புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமன் உள்நாட்டுப் போர்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:08 pm

First topic message reminder :

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 30, 2015 5:34 pm

ஏமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர புறப்பட்டது இந்திய விமானம்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு சார்பில் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 180 பேர் வரை பயணம் செய்யக் கூடிய இந்த விமானம் அங்குள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று மாலை ஏமனில் இருந்து தாயகம் திரும்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அரபு நாடான ஏமனில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளை எதிர்த்து தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அரேபிய நாடுகள் கூட்டணி அமைத்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றி இருப்பதால் ஏமனில் வசிக்கும் 3,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நர்சுகள் ஆவர்.

இதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் வசிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்தியர்களை மீட்டு வருவதற்கான விமான அட்டவணை தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், மத்திய வெளியுறவு அமைச்சகம், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் ஏமனில் திறந்து உள்ளது.

ஏமனின் தலைநகரான சனா நகரில் இருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பறப்பதற்கான அனுமதியை நாங்கள் பெற்று இருக்கிறோம். இந்த நேரத்தை பயன்படுத்தி தினமும் ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள்.

மேலும் 1500 இந்தியர்களை ஏற்றி வருவதற்கான கப்பல் ஒன்றை ஏமனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 9:12 am

எல்லா இடத்திலும் இப்படி ஆகிறதே நம் இந்தியர்களுக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 31, 2015 12:11 pm

ஆமாம் அம்மா ........பாவம் நம் மக்கள் ............
வேலைக்காக சென்ற இடத்தில் இப்படி நடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்........... சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 31, 2015 5:03 pm

ஏமனில் சிக்கியுள்ள 50 தமிழக பெண்கள்

''உள்நாட்டு போர் மூண்டுள்ள, ஏமன் நாட்டில் சிக்கியுள்ள, என் மகளை காப்பாற்றுங்கள்,'' என, திண்டுக்கல்லைச் சேர்ந்த சுபாஷினி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்லில், டெய்லராக இருப்பவர் தயாளராஜன். இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஏஞ்சலின் ஜெரீனா, 27; நர்சிங் டிப்ளமோ படித்து உள்ளார்.

உள்நாட்டு போர்:

கடந்த, ஆண்டு மே மாதம், 14ம் தேதி, நர்ஸ் பணிக்காக, ஏமன் நாட்டுக்கு ஏஞ்சலின் சென்றார். அந்நாட்டில், தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் ஏஞ்சலின் தவிப்பதாக சுபாஷினி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: குடும்ப கஷ்டத்தைப் போக்க, ஏஞ்சலின் வருமானம் எங்களுக்கு முக்கியம். அதனால், வெளிநாடு என்றும் பாராமல், ஏமன் நாட்டுக்கு அனுப்பினோம். அங்கு, சனா நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சாக, ஏஞ்சலின் வேலை செய்கிறார். மருத்துவமனை இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில், அவர் தங்கியுள்ளார். அங்கிருந்து பஸ் மூலம், மருத்துவமனைக்கு தினமும் சென்று வருகிறார். இந்நிலையில், 'ஏமன் நாட்டில், உள்நாட்டு போர் நடக்கிறது. இந்தியர்கள் யாரும், அந்நாட்டில் இருக்க வேண்டாம்' என, மத்திய உள்துறை அறிவித்தது. உள்நாட்டு போர் தொடர்பாக, ஏஞ்சலினும் எங்களிடம் போனில் கூறினார். அவர் தங்கி யிருக்கும் இடத்தில் இருந்து, மருத்துவமனைக்கு செல்லும் பாதையில், குண்டு வெடித்ததாகவும் கூறினார். உடனடியாக, ஊர் திரும்பும் படி அவரிடம் கூறினோம். தான் இருக்கும் இடத்தில், 50க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் இருப்பதாகவும், அவர்கள் வேறு மருத்துவமனைகளில் வேலை செய்வதாகவும், ஏஞ்சலின் தெரிவித்தார். அனைவரும், ஊர் திரும்ப, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட், சம்பளம், வேலை சான்றிதழ் ஆகியவற்றை அளித்து, ஊருக்கு அனுப்புவதாக, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், இவற்றை அளிக்கும் அதிகாரி, மருத்துவமனைக்கு கடந்த, இரு நாட்களாக வரவில்லை. போனில் தொடர்பு கொண்டால், போன், 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளதாக, ஏஞ்சலின் கூறினார்.

தண்ணீர் கிடைக்கவில்லை:

'சில நாட்களாக, உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை. பாதுகாப்பாக இருக்க, மருத்துவமனைக்கு வந்து விடுகிறோம்' என தெரிவித்துள்ளார். எங்களுக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காக, வேலைக்கு அனுப்பினோம். ஆனால், அங்கு என் மகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது, வேதனை அளிக்கிறது. எப்படியாவது என் மகளை, மீட்டுத் தர வேண்டும். தன்னுடன் தங்கியுள்ள, கேரள மாநில பெண்களை மீட்க, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, ஏஞ்சலின் கூறினார். அவர்களை மீட்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏஞ்சலின் குறித்த விவரங்களை, திண்டுக்கல் கலெக்டரிடம் அளிக்க உள்ளோம். இவ்வாறு, சுபாஷினி கூறினார்.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 31, 2015 5:04 pm

ஏமனில் உள் நாட்டு போர் : இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உதவி செய்வதாக சவுதி அரேபியா மன்னர் பிரதமர் மோடியிடம் உறுதி

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா மற்றும் அதன் 10 நட்பு நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அங்கு தங்கி யிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறி வருகிறார்கள். பாகிஸ்தான் தங்கள் நாட்டு மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்களை விமானங் கள் மூலம் அழைத்து சென்றது.

ஏமனில் 6 ஆயிரம் இந்தியர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர். அவர் களில் 96 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அங்கு 4 ஆயிரம் பேர் தகுந்த ஆவணங்களுடன் இருக்கின்றனர். 2 ஆயிரம் பேர் ஆவணங்கள் ஏதுமின்றி தங்கியுள்ளனர்.

தற்போது போர் நடை பெறும் வேளையில் அங்கு அவர்கள் சிக்கி தவிக்கின் றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்கும் நடவடிக் கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தலைநகர் சனா மற்றும் ஏமனில் இந்தியர்கள் தங்கியுள் ளனர். அவர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் மீட்க திட்டமிட்டுள்ளது. கொச்சியில் இருந்து 2 கப்பல்கள் விரைந்துள்ளன. இந்திய போர் விமானம் ஒன்று டிஜி பவுட்டி நகருக்கு சென்றுள்ளது.-

ஏற்கனவே 500 இந்தியர் கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் இந்தியா திரும்ப தயாராக உள்ள னர். அதே நேரத்தில் ஏர்- இந்தியா நிறுவனம் மஸ்கட்டில் 2 விமானங்களை கூடுத லாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

கடற்படையின் ஐ.என்.எஸ். சுமித்ரா என்ற ரோந்து கப்பலும் பயணிகளை ஏற்றி வர தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

தொடக்கத்தில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் மீட்டு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ரோடுகளிலும், வீதிகளிலும் ஒவ்வொருவரும் துப்பாக்கிகளுடன் சுற்றி திரிகிறார்கள். இதனால் பொது மக்கள் வெளியே வர முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.எனவே, அவர்களை வேறு வழியில் வெளியேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு சவுதி அரேபியாவின் உதவியை நாடியுள்ளது. ஏனெனில் போர் மேகம் சூழ்ந்துள்ள ஏமனில் வான்வெளி தற்போது அதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதை தொடர்ந்து சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஷ் அல் சவுத்யுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு டெலிபோனில் பேசினார். அப்போது ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர் களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்க உதவும்படி அவரிடம் கோரிக்கை விடுத் தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் உதவுவதாக உறுதி அளித்தார். அப்போது அவரது முயற்சியால் ஏமனில் ஸ்திரதன்மையும், அமைதியான சூழ்நிலை விரைவில் உருவாகவும் மோடி வாழ்த்தினார்.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 31, 2015 5:08 pm

ஏமன் நாட்டில் 500–க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

உள்நாட்டு சண்டை உக்கிரமடைந்துள்ள ஏமனில் இருந்து 500–க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011–ம் ஆண்டு முதல் அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த சண்டை உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதனால் நாட்டின் அதிபரான அப்த்–ரபு மன்சூர் ஹாதி கடந்த வாரம் தலைநகர் சனாவில் இருந்து வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். மேலும், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் அவர் சவுதி அரேபியாவைக் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரேபியா, ஏமனில் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிராக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 9 அரபு நாடுகள் ஏமன் அதிபருக்கு ஆதரவாக இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவுடன் கைகோர்த்து உள்ளன. இந்த நிலையில், ஏடன் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியுள்ள முகாம்கள், சனா விமான நிலையம், ஹோடெய்டா துறைமுகம் ஆகிய இடங்களில்சவுதி அரேபிய விமானப்படை போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 35 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 88 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சவுதி அரேபிய பிரிகேடியர் ஜெனரல் அகமது அசெரி தெரிவித்தார்.

இதனிடையே உள்நாட்டு சண்டை உக்கிரமடைந்துள்ள ஹொடெய்டா துறைமுக பகுதியில் சிக்கித் தவித்த 500 பாகிஸ்தானியர்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில் சவுதி அரேபியா நேற்று வான்வெளித் தாக்குதலை சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து 500–க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் விமானங்கள் மூலம் ஏற்றப்பட்டு அவர்களது நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதேபோல் ஏமனில் சிக்கித் தவிக்கும் சீன அதிகாரிகள், மருத்துவ மற்றும் தொழில் நுட்ப குழுவினரை மீட்பதற்காக ஏடன் நகர துறைமுகத்தில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 31, 2015 9:01 pm

.... சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 31, 2015 9:37 pm

ஏமனில் விபரீதம் போர் விமான குண்டு வீச்சில் 45 அகதிகள் பலி கிளர்ச்சியாளர்கள் மீது வைத்த குறி தப்பியது

ஏமன் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுதி ஆதரவு படையினர் மீது அரபு நாடுகளின் போர் விமானங்கள் கடந்த 5 நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அரபு நாடுகளின் போர் விமானங்கள் குண்டு வீசியதில் சில குண்டுகள் வடக்கு ஏமன் பகுதியில் உள்ள ஹாரத் மஸ்ரக் அகதிகள் முகாமில் விழுந்து வெடித்துச் சிதறின. இதில் சம்பவ இடத்திலேயே 45 அகதிகள் பலியானார்கள். 65 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி அரபு படை போர் விமானங்கள் குண்டுகளை வீசியபோது, அவை குறி தவறி அருகில் இருந்த அகதிகள் முகாமிகள் விழுந்து பலத்த உயிர்சேதத்தை ஏற்படுத்தியதாக அகதிகளுக்கு உதவும் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 10:06 pm

அடாடா.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 12:20 am

ஏமனில் இருந்த 400 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மத்திய அரசு !

புது தில்லி

ஏமனில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள 400 இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற கப்பல்கள் மூலம், மீட்கப்பட்ட 400 இந்தியர்களும், விரைவில் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamani



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக