புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
[img]https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-
[img]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10930124_872135902828612_6784567739548620886_n.jpg?
oh=12b38400ef2b9028ffc93d6a76521e49&oe=55714827&__gda__=1434758477_ca66c065630ec90ef7f74111da1ad790[/img]
9/11034179_870425096333026_3515519045302774961_n.jpg?
oh=7fa27c4776637061af5efa567ee3b7e1&oe=55766B54&__gda__=1434708030_76723ed9d694ad9e6b4821fba1149d0a[/img]
மும்பையில் ஞாயிறு இலக்கிய அமைப்பு நடத்திய மகளிர்தினக் கவியரங்கில் தலைமை வகித்த போது நான் பாடிய தலைமைக் கவிதை.
தமிழ்வாழ்த்து
எல்லையை இழந்தாய் வாழ்ந்த
இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று
முல்லையும் இழந்தாய் எங்கள்
முத்தமிழ்த் தாயே என்றும்
தொல்லையில் கிடந்தும் வீரத்
தோள்தனைத் தூக்கி நின்றாய்
இல்லையே சங்க காலம்
ஏங்கினேன் தமிழே வணக்கம்.
அவை வணக்கம்
கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை
பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை
பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை
இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை
தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை
பொன்னகராம் புதுநகராம்
வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம்
மின்னரகராம் தொழில்கள் கலைகள்
எல்லாம் வளர்கின்ற இந்நகரை
எந்நகரம்? என்போர்க்கு
என் நகரம் என் நகரம்
என முழக்கி இருமாப்பு கொள வைக்கும்
நன்னகராம் மும்பை முதுநகரில்
பெண் பெயரில் கவியரங்கம்
549 கவிஞர்கள் கவிதை பாடினர் (தென்மதுரை)
அது முதலாம் தமிழ்ச்சங்கம்
59 புலவர்கள் கவிதை பாடினர் (கபாடபுரம்)
அது இரண்டாம் தமிழ்ச்சங்கம்
49 புலவர்கள் கவிதை பாடினர் (மதுரை)
அது மூன்றாம் தமிழ்ச்சங்கம்
இப்போது 18 புலவர்கள் பாடுகின்றனர்
இது நான்காம் தமிழ்ச்சங்கம்
ஞாயிறு தமிழ்ச்சங்கம்
ஞாயிறு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும்
தண்டமிழ் வளர்க்கும் ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு
இது அவைக்கு ஒளியேற்றும் மெழுகு வர்த்தி அல்ல
அரங்கத்திற்கு ஒளியேற்றும் மின் விளக்கும் அல்ல
அகிலத்திற்கே ஒளியேற்றும் வெஞ்ஞாயிறு அல்ல
அண்டத்திற்கே அறிவுச்சுடர் ஏற்றுகின்ற செஞ்ஞாயிறு
ஞாயிறு தமிழ்ச்சங்க அவைக்கு வணக்கம்
நாளுக்கு முகவரிதான் விடியல்
நாட்டுக்கு முகவரிதான் ஆளும் மன்னன்
வேலுக்கு முகவரிதான் வேலன் (முருகன்)
வெற்றிக்கு முக்வரிதான் சூடும் வாகை
தாளுக்கு முகவரிதான் தடவும் எழுத்து
தமிழுக்கு முகவரிதான் கவிதை
கோளுக்கு முகவரிதான் ஞாயிறு - மும்பைக்
கோட்டத்திற்கு முகவரிதான் ஞாயிறு இராமசாமி
யோசித்துப் புகழ் பெற்றான் சிந்தனைச் சிற்பி சாக்ரடீசு
வாசித்துப் புகழ் பெற்றான் குறுமுணி அகத்தியன்
பூசித்துப் புகழ் பெற்றான் சோழன் கோச்செங்கண்ணான்
யாசித்துப் புகழ் பெற்றான் மாபாரதக் கண்ணன்
நேசித்தே புகழ்பெற்றார் ஞாயிறு இராமசாமி
(தமிழையும் தமிழர்களையும்)
சபரிக்கும் திருப்பதிக்கும் பறக்கின்ற ஆன்மிகப் புயல்
இது கரையைக் கடக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு
அடர்த்தியான பெயல்
அதனால்தான் தழைக்கின்றது எம் போன்ற கவிஞர்களின் வயல்
ஆகையினால் கவிஞர்கள் எல்லோருக்கும் இவர்மீது அளவில்லாத மயல்
இசைத்தமிழை வளர்ப்பதில் இன்னொரு முத்துத்தாண்டவர்
இலக்கியத்தை வளர்ப்பதில் இன்னொரு கம்பன்
இவர், மின்னலை வானில் ஏற்றுவார்
வேர்களை மண்ணில் இறக்குவார்
மரங்களைப் பேச வைப்பார்
மயில்களை நடனமாட வைப்பார்
மொத்தத்தில்
இயற்கைக்குச் சிறகேற்றும் இன்னொரு புரட்சிக் கவிஞர்
தலைவர் ஞாயிறு இராமசாமிக்கு அவர்களுக்கு இன்னொரு ஞாயிற்றின் குளிர் வணக்கம்
தேவர் அசுரர் போர் 18 ஆண்டுகள்
இராமாயணப் போர் 18 மாதங்கள்
மகாபாரதப் போர் 18 நாட்கள்
சேரன் செங்குட்டுவன் போர் 18 நாளிகை
புராணம் 18
உப புரானம் 18
மேல்கணக்கு 18 கீழ்க்கணக்கு 18
ஐயப்பன் கோவில் படிகள் 18
அஷ்டபதி 18
கணங்கள் 18
ஆடிப்பெருக்கு 18
சொல்லிக்கொண்டே போகலாம்…
ஆனால் காலம் தடுப்பதால் முடிக்கிறேன் பட்டியலை
இங்கு கவிதை பாடும் கவிஞர்களும் 18
பேரளவில் இல்லை என்றாலும் பெயரளவில்
குவிந்திருக்கும்
மும்பைக் கவிதைகளுக்கு இந்தக் கவியின்
கனிந்த வணக்கம்
இனி கவிஞர்களின் கவிச்சுரங்கம் திறக்கட்டும்
உற்சாகச் சிறகடிக்கும் ஒய்யார வார்த்தைகளால்
கவிமகளின் ஊர்வலம் நடக்கட்டும்
இச்சங்கத்தமிழ் கேட்டு ஈடிலா இன்பத்தில்
இதயங்கள் இனிப்பாகட்டும்
பொன்னுரைத்த கவி உரைக்கக் கவிஞர்களை
கவிமுற்றத்திற்கு அழைக்கின்றேன்
இது தலைமைக் கவிதை
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
இட்டலிக்கு
ஊற வைத்த அரிசியை
உப்பரிகையில்
உலர வைத்த துணிமணியை
கோபத்தில்
காய வைத்த கணவரை
குழந்தைகளின் கத்தலை
மாமியாரின் குத்தலை
பேச மறந்த அம்பலை (வம்பினை)
பூசமறந்த அரிதாரத்தை
தொலைக்காட்சித் தொடரினை
சற்றுநேரம் அப்புறப் படுத்துங்கள்
உங்கள் நினைவுகளிலிருந்து
செவிகளையும் சிந்தையையும்
கொடுங்கள் என் கவிதைக்கு
உற்பத்தி உலகே நீ
ஆண் பூசைக்கே ஊதுவத்தியாய் மணந்து
சாம்பல் ஆனாய்
உலகின் ஆதிமூலமே நீ
தொட்டில் பணி ஒன்றே சுகமென்று
கட்டிலில் முடங்கிப் போனாய்
படைப்பு கணிதத்தில்
வர்க்கமூலம் நீ
அடைப்புக் குறிக்குள் ஆச்சரியக்
குறியாய் அடங்கிப் போனாய்
கர்ப்பத்தில் நிர்மூலம் ஆகாமல் தப்பித்த
ரசமூலம் நீ
(பாதரசம்) நீ
சொர்ப்பத்தில் மதிமயங்கி மண்ணோடு
மண்ணாகி மட்கிப் போனாயே
படுத்தபடி உனைக் கிடத்தி நதி என்பார்
பர்த்தாவின் தாகம் தீர்ப்பதே உன் விதி என்பார்
ஆண் மோகக் குளியலுக்கு அடர்மழையா நீ?
கொதி கொதித்தெழு கொப்பளி
புலிப்பல் தாலி என்றார்
ஐம்படைத் தாலி என்றார்
ஆளுமையில் உயர்ந்த உன்னை அடிமையாக்கி
அந்த வேலிக்குள் சிறை பிடிப்பார்
குதி, வேலி தாண்டு, குதித்தோடு
ஆளுமைத் திறன் உனக்குள் அதிகம் எனக் காட்டு
சங்கமத்தில் சரிபாதி நீ
உனை அகத்துறையில் மூழ்கடித்து
குங்குமத்தில் அடைத்து விட்டார்
முடி.. மோகக்கதையை முடி!
நீ முடிப்பதற்கு வேறு இருக்கிறது படி!
மூடிக்கிடக்கும்
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
அந்த முதுமை கள் தாழியிலிருந்து
முண்டியடித்து வெளியில் வா
காத்துக்கிடக்கிறது படைப்புலகம் உனக்காக
உன் நெற்றித் திலகத்தை வினாக்குறியாக்கு
கேள்வி கேள்
சாதனையின் திறவுகோள் எது என்று
வெற்றிப் புள்ளியைத் தொடும் சூத்திரத்தை
உன் வட்டப் பொட்டிடம் கேட்டுப் பார்
கங்குலை உடை
தூள் தூளாக்கு
உனை இருளில் தள்ளிய
காலத்தின் முகத்தில்
கரியைப் பூசு
வீரம் கொள்
மீசையில்லையே என்று வருந்தாதே
புருவங்களை முறுக்கு
விழி.. விழிதிற
கணன்று எரியும் உள்ளத்தை வெளித்தர
தொலைதுரக் கனவு காண்
உன் கனவுகளைக் கலைப்போரை
கணலாட்டு விழிச் சுடராலே
இனியும் இருட்டுத் தெருவில்
இருந்து உலவாதே
வெளிச்ச பவனி வா
பவனி முடியும் நாளில்
பெண்ணுக்கே கொடையாக்கு
அந்த வீர விழிகளை
33 33 என்று
விழுக்காடு கேட்டு புலம்பாதே
குறை வேக்காடா நீ
எடுத்துக் கொள் 100 விழுக்காடு
எதிர்ப்பவர்களை விழுக்காட்டு
எரியும் தணலில்
சேலைக்கடையில்
நிறங்களுக்காக நெடுந்தவம் செய்யாதே
நிறுவுவதற்காக கடுந்தவம் செய்
எங்கெங்கும் உன்சக்தியை நிறுவ
கடுந்தவம் செய்
பெண் சக்தியை நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்
பாலியல் கல்வியைக் கண்மூடி எதிர்க்காதே
பச்சைக் குழந்தைகளின் பரிதாபம் உணர்
உழவைக் கொடுக்காத ஊதியக் கல்வியால்
உருப்படுமா இந்தியத் தேசம்
சிந்தித்தாயா? செயல் என்ன செய்தாய்
ஈழக் கனவை எப்படி முடிப்பது
ஏதாவது செய் உன்னாலும் முடியும்
பாலுக்கழுகும் பருவமா உன்னது
பால்மணம் மாறா மழலைகள்
மடிந்தை மறக்க முடிந்ததா
மங்கையே உன்னால்
காவிரி ஓடம் தமிழ்க்கரையேற
ஒரு துடுப்பேனும் நீ போட்டாயா?
ஆடிப்பெருக்கில் தீபம் ஏற்றினால்
அதுபோதுமென்று இருந்துவிட்டாயே
விலை ஏற்றமில்லாத எரிவாயுக்காக
எப்போதாவது போராடினாயா
எப்படிக் கிடைக்கும் ஏற்றம் உனக்கு?
போதையில் இளைஞர் களிக்கின்றார்களே
வேதனை கொள்வது மட்டுமா தீர்வு?
வீதியில் இறங்கிப் போராட வேண்டாமா?
அடுத்த தலைமுறை அணுஉலைக் கசிவிலா
அநியாயமில்லை? ஆராய்ந்தாயா?
எரியில் மூழ்கிய இருநாடு பற்றி
ஏட்டில் படித்தது நினைவில் இல்லையா
ஒத்தி வைப்பில்லாப் பாராளுமன்றம்
ஓர்நாள் நடந்ததாய்ச் சரித்திரம் இல்லை
ஒதுங்கிப் போவதற்கா ஓட்டுப் போட்டாய்
தீட்டுப் பற்றி பேசுகின்றாயே
தீண்டாமைத் தீயில் கருகிய முகங்கள்
எத்தனை எத்தனை கணக்கெடுத்தாயா?
அடுப்பை மாற்றுவது
நாள் கோள் பார்த்து உடுப்பை மாற்றுவது
அதிஷ்டக் கல் மாட்டுவது (கணையாழியில்)
வாஸ்து பார்த்து பல்வரிசை மாற்றுவது
எல்லாவற்றையும் மாற்றிவிடு
தொப்புள் கொடியை தேசியக் கொடியாக்கு
திருப்பூர் குமரர்களைத் தேகத்தில் தேக்கு
உழைப்பைச் சாவியாய் இடுப்பில் மாட்டு
கருப்பைச் சுமையென்றால் கழற்றி விடு
உறுப்புதானே
பிறப்பில் வேறுபாடு இல்லை.. வெற்றி பெறு!
[img]https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-
[img]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10930124_872135902828612_6784567739548620886_n.jpg?
oh=12b38400ef2b9028ffc93d6a76521e49&oe=55714827&__gda__=1434758477_ca66c065630ec90ef7f74111da1ad790[/img]
9/11034179_870425096333026_3515519045302774961_n.jpg?
oh=7fa27c4776637061af5efa567ee3b7e1&oe=55766B54&__gda__=1434708030_76723ed9d694ad9e6b4821fba1149d0a[/img]
மும்பையில் ஞாயிறு இலக்கிய அமைப்பு நடத்திய மகளிர்தினக் கவியரங்கில் தலைமை வகித்த போது நான் பாடிய தலைமைக் கவிதை.
தமிழ்வாழ்த்து
எல்லையை இழந்தாய் வாழ்ந்த
இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று
முல்லையும் இழந்தாய் எங்கள்
முத்தமிழ்த் தாயே என்றும்
தொல்லையில் கிடந்தும் வீரத்
தோள்தனைத் தூக்கி நின்றாய்
இல்லையே சங்க காலம்
ஏங்கினேன் தமிழே வணக்கம்.
அவை வணக்கம்
கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை
பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை
பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை
இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை
தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை
பொன்னகராம் புதுநகராம்
வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம்
மின்னரகராம் தொழில்கள் கலைகள்
எல்லாம் வளர்கின்ற இந்நகரை
எந்நகரம்? என்போர்க்கு
என் நகரம் என் நகரம்
என முழக்கி இருமாப்பு கொள வைக்கும்
நன்னகராம் மும்பை முதுநகரில்
பெண் பெயரில் கவியரங்கம்
549 கவிஞர்கள் கவிதை பாடினர் (தென்மதுரை)
அது முதலாம் தமிழ்ச்சங்கம்
59 புலவர்கள் கவிதை பாடினர் (கபாடபுரம்)
அது இரண்டாம் தமிழ்ச்சங்கம்
49 புலவர்கள் கவிதை பாடினர் (மதுரை)
அது மூன்றாம் தமிழ்ச்சங்கம்
இப்போது 18 புலவர்கள் பாடுகின்றனர்
இது நான்காம் தமிழ்ச்சங்கம்
ஞாயிறு தமிழ்ச்சங்கம்
ஞாயிறு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும்
தண்டமிழ் வளர்க்கும் ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு
இது அவைக்கு ஒளியேற்றும் மெழுகு வர்த்தி அல்ல
அரங்கத்திற்கு ஒளியேற்றும் மின் விளக்கும் அல்ல
அகிலத்திற்கே ஒளியேற்றும் வெஞ்ஞாயிறு அல்ல
அண்டத்திற்கே அறிவுச்சுடர் ஏற்றுகின்ற செஞ்ஞாயிறு
ஞாயிறு தமிழ்ச்சங்க அவைக்கு வணக்கம்
நாளுக்கு முகவரிதான் விடியல்
நாட்டுக்கு முகவரிதான் ஆளும் மன்னன்
வேலுக்கு முகவரிதான் வேலன் (முருகன்)
வெற்றிக்கு முக்வரிதான் சூடும் வாகை
தாளுக்கு முகவரிதான் தடவும் எழுத்து
தமிழுக்கு முகவரிதான் கவிதை
கோளுக்கு முகவரிதான் ஞாயிறு - மும்பைக்
கோட்டத்திற்கு முகவரிதான் ஞாயிறு இராமசாமி
யோசித்துப் புகழ் பெற்றான் சிந்தனைச் சிற்பி சாக்ரடீசு
வாசித்துப் புகழ் பெற்றான் குறுமுணி அகத்தியன்
பூசித்துப் புகழ் பெற்றான் சோழன் கோச்செங்கண்ணான்
யாசித்துப் புகழ் பெற்றான் மாபாரதக் கண்ணன்
நேசித்தே புகழ்பெற்றார் ஞாயிறு இராமசாமி
(தமிழையும் தமிழர்களையும்)
சபரிக்கும் திருப்பதிக்கும் பறக்கின்ற ஆன்மிகப் புயல்
இது கரையைக் கடக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு
அடர்த்தியான பெயல்
அதனால்தான் தழைக்கின்றது எம் போன்ற கவிஞர்களின் வயல்
ஆகையினால் கவிஞர்கள் எல்லோருக்கும் இவர்மீது அளவில்லாத மயல்
இசைத்தமிழை வளர்ப்பதில் இன்னொரு முத்துத்தாண்டவர்
இலக்கியத்தை வளர்ப்பதில் இன்னொரு கம்பன்
இவர், மின்னலை வானில் ஏற்றுவார்
வேர்களை மண்ணில் இறக்குவார்
மரங்களைப் பேச வைப்பார்
மயில்களை நடனமாட வைப்பார்
மொத்தத்தில்
இயற்கைக்குச் சிறகேற்றும் இன்னொரு புரட்சிக் கவிஞர்
தலைவர் ஞாயிறு இராமசாமிக்கு அவர்களுக்கு இன்னொரு ஞாயிற்றின் குளிர் வணக்கம்
தேவர் அசுரர் போர் 18 ஆண்டுகள்
இராமாயணப் போர் 18 மாதங்கள்
மகாபாரதப் போர் 18 நாட்கள்
சேரன் செங்குட்டுவன் போர் 18 நாளிகை
புராணம் 18
உப புரானம் 18
மேல்கணக்கு 18 கீழ்க்கணக்கு 18
ஐயப்பன் கோவில் படிகள் 18
அஷ்டபதி 18
கணங்கள் 18
ஆடிப்பெருக்கு 18
சொல்லிக்கொண்டே போகலாம்…
ஆனால் காலம் தடுப்பதால் முடிக்கிறேன் பட்டியலை
இங்கு கவிதை பாடும் கவிஞர்களும் 18
பேரளவில் இல்லை என்றாலும் பெயரளவில்
குவிந்திருக்கும்
மும்பைக் கவிதைகளுக்கு இந்தக் கவியின்
கனிந்த வணக்கம்
இனி கவிஞர்களின் கவிச்சுரங்கம் திறக்கட்டும்
உற்சாகச் சிறகடிக்கும் ஒய்யார வார்த்தைகளால்
கவிமகளின் ஊர்வலம் நடக்கட்டும்
இச்சங்கத்தமிழ் கேட்டு ஈடிலா இன்பத்தில்
இதயங்கள் இனிப்பாகட்டும்
பொன்னுரைத்த கவி உரைக்கக் கவிஞர்களை
கவிமுற்றத்திற்கு அழைக்கின்றேன்
இது தலைமைக் கவிதை
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
இட்டலிக்கு
ஊற வைத்த அரிசியை
உப்பரிகையில்
உலர வைத்த துணிமணியை
கோபத்தில்
காய வைத்த கணவரை
குழந்தைகளின் கத்தலை
மாமியாரின் குத்தலை
பேச மறந்த அம்பலை (வம்பினை)
பூசமறந்த அரிதாரத்தை
தொலைக்காட்சித் தொடரினை
சற்றுநேரம் அப்புறப் படுத்துங்கள்
உங்கள் நினைவுகளிலிருந்து
செவிகளையும் சிந்தையையும்
கொடுங்கள் என் கவிதைக்கு
உற்பத்தி உலகே நீ
ஆண் பூசைக்கே ஊதுவத்தியாய் மணந்து
சாம்பல் ஆனாய்
உலகின் ஆதிமூலமே நீ
தொட்டில் பணி ஒன்றே சுகமென்று
கட்டிலில் முடங்கிப் போனாய்
படைப்பு கணிதத்தில்
வர்க்கமூலம் நீ
அடைப்புக் குறிக்குள் ஆச்சரியக்
குறியாய் அடங்கிப் போனாய்
கர்ப்பத்தில் நிர்மூலம் ஆகாமல் தப்பித்த
ரசமூலம் நீ
(பாதரசம்) நீ
சொர்ப்பத்தில் மதிமயங்கி மண்ணோடு
மண்ணாகி மட்கிப் போனாயே
படுத்தபடி உனைக் கிடத்தி நதி என்பார்
பர்த்தாவின் தாகம் தீர்ப்பதே உன் விதி என்பார்
ஆண் மோகக் குளியலுக்கு அடர்மழையா நீ?
கொதி கொதித்தெழு கொப்பளி
புலிப்பல் தாலி என்றார்
ஐம்படைத் தாலி என்றார்
ஆளுமையில் உயர்ந்த உன்னை அடிமையாக்கி
அந்த வேலிக்குள் சிறை பிடிப்பார்
குதி, வேலி தாண்டு, குதித்தோடு
ஆளுமைத் திறன் உனக்குள் அதிகம் எனக் காட்டு
சங்கமத்தில் சரிபாதி நீ
உனை அகத்துறையில் மூழ்கடித்து
குங்குமத்தில் அடைத்து விட்டார்
முடி.. மோகக்கதையை முடி!
நீ முடிப்பதற்கு வேறு இருக்கிறது படி!
மூடிக்கிடக்கும்
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
அந்த முதுமை கள் தாழியிலிருந்து
முண்டியடித்து வெளியில் வா
காத்துக்கிடக்கிறது படைப்புலகம் உனக்காக
உன் நெற்றித் திலகத்தை வினாக்குறியாக்கு
கேள்வி கேள்
சாதனையின் திறவுகோள் எது என்று
வெற்றிப் புள்ளியைத் தொடும் சூத்திரத்தை
உன் வட்டப் பொட்டிடம் கேட்டுப் பார்
கங்குலை உடை
தூள் தூளாக்கு
உனை இருளில் தள்ளிய
காலத்தின் முகத்தில்
கரியைப் பூசு
வீரம் கொள்
மீசையில்லையே என்று வருந்தாதே
புருவங்களை முறுக்கு
விழி.. விழிதிற
கணன்று எரியும் உள்ளத்தை வெளித்தர
தொலைதுரக் கனவு காண்
உன் கனவுகளைக் கலைப்போரை
கணலாட்டு விழிச் சுடராலே
இனியும் இருட்டுத் தெருவில்
இருந்து உலவாதே
வெளிச்ச பவனி வா
பவனி முடியும் நாளில்
பெண்ணுக்கே கொடையாக்கு
அந்த வீர விழிகளை
33 33 என்று
விழுக்காடு கேட்டு புலம்பாதே
குறை வேக்காடா நீ
எடுத்துக் கொள் 100 விழுக்காடு
எதிர்ப்பவர்களை விழுக்காட்டு
எரியும் தணலில்
சேலைக்கடையில்
நிறங்களுக்காக நெடுந்தவம் செய்யாதே
நிறுவுவதற்காக கடுந்தவம் செய்
எங்கெங்கும் உன்சக்தியை நிறுவ
கடுந்தவம் செய்
பெண் சக்தியை நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்
பாலியல் கல்வியைக் கண்மூடி எதிர்க்காதே
பச்சைக் குழந்தைகளின் பரிதாபம் உணர்
உழவைக் கொடுக்காத ஊதியக் கல்வியால்
உருப்படுமா இந்தியத் தேசம்
சிந்தித்தாயா? செயல் என்ன செய்தாய்
ஈழக் கனவை எப்படி முடிப்பது
ஏதாவது செய் உன்னாலும் முடியும்
பாலுக்கழுகும் பருவமா உன்னது
பால்மணம் மாறா மழலைகள்
மடிந்தை மறக்க முடிந்ததா
மங்கையே உன்னால்
காவிரி ஓடம் தமிழ்க்கரையேற
ஒரு துடுப்பேனும் நீ போட்டாயா?
ஆடிப்பெருக்கில் தீபம் ஏற்றினால்
அதுபோதுமென்று இருந்துவிட்டாயே
விலை ஏற்றமில்லாத எரிவாயுக்காக
எப்போதாவது போராடினாயா
எப்படிக் கிடைக்கும் ஏற்றம் உனக்கு?
போதையில் இளைஞர் களிக்கின்றார்களே
வேதனை கொள்வது மட்டுமா தீர்வு?
வீதியில் இறங்கிப் போராட வேண்டாமா?
அடுத்த தலைமுறை அணுஉலைக் கசிவிலா
அநியாயமில்லை? ஆராய்ந்தாயா?
எரியில் மூழ்கிய இருநாடு பற்றி
ஏட்டில் படித்தது நினைவில் இல்லையா
ஒத்தி வைப்பில்லாப் பாராளுமன்றம்
ஓர்நாள் நடந்ததாய்ச் சரித்திரம் இல்லை
ஒதுங்கிப் போவதற்கா ஓட்டுப் போட்டாய்
தீட்டுப் பற்றி பேசுகின்றாயே
தீண்டாமைத் தீயில் கருகிய முகங்கள்
எத்தனை எத்தனை கணக்கெடுத்தாயா?
அடுப்பை மாற்றுவது
நாள் கோள் பார்த்து உடுப்பை மாற்றுவது
அதிஷ்டக் கல் மாட்டுவது (கணையாழியில்)
வாஸ்து பார்த்து பல்வரிசை மாற்றுவது
எல்லாவற்றையும் மாற்றிவிடு
தொப்புள் கொடியை தேசியக் கொடியாக்கு
திருப்பூர் குமரர்களைத் தேகத்தில் தேக்கு
உழைப்பைச் சாவியாய் இடுப்பில் மாட்டு
கருப்பைச் சுமையென்றால் கழற்றி விடு
உறுப்புதானே
பிறப்பில் வேறுபாடு இல்லை.. வெற்றி பெறு!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:
கவியரங்கம் மிகச் சிறப்பாக நடந்தது. மும்பையில் நிறைய அன்பு உள்ளங்களை ஈட்டி வந்தேன். அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி.
நீளளளளளளமா கவிதை வாசித்து வாட்டி ஈட்டி வந்தேன்னு சொல்லுங்க
நன்றி ஆதிரா அவர்களே !
மூவாறு பதினெட்டு ! - உங்கள்
கவிதைக்குக் கொடுக்கிறோம் லட்டு !
மூவாறு பதினெட்டு ! - உங்கள்
கவிதைக்குக் கொடுக்கிறோம் லட்டு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1124681யினியவன் wrote:Aathira wrote:
கவியரங்கம் மிகச் சிறப்பாக நடந்தது. மும்பையில் நிறைய அன்பு உள்ளங்களை ஈட்டி வந்தேன். அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி.
நீளளளளளளமா கவிதை வாசித்து வாட்டி ஈட்டி வந்தேன்னு சொல்லுங்க
ஹலோ.. கவியரங்கத்தில குட்டியாவா கவிதை வாசிப்பாங்க. சொல்றதப் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1124661ராஜா wrote:
எங்கள் அக்காவின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்
ஒரு சாதாக் கல்லு கூடக் கொடுக்கல அவிங்க....
நன்றி ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1124686Dr.S.Soundarapandian wrote:நன்றி ஆதிரா அவர்களே !
மூவாறு பதினெட்டு ! - உங்கள்
கவிதைக்குக் கொடுக்கிறோம் லட்டு !
இனிப்பு கொடுத்துப் பாராட்டிய அன்புக்கு நன்றி முனைவர். செளந்திர பாண்டியன் அவர்களே
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
வாழ்த்துக்கள் அக்க மிக்க மகிழ்ச்சி ...........
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
அன்றொரு நாள்
அரபிக்கடலோரம்
அலைகள் யாவும்
அடங்கியே வாசித்தன .
காரணமென்ன நான் கேட்க ,
அ திரைகள் கூறின
ஆதிரா என ஒருவர்
தமிழ் அழகை
சங்க தமிழை
அழகு தமிழில் கூற
அழைக்கபட்டாராம்
அவர் படிக்கையில் ,
அலைகளின் ஆர்பரிப்பில்
அவை அமைதிக்கு
அனர்த்தம் வருமெனக் கருதி
அடக்கியே வாசிக்கிறோம் என்றன .
மும்பை சென்ற
முன்பே சென்ற
தலைமை தாங்கியே
கவி பாடிய தலைமையே ,
வாழ்த்துக்கள் .
உந்தன் தமிழ் சேவை
உள்நாட்டிலும்
வெளி நாட்டிலும்
தொடரட்டும்
இது போன்ற இனிமைகள்
இனியும் தொடரட்டும் .
ரமணியன்
அரபிக்கடலோரம்
அலைகள் யாவும்
அடங்கியே வாசித்தன .
காரணமென்ன நான் கேட்க ,
அ திரைகள் கூறின
ஆதிரா என ஒருவர்
தமிழ் அழகை
சங்க தமிழை
அழகு தமிழில் கூற
அழைக்கபட்டாராம்
அவர் படிக்கையில் ,
அலைகளின் ஆர்பரிப்பில்
அவை அமைதிக்கு
அனர்த்தம் வருமெனக் கருதி
அடக்கியே வாசிக்கிறோம் என்றன .
மும்பை சென்ற
முன்பே சென்ற
தலைமை தாங்கியே
கவி பாடிய தலைமையே ,
வாழ்த்துக்கள் .
உந்தன் தமிழ் சேவை
உள்நாட்டிலும்
வெளி நாட்டிலும்
தொடரட்டும்
இது போன்ற இனிமைகள்
இனியும் தொடரட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கவியரங்ஙை அதிரவைக்கும் ஆதிராவுக்கு வாழ்த்துகள்.............வளர்க புலமை......நன்று.......
மேற்கோள் செய்த பதிவு: 1124708கோவிந்தராஜ் wrote:வாழ்த்துக்கள் அக்க மிக்க மகிழ்ச்சி ...........
நன்றி கோவிந்த ராஜ்
மேற்கோள் செய்த பதிவு: 1124710T.N.Balasubramanian wrote:அன்றொரு நாள்
அரபிக்கடலோரம்
அலைகள் யாவும்
அடங்கியே வாசித்தன .
காரணமென்ன நான் கேட்க ,
அ திரைகள் கூறின
ஆதிரா என ஒருவர்
தமிழ் அழகை
சங்க தமிழை
அழகு தமிழில் கூற
அழைக்கபட்டாராம்
அவர் படிக்கையில் ,
அலைகளின் ஆர்பரிப்பில்
அவை அமைதிக்கு
அனர்த்தம் வருமெனக் கருதி
அடக்கியே வாசிக்கிறோம் என்றன .
மும்பை சென்ற
முன்பே சென்ற
தலைமை தாங்கியே
கவி பாடிய தலைமையே ,
வாழ்த்துக்கள் .
உந்தன் தமிழ் சேவை
உள்நாட்டிலும்
வெளி நாட்டிலும்
தொடரட்டும்
இது போன்ற இனிமைகள்
இனியும் தொடரட்டும் .
ரமணியன்
இதுவல்லவோ கவிதை. இதற்கு மேல் என்ன வேண்டும்.
ரமணியன் சார்....... இது போன்ற இனிமைகள் இனியும் தொடர வேண்டும். நான் சொன்னது உங்களது வாழ்த்துக் கவிதையை.
மிக்க நன்றி சார்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|