புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
63 Posts - 57%
heezulia
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
58 Posts - 56%
heezulia
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிலத்திரட்டு அம்மானை


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:59 am

First topic message reminder :

அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 TN_120625172812000000

காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்

பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்

சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா

அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே

திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.



அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:11 am

இராவணன் வரம் வேண்டல்

பத்துத் தலையான பாவி அரக்கனவன்
மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை
வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று
இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை
தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச்
சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை 40

காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே
ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி
இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள்
தருவோ மெனவே தந்தி முகன்பேரில்
உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க
சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது
மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும்
வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும்
வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச்
சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும்
சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும்
புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி
உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும்
இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம்
மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும்
கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி 60

அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி
சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி
அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே
கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே
மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில்
கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல்
அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து
கர்ம விதியால் கைமறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து
அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து
கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து
நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று
இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம்
அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார்
ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும்
நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக்
கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும்
சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே 80

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான்

இராவணன் கொடுமை

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும்
அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித்
தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான்
வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால்
மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன் 100

வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால்
சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை
வேகும் படிக்கு வேள்வியதி லிட்டிடுவேன்
மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால்
காமனையும் ஈசன் கண்ணா லெரித்ததுபோல்
என்னுடைய கண்ணால் இயமனையுங் காலனையும்
துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுகத்தி லுள்ள இராசாதி ராசரெல்லாம்
முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால்
நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால்
எரிப்பே னொருஅம்பால் இராசாதி ராசரையும்
இப்படியே பாவி இந்திரலோ கம்வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:12 am


தேவர்கள் முறையம்

அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம் 120

தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென
அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக்
கபயமிடும் வேதன் கயிலையது தானேகி
ஆதி பரமன் அடியைமிகப் போற்றி
சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை
பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால்
தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது
தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம்
தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே 140

இராமாவதாரம்

என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும்
அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க
அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார்
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத்
தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார்
ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே
காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப்
பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும்
இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச்
சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப் 160

படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும்
அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார்
தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை
மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே
எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால்
மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க
வாசத் தசரதரும் வந்து தினகரரும்
மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி
அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து
நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத்
தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு
மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க
அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை
இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் 180

இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார்
அப்போது ராமர் அய்யா திருமாலை
இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப்
படைக்கும் பொழுது பரமசிவ னாரை
நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார்
அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு
இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய
வந்த விபரம் வகைவகையா யீசுரரே
என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார்
மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை
பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில்
சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர்
துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம்
வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும்
நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து 200

நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத்
தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச்
சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்மந் தமான உதவிபெற வேணுமென்று
இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர்
உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க
இந்தப் படியே இவர்களிரு மாமுனியும்
எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:13 am


கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்
இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும்
அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம்
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை
கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்ச லருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்

ருக்மணி கல்யாணம்

வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை
மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க
நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை
விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்குத்
திருமாங் கலியம் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோ னடிபணிந்து
இப்போது வுன்றனக்கு இசைந்த உருப்பிணியைப்
பாணிக் கிரணம் பண்ணப் பறையடித்தார்
நானிதையுங் கேட்டுநாடியுரைத்தே னென்றார்
அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிந்து போக இசைந்தார்கா ணம்மானை 20

மோகத்திரு மாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தா லுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுடக்
கழுத்திலே யிட்டுக் காமக்கண் ணீட்டிடவே
மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேயமெங்கும் மோகம் சென்றதுகா ணம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து
உருப்பிணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு
விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி
மனோன்மணியை யுங்கூட்டி மாயன் படையுடனே
வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து
வடவெல்லாந் தீர்த்து வைகுண்டப் பெம்மானும்
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை

ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய்
அருந்தி முறைமா தரையணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும்
திருக்கி யறுத்து அசுரரையும்
உபாய முடனே கொலையடக்கி
உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத்
துவரம் பதியிலி ருந்தளரே 40

உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்

பாண்டவர் வரலாறு

கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து
அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
எவரெவரு மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை
வளர்ந்து நிமிர்ந்து வரும்வேளை யானதிலே
இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
துடியாய் மனுவழக்குச் சொல்லித்துரி யோதனனும்
முடிய வினைசூடி உலகாண்டா னம்மானை
பாவி யிருந்து பாராண்டச் சீமையிலே
கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது
தன்ம ரவ்வீமன் சகாதே வன்விசயன்
நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான்
குருநா டெனவே கூறுவா ரந்நகரு
திருநாடு தன்னுடைய சிறப்புக்கே ளம்மானை
துரியா தனாதி செலுத்துமஸ்தி னாபுரத்தில்
பரியொட் டகமும் பலிமிருக மானதுவும் 60




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:14 am


பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசியாய்க் குருநகரில் மேவித்தகை யாறிவரும்
அத்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம்
பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும்
குருநாடு தன்னில் குழாங்கொண் டிருந்தனராம்
திருநாட்டுக் கொவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசமா யுள்ள வெகுவைந் தலையரவும்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு
அந்நாடு நாடு அரன்நாட்டுக் கீடாகும்
பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு
அரனருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு
இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு
தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில் 80

மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பேர்பாதி யாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காகத்
தாண்டவ ராயர் தண்மையா லம்மானை

பாண்டவர் வனவாசம்

இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடியுடைய மன்னன்துரி யோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை
தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்ததான்
நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்று மில்லாமல்
இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும்
தனியே வனத்தில் தானனுப்பி இராச்சயத்தை
அடக்கி யரசாள அவன்நினைத்து மாபாபி
உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும்
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைத் தான்விரட்டி
சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான்
வனவாசந் தன்னில் வந்திருந் தைபேரும்
இனமா னதுபோல் இருந்தார் குகையதிலே
அப்போது வேத வியாச ரவறிந்து
செப்போடு வொத்தத் திருமா லருகேகி 100

மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீயதுரி யோதனனைச் செயிக்கவந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுதுசூ தாடிவென்று
வஞ்சக மாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான்
ஐபேரும் பத்தினியும் அன்னை பிதாவுடனே
பைப்போ லலறிப் பசித்திருந்து வாடுகிறார்
அன்றுமகா மேர்வில் அடியே னுரைத்தபடி
இன்றுபா ரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும்
அன்று திருமால் ஐவ ரிடம்நடந்தார்
வேத வியாகரரும் வேயூதும் வாயானும்
சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர்கா ணம்மானை
நாரா யணர்வரவே நல்லதர் மாதிகளும்
பாரா னதையளந்தோன் பதம்பூண்டா ரம்மானை
கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே
மால்பிடித்துத் தர்மரையும் மார்போ டுறவணைத்துப்
பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார்
அப்போது தர்மம் அச்சுதரை யும்போற்றி
இப்பெழுது எங்களுக்கு ஏற்ற பசிதீர 120

சூரிய பாண்டம் தனையழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்ன மருளுமென்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும்
கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுத்து
ஐயா யிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும்
என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பே ரரியை எடுத்ததி லிட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்
இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு
சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை
மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயின்பின்
தூயவியா கரரும் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல்
தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று
ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும் 140

ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே
நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான்
அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை
பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி
நீதாள மான நெடியோ னதுகாத்தார்
கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும்
கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே
அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான்
விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே
தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும்
மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார்
பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி
நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே
இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம்
அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும்
பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும்
சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:14 am


துரியோதனன் பாடு

பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு 160

மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத்
தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல்
தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு
வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான்
மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி
ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள்
கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும்
மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும்
தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து
வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து
வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத்
தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து
நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப்
புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச்
செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிட வொன்று ஒத்துதே பாரதப்போர்
ஐபேருட படையும் அரவக்கொடி யோன்படையும் 180

கைப்போரு விற்போரும் கணைப்போரும் வாள்போரும்
அம்புப்போ ருங்கரியின் அச்சுப்போரும் பொருது
கன்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும்
மன்னன் சிறுபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
சராசந் தன்வரையும் சத்தியக் கீசகனும்
பூராச வீமன் பெலியிட்டா னம்மானை
இத்தனைப்பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனைபே ரையும் அறுத்தா னருச்சுனனும்
துரியோ தனன்படைகள் சேர மடிந்தபின்பு
விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
வம்பி லிறந்தாச்சே வாழ்வெதே னென்றுசொல்லி
எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம்
வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே
விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்ச்சுனனை
இன்றுகொல்ல வென்று எழுந்தான் படைக்கெனவே
அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்து
இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ
அத்தினா இன்றுன்மேல் அரவக் கொடியோனும் 200

வாறான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா
வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா
என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு
வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
வீமனுட தண்டதுக்கு விசைமால் விசைகொடுத்துப்
போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
விசையன் பரிநகுலன் வெற்றிச்சகா தேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லமென்று
வீமனை யுங்கூட்டி வெளியிலரி வந்திடவே
காமக் கனல்மீறிக் கரியோ னெழுந்ததுபோல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சந்தான மான தமிழ்வீமன் தான்மாறி
எதிர்த்தா ரிருவர் எனக்கெனக் கென்றேதான்
செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை
மண்விண் ணதிரும் வானமது தானதிரும்
திண்திண் ணெனப்பூமி தொந்தொ மெனக்குலுங்கும்
மலைக ளசைந்து மடமடென ஓசையிடும் 220

கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சுவறி அங்குமிங் கோடிடவே
இலைக ளுதிர்ந்து இடிந்துவிழு மாமரங்கள்
தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாம லேமறைக்கும்
வேöழுழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
தவமுனிவர் நெட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து
திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே
வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்த மோதும் நன்மறையோர் தாம்பதற
துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும்
எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
ஒண்ணுக்கு வொண்ணு ஒல்கிப்புறஞ் சாயாமல்
மண்ணும்விண் ணுமதிர மண்டி யுத்தமிட்டார்
துரியோ தனனடிக்கத் துடிவீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறிய வனடிக்க
அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டுச்
சாயா விதத்தைத் தானறிந் திருபேரும்
வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
துட்டாள னான துரியோதன னுரைப்பான் 240

இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டுப்
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே
உன்பெலமு முன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால்
என்பெலமு முன்னோடே இயம்புகிறே னென்றுரைத்தான்
அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும்
தப்பாமல் தானுரைத்தான் சகலோ ரறிந்திடவே
கேட்டுத்துரி யோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
தீட்டுகிறே னென்னிடது செய்யபுற மென்றுரைத்தான்
கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு
மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
திடத்த முடனே சென்றவ் வீமன்பேரில்
மாறி யவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தை தனில்நினைக்கத்
திலர்தமுள்ள மாயன் செயவீ மனைநோக்கி
வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே
அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே
துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து 260

மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே
அப்போது மாயன் அரவக்கொடி யோனிடத்தில்
தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப் போயினரே
முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய்
தென்ன னிராவணனாய்ச் சிரசுபத்தாய்த் தானிருந்தாய்
அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால்
செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி
பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி
உற்று வொருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில்
தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது
எம்பிரா ணன்வதைக்க ஏலாது என்றனையே
தம்பியொரு நூறோடே தான்படைத் துன்னையுந்தான்
கொம்பிலொரு ஆளைவிட்டுக் கொன்றேனே உன்னையென்றார்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது
தண்டுகொண் டேயடித்த தமிழ்வீ மனல்லாது
இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே
அப்போது மாலும் அதிகக்போ பம்வெகுண்டு
துப்புரைகள் கெட்ட தீயனுக்கங் கேதுரைப்பார்
உன்னையின்ன மிந்த உலகி லொருபிறவி 280

சின்னவன்ன மாகச் சிரசொன்றாய்த் தான்படைத்து
அறிவுபுத்தி யோடும் ஆணுவங்கள் தன்னோடும்
செறியுங் கலையோடும் சிறப்போடுந் தான்படைத்து
என்பேரி லன்பு இருக்கவெகு சாஸ்திரமும்
தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே
முன்னே வுனக்கு உற்றபிறப் பாறதிலும்
என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை
ஏழாம் பிறப்பதிலும் என்னைநினை யாதிருந்தால்
பாழாவாய் மேலும் பகையில்லை யென்றனக்கு
என்று திருமால் இயம்பித்துரி யோதனனை
அன்றவனைக் கொன்று ஐவரையுந் தான்வருத்திக்
கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்தி லுள்ளமுறை
எல்லாச் சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாச முள்ளதர்மர் ஒக்கமுறை செய்தனராம்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:14 am


கர்ணனுக்கு முத்தியருளல்

முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங் கொடுக்க
மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே
அப்போது வேத வியாசரவ ரங்குவந்து
செப்போடு வொத்த திருமாலோ டேதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட 300

ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய்
பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து
தொண்டுபண்ணி நின்ற துய்யவா னரங்களிலே
வல்லபெல முள்ள வாலியிவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டி லிருக்கையிலே
இராவணனோ டேகூடி இராமசரத் தாலிறந்தான்
சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து
வந்து பணிந்தானே வாலியவ னென்காலில்
நன்றியுள்ள மாலே நானுமுன் னேவலனாய்
முன்னேநீ ரமிழ்தம் உவரிதனிற் கடைய
என்னை யொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனைக்
கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்றந்த வாலி இறைஞ்சிநின்றா னென்னையுமே
அன்றுவா லிதனக்கு அருளினது நீர்கேளும்
எனக்கேவ லாக இப்பிறவி நீபிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால்
இனிமே லவனோடிருந்து என்சொல் கேட்கவைத்துக் 320

கனியான மோஷக் கயிலாச மேதருவேன்
என்றவனை யழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை
அரவக் கொடியோன் இடத்தி லனுப்பிவைத்து
இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி
அன்னை பிதாசொல் அசராம லைபேர்க்கு
ஒன்னே வொருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு
மானமாய் மோக்ஷம் வகுத்தே னிவனுக்கென்றார்
நல்லதுதா னென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான்
எல்லைவைத்தா பாரதப்போர் இன்று முடிந்ததென்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரை யும்போற்றி
மெய்போக மான வியாசரை யுங்குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனா ருண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
வைகுண்ட மேக மனதிலுற்று எம்பெருமாள்
பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி
ஆங்கார மோகத்(து) அம்புக் கணுவாலே 340

ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு
மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
நூல்நடந்து வாருமென்று மோக்ஷத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது
சாரங்கர் செய்த தன்மைகே ளம்மானை

சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும்

அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும்
வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
சோலை மரமும் சுபசோப னமரமும்
ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும்
புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந் தனமரமும்
மாவு பலமரமும் வாய்த்த பலாமரமும்
தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது
சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவை யின்பெருமை
தூல மின்னதென்று சொல்லத் துலையாது
பார்வதியும் ஈஸ்வரனும் பாவித் திருப்பதுபோல் 360

தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
கயிலை யீதென்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உவந்திருப்ப தவ்வனத்தில்
வைகுண்டங் காண வந்ததர்மி யெல்லோரும்
மெய்குண்டங் கண்டோ மெனஇருப்பா ரவ்வனத்தில்
அப்படியே நல்ல அயோக அமிர்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான்
புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காகத்
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம்
அவ்வனத்தி லுள்ள அமிர்தகங்கை யானதிலே
குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார்
மரகத வல்லி வள்ளி சலிகையெனும் 380

சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென
ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று
சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில்
ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி
பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டானம்
இனியெனக்கு நீங்கள் எல்லோரு மிக்கவந்து
கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள்
அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார்
எப்போதுந் தானாய் இருப்பவர்க்கே யல்லாது
மாயவர்க்கு மற்றுமுள்ள மயேசு ரர்தன்றனக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தன்றனக்கும்
எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற
ஒருவனுக்கே யல்லால் ஊழியங்கள் வேறில்லையே
கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும் 400

காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர்
தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம்
ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று
மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில்
சாலோக மான சத்திபர லோகமதில்
ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும்
சீருரூப மான சிவலோக மானதிலே
மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே
தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே
தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில்
சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை
சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு
பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில்
புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு
சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை
இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் 420

அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு
எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக்
கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக்
கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று
தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே
பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி
குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே
காமத் தழலாய்க் கருமேனி யானதிலே
வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய
சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள்
கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி
அரிஓம் எனவே ஆடிக் கரையேறி
தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள்
உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு
அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட
கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே
திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார்
கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ

உன்னித் திருமால் ஓங்கார மோகமதால்
மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை
சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை
தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார்
வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும்
கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி
துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல்
கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை

கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும்
இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:15 am


அம்மைமார் தவம்

கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறி கயிலையுக மானதற்கு 460

அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து
வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை
இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று
பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும்
ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே
மாசொன்று மில்லா மாத ரேழுபேரும்
தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும்
மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை
கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர்
பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார்
பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே
காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும் 480

நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே
அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர்
சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியே னதையெழுதி
மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட் டம்மானை
தன்போத மாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென் றெம்பெருமாள்
உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமா யுரைத்தார்
இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள்
அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:15 am


திருமால் அமுதளித்தல்

பிள்ளை களைப்போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளலந்த மாலும் மதலை தனையெடுத்து
ஆரிடத்தி லிம்மதலை அடைக்கலமாய் வைப்போமென்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றா ரம்மானை
தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும்
கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி
நிரைவா வெனவே நியமித்தங் கூதிடவே 500

அரை நொடியிலாவு அங்கொன்று மில்லாமல்
அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம்
சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றா ரெம்பெருமாள்
பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு
நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன்
தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே
வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை
இந்தாப்பா ரென்று எறிந்தா ரவன்பயந்து
ஆரோ வெனப்பயந்து அயிராவதத் தோனும்
போரொல்கிப் போனான் பொன்னுலோ கந்தனிலே
நல்லதென மாமுனியும் நளின முடன்மகிழ்ந்து
செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க

காளி வரவு

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி
பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே 520

ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித்
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு
தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில்
கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே
தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட
மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே
பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி
காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக
மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து
வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை
உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து
வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள்
தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே
மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும்
விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப்
படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள் 540

என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே
வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி
கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு
பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி
கண்ணான காளி காரிகையே நீகேளு
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு
விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே
தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன்
விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும்
உன்னை யழைத்து உன்கையி லேதருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப்
பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து
மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக்
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து 560

வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள்
வேத முனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள்
வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:17 am


சான்றோர்க்கு நாமம் அருளல்

உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து
வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து
முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும்
மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து
கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி
குணமான தந்தி குமரனை யும்வருத்தி
சத்தி உமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையும் வானோர் எல்லோரை யும்வருத்தி
சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி
மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர
இப்படியே சங்கம் எல்லோருந் தான்கூடி
அப்படியே தானிருக்க அருளுவா ரச்சுதரும் 580

பிறந்தபிள்ளை யேழதுக்கும் பேரிட வேணுமென்று
அறந்தழைக்கு மீசர்முன் அவர்வைத்தா ரம்மானை
அப்போது ஈசுரரும் அன்பா யகமகிழ்ந்து
இப்போது மாயவரே எல்லோருக் கும்போதுவாய்
நீர்தானே நாமம் இட்ட லதுபோதும்
பார்தா னளந்த பாலவண்ணா வென்றுரைத்தார்
கார்வண்ணருங் கேட்டுக் கறைக்கண்ட ரோடுரைப்பார்
தார்வண்ணரே முதற்பேர் தானுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றினதால்
தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு
சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும்
முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும்
மதமான விந்து மாயமுனி சேயதற்கு
சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும்
ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார்
நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு
தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள்
அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு
வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் 600

எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும்
சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே
பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து
பாருபதி நாமம் பகருவா ளம்மானை
சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு
மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும்
கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள்
பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந் தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை
சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத்
தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை
கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே 620

வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை
வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார்
இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார்
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து
சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம்
அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து
குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து
அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க
தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:17 am


சரஸ்வதி தாலாட்டு

வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம்நிசங் கண்ட மங்காத சான்றவரோ 640

சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும்
சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி யானவரோ
கொத்துமுங்கை யாபரணம் கொடிவிருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ
தாலம்பா லுண்டு தானிருந்த மன்னவரோ
நடைக்கா வணங்களிட்டு நல்லதீ வட்டியுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலே வீதிவலஞ் சுற்றிவந்து
துள்ளாடி சிங்கா சனம்வீற் றிருப்பவரோ
பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே
நாதமிரட் டையூதி நாடாளு மன்னவரோ
எக்கா ளமூதி இடமடம் மானமுடன்
மிக்கான சீமையெங்கும் மேவிவரு மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச் சான்றவரோ
கர்மம தில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ
தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக் குற்றவரோ
உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ 660

கல்விக் குகந்த கருணாகர ரானவரோ
செல்விக் குகந்த சென்மமது கொண்டவரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும்
மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன்
மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ
சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக்
கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ
அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும்
செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ
துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக்
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ
ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ

தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ
சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ
துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ
சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ 680




அகிலத்திரட்டு அம்மானை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக