புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_lcapகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_voting_barகுழந்தை - by krishnaamma :) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை - by krishnaamma :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 5:55 pm

First topic message reminder :

அருணும் விசாலியும் மனமொத்த தம்பதிகள். கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு கிடைக்கலை என்கிற மனவருத்தம் விசாலிக்கு உண்டு. என்றாலும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். பேப்பரிலும்,  மற்றவர்களும் சொல்வதைக்கேட்டும்  விசாலி தாங்களும் கருத்தரிப்பு மையத்துக்கு  சென்று, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள்.

"வாழ்க்கை என்றால் அது குழந்தை மட்டும் இல்லை விசாலி, குழந்தை ஒரு பகுதி தான், நாம் நம் பார்வையை விசாலமாக்கி வைத்துக்கொண்டால் பலதும் தெரியும்...........மேலும், நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலை , எனவே, நமக்கு எப்போ எது கொடுக்கணும் என்று பெருமாளுக்குத் தெரியும்....... ஸோ,  எப்போ வேண்டுமானாலும் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.............கவலைப்படாதே"............. நீ சொல்லும் treatement .... அது கொஞ்சம் 'ரிஸ்க்' என்று கணவன் சொன்னதையும்,  தன் கெஞ்சல் கொஞ்சல் என்று கொஞ்சமாய் அடம் பிடித்து அவனையும் சம்மதிக்க வைத்தாள்.

ஆச்சு டாக்டரிடம் போய் செக் அப்  செய்து கொண்டார்கள்,  அவர்கள் சொன்னபடி நாட்களை தேர்ந்து எடுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டார்கள். பல மாத போராட்டம், பல லக்ஷம் பண செலவு எல்லாம் ஆனது. அதன் விளைவு இதோ இன்று காலை விசாலி ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். ஏதோ உலகையே வென்றது போல உணர்ந்தாள்.

வீடே மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தது. ஆனால் ஒன்று தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது...குழந்தையை பார்க்க வந்தவர்கள் அனைவரும் ஒன்று போல " என்னடி இது, உங்க யார் ஜாடையுமே இதுக்கு இல்லையே'? என்றார்கள்.

ஆனால் விசாலி இன் அம்மா , பிறந்ததும் தெரியாது.....கொஞ்ச நாள் போகணும் " என்று சொன்னாள். ஆனாலும் நாள் தான் போச்சே தவிர ஜாடை வரக்காணும்....விசாலிக்கு ரொம்ப பயமாய் இருந்தது...'அவள் விகடனில்'   படித்த செய்திகள் நினைவுக்கு வந்தது.

//''பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது. 'குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை' என்கிற மனநிலைக்கு வருவதுதான்... சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள், அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை 'டி.என்.ஏ' (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.//

இது நினைவுக்கு வந்ததும், விசாலிக்கு பயம் அதிகமானது, கணவனிடம் சொல்லவும் பயம். ஏற்கனவே இதுல  நிறைய 'ரிஸ்க்' இருக்கு என்றான்......அப்போ ஒரு மூடில் 'ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல' என்று அவனை கலாட்டா செய்து சிரித்ததும் நினைவுக்கு வந்தது அவளுக்கு. இப்போ என்ன செய்வது என்று குழம்பினாள்.

எவ்வளவு நாள் தான் அவனும்  இந்த 'ஜாடை' விஷயத்தை கவனிக்காதது போல இருப்பான்?.....அவனிடமும் எல்லோரும்  கேட்கிறார்களே?................ ஒருநாள் வேறு ஏதோ பேச்சில் இது வெளியே வந்து விட்டது..........."முளைத்து மூணு  இலை விடலை..........அடத்தை பார்............ சொன்னா கேட்பதில்லை உன்னைப்போலவே இருக்கான் உன் பிள்ளை..... என் பிள்ளையானால் கேட்பான்" என்று சொல்லி விட்டான். இது எல்லோர் வீடுகளிலும் நடப்பது தான், பிள்ளை சொல்பேச்சு கேட்டால் என் பிள்ளை என்பதும் கேட்கா விட்டால்  உன் பிள்ளை என்பதும்.ஆனால் இங்கு ஏற்கனவே கொஞ்சம் குழப்பம் இருந்ததால், சாதாரண பேச்சு அசாதாரணமாகவும், அர்த்தம், அனத்தமாகவும்  ஆனது............... விளைவு?............ விபரீதம் ஆனது.

இருவரும் குழந்தையின் DNA  செக் செய்ய போனார்கள்....................ரிசல்ட் ......அருணுடையது போல இல்லை ......அவ்வளவுதான்.....வானுக்கும் பூமிக்கும் குதித்தான் அருண்............டாக்டரிடம் கேட்டால், நீங்க அம்மா தானே அந்த குழந்தைக்கு அது போராதா.....இப்படி எப்போதாவது தவறு  நடக்கும் தான் என்று சொல்லி விட்டாள்.

அவள் மேல் கேஸ் போடுவது என்று முடிவு செய்தார்கள்....அந்த டாக்டர் அதற்கு பயப்படவே இல்லை, போடுங்கள் என்றுசொல்லி விட்டாள். .......ஆனால் குழந்தை?????????????இதை என்ன செய்வது?...........விசாலியால் குழந்தையை விடவும் முடியவில்லை, கணவனையும் விட முடியலை.....இருதலை  கொள்ளி எறும்பு போல ஆனாள்............வீட்டில் நிதமும் எப்படி இருப்பது?...கணவன் தன்னை வெளியே அனுப்பிவிடுவானா? .............அல்லது குழந்தையை எங்காவது சேர்த்து விடுவானா?...தெரியலை...............

குழம்பித் தவித்துக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு மணி சத்தம் இடைவிடாமல் ஒலித்தது............தொடர்ந்து தன்னை அன்புடன் கூப்பிடும் அருண் குரலும் கேட்டது.............இவ்வளவு அன்பாய் இவர் கூப்பிட்டு எத்தனை நாளாகிவிட்டது என்று நினைத்தவாறே கண்விழித்தால் விசாலி.

"என்னம்மா, ரொம்ப துக்கமா? இன்று டாக்டர் வீட்டுக்கு போக வேணாமா?...................மறந்துட்டியா?...கிளம்பணுமே, எழுந்திரு சீக்கிரம்".............என்றான் அருண்...........

இவளுக்கு தூக்கி வாரி போட்டது.......எதுக்கு டாக்டர் என்று, சுற்றும் முற்றும் பார்த்தாள்......'குழந்தை' என்றாள்........." ஆமாம், அதுக்குத்தானே apointment  வாங்கி இருக்கோம்".என்றான் அருண்.

சுயநினைவுக்கு வர 2 நிமிடம் பிடித்தது விசாலிக்கு.......'கடவுளே! அத்தனையும் கனவா?.............அப்படிஎன்றால்'..........இன்னும் நாம் டாக்டரிடமே போகலையா? என்றாள் கணவனிடம்.

அவன் கேட்டான்" என்ன ஆச்சு உனக்கு" ?...........என்று.

அவள் பெருமுச்சு விட்டவாறே, " வேண்டாங்க, நமக்கு எப்போ எது தரணும் என்று அந்த பெருமாளுக்கு தெரியும், வலுவில் போய் நாமே எடுத்துக்கொண்டால் பிரச்சனை தான் வரும் என்று புரிந்து கொண்டேன்" என்று சொல்லி தன் கனவை சொன்னாள்.

"இவ்வளவு அன்பான கணவனையும் குடும்பத்தையும் ஒரு குழந்தைக்காக இழக்க மாட்டேன்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என்றுசொல்லலை, இப்படி ஆகிவிட்டால்?..நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது ".என்று சொன்னாள், அருண் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

படுக்கை இல் அவள் இரவு படித்த அவள் விகடன் இருந்தது புன்னகை

கிருஷ்ணாம்மா புன்னகை

பி.கு.: டாக்டர் இப்படி சொன்னது நிஜம்....எங்களின் friend  வீட்டில் நடந்திருக்கு இப்படி சோகம்  "நீங்க அம்மா தானே அந்த குழந்தைக்கு அது போராதா.....இப்படி எப்போதாவது தவறு  நடக்கும் தான் என்று சொல்லி விட்டாள். "



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 28, 2015 11:23 pm

சிவா wrote:
பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கதையிலும் சிறந்த கருத்தைத் தெரிவித்துள்ளீர்கள் அக்கா! மிக அருமை!

கதையில் ஏகப்பட்ட சிக்கல்கள் வரப்போகிறது என்று நினைத்துப் படித்துக் கொண்டிருக்கும்போதே அது கனவு என்று தெரிந்ததும் மனம் சற்று ஆறுதலானது!

மிகவும் அருமை! சமையலரசி என்ற நிலை மாறி இப்பொழுது கதையரசி ஆகிவிட்டீர்கள்! பாராட்டுக்கள் அக்கா!

உங்களின் கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1123334

மிக்க நன்றி சிவா........மத்ததும் படியுங்கோ, 'இவரும்' இன்னும் கொஞ்சம் கதைகள் எழுது புத்தகமாய் போடலாம் என்று சொல்கிறார்...........இவருக்கு ரொம்ப சந்தோசம் நான் எழுத ஆரம்பித்தது புன்னகை.ரொம்ப நாளாய் சொல்லிண்டே இருக்கிறார்......ஏதோ திடீரென்று ஆரம்பித்துவிட்டேன்..........
.
.
.
உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி சிவா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக