புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
73 Posts - 46%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
eraeravi
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
304 Posts - 43%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 20, 2015 11:42 am

First topic message reminder :

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.


  • சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.


  • உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.


  • வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.


  • உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.


  • இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.


  • எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.


  • நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.


  • செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.


  • எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.


  • இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


  • எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


  • நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.


  • முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
    உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.


  • நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.


  • நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.


  • உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.


  • உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.


  • உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.


  • சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.


  • தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.


  • மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.


  • உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.



subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sun Feb 22, 2015 9:26 pm

தன்னம்பிக்கை சூப் 6 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.

  • தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லை என்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒருநாளும் அப்படிச் சொல்லமாட்டான்.

  • யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.

  • பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புக்களைத் தவறவிட மாட்டார்கள்.

  • நல்ல வாய்ப்பை எதிர்கொள்ளுங்கள்.

  • எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புக்கள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.

  • தன்னுடைய வாய்ப்பைப் பயன்படுத்துபவர் பின்னாளில் பலன் பெறுவார்.

  • கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புக்கள்கூட விலைமதிப்புள்ளவை.

  • மிகப்பெரிய வாய்ப்புக்காக உங்களைத் த யார்நிலையில் வைத்திருங்கள்.

  • ஒவ்வொரு வாய்ப்பும் மிகப்பெரிய வாய்ப்பே என்று நினைத்து தொடர்ந்து செயல்படுங்கள்.

  • உங்களால் தற்போது என்ன செய்ய முடிகிறதோ அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்.

  • உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.

  • உங்கள் தனித்தன்மையை எப்போதும் இழக்காதீர்கள்.

  • ஆசைப்பட்டால்தான் எதையும் அடைய முடியும்.

  • தன்னுடைய உண்மையான பலம் தெரியாதவர்கள்தான் தகுதி குறைந்த இடத்தில் அடங்கிக் கிடப்பார்கள்.

  • மனிதர்கள் ஆசைப்படுவதால்தான் இலக்கை அடைகிறார்கள்.

  • பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

  • உங்கள் வாழ்வில் நிகழும் வெற்றி தோல்விகள் அனைத்திற்கும் நீங்களே காரணம்.

  • உங்கள் வெற்றியைத் தடுப்பவை எவையென்று அலசி ஆராய்ந்து அவற்றை நீக்குங்கள். வெற்றி உங்களை வந்தடையும்.

  • உங்களால் எதுவும் முடியும் என்று நம்புங்கள்.

  • புதிதாக எதையாவது சாதிக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள்.

  • விரும்பி உழைத்தால் விரும்புவது கிடைக்கும்.

  • உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  • எந்தத் தோல்வியும் நிலையானதல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

  • உறுதியான உள்ளத்துடன் விடாமுயற்சி செய்துகொண்டே இருங்கள்.

  • வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும்.

  • தங்கள் கனவை நனவாக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள்தான் அளப்பரிய சாதனைகள் புரிகின்றார்கள்.

  • சோதனைகள் வரும்போது நம்பிக்கையை இழக்காமல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். உங்களுக்கு வெற்றி என்னும் விடிவெள்ளி தெரியும்.

  • சாதிக்க நினைப்பவர்கள் சோதனைகளைக் கடந்துதான் ஆகவேண்டும்.

  • சூழ்நிலையை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி கிடைக்கிறது.



subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Feb 23, 2015 11:35 am

தன்னம்பிக்கை சூப் 7 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் இலக்கை அடையும்வரை தளராமல் போராடுங்கள். இலக்கை அடைந்தவுடன் புதிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

  • நீங்கள் உங்கள் இலக்கை அடைந்தவுடன் எப்படியிருப்பீர்கள் என்பதை அடிக்கடி கற்பனை செய்து மனக்காட்சியாகப் பாருங்கள்.

  • உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டீர்களென்றால் நீங்கள் அடைகின்ற வெற்றிக்கு வானம்கூட எல்லையாகாது.

  • தியானம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த உதவும். எனவே அடிக்கடி தியானம் செய்யுங்கள்.

  • வாழ்க்கையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனென்றால் அதை நீங்கள் அடைந்து விடுவீர்கள்.

  • மனதை சரியான பாதையில் செலுத்தத் தெரிந்துகொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் வெற்றிப் பூக்கள் மலரும்.

  • உங்களை உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த மனம் உங்களிடமேதான் உள்ளது.

  • உங்கள்மீது நீங்களே நம்பிக்கை வைக்காவிட்டால் வேறு யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். எனவே முதலில் உங்களை நம்புங்கள்.

  • நீங்கள் கனவு காண்பதைவிட பெரிய உயரங்களை உங்களால் அடையமுடியும்.

  • பெரிதினும் பெரிது கேளுங்கள்.

  • உறுதியான தெய்வ நம்பிக்கையும், அயராத உழைப்பும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும்.

  • உடல் வலிமையைவிட மன வலிமையே நமக்கு ஊக்கமளிக்கிறது.

  • நம்பிக்கையுடன்கூடிய முயற்சியை செய்யாதவரையில் மனிதனின் வளர்ச்சியும், முன்னேற்றமும் முழுமை பெறாது.

  • நல்ல ஆற்றலின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வையுங்கள்.

  • எதற்காகவும் கவலைப்படாதீர்கள். எந்தப் பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.

  • கஷ்டங்கள் எத்தகைய அசாதாரணமான முறையில் இருந்தாலும், நம்மனமாற்றத்தால் அவைகளை எதிர்கொள்ள வேண்டும்.

  • நல்ல இயல்புகளை பொறுமையுடன் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • வாழ்வில் நம் எல்லா சாதனைகளும், வெற்றிகளும் மனதில் உதித்த எண்ணங்கள், சங்கல்பங்கள், கருத்துக்களை அனுசரித்ததன்மூலமே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை நினைவுகொள்ளுங்கள்.

  • இன்றிலிருந்தே உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் மாற்றிக் கொள்வதற்கு உண்மையாக முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் வாழ்வில் முக்கியமான நோக்கத்தை அடைவதற்கு ஏற்றாற்போல் எண்ணங்கள், கருத்துக்கள், கற்பனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பழக்கம் மிகவும் அவசியமானதாகும்.

  • பொறுமை நன்மை செய்யும்.

  • குறைவாகப் பேசுங்கள், அதிகமாகச் செயலாற்றுங்கள்.

  • ஆற்றல் எத்தகைய முறையற்ற நிலையையும் சரிசெய்யும்.

  • நாள்தோறும் செய்யும் முறையான பிரார்த்தனையால் உடலிற்கு எல்லாவகையிலும் நன்மைகள் விளைகின்றன.

  • எல்லா ஆற்றல்களும் நிறைந்த கடவுளிடம் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அடைக்கலம் ஆகிவிடுங்கள்.

  • எந்தச் செயலிலும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டால் முழுமையான மனதுடன் அதில் ஈடுபட முடியும்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 12:00 pm

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 3838410834


தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Feb 23, 2015 4:01 pm

தன்னம்பிக்கை சூப் 8 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நிகழ்காலத்தில் உங்கள் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தீர்களானால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

  • நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையின்மூலமே வாழ்க்கை பயனுள்ளதாக அமைகிறது.

  • நம்பிக்கையினால் எல்லாம் கிடைக்கும்.

  • நம்பிக்கை இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கின்றான்.

  • சிறிதளவு நம்பிக்கையிருந்தால் சிறிய செயல்களையே செய்ய இயலும். உறுதியான நம்பிக்கை இருந்தால் பெரிய செயல்களைச் செய்யலாம்.

  • இலக்கினை அடையும்வரை ஓய்வின்றி முயற்சியில் ஈடுபடுங்கள்.

  • தன்னம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை என்னும் இவைகளே புகழ் மற்றும் வெற்றிகளின், சாதனைகளின் திறவுகோல்களாக விளங்குகின்றன.

  • மனிதனின் மனமே அவனுடைய முன்னேற்றத்திற்கும், துன்பங்களுக்கும் காரணம்.

  • தீவிரமான எண்ண ஓட்டங்களுடன் கற்பித்துக் கொள்ளப்படும் உருவங்கள், அத்தகைய அனுபவங்களை நம் அருகில் இழுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

  • கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடன் தஞ்சமடையுங்கள்.

  • உறுதியான நிஷ்டையுடன் எதிர்த்தால் கஷ்டங்களும், துயரங்களும் நம்மை விட்டு அகலும்.

  • உங்களால் இயலாதது என்பது எதுவும் இல்லை.

  • எத்தகைய செயலையும், அதன் முறையினை அறிந்து, ஒழுங்குமுறையுடன் செய்துகொண்டு வந்தால் அது பழக்கமாகி விடுகிறது.

  • நம் மனதில் எத்தகைய எண்ணங்களும், கருத்துக்களும் திரும்பத் திரும்ப வருகின்றனவோ, அத்தகைய இயல்புகளை நாம் பெற்றவர்களாவோம்.

  • கடவுளிடமும், உங்களிடமும் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.

  • கடவுள் யாரையும், என்றும், எத்தகைய சூழ்நிலையிலும கைவிடுவதில்லை என்பதை நம்புங்கள்.

  • நல்ல செயல்களை தொடர்ச்சியாக செய்துவாருங்கள். அதற்குரிய பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.

  • இடைவிடாமல் முறையாகச் செய்யும் முயற்சியால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்த இயலும்.

  • முயற்சி, முயற்சி, விடாமுயற்சி, பிரார்த்தனை என்று தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.

  • வெற்றி என்னும் ஏணியில் ஏறுவதற்கு, நம் செயல் குறித்து முழுமையான ஞானம் இருக்கவேண்டும்.

  • நான் வெற்றி பெறுவேன் என்று வார்த்தைகளில் கூறுவது தவிர மனக்கண்ணில் தொடர்ந்து காணுங்கள்.
    உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் நிரப்புங்கள்.

  • மனதில் ஒரு லட்சியத்துடனும், துடிப்புடனும் செயல்படுங்கள்.

  • வாழ்க்கையில் சாதனை புரியவும், வெற்றி அடையவும் மனம் அமைதியான நிலையில் இருக்கவேண்டும்.

  • ஒரு கருத்தை உங்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்டால்அது தேவைப்படும் சமயத்தில் செயலில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயலை முடித்துவிடும்.

  • நாம் எண்ணிய எண்ணத்தை கருத்தில் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும்.

  • உங்கள் சிந்தனைகள் முழுவதும் உங்கள் இலட்சியத்தைச் சுற்றியே இருக்கட்டும்.

  • உங்கள் உள்மனதின் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேற்றமடைய முடியும், சாதனை படைக்க முடியும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 4:52 pm

நல்ல பகிர்வு, நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 24, 2015 8:11 am

தன்னம்பிக்கை சூப் 9 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் உள்மனமானது உங்களுக்கு சேவைபுரிவதற்காக எப்போதும் தயார்நிலையில் உள்ளது.

  • உள்மனம் எப்போதும் சோர்வடைவதில்லை.

  • உங்களின் ஒவ்வொரு எண்ணமும் அலைகள்போல் வெளியேறி ஆற்றலாக மாறுகிறது.

  • மன உறுதி படைத்தவன் நம்பிக்கையுடன் முன்னேறுகிறான்.

  • ஒரு வேலையில் முழுமனதோடு ஈடுபட்டால் அந்த வேலை எளிதாக முடியும்.

  • மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுத்தினால் அந்தச் செயல் சிறப்பாக அமையும்.

  • செய்யும் செயலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டால் மனம் தானாகவே ஒருநிலைப்படுகின்றது.

  • வேலை என்று எதைச் செய்தாலும், அதை முழு ஆர்வத்துடன் செய்யவேண்டும்.

  • ஒரு வேலையைச் செய்ய முற்பட்டால் அதில் ஆர்வம் தரும் அம்சத்தை தேடிச் செயல்படுங்கள்.

  • ஒரு வேலையைத் தொடங்கும்போதே ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டால் வேலை மிகவும் சுலபமாக முடியும்.

  • மனதை தன்வயப்படுத்திய ஒருவன் அதன் சக்தியை தான் விரும்பும் எந்தச் செயலிலும் திருப்பிவிட முடியும்.

  • மனதின் ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்துபவர் மற்றவர்களைவிட அதிக வருமானம் பெறுவார்.

  • உள்ளுணர்வோடு கூடிய சக்தியைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனை படைக்க முடியும்.

  • நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைப் பெறுவதற்காக உழைக்க வேண்டும்.

  • ஒரு மனிதன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதற்கு முன் தன்னுடைய சிந்தனைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

  • துடிப்புமிகுந்த முனைப்பும், செயல் திறனும் உடையவர்கள் கண்டிப்பாக வெல்வார்கள்.

  • விருப்பம் நிறைந்த தனித்தன்மைக்கு எதுவும் தடையில்லை.

  • எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலையில்லாமல் பிறப்பதில்லை.

  • அரிய செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு வழங்காத நாளே இதுவரை தோன்றியதில்லை.

  • உங்களுக்கு எதைப்பற்றி கனவு காண முடியுமோ அதை இப்போதே தொடங்குங்கள்.

  • பெருமைக்குரிய வெற்றி வாய்ப்பையே எப்போதும் எதிர்பாருங்கள்.

  • உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விட்டு விடாதீர்கள்.

  • உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

  • சரியான முடிவெடுத்தலும், முழுமையான செயல் திறனும் உடையவர்கள் மட்டுமே தங்களுக்கு முன் இருக்கும் இடர்களைக் களைந்து சாதனை புரிகின்றனர்.

  • உங்களுக்குக் கிடைக்கும் சாதாரண வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு அதையே மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றுங்கள்.

  • வாய்ப்புகள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் விருப்பப்பட்டு செயலில் இறங்கும்போது மட்டுமே அவற்றை சரியானபடி பயன்படுத்தி உயர்வடைய முடியும்.

  • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.

  • தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லையென்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒரு நாளும் அப்படிச் சொல்ல மாட்டான்.

  • யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.

  • பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புகளைத் தவறவிட மாட்டார்கள்.

  • நல்ல வாய்ப்பை நல்லவிதமாக எதிர்கொள்ளுங்கள்.

  • எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புகள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 24, 2015 9:35 pm

தன்னம்பிக்கை சூப் 10 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • தன்னுடைய வாய்ப்பை செழுமைப்படுத்துபவர் பின்னாளில் பயன் பெறுவது நிச்சயம்.

  • கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புகள் கூட விலை மதிப்புள்ளவை.

  • மனதை உறுதிப்படுத்திக் கொண்டால் எதுவுமே கடினமானதல்ல.

  • உங்கள் விருப்பங்களையெல்லாம் வலிமை நிறைந்த உறுதியான மனநிலைக்கு இட்டுச் செல்லப் பழகுங்கள்.

  • ஒரு தீர்மானமான முடிவோடு உங்கள் பயணத்தைத் தொடங்கினால் உங்கள் ஒவ்வொரு கருத்தும் மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • தன் திறமையின்மீது கொண்ட நம்பிக்கையைவிட அதிக ஆற்றல் பெற்றது எதுவுமில்லை.

  • உங்களை நம்புங்கள், உங்கள் ஆற்றலை நம்புங்கள்.

  • ஒரு நாளில், நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி வேலைகளை முடிப்பதால் சோர்வு ஏற்படுவதில்லை.

  • யார் நேரத்தை மிச்சப்படுத்துகிறாரோ அவர் எல்லா நன்மைகளையும் அடைவார்.

  • தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீக்கப்படக்கூடியவையே என்பதை மறந்துவிடாதீர்கள்.

  • செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்துச் செயல்படுங்கள்.

  • எந்தப் பொறுப்பையும் தைரியமாகவும், உறுதியுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • ஒரு மனிதனுடைய அனைத்துச் சிறப்பியல்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது அவனுடைய ஆழ்மன ஆற்றலாகும்.

  • எதற்கும் ஒரு வழி உண்டு. நாம் அதைத் தேடிக் கண்டுபிடித்துச் செயல்பட வேண்டும்.

  • உங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைந்துவிட்டதாக அடிக்கடி கற்பனை செய்து பாருங்கள்.

  • மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் மனிதனின் ஆற்றலானது பல மடங்கு அதிகமாகி விடுகின்றது.

  • மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் ஆற்றலை நம் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.

  • முன்னேறுவது உறுதி என்பதில் முழு நம்பிக்கை வைத்துச் செயல்புரியுங்கள்.

  • அற்புத சக்தியானது ஒவ்வொரு மனிதனிடமும் நிறைந்துள்ளது.

  • எண்ணங்கள் மனித உடலில் ஆழமாகச் செயல்படுகின்றன.

  • ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டாலே பாதி வேலை முடிந்துவிட்டதாக அர்த்தம்.

  • நீ நீயாக இரு. உன் வழிமுறைகளால், உன் எண்ணங்களால் முடிந்ததைச் செய்.

  • இந்த உலகத்திற்கு உன் இயலாமை தேவைப்படாது. ஆனால் உன்னிடமுள்ள அரிய திறமைகள் தேவைப்படும்.

  • வேலை செய்வது என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.

  • உள்மனமே திறமைகளுக்கு ஆதாரமாக உள்ளது.

  • சிறு காரியங்களையும் செம்மையாகச் செய்து வந்தீர்களேயானால் பெரிய சாதனைகள் தாமாகவே நடைபெறும்.

  • வாழ்க்கையின் பொன்னான விதி “ஆர்வம் கொள்” என்பதுதான். எந்தக் காரியமாக இருந்தாலும் ஆர்வமுடன் செயல்படுங்கள்.

  • முயற்சி திருவினையாக்கும்.

  • செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.

  • வாழ்க்கையில் வெற்றிபெறுவது, ஆர்வம் காட்டுதல் என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியுள்ளது.

  • நிகழ்காலத்தைவிட வேறு நல்ல நேரம் கிடையாது.

  • எந்தவொரு வேலையையும் கவனத்துடன், முழு ஈடுபாட்டுடன் செய்தால் விரைவாகச் செய்து முடித்து விடலாம்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 25, 2015 8:19 am

தன்னம்பிக்கை சூப் 11 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நீங்கள் வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது உங்களை நம்புவது.

  • நம்பிக்கை வைத்து புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம்.

  • மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

  • உங்களுடைய உண்மையான குறிக்கோள்களுக்கான கட்டளைகளுக்கு உள்மனமானது அடிபணியும்.

  • இதற்குமேல் செல்லமுடியாது என்ற எல்லையை நீங்கள் அடைந்துவிட்டாலும் தொடர்ந்து பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

  • மனம் எதை வேண்டுமானாலும் உங்களை சாதிக்க வைக்கும்.

  • நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கிறது.

  • திட்டவட்டமான குறிக்கோளுடன் உங்கள் எண்ண அலைகள் இயங்கிக் கொண்டிருந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறுவது நிச்சயம்.

  • வெற்றி பெறும்வரை ஓயமாட்டேன் என்று உறுதிகொள்ளுங்கள்.

  • நீங்கள் ஒரு செயலுக்காக நிஜமாகவே தயாராகும் சமயத்தில் அந்தச் செயல் நிகழ்கிறது.

  • வெற்றியின் பாதை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.

  • வெற்றி, வெற்றி என்று எப்போதும் அதே சிந்தனையில் இருப்பவர்களை வெற்றி வந்தடைகிறது.

  • அசைக்கமுடியாத மன உறுதியோடு உங்கள் இலட்சியத்தை அடைய கடுமையாக முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் கனவை யாரும் சிதைத்துவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.

  • உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் பலனடைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது செயல்வேகம் மட்டுமே.

  • நீங்கள் செய்யவிரும்புவது சரியானதாக இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

  • ஒவ்வொரு தோல்வி வரும்போதும், அதனுடன் வெற்றிக்கான விதையைக் கொண்டு வருகிறது.

  • இந்த உலகில் ஏராளமான வாய்ப்புக்கள் குவிந்துள்ளன.

  • வாழ்வில் வெற்றியடைந்த 90 சதவிகிதம் பேர் தோல்வியில் ஆரம்பித்து மனதை ரணப்படுத்தும் போராட்டங்களுக்குப் பிறகே சாதித்திருக்கிறார்கள்.

  • உங்கள் மனதில் நம்பிக்கையை நிரப்புங்கள்
.
  • தகிக்கும் ஆசைக்குள்ளேயே, அதை நடைமுறை சாத்தியமாக்குவதற்கான பல்வேறு வழிவகைகள் அடங்கியுள்ளன.

  • நம்பிக்கையும், கனவாகத் தகிக்கும் ஆசையும் சேர்ந்து நிஜமாக்க முடியாதது என்று எதுவுமே இல்லை.

  • நம்பிக்கையும், எண்ணமும் ஒன்றாகக் கலக்கும்போது உருவாகும் அதிர்வலையை ஆழ்மனம் உடனே கிரகித்துக் கொள்கிறது.

  • திரும்பத் திரும்ப ஆழ்மனதிற்கு அனுப்பப்படும் எந்த எண்ணத்தையும் அது ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.

  • உங்களின் உறுதியான நம்பிக்கைதான் ஆழ்மனதை செயல்பட வைக்கும் அச்சாணி.

  • ஆழ்மனதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அதனிடம் நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது கிடைக்கும்.

  • நம்பிக்கை என்பது ஒருவித மனநிலை. உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் சுய கட்டளையின்மூலம் அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

  • எதிலும் வெற்றிபெறுவதற்கான முதல் கட்டம் நம்பிக்கை.

  • உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காக தினமும் ஒருமணி நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளை திரும்பத் திரும்ப நினைத்து மகிழுங்கள்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 11:25 am

மிகவும் பயனுள்ள பகிர்வு........

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 1571444738 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 26, 2015 8:09 am

தன்னம்பிக்கை சூப் 12 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் மூளையில் முடங்கிக் கிடக்கும் அபாரமான சக்தியைத் தட்டியெழுப்பி நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.

  • முழு நம்பிக்கை உணர்வுடன் இடப்படும் எந்தக் கட்டளையையும் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.

  • நம்பிக்கை என்பது அதிக நன்மை தரக்கூடிய வலுவான உணர்ச்சி.

  • தன்னுடை ய ஆழ்மனதை வசப்படுத்தும் சக்தி ஒவ்வொருவருக்கும் உண்டு.

  • வெற்றி பெறுபவரைத்தான் உலகம் போற்றுகிறது.

  • வெற்றியும், தோல்வியும் நமது பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

  • உங்களால் கற்பனை செய்ய முடிந்த எதையும் உங்களால் நிஜமாக்க முடியும்.

  • கற்பனை வளத்தை எந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது பயன்கொடுக்கும்.

  • உங்கள் ஆசையை நனவாக்கும் முயற்சியில் முதல்படி திட்டமிடுதல்.

  • திட்டவட்டமான எந்தக் குறிக்கோளும் வெற்றியடையும்.

  • திட்டவட்டமான குறிக்கோள், தெளிவான திட்டம் ஆகியவை வெற்றியை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

  • உங்கள் மனம் முழுவதும் வியாபித்து நிற்கும் ஆசையை நீங்கள் கண்டிப்பாக அடையமுடியும்.

  • வெற்றியைக் கொடுக்கும் திட்டம் உங்கள் கைக்குக் கிடைக்கும்வரை மாற்றுத் திட்டத்தைப் பின்பற்றுவதில் நீங்கள் தளர்ந்து போய்விடக் கூடாது.

  • உங்கள் வேலையைத் திட்டமிட்டுக் கொண்டு அந்தத் திட்டத்தின்படி வேலை செய்யுங்கள்.

  • உங்களுக்கு எப்படிப்பட்ட வேலை தேவை என்பதை சரிவரத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

  • உடனடியாக வேலையை ஆரம்பித்து விடுங்கள். போகப்போக உங்களுக்குத் தேவையானவையெல்லாம் வந்து சேரும்.

  • விடாமுயற்சியை தாரகமந்திரமாகக் கொண்டவர்களை தோல்வி நெருங்காது.

  • உங்களால் எந்தத் தொழிலில் முழு மனதோடு செயல்பட முடியுமோ அந்த மாதிரியான துறையைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

  • திட்டவட்டமான ஒரு தலையாய குறிக்கோளில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தப் பழகுங்கள்.

  • உங்கள் வாயால், உங்கள் நோக்கம் என்ன என்று சொல்வதைவிட உங்கள் செயலால் செய்துகாட்டி விடுங்கள்.

  • உங்களின் இலக்கு என்ன என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடையமுடியும்.

  • வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உள்ள தலைவர்கள் விரைவாகவும், உறுதியாகவும் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் தலைவர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணமே அதுதான்.

  • தகிக்கும் ஆசைகள்தான் சாதனைகளின் ஆரம்பம்.

  • எந்த விஷயத்திலும் விடாமுயற்சி என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • விடாமுயற்சியை உங்கள் வாழ்வின் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள்.

  • ஒரு வலுவான குறிக்கோள், எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றியை அடைய வழிகாட்டும்.

  • அழுத்தம் திருத்தமாக ஆசைப்படுங்கள்.

  • மனித மனம் சக்தியின் ஒரு வடிவம்.

  • மன வலிமையின்மூலம் மனதில் ஓடும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

  • உங்களின் எந்த லட்சியத்தையும் உங்கள் ஆழ்மனதில் விதைத்துக் கொள்ளலாம்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக