புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகிலத்திரட்டு அம்மானை
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
காப்பு
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.
காப்பு
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகத்தீசர் பிறப்பு
உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து
திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து
அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து
செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை
எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி
வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே
என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும்
இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார்
அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய்
மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும்
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 440
அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை
வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும்
நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம்
கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும்
வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே
இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே
அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே
அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும்
இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால்
எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலியரசன் சத்தியம்
என்று அகத்தீசர் இப்படியே தான்கூற
அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு
சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம்
நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை
ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார்
தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் 460
பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள்
அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து
இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை
மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன்
பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா
என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே
அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார்
பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ
அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய்
பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும்
சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா
என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன்
குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான்
ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல்
வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை
தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால்
ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே
தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 480
தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும்
நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ
என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும்
நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு
பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை
என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா
பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும்
ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும்
பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும்
கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும்
இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன்
சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார்
புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டார மென்றும் பரதேசி யானவரைத்
தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை
அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் 500
நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று
ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள்
வீணமட நீசன் விளம்புவா னப்போது
ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று
பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான்
அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும்
பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும்
வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால்
ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால்
வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல்
பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று
மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச்
சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று
ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று
என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும்
வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ
அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி 520
எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால்
சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும்
வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சக்கராயுதம் பணமாதல்
நல்லதுதா னென்று நாட்டமுற்றுச் சன்னாசி
வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு
மந்திரங்க ளாலே மகாகோடி ஆயுதங்கள்
தந்திரங்க ளாலே தான்வருத்த லாகிடுமே
அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க
இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன
நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல்
தொனிகெட்ட வெற்றிரும்பைச் சுமவென்று தந்தார்காண்
இரும்பைச் சுமந்தால் இல்லைகா ணொன்றுபயன்
தரும்பொருள்போ லுள்ள சம்பாத்தியந் தாறேன்
மண்டலங்கள் தேசம் வாழ்வுக ளுண்டாவதற்கும்
கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல்
தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே
பருமுறுக் காயாண்டி பகர்ந்தாரே நீசனுக்கு
அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் 540
மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும்
நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு
இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று
அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே
கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம்
வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே
பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே
இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக்
கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான்
பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி
என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி
மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான்
அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று
இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம்
தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார்
முப்போது வுள்ள முறைபோலே மாயவரும்
ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன்
நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில் 560
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலியுகம்
நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான்
ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே
வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம்
என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே
வலியான மாதே மாநீசன் கேட்டதுதான்
கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார்
சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய்
இதமான தேவர் எழுதினா ரகமத்தில்
கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில்
சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட
வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார்
மாயனுக்கு ஆணை மாநீச னிட்டதெல்லாம்
தூய பெருங்கணக்கில் தொகுத்தெகுதி வைத்தனராம்
நீசக் கலியன் நிறைவோன் பதம்போற்றித்
தேச மதில்வரவே சென்றான்கா ணம்மானை
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை
நல்லவை மறைதல்
தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில் 580
நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும்
வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே
வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய்
தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும்
வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம்
வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும்வெண் காகம்
ஆளியொடு சிங்கம் ஆனையி றாஞ்சிப்புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள்
மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருக மானதெல்லாம்
அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே
பால்நிற மான பட்சிப் பறவைகளும்
மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே
வெண்சாரை யைந்துதலை விசஅரவ மானதெல்லாம்
துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும்
போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம் 600
முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள்
பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம்
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ
பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம்
தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க
சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய
மாரி மறைய மலர்க்கண் மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே யம்மானை
கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க
தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை
தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும்
பொறுமை யுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும்
நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம்
நடந்தோர்க ளெல்லாம் நாடி வழிவரவே
கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே 620
காடதிலே செல்ல கனத்தபஞ்ச பாண்டவர்கள்
வாட லுடவாய் வைகுண்டந் தானேக
கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதைப்
பண்டாரத் தர்மர் பகர்ந்தா ரதினோடு
நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்துகா ணாதேசென்றால்
வீட்டி லுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப்
போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன்
சேர்வேனோ குண்டம் செய்தர்ம மில்லையென்றால்
என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்ம மேதுரைக்கும்
பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்ட தானதினால்
எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே
செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார்
அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து
இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால்
கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது
தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே
தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும்
வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில்
மேலான மாமிருகம் வேதக் காராவுகளும்
நாலா மொருதலையும் நல்ல அரவமதும் 640ந
வெண்பட்சி யான மேலான பட்சிகளும்
இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று
கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே
பதறி யழுது பறவை மிருகமொடு
நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து
பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து
ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில்
ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன
செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து
அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும்
நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால்
தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா
என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே
நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான்
பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும்
ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார்
தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை
மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம்
கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம்
சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி 660
நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள
வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று
ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து
உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே
அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே
நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி
கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான்
வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே
நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி
நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று
சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை
பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே
வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில்
அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே
வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான்
ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார்
அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும்
பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார்
சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும்
சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம் 680
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைமுனி ஞானமுனி தவசு
இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள்
கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே
ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன்
தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு
சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது
திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி
நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில்
கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது
அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து
செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான்
கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை
ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண்
இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும்
தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி
மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே
காய மிழந்து காணா துருவெடுத்து
மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால்
சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும்
பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும் 700
உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி
கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான்
முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து
வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி
மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று
அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும்
இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று
அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம்
துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து
ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து
தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார்
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும்
இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும்
கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும் 720
தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து
ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே
ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர்
நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம்
வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும்
பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை
சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து
விலகியே போக வேணுமென் றெம்பெருமாள்
மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி
எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று
அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை
அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார்
இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில்
செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில்
நந்த கோபால நாராய ணாவெனவே
மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய்
ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள்
ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென
வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் 740
விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும்
கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே
அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க
இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
போகமுனி தவசு
போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று
வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில்
ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார்
மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ
குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம்
அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான்
செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த
மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க
ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே
என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
உன்று வசனம் உரையென்றார் மாமுனியை
என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும்
அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே
தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும்
கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா 760
நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால்
வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும்
நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே
மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால்
என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித்
தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே
மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று
அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான்
நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ
கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன
சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க
மலைப் புதுமை
அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை
இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான்
வேதா விதித்த மேலான ஆகமம்போல்
நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே
கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று
சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான்
இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது
குழைவான வேதா குறியா யதையறிந்து 780
கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால்
பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக
மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே
அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று
சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது
குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து
அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன்
இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால்
வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில்
கைகண்ட வேதக் கருணாகரக் கடலே
என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று
அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப்
போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார்
மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு
தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண்
ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப்
போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சலந்தவசு
அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன்
இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற 800
அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா
கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான்
நல்லதுதா னென்று நல்ல முனியோடே
வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண்
கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில்
சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே
ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே
தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும்
வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச்
சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல்
பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே
கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை
எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும்
பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும்
என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான்
நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும்
பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே
தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள்
அய்யாவே நானும் அதிகயி லாசமதில்
மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து 820
வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள்
அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக்
குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து
அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார்
படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம்
கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன்
ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து
தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார்
என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார்
அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும்
நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில்
தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில்
சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில்
வீரிய மான வெற்றிவிரு துக்குடையும்
தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும்
பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும்
கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும்
மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும்
உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான்
என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ 840
நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத்
தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும்
விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத்
திடமுடனே போகமுனி தேவி சலமடவும்
வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார்
சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார்
மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது
மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே
சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை
நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப்
பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை
கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக
நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை
பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து
தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே
பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான்
சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான்
மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான் 860
கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான்
வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான்
ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை
பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான்
கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான்
மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான்
கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான்
மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான்
வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான்
மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான்
ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான்
அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான்
குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது
பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து
தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான்
கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத்
தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப்
பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து
மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை 880
கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம்
அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே
சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும்
தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான்
மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி
தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நந்திவரவு
தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள
மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால்
ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு
வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து
மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன்
ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே
என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க
அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது
நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான்
செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது
பூலோக மேழும் பொன்னுலோக மேழும்
தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும்
ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம்
பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம் 900
சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம்
நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே
என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி
அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி
சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து
வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில்
கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி
ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை
நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை
எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி
மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து
ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை
கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம்
தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே
மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக்
காய மிழந்து காணா துருவெடுத்து
ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி
தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே
கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு
பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு 920
மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில்
பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும்
பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம்
சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று
யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும்
போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக்
கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து
தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார்
வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க
இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில்
கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில்
பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி
பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்
தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப்
பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள்
ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல்
பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் 940
தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும்
வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான்
பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார்
இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால்
ஆனதா லிந்த வழிவழியே யங்குளது
போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும்
ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும்
கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி
ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில்
ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும்
மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால்
தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே
அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று
செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார்
மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம்
ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேய்ப்பிறப்பு
அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி
இப்போது தானதவம் இல்லையே லோகமதில்
தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும்
பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க 960
என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான்
நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும்
இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது
மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா
ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப்
பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார்
என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து
அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து
இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று
தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே
இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில்
சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே
அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து
இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண்
என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே
அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து
பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும்
வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும்
பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில்
இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார் 980
அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார்
இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து
பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால்
இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல்
மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன்
கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார்
நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு
எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய
கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார்
வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி
கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே
வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல்
கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த்
துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும்
அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி
இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து
மந்திர சாலம் மாய்மால மாரணமும்
தந்திர சாலம் சர்வதுமே தாருமையா
கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப
வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் 1000
ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக
வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா
அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும்
இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து
மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார்
கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத்
தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை
ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால்
வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள்
தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும்
ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது
ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள்
ஞானாந்திர மான நாரத மாமுனியை
வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே
இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான்
பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால்
தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில்
முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித்
துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார்
அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி 1020
இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே
மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான்
தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம்
பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும்
ஆயனா ரோடே அருளுவா ரன்போரே
கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால்
அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே
அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி
இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம்
நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப்
பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி
நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள்
மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர்
ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை
ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி
மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை 1036
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்
மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்
சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர்
ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய்
பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து
மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில்
மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து
ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க
வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி
மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால்
இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை
ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா
என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க
அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று
எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து
வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து
மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும்
எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம் 20
கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க
அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன்
அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று
மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|