புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
44 Posts - 43%
heezulia
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10தேசியச் செய்திகள் - Page 7 Poll_m10தேசியச் செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 3:33 am

நல்ல தகவல்கள் சிவாண்ணா . nandri.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 6:30 am

தேசியச் செய்திகள் - Page 7 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2015 11:23 pm

இந்தியாவைத் தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்க நாளிதழ் திடுக்கிடும் தகவல்!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக, உருது மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க நாளிதழ் யூஎஸ்ஏ டுடே திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

‘இஸ்லாமிக் ஸ்டேட்டின் சுருக்கமான வரலாறு’ என்னும் பெயர் கொண்ட அந்த ஆவணம் 32 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த ஆவணத்தில், “இந்தியாவின் மீதான தாக்குதல் தெற்காசிய ஜிகாதிகளின் புனிதப் போர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தலிபான் இயக்கத் தீவிரவாதக் கும்பலோடு தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. உருது மொழியில் புலமை பெற்ற அறிஞர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணத்தை உளவுத்துறை அதிகாரிகளால் நன்றாக ஆராய்ந்த பிறகே இச்செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தின் மூலம் பெறுகின்ற செய்தி என்னவெனில்:

“ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. இந்தியா மீதான இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமான சண்டையை மீண்டும் தூண்டி விடுவதாக இருக்கப் போகிறது. அமெரிக்கா பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், கண்டிப்பாகத் தீவிரவாதிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தாக்குதலில் இறங்குவோம். அப்படி நடக்கும் பட்சத்தில் இதுதான் கடைசி யுத்தமாக இருக்கும்” என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளிலேயே மிகவும் கொடூரமான அமைப்பாக ஐஎஸ் அமைப்பு வளர்ந்து வருகிறது. அது ஏற்கனவே ஈராக், சிரியா நாடுகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்திப் பல மாகாணங்களைத் தங்களது வசம் கொண்டு வந்துள்ளது. பிரான்ஸிலும் இருவேறு தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், இயக்கத்தைப் பலப்படுத்த உலகின் பல நாடுகளில் இருந்தும் இளைஞர்களை ஈர்த்து இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வருகிறது.

ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கிளை தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் முயற்சி இந்தியாவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 11:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 30, 2015 3:12 am

அய்யய்யோ ... படிக்கவே பயமா இருக்கே .... அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:12 pm

தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்க முயன்றவர்கள் விரட்டியடிப்பு: பாதுகாப்பு போலீசார் நடவடிக்கை

சிவசேனா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் ஆரத்தியுடன் தாஜ்மகாலுக்குள் நுழைய முயன்றனர். புனித சிரவண மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பதால் அவர்கள் அங்கு ஆரத்தி எடுக்க திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை லத்தியால் விரட்டியடித்தனர்.

உத்தரபிரதேச மாநில சிவசேனா தலைவர் அனில்சிங், தங்கள் கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்கும் திட்டமும் எங்களிடம் இல்லை என்றார். தாஜ்மகால் உண்மையிலேயே சிவன் கோவில் என்று சில வக்கீல்கள் கோர்ட்டில் தொடர்ந்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:21 pm

பெங்களூருவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை விரைவில் அமலுக்கு வருகிறது.

பிரச்சினைகள்

பெங்களூரு நகரம் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் தொகை ஏறக்குறைய 1 கோடியை தொட்டுள்ளது. மக்கள் தொகை உயர்வால் இங்கு தினமும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இதில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் குப்பை அகற்றுவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை போக்க பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பிரச்சினைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இருப்பினும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், கடைகள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் என்று தனித்தனியாக பிரித்து வைக்காமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். இதில், மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை குத்தகைக்கு எடுத்து சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் வகையில் தங்களது பணியில் அலட்சியமாக செயல்படும் குத்தகைதாரர்களும் விதிவிலக்கல்ல.

எச்சில் துப்பினால் அபராதம்

அதன்படி, வீடுகளில் சேரும் குப்பைகளை பிரித்து வைக்காமல் இருக்கும் நபர்களிடம் இருந்து முதல்முறையாக ரூ.100-ம், 2-ம் முறையாக ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல வணிக வளாகங்களில் குப்பைகளை பிரித்து வைக்காமல் இருந்தால் அதன் உரிமையாளர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500-ம், 2-வது கட்டமாக ரூ.1,000-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தற்போது பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களில் மலம் கழிக்க செய்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து மாநில அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதை ஆய்வு செய்த அதிகாரிகள் மாநகராட்சிக்கு அனுமதி அளித்துள்ளனர். அதன்படி பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களில் மலம் கழிக்க செய்பவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.100-ம், 2-ம் கட்டமாக ரூ.200-ம் அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:24 pm

ஒடிசாவில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூர மந்திரவாதிக்கு மரண தண்டனை

ஒடிசாவில் நரபலி வழக்கில் 30 வயது மந்திரவாதிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பிதாம்பர் கெய்பெய். தன்னை யோகசக்தி வாய்ந்த தாந்திரீகவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர் மந்திர தந்திர வேலைகள் செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு 8 வயது சிறுவனை நைசாகப் பேசி சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுவனை நரபலி கொடுத்து பூஜை செய்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மந்திரவாதி பிதாம்பர் இந்த படுபாதக செயலைச் செய்தது தெரியவந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சிறுவனின் தலையை தோண்டி எடுத்த போலீசார், உடலை வேறு ஒரு இடத்தில் உள்ள சாக்கடையில் இருந்து எடுத்தனர்.

மந்திரவாதி பிதாம்பர் கைது செய்யப்பட்டு ஜாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசுத் தரப்பு வாதங்கள், 22 சாட்சிகளிடம் விசாரணை என 5 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுவனின் தலையை அறுத்துக் கொன்ற குற்றவாளி பிதாம்பருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி ஜீவன் பாலவ் தாஸ் தீர்ப்பளித்தார்.



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:26 pm

நண்பனின் கழுத்தை அறுத்துக் கொன்ற 3 பள்ளி மாணவர்கள் கைது

பள்ளி மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் தங்கள் சக நண்பனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் தலைநகர் மோதிஹரியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் குழுவிற்கு 'எக்ஸ்-கேங்' என்று பெயர் வைத்துக் கொண்டு 10-க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடியுள்ளனர்.

இவர்களுடன், இணைந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 9-ம் வகுப்பு மாணவன்தான் அஷிஷ் குமார். கடந்த சில வாரங்களாகவே ஆஷிஷின் நடவடிக்கைகள் மாறுவதை கவனித்த அவனது நண்பர்கள், எங்கே அவன் தாங்கள் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தி விடுவானோ என்கிற பயத்தில் அவனை ஆளில்லாத வீட்டிற்கு கூட்டிச் சென்று கழுத்தையும் மணிக்கட்டையும் அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மாணவனின் செல்போன் மற்றும் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் இன்று 3 மாணவர்களைக் கைது செய்துள்ளார். மேலும் பல மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:51 pm

ராணுவம் எங்களை வெளியேற கேட்டுக் கொண்டது, எனவே நாங்கள் புறப்படுகிறோம் -பாதிக்கப்பட்ட கிராம மக்கள்

எல்லையில் ராணுவம் எங்களை வெளியேற கேட்டுக் கொண்டதால், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறோம் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறிஉள்ளனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2003–ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல், காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. தொடர்ந்து 8 வது நாளாக காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர் தாக்குதல்களை நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்தில், மெந்தார் தாலுகாவில் பசோனி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் உள்ள இந்திய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் நடத்திய அடாவடி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஜம்மு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் எல்லையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து மக்கள் உயிரைபிடித்துக் கொண்டு மறைவிடங்களில் வசித்து வருகின்றனர். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவரும் நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பேசுகையில், எல்லையில் ராணுவம் எங்களை வெளியேற கேட்டுக் கொண்டதால், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கிறோம். பொதுமக்கள் பெரிதும் அச்சமாக உள்ளனர், இறந்தவர்களின் சடலங்களை தூக்கிச்செல்லக் கூட யாரும் வெளியே வராத நிலையே நீடிக்கிறது என்று கூறிஉள்ளனர். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில துணை முதல்-மந்திரி நிர்மல் சிங் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.

கிராம மக்கள் கொல்லப்படும் சம்பவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தை கடுமையாக சாடிஉள்ள, பாதுகாப்பு நிபுணர் பி.என்.ஹூன், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இவ்விவகாரத்தில் எந்தஒரு திட்டமும் கிடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாதுகாப்பு நெறிமுறைகளை பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டு உள்ளார்



தேசியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக