புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
46 Posts - 59%
heezulia
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
41 Posts - 59%
heezulia
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 12:58 am

தீராத விளையாட்டுப் பிள்ளை... UpfIiwhRyCve2fsUZ47A+krishna_03_full

தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணபரமாத்மா விளையாடியதெல்லாம் வெறும் விளையாட்டல்ல; தெய்வீகத் திருவிளையாடல்கள்! ஆனால் நாமோ, கண்ண பரமாத்மாவின் சிறுவயது வாழ்க்கையை ஏதோ விளையாட்டுப் போலக் கருதி, பின்னர் அவன் பஞ்சபாண்டவர்களுக்கு அருளியது, மகாபாரத யுத்தத்தில் அவன் புரிந்த லீலைகள், முடிவாக அவன் அருளிய கீதை போன்றவற்றைத்தான் பெரிதாகப் பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அப்படியானால், அவன் ஓரிடத்தில் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து, வெண்ணெய்யைத் திருடித் தின்று, கொக்கு அரக்கன், பாம்பு அரக்கன், அந்த அரக்கன், இந்த அரக்கன் எனக் கொன்று திரிந்ததற்கு வேறு பொருளோ, காரணமோ இல்லையா?

பொழுது போக்குவதற்கும், படமாக வரைவதற்கும், புத்தகங்கள் போட்டு விற்றுக் கல்லாவை நிரப்புவதற்கும், கார்ட்டூன் படங்களாகவும் திரைப்படங்களாகவும் திகிலூட்டும் பின்னணி இசையோடு பார்த்துப் பின்பு மறப்பதற்கும், பலர் பணமாய் சம்பாதிப்பதற்கும், அளவே இல்லாமல் விளம்பரங்களைச் சேர்த்துத் தொலைக்காட்சிமுன் குழந்தைகளை உட்கார வைத்து மூளைச் சலவை செய்வதற்கும், கண்களை உருட்டி, வாயை விரித்துக் கதைகளைக் கூறி சோறு ஊட்டுவதற்குமானதா அவன் பால்ய கால லீலைகள்?

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:02 am

இப்படிக் கதை கேட்டுச் சோறு உண்ட குழந்தை வளர்ந்து, 'நானும் கொக்கைப் பிடித்துக் கொல்லப் போகிறேன். அடுத்த வீட்டில் வெண்ணெய் திருடப் போகிறேன்’ என்று கிளம்பினால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இதுவரை எவராவது இதன் உட்பொருள் என்னவென்று விளங்கிக்கொண்டு சொன்னதுண்டா? கம்ஸன் அரக்கர்களை ஏவினான்; கண்ணன் அவர்களைக் கொன்றான். இதுதானே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. கம்ஸன், கண்ணனைக் கொல்ல அரக்கர்களை ஏவினால், அதனால் நமக்கென்ன? இதை ஏன் நம் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும்? படமாக, சிலையாக ஏன் பார்க்க வேண்டும்? வேண்டியதில்லையல்லவா? பாகவதத்திலேயே மாமன் மருமகன் பிரச்னையை ஓரிரு வரியில் முடித்திருக்கலாமே..! அப்படியாயின், இதற்கு ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும்; பெரிய வாழ்வியல் தத்துவங்கள் இருக்க வேண்டும். இல்லாதது ஏதுமில்லை நமது புராண இதிகாசங்களில்!


தீராத விளையாட்டுப் பிள்ளை... UztNYauR4bLo2y5PvMRw+download

பரம்பொருள் பிறப்பெடுத்தால் நிச்சயம் அதன் தன்மை வெளிப்பட்டுத்தான் ஆகும். அவனது ஒவ்வொரு அசைவும், மனித குலத்துக்குப் பாடமாக அமையும்.

அவன் பிறப்பில் இருந்தே பார்ப்போமே! முன்வினை காரணமாக (இதை அப்படியே வைத்துக்கொள்வோம்) பெற்றோர் சிறைச்சாலையில் இருக்க, கண்ணன் பிறப்பு அங்கே நிகழ்கிறது. பின் அங்கிருந்து இடம் பெயர்கிறான். காரணம், மாமன் கொன்றுவிடுவான் என்கிற பயம், பெற்றவர்களுக்கு. இதுதானே பாகவதத்தின் ஆரம்பம்!

இதை மிக எளிதாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்க முடியும். குழந்தைகளோடு இருக்கும் பெற்றோர்கள் மனதில் இவை பதியவேண்டும். குழந்தைகளுக்கு எப்படி நாம் கண்ணன் கதைகளைக் கூறவேண்டும் என்பதற்காகத்தான் இது. முக்கியமாக, குழந்தைகளுக்கு அரக்கர் கதைகளைக் கூறும்போது, அவை நம் வாழ்க்கையோடு பொருந்துவது போல் சொல்லவேண்டும். அப்போதுதான் அவற்றின் உட்கருத்து குழந்தைகள் மனதில் பதியும். அதுதானே வேண்டும் நமக்கு?

................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:04 am

கண்ணன் வெண்ணெயைத் திருடியதுபோல், உங்கள் குழந்தை தன்னுடைய திறமையால், மற்றவரின் உள்ளங்களைத் திருடலாம். கண்ணன் செய்தது அதைத்தான்!

அழகாய் குழந்தை வளர்கிறது, கண்ணனைப் போலே! பள்ளியிலும் வெளியிலும் பாராட்டுகளும் பரிசுகளும் வாங்குகிறார்கள். சும்மா இருப்பார்களா சுற்றி இருப்பவர்கள்? பூதனை போலப் புறப்பட்டு வருவார்கள். வஞ்சப் புகழ்ச்சி மழை பொழிவார்கள். அப்போது செய்ய வேண்டியது என்ன? கண்ண பரமாத்மா பூதனை போக்கிலேயே போய், அவள் கதையை முடித்ததுபோல், இந்த வஞ்சப் புகழ்ச்சிக்காரர்களின் போக்கிலேயே போய், அவர்களையும் அவர்களது சதி வேலைகளையும் வெற்றிகொள்ள வேண்டும்.

தீராத விளையாட்டுப் பிள்ளை... TyEykFsfRmasqAqYslNh+p34c

சரி, இந்தக் கொக்கு அரக்கன் ஏன்? அது என்ன உணர்த்துகிறது? ராட்சதக் கொக்கின் நீண்ட கூரிய அலகு தண்ணீரில் வெகு தூரம் நுழைந்து மீனைப் பிடிப்பதுபோல், பலர் தங்களின் கூரிய வார்த்தைகளால் உங்கள் அடிமனம் வரை போய்த் தைப்பார்கள். உங்கள் ஆற்றலை மெள்ள ஆட்டம் காண வைக்க முயல்வார்கள். கொக்கைப் போலக் காத்திருந்து, நேரம் பார்த்து வீழ்த்த முனைவார்கள். கூரிய சொற்களால் காயப்படுத்துவார்கள். அப்போது, கண்ணபரமாத்மா கொக்கின் அலகைப் பிளந்து கிழித்ததை நினைவுகூர்ந்து, பொறாமைக்காரர்களின் கூரிய சொற்களைக் கிழித்துத் தூரப் போடுங்கள். கொக்கைப் போன்ற இவர்கள் உங்கள் உள்ளத்தின் உரம் கண்டு ஒதுங்கிப் போவார்கள்; ஒடுங்கிப் போவார்கள்.

.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:05 am

அதென்ன பாம்பு அரக்கன்..? பாம்பைப்போல் அழகாகப் படம் எடுத்து மயக்கி, 'மடார்’ என்று கவ்வி இழுக்க உலகத்தில் பலர் இருக்கிறார்கள். 'நான் இவனை எப்படிக் கொண்டு வருகிறேன் பாருங்கள்; இவனை என்னிடம் விட்டுவிடுங்கள்’ என்று சுருட்டிப் பிடித்து முடக்கப் பார்ப்பார்கள். அவற்றுக்கெல்லாம் மயங்கி மாட்டிக்கொள்ளவே கூடாது. பாம்பின் விஷ மூச்சைப் போன்றது இவர்களது இனிக்கும் பேச்சு. அதற்கு நாம் மயங்கினோமோ போச்சு! ஓங்கி அதன் தலையில் ஒரு தட்டு தட்டி அடக்கிவிட்டு, உங்கள் சாதனையை நோக்கிப் பயணப்படுங்கள் குழந்தைகளே!

தீராத விளையாட்டுப் பிள்ளை... HPeA5bncRORAjlm7ZLoe+download(1)

கழுதை அரக்கனைப்போல் எட்டி உதைக்கவும், குதிரை அரக்கனைப்போல் திமிறித் தாக்கவும், சுழற்காற்றாக வாழ்க்கையைப் புரட்டிப் போடவும் பலர் காத்திருப்பார்கள். இவர்களையெல்லாம் கண்ணன் காட்டிய பாதையில் போய் சாதுர்யமாகக் கடப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

எல்லாம் சரி! யானை ஒன்று தாக்க வருமே, அது? ஆம்! மிகப் பெரிய அசுர பலத்தோடு அதிகாரம், ஆணவம், பதவி என்ற பல யானைகள், நம்மைச் சுற்றிப் பிடித்துச் சுழற்றி அடித்து, நசுக்கக் காத்துக்கொண்டுதான் இருக்கும். அவற்றை நமது உறுதியாலும், நேர்மை மற்றும் இறைபக்தியாலும் வீழ்த்திவிடலாம்.

அவ்வளவு பெரிய மதங்கொண்ட ராட்சத யானையைச் சின்னக் கண்ணன் தும்பிக்கையைப் பிடித்துத் தூக்கியடித்தது இந்த உண்மையை நமக்கு உணர்த்துவதற் குத்தானே தவிர, வேறெதற்கும் இல்லை. கண்ணன் இப்படியாக லீலைகள் நிகழ்த்தியது இதையெல்லாம் நமக்குச் சொல்லத்தான். இவற்றை வளர்ந்து பெரியவனாகித்தான் நம்மால் சாதிக்க முடியும் என்றில்லை; பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே இதுபோன்ற சவால்களை மேற்சொன்னவற்றின் துணையோடு முறியடித்து வெற்றிநடை போடமுடியும். அதனால்தான் கண்ணன் சிறுவனாக இருக்கும்போதே இவற்றைச் செய்து காட்டினான்.

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:07 am

அவன் இறைவன். பாதை காட்டுவதும் அவன்தான்; பாடம் கூறுவதும் அவன்தான். அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங் கள். வெறுமனே அரக்கர்களைக் கொல்வது அவன் வேலையல்ல. அந்த அரக்கர்கள் யாரும் இல்லாமலேயே, அவனால் வளர்ந்திருக்க முடியாதா? யோசித்துப் பாருங்கள். பிறப்பிலிருந்து இந்தப் பள்ளி, கல்லூரிப் பருவம் என்பது நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய மானது! எத்தனை இனிமையானது! ஆனாலும், இடையிடையே இதுபோன்ற சோதனைகளும் வரும். அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க, உதாரணங்களுடன் விளக்கி உள்ளத்தில் உரமேற்றவே இந்தத் திருவிளையாடல்கள்.

தீராத விளையாட்டுப் பிள்ளை... MMTPxCPdQk2j60neiFEL+krishna_desktop_3600x2400_hd-wallpaper-1162022

அவன் அர்ஜுனனுக்குச் சொன்னது மட்டும்தான் கீதை என்று எண்ணிவிடாதீர்கள். அவனது வாழ்க்கை முழுவதுமே கீதைதான்; பாடம்தான். பாடம் என்றால் பலருக்கு வேப்பங் காயாகக் கசக்குமல்லவா? எனவேதான், அதைச் சுவாரஸ்யமாக நமக்குக் காட்ட, அவன் சில வண்ணங் களைச் சேர்த்துக் கொண்டான் (வனமாலி அல்லவா!). புரிந்து நடக்க வேண்டியது நமது கடமை.

.........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:11 am

தீராத விளையாட்டுப் பிள்ளை... XsPcLeZnTuX8Xb5JJvdf+86


இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் அவன் தன் பெற்றோரை யும், பெரியவர்களையும் மதித்த பாங்கைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வையுங்கள். இத்தனை அரக்க குணங்களையும் தாண்டி வந்து சாதித்து, தடைபோட முயன்றவர்களை வியப்பிலாழ்த்தி, இந்த உலகம் உய்ய, நாம் பிறந்த நாடு முன்னேற, கீதை அளவுக்கு இல்லாவிட்டாலும், சில உயர்ந்த தத்துவங்களை, உண்மைகளை, பொன்மொழிகளை, வழிகாட்டுதல்களை நம்மாலும் அளிக்க முடியும் என்பதுதான் ஸ்ரீகண்ணபிரான் நமக்கெல்லாம் உணர்த்தும் பாடம்; காட்டும் வாழ்க்கை நெறி!

'அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல, நமது முயற்சிகள் அத்தனைக்கும் அந்தக் கண்ணனே துணை இருப்பான் என்கிற உறுதியான நம்பிக்கையோடு நடைபோடுங்கள்.

நிச்சயம் நாரணன் உங்கள் கூடவே இருப்பான்!

பத்மவாசன் - சக்தி விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 8:22 am

நல்ல பதிவு..
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக