , அரசியல் ஆன்மீக அடுத்தடுத்த அளவிலும் இடம்பெறுகின்றன.


ஒவ்வொரு சாதியும் சங்கம் வைத்திருக்கிறது. அந்த சாதியைச் சார்ந்தவர்களில் யார் சமுகத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்களோ அவர்களை முன்நிறுத்தி அடுத்த தலைமுறைக்கும் சாதியை எளிதாக கடத்துகிறார்கள். இவர்களால் முன்னிறுத்தப்படும் சாதித் தலைவர்களில் பெரும்பான்மையோர் ஒட்டு மொத்த சமூகத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அந்தத் தலைவர்களை சாதித் தலைவர்களாக சுருக்கி விடுகிறார்கள். சமீப காலங்களில் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் சேர்ப்பதும் தங்களின் வாகனங்களில் சாதிப் பெயரை எழுதுவதும் அதிகரித்து வருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல. சாதியை ஒழிக்க வேண்டிய கல்விக்கூடங்களான பள்ளிகள் , கல்லூரிகளின் பெயர்களே வெளிப்படையான சாதிப் பெயர்களாகவும் மதப் பெயர்களாகவும் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. சாதியின் ஆணிவேரைக் கண்டடைந்து வேரறுக்க வேண்டியது நம் சமூகத்தின் கடமை. பெரியார் அளவிற்கு மற்றவர்கள் செயல்படாதது தான் இன்றைய நிலைமைக்கு காரணம்.


எந்த மனிதரும் எந்த மனிதரையும் துதிபாடலாம் , கொண்டாடலாம் . தவறில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.ஆனால் இந்தத் துதிபாடலால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். நடைமுறையில் இந்தத் துதிபாடலால் நடைபெறும் செயல்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பிரிவினைவாதத்தை தொடர்ந்து முன்நிறுத்துவதாகவும் மட்டுமே இருக்கின்றன. சார்புநிலையை விட்டு வெளியே வந்து தான் துதிபாடும் ஒருவர் தப்பு செய்தால் தப்பு தான் என்று கூறும் நடுநிலையான மனநிலையையே இப்போதைய தேவை. இந்தத் துதிபாடல்களாலும் , எதிர்நிலைகளாலும் , சார்புநிலைகளாலும் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை கிடைக்காமலே போகின்றன. ஒரு சிறுவிசயத்திற்கு கூட காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இந்தத் துதிபாடல்கள் காரணமாக செயல்படாதவர்கள் கூட தொடர்ந்து தலைவர்கள்களாக இருக்கிறார்கள். செயல்படும் தலைவர்கள் தான் இன்றைய தேவை. நாம் சுயமாக சிந்திப்பதற்கு இந்தத் துதிபாடல் சார்ந்த சார்புநிலை தடையாக இருக்கிறது.


துதிபாடாமைக்கு துதிபாடுங்கள் !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 30 May 2015 - 21:12

நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கீங்க? திருந்துவாங்களா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 30 May 2015 - 21:37

நன்று

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat 30 May 2015 - 22:01

கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! 3838410834 கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! 103459460

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun 31 May 2015 - 3:40

கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! 103459460 கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! 3838410834 கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 31 May 2015 - 9:41

நன்று

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Fri 5 Jun 2015 - 23:54

நன்றி நன்றி கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் ! 1571444738 ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக