புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
44 Posts - 43%
heezulia
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
2 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10தேசியச் செய்திகள் - Page 12 Poll_m10தேசியச் செய்திகள் - Page 12 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 3:28 pm

827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை
புதுடெல்லி:

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை
வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச
அளவில் செயல்பட்டு வருகின்றன.

இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை.

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மட்டும்
இடம்பெற்றால் அவை தடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி
உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று
தொடரப்பட்டு இருந்தது.

அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய
தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27-ந் தேதி
உத்தரவிட்டனர்.

இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல்
தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான
நடவடிக்கைகளை எடுத்தது.

கோர்ட்டு கூறிய 857 ஆபாச தளங்களை ஆய்வு
செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை.
மீதி 827 தளங்களில் ஆபாச படங்கள் இருந்தன.

எனவே, அந்த தளங்களை முடக்கும்படி மத்திய
எலெக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத்துறை டெலிபோன்
துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதையடுத்து அந்த துறை இணையதள வசதிகள் வழங்கும்
அனைத்து டெலிபோன் நிவனங்களுக்கும்
ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி படிப்படியாக ஆபாச இணைய தளங்கள்
முடக்கப்பட்டு வருகிறது.
-
-----------------------------
மாலைமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 3:32 pm

கொள்கை முடிவெடுக்க சிபிஐ தற்காலிக இயக்குநருக்கு தடை

புதுடில்லி:
அலோக் வர்மா மீதான புகாரை 10 நாட்களில் விசாரித்து
முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்,
இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் கொள்கை
முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது.

அச்சம்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர்
ராகேஷ் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய
அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது.

மத்திய அரசின் முடிவை எதிர்த்து, அலோக் வர்மா சுப்ரீம்
கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கு இன்று
விசாரணைக்கு வந்த போது, அலோக் வர்மா சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் பாலி நாரிமன், மத்திய அரசின் முடிவால்,
வர்மாவின் 2 ஆண்டுகள் பதவிக்காலம் எப்போது
வேண்டுமானாலும் குறைக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

சட்ட விதிகளுக்கு எதிராக சிவிசி மற்றும் மத்திய அரசு முடிவு
எடுத்து உள்ளதாக கூறினார்.

10 நாள்

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உங்களின்
கோரிக்கையை நாங்கள் கவனிக்கிறோம். தற்போது, எந்த
மாதிரியான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்
என்பதை ஆராய வேண்டும்.

பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில்
விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவிடம் சிவிசி,
10 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனக்
கூறினார்.

எதிர்ப்பு

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்,
துஷார் மேத்தா, விசாரணை நடத்த 10 நாட்கள் போதாது
எனக்கூறியதுடன், நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த
வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒத்திவைப்பு

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி, சிபிஐ தற்காலிக
இயக்குநர் நாகேஸ்வர ராவ், வழக்கமான பணிகளை மட்டுமே
மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகள் மாற்றம்
குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும்.

வழக்கு விசாரணை முடியும் வரை நாகேஸ்வர ராவ் கொள்கை
முடிவு எதையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு
விசாரணையை நவ.,12க்கு ஒத்திவைத்தார்.
-
-------------------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 6:51 am

'பான்' கார்டு விபரம் சமர்ப்பிக்காத 7 எம்.பி., - 199 எம்.எல்.ஏ.,க்கள்
-


-
புதுடில்லி:
'நாடு முழுவதும், ஏழு எம்.பி.,க்கள், 199 எம்.எல்.ஏ.,க்கள்,
'பான்' கார்டு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை' என,
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கலின் போது, நிரந்தர
கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டு விபரங்களை,
கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

தற்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக இருப்போர்
, 'பான்' கார்டு விபரங்களை தெரிவித்து உள்ளனரா
என்பது குறித்து, ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும்
தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பு ஆய்வு
நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:தற்போது பதவியில் உள்ள, ஏழு எம்.பி.,க்கள்,
199 எம்.எல்.ஏ.,க்கள், 'பான்' கார்டு விபரம் வெளியிடவில்லை.
காங்கிரசைச் சேர்ந்த, 51 எம்.எல்.ஏ.,க்கள், 'பான்' கார்டு
விபரங்களை வெளியிடவில்லை.

பா.ஜ.,வைச் சேர்ந்த, 42 எம்.எல்.ஏ.,க்கள், மார்க்சிஸ்ட்
கட்சியைச் சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க்கள், 'பான்' கார்டு விபரம்
வெளியிடவில்லை.

மாநில வாரியாக, கேரளாவில், 33; மிசோரமில், 28; மத்திய
பிரதேசத்தில், 19 எம்.எல்.ஏ.,க்கள், 'பான்' கார்டு விபரங்களை
சமர்ப்பிக்கவில்லை.

ஒடிசா மாநிலத்தில், பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த,
இரண்டு எம்.பி.,க்களும்,
தமிழகத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இரண்டு எம்.பி.,க்களும்,
'பான்' கார்டு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
------------------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 7:12 am

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி

-------------
தேசியச் செய்திகள் - Page 12 201810271627548233_12yearold-girl-to-appear-in-Class-10-Bengal-board-exam_SECVPF
--
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஹவுரா மாவட்டத்தினை சேர்ந்த
சிறுமி சைபா கதூன் (வயது 12). இவர், மேற்கு வங்காள
மேனிலை கல்வி வாரியம் நடத்த உள்ள 2019ம்
ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வில் கலந்து
கொள்வதற்காக தயாரானார்.

இதற்காக பள்ளி கூடத்திற்கு சென்று முறைப்படி
படிக்காமல் வீட்டிலேயே படித்து வந்துள்ளார்.

அதன்பின்னர் கடந்த ஆகஸ்டில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு
எழுதுவதற்கான தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.
இதன் முடிவுகள் கடந்த 11ந்தேதி வெளியானது.

இதில் 52 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி
அடைந்துள்ளார். இதனை அடுத்து வெளிநபர் தேர்வாளராக
அவர் 10ம் வகுப்பு வாரிய தேர்வினை எழுதுகிறார்.

இந்த தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி
14 ஆகும். கடந்த 1990ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநபர்
தேர்வாளர் ஒருவர் குறைந்தபட்ச வயதுக்கு முன் தேர்வு
எழுதினார்.

இந்த நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு பின்னர்
12 வயது நிறைந்த சிறுமி கதூன் இந்த தேர்வை எழுத தகுதி
பெற்றுள்ளார்.

——————————–
தினத்தந்தி

-

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Oct 28, 2018 7:20 am

சிவா wrote:

தேசியச் செய்திகள் - Page 12 1540349054-8531

பீகாரில் தெரு நாய் ஒன்று  ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து நோயாளியின் காலை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில் ராம்நாத் மிஸ்ரா என்ற இளைஞர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்நாத்தின் காலை அகற்ற வேண்டும் என கூறிவிட்டனர். அதன் படி அவரது கால் ஆபரேஷன் மூல அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட கால் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தது. அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று அகற்றப்பட்ட ராம்நாத்தின் காலை கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனைக்குள் புகுந்து நாய் ஒன்று நோயாளியின் காலை எடுத்து சென்றது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1282793இதே நிலையை தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்க ஆளும் கட்சி  திட்டமிடுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 1:29 am



அமராவதி – ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சியான தெலுகு தேசம் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக இன்று அறிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் இணைந்து கலந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

பாஜகவையும், நரேந்திர மோடியையும் வீழ்த்துவதற்காக காங்கிரஸ் அமைக்கவிருக்கும் மாபெரும் கூட்டணியில் தெலுகு தேசம் இடம் பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும் ஓய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்



தேசியச் செய்திகள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 1:35 am



மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள கல்யாண் என்ற கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்துள்ளது. அந்த கிணற்றின் உரிமையாளர் அதனை தூர்வார எண்ணி, தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினார். பணிக்கு வந்த தொழிலாளி ஒருவர் முதலில் கிணற்றில் இறங்கிய போது விஷ வாயு தாக்கியது.

உடனே அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரை காப்பாற்ற அங்கு இருந்த தொழிலாளர்கள் 2 பேர் கிணற்றில் இறங்கிய போது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்தனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கிணற்றில் இறங்கிய போது அவர்களையும் விஷவாயு தாக்கி அவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை கயிறு மூலம் கிராம மக்கள் மற்றும் போலீசார் மீட்டனர்.

தீயணைப்புத்துறை வீரர்கள் இரண்டு பேர் உட்பட 5 பேர் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி, அனைவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



தேசியச் செய்திகள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 1:36 am



ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், மக்களவைத் தேர்தலில் 280 இடங்கள் பெறமாட்டீர்கள், 2 இடங்களில்தான் வெல்வீர்கள் என்று பாஜகவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள மகாத் எனும் இடத்தில் சிவசேனா சார்பில் நடந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகத்தான் செங்கற்கள் தொண்டர்களிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கை எல்லாம் பாஜக ஆட்சிக்கு வருவதற்காகத்தான் செய்யப்பட்டது. ராமர் கோயில் கட்டுவது என்பது பாஜகவைப் பொருத்தவரை வெற்று வார்த்தை. தேர்தலில் அளித்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், கடந்த மக்களவைத் தேர்தலில் 280 இடங்களில் வென்ற பாஜக அடுத்த மக்களவைத் தேர்தலில் வெறும் 2 இடங்களில்தான் வெல்லும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக இப்போது போர் தொடங்கிவிட்டது. அரசியலும், சூழலும் நாட்டில் சரிவை நோக்கிச் செல்கின்றன. 2019-ம் ஆண்டு தேர்தல் வேகமாக வந்துவிடும். என்னுடைய கவலையெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி அல்ல, மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்துத்தான்.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் பணவீக்கம் குறையவும் இல்லை, வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இல்லை. தேசத்தில் உள்ள மக்கள் மிகவும் அச்சமான சூழலால் சூழப்பட்டுள்ளார்கள். தொண்டர்கள் அனைவரும் மக்களிடம் சென்று, நரேந்திர மோடி அரசிடம் இருந்து ஏதாவது நல்ல திட்டங்களைப் பெற்றிருக்கிறீர்களா என்று கேளுங்கள்.

மோடி பொய்யான வாக்குறுதியை அளித்தபின் மக்களிடம் வாக்கு பெற்றிருக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்க்க நான் செல்கிறேன், ஆனால், பிரதமர் மோடி வெளிநாட்டுச் சுற்றுலாவில் தீவிரமாக இருந்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் இருந்து முதல்வர் வருவார்கள். நான் மாநிலம் முழுவது சென்ற பயணத்தில் இதை உறுதி செய்தேன். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக மாநில அரசு அறிவித்திருந்தாலும், எப்போது மக்களுக்கு நிவாரணத் தொகையை அளிக்கப்போகிறது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.



தேசியச் செய்திகள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 1:39 am



கெடிலா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்திய மருத்துவ உலகில் பிரபலமாக இருந்து வரும் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவன உரிமையாளர் ராஜிவ் மோடிக்கும் அவரது மனைவி மோனிகாவுக்கும் குடும்பத்தில் கடும் சர்ச்சைகள் இருந்துவந்தன.

இந்நிலையில் குடும்ப கோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது, இதற்காக உள்ள 6 மாதகால கட்டாய பிரிவு காலத்தையும் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஏனெனில் இருவரும் 2012 முதல் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை நாடெங்கும் பல மட்டத்தில் நிகழ்ந்து வரும் நிலையில், இந்தத் தொழிலதிபர் ராஜிவ் மோடி, தன் மனைவி மோனிகாவை அடித்துத் துன்புறுத்தியதாக மோனிகா புகார் அளித்தார். இதனையடுத்து சோலா போலீஸ் நிலையத்தில் ஆஜரானா கெடிலா அதிபர், அங்கு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, 3 ஆண்டுகளாக தன்னைச் சித்ரவதை செய்ததாக மனைவி மோனிகா புகார் அளித்தார்.

இதனையடுத்து இருவருக்கும் காவல்நிலையத்தில் மூத்த வழக்கறிஞர்கள் காவல் உயரதிகாரிகள் கவுன்சிலிங் அளித்தனர். 6 மணி நேர கவுன்சிலிங்குக்குப் பிறகு இருவரும் விவாகரத்துக்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்டனர், மனைவி மோனிகா, அதிபர் ராஜிவ் மோடி மீது கிரிமினல் புகார் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

மனைவியை விவாகரத்து செய்ய ரூ.200 கோடி அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட இதற்கான டிமாண்ட் டிராப்ட்டை ராஜிவ் மோடி மோனிகாவிடம் அளித்தார். இதில் மகனின் நிலைதான் பரிதாபம், அவர் யாருடன் இருப்பார் என்று முடிவெடுக்கப்பட்ட போது ராஜிவ் மோடி தன் உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்க மோனிகா மகன் தந்தையிடம் வளரட்டும் என்று உரிமையை விட்டுக்கொடுத்தார்.

ஒரு பிரபல மருந்து உற்பத்தி நிறுவன தொழிலதிபரே தன் மனைவி மீது குடும்ப வன்முறையைச் செலுத்தி விவாகரத்துக்காக ரூ.200 கோடி கொடுத்தது சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது



தேசியச் செய்திகள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 02, 2018 5:12 am

பரிசு பொருட்களை தூக்கி எறிந்த அமைச்சர்
--
தேசியச் செய்திகள் - Page 12 Tamil_News_large_2136484
கார்வார் :
கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்விளையாட்டரங்க திறப்பு
விழாவில், விளையாட்டு வீரர்களை நோக்கி, விளையாட்டு
உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை,
மாநில வருவாய் துறை அமைச்சர் துாக்கி எறிந்தது,
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கார்வார் மாவட்டம், ஹலியால் தொகுதியில்,
பொதுப் பணி துறையால் கட்டப்பட்ட, உள்விளையாட்டு
அரங்கத்தின் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது.

திறப்பு விழாவுக்கு பின், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில்
வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கவுரவிக்க ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில், ஹலியால் தொகுதி, எம்.எல்.ஏ.,வும், மாநில
வருவாய் துறை அமைச்சருமான, காங்., கட்சியைச் சேர்ந்த,
ஆர்.வி.தேஷ்பாண்டே, விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.

பின், விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக, பரிசு பெற
அழைக்கப்பட்டனர். அனைத்து வீரர்களையும் மேடைக்கு
அருகில் வரும்படி அழைத்த, அமைச்சர் தேஷ்பாண்டே,
அவர்களை நோக்கி, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய
பரிசுப் பொருட்களை துாக்கி எறிந்தார்.

இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி,
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன், குடகு மாவட்டத்தில்,
வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்களை நோக்கி, நிவாரண
பொருட்களை, தேஷ்பாண்டே துாக்கி வீசினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
தினமலர்


Sponsored content

PostSponsored content



Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக