புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிலத்திரட்டு அம்மானை


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:59 am

First topic message reminder :

அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 TN_120625172812000000

காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்

பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்

சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா

அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே

திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.



அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:07 am


துவாபர யுகம்

பாவி பிறக்க பச்சைமால் தான்கூடத் 540
தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும்
விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம் புவனையும்
அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவரையும் பிறவிசெய்தார்
ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து
மொய்குழ லான மெல்லி திரௌபதியாய்
அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை
நம்மை விபீஷணற்கு நல்மக ளாக்கிவைத்து
அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி
இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே
தோழியாய் முன்னிருந்த துய்யத் திரிசடையை
நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார்
பின்னுமந்த மாயன் பெரியோ னடிவணங்கி
நின்னுகரங் குவித்து நெடியோ னுரைத்தனராம்
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களுடன்
முழுது மிலங்கை முடித்துநான் நிற்கையிலே
என்படைக ளான எழுபதுவெள் ளமதிலும்
உன்படைக ளெல்லாம் உயிரழிந் தாரெனவே
ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே
தோராத மன்னன் துடியானச் சேவகன்தான்
ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை 560

வருக அழைத்து வகையே தெனக்கேட்க
நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க
ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே
அய்யாவே வும்முடைய ஆளான வீரனைத்தான்
கையால முள்ள கும்பகர்ண னொருசமரில்
பிடித்து நசுக்கிப் பிசைந்து திலதமிட்டான்
அடுத்துநின்று பார்த்து அரக்க னவனுயிரைக்
கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன்
என்றே தான்மறலி இத்தனையுஞ் சொன்னான்காண்
ஆனதால் கும்ப கர்ண னவன்தனையும்
ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையு மிவ்வுகத்தில்
என்றே தான்மாயன் இதுவுரைக்க ஈசுரரும்
அன்றே தான்கும்பனையும் அப்படியே தான்படைத்தார்
படைத்த சடமதுக்குப் பரம னுயிர்கொடுக்கச்
சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும்
துவாபர யுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்துத்
தவறாத வண்ணம் தான்படைத்தா ரெல்லோரும்
அப்படியே ஈசர் அன்று படைத்தபடி
இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம்
முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து 580

அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க
அரக்க னிராவணனும் அதிகத்துரி யோதனனாய்
மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு
வந்து பிறந்தான்காண் வையகத்தி லம்மானை
சந்துபயில் மாயன் தன்னோ டுடன்பிறந்த
தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன்
நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும்
ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம்
தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய்
மெய்வரம்பா யுள்ள மேன்மை யதின்படியே
ஐவருட தேவியென்று ஆயிழையுந் தோன்றினளாம்
கும்பகர்ண னென்ற கொடும்பாவி கஞ்சனுமாய்
வம்பகனாய் வந்து மதுரை தனில்பிறந்தான்
இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும்
அப்படியே பங்கு வகைபாதி யாய்ப்பிறந்தார்
இராச்சியத்தி லுள்ள இறைதான முள்ளதெல்லாம்
தராச்சியமாய்ப் பாதியெனத் தங்கள்சில நாடாண்டார்
கஞ்ச னவன்பிறந்து கடிய கொடியவனாய்
வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும்
சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு 600

இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை யாண்டனனே
ஆனதா லவனுடைய அம்புவியி லுள்ளோர்கள்
ஈனதுன்ப மாகி இருந்தார் பயமடைந்து
தேவரையும் வானவரைத் தேவேந்தி ரன்வரையும்
மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி
தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே
வைவ னவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான்
வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் தான்போட்டு
அருணன் முதலாய் அந்தி வரும்வரையும்
வேலை யவன்கொண்டு விடுவா னவன்தொழிலாய்
மாலை நினையான் மறையைமிக நினையான்
ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள்வையான்
சாலயங்கள் செய்யான் தர்மசிந்த னைகள்செய்யான்
அந்தணர்க்கு மீயான் அன்னதா னங்களிடான்
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக் களியான்
ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல்
கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன்
கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான்
சண்டனைக்கண் டாருவென்பான் தன்னைப்பா வித்திருப்பான்
எம்மைப் படைக்க ஏலுமோ மற்றொருவர் 620

நம்மைப் படைத்ததுவும் நான்தா னெனவுரைப்பான்
இப்படியே கஞ்சன் எதிரியில்லை யென்றுசொல்லி
அப்படியே மீறி ஆண்டான்கா ணம்புவியை
மேலோகந் தன்னில் மிகுத்ததெய்வக் கன்னியரில்
வாலோக மான வாய்த்தகன்னி தேவகியும்
உரோகணியா ளென்னும் நுதல்மடவா ரண்டுபேரும்
புரோகணிய மான பொய்கைநீர் தானாடி
அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும்
மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே
மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே
ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள்
தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம்
நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே
இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை
பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை
காலில்சிவ சக்கரமும் கையில்மால் சக்கரமும்
மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும்
வாயு பகவான் வடிவுமிகப் போலே
ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல்
கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு 640

விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை
இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி
பொன்மதலை தன்னைப் போட்டுவைத்துப் போவோம்நாம்
என்றுசொல்லி மாதர் இருபேருஞ் சம்மதித்து
வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தா ரம்மானை
மதலை தனையெடுத்து மார்போடு தானணைத்து
குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும்
கயிலை யதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில்
மயிலனைய மாமயிலார் வந்தார்கா ணம்மானை
வந்த மாடவர்கள் மார்பி லமுதிளகி
அந்தப் பரமே சுரனா ரவரறிந்து
கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன
மின்னித் தனங்கள் மெல்லியுட லானதென்ன
பச்ச நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன
அச்சமில்லாக் கொங்கை அயர்ந்துஉடல் வாடினதேன்
ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க
சூதகமாய் நின்ற தோகைபோல் வாடிநின்றார்
வாடியே மடவார் தாமும்
மார்பதில் துகிலை மூடி
கோடியே அயர்ந்து ஏங்கிக்
குருவதைப் பாரா வண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் 660




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:08 am


நாணியே நின்ற தன்மை
தேடியே மாயன் செய்தச்
செயலென அறிந்தா ரீசர்
அறிந்தார் மாயன் சேயாகி
அழுதே இரங்குங் குரலதினால்
செறிந்தார் குழலார் இவர்கள் சென்று
சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும்
பறிந்தே யிவர்கள் நாணினதும்
பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தே கன்னி யிருவரையும்
அழித்தே பிறவி செய்தனராம்
பிறவி யதுதான் செய்யவென்று
பெரியோ னுரைக்கப் பெண்ணார்கள்
அறவி யழுது முகம்வாடி
அரனா ரடியை மிகப்போற்றித்
திறவி முதலே திரவியமே
சிவமே உமது செயலைவிட்டு
இறவி யானா லெங்களுக்கு
இனிமேல் பிறவி வேண்டாமே
வேண்டா மெனவே மெல்லியர்கள்
விமல னடியை மிகப்போற்றி
மாண்டா ரெலும்பை மார்பணியும்
மறையோன் பின்னு மகிழ்ந்துரைப்பார்
தூண்டாச் சுடரோன் திருமாலைச்
சேயென் றெடுத்தச் செய்கையினால்
ஆண்டா ருமக்கு மகனாகி
அதின்மேல் பதவி உங்களுக்கே

மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால்
செல்ல ஏதுவாச்சு சீமையிலே யம்மானை
என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க
அன்றே மடவார் ஆதிதனை நோக்கி
ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே
சோதியே நாதி சொரூபத் திருவிளக்கே
அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே 680

வல்லாய்ப் புவியை வார்த்தையொன் றாற்படைத்த
ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே
சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே
எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே
முட்டாத செல்வ முதலே முழுமணியே
கண்ணுள் மணியே கருத்தினுள் ளானவனே
பெண்ணு மாணாகிப் பிறப்பில்லா நின்றோனே
இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க் கெளியோனே
பிறப்பு இறப்பில்லாத பேசமுடி யாதவனே
கருவிதொண்ணூற் றாறும் காவலைந்து பேருடனே
உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே
மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல்
தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே
மவ்வவ் வாகி வருந்தியவ்வும் ஒவ்வாகி
செவ்வவ் வாய்நின்ற சிவனே சிவமணியே
மாய னெடுத்த மகவான கோலமதை
நேய மறியாமல் நெறிதவறிப் போனதினால்
பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண்
எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே
தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும் 700




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:08 am


மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே
அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும்
இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண்
அம்மை உமையாள் அருகே மிகஇருந்து
உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து
பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால்
பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே
பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி
நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி
தம்புரு வீணை சப்தக் குழலுடனே
இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி
நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே
அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும்
இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே
அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான்
சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து
நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே
மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க
வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க
நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப் 720

போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை
வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால்
ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார்
சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால்
அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு
மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட
குதலை மொழியாரே கொம்பே றிடையாரே
விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு
மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின்
ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு
குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து
பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு
மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார்
பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே
திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும்
மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு
இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே
கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே
தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார்
பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம் 740

சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில்
இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும்
அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர
மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத்
தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத்
தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து
மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று
மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது
பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே
சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான்
பாவமிக தான்வருத்தி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை
அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால்
எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான்
சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான்
வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி
வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை
அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும் 760

வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார்
கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள்
வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்
தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது
வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும்
நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால்
பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே
கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ
இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால்
அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான்
காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப்
பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது
ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம்
மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக்
கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே 780

அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை
என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற
நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான்
எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன்
தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று
வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான்
வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே
தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து
வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச்
சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும்
மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக்
கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே
கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான்
வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில்
ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே
தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள்
மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான்
மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள்
சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும் 800

எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:09 am


தேவர் முறையம்

நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி
தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட
தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும்
விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி
ஆதியே நாதி அய்யாநா ராயணரே
சோதியே வேதச் சுடரே சுடரொளியே
பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே
மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே
தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே
கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக்
கட்டவரு மட்டான கருணா கரக்கடலே
உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே
அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும் 820

நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே
எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக
ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே
தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி
மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே
போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில்
நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும்
ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால்
வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான்
அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால்
குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே 840

கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதா னதுகேளார் கண்ணே குருடாகும்
புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப்
பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத்
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி
வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே
நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத்
தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து
காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப்
போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக்
குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே
இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து
அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான்
வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல் 860




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:09 am


கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி
எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும்
என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய
அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே
வானமது பூமியிலே மடமடென வீழாமல்
தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே
வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே
மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல்
ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத்
தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே
வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும்
கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே
சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்குக் கருணா கரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச் 880

சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே
நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி
இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே
இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட் சமான நாரா யணப்பொருளே
கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச்
செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே
அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே
ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ
திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ
ஆரு மொருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே
எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும்
கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே
மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது 900

தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே
ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா
பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார்
வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால்
நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண்
நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால்
வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா
முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமா தேவி புலம்பி முறையமிட
நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட
நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச்
சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை
என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும் 920
திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:09 am


தேவர் வேண்டுதலுக்கு இரங்கல்

வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க
நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே
சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம்
துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த்
தவறாத வம்பன் சராசந் தன்வரையும்
அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச்
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன்
போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும்
சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்

கண்ணன் அவதாரம்

விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப்
படைவீர ரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை
வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால்
நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம்
பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல் 940

ஆமா அரியே ஆதி முறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார்
இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க
ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும்
நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச்
சத்தபல முள்ள சராசந் தன்வரையும்
மற்றவ னோராறு வலியபலக் காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாரா யணர்நமக்கு
மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி 960

தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே
அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை

முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச்
சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே

முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல்
என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும்
செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை
கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே
உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே 980

அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே
விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார்
இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து
வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே
ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம்
கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட
மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார்
ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும்
கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும்
விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத்
தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக்
கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே 1000

தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில்
பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட
இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட
முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால்
வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும்
மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி
விண்டு சொல்லாத விதன மிகவடைந்து
அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே
பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார்
பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில்
சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை
மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில்
தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை
கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும்
நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்
பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே
சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று 1020




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:10 am


விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத்
தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக்
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை
கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ
வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம்
மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை
அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம்
கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக்
கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த
பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து
ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி
வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப்
புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை
அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின்
கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு
ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான் 1040

கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து
பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத்
தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க
ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல்
சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே
பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள்
என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய்
உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும்
ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும்
கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி
வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை

அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன்
மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால்
கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து
பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:10 am


கஞ்சன் பாடு

அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி
சையோ இடையர் தம்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால்
பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு 1060

என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான்
அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை
வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல்
பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி
என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே
நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான்
தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில்
புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக்
கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே
விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே
போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு
வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத் திறவானோ நாரா யணன்தானோ
சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ
ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை
பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை 1080

தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம்
மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு
என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே
அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை
என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே
முன்செறியும் பூத மூரிதனை யேவியவன்
கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை
வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு
பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக்
கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை
கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை
வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே
ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி
வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே
கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக்
கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும்
துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை
ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும்
போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார் 1100

மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு
இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே
நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை
இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை
கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை
அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான்
அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து
வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள்
கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி
ஈடவி யென்ற எக்காள சத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே
கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே
நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று
கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான்
இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று
சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே
கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும்
எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை
கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான் 1120




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:10 am


மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும்
தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை
மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே
வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து
கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே
கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி
மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி
சீதான உக்கிர சேனனையு மாளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக
எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர்
திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன்
எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று
வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட
அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து
இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது
சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக்
கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று
இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து 1140

செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே
கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும்
திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார்
பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச்
சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி
நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே 1147




அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:11 am


அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து
ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து
வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை
சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து
வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக்
கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து
முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம்
செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று
வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட
என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார்
அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு

திரேதா யுகம் - இராவணன் பாடு

முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே
இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி
அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை
உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில்
அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார்
முன்னே இவனும் முற்பிறப் பானதிலே
என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே 20

ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு
ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும்
பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும்
தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை
கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை
வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார்
அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி
விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக்
கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க்
கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து
வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார்





அகிலத்திரட்டு அம்மானை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக