புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
1 Post - 1%
mruthun
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.


   
   

Page 21 of 28 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 24 ... 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய



கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 10, 2015 12:43 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

16. பூயோகம்


சிறிதும் வெட்கம் இன்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் மிருகம் போல் வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை, விஷமுடைய பூச்சிகளும், பிராணிகளும் கடிக்கும்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 10, 2015 12:49 pm

பலவகை தானங்கள்



திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். “கருடா, தானங்களைச் செய்யும் முறைகளையும் அத்தானங்களால் ஏற்படும் பயன்களையும் கூறுகிறேன் கேள்.

“தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகர்தானம் என்ற பெயரைப் பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூணூலுக்குப் பருத்தியே ஏதுவானது.

“சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும். பருத்தித் தானம் செய்தால்,  மாமுனிவர்களும் பிரம ருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானம் செய்தவன் வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடயவனாய், மகாபலசாலியாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து யாவரும் போற்றிப்புகழ  நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். தானங்கள் செய்வதற்கு சிறந்த காலம்,  ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும்.

“ஒ வைனதேயா! எந்த மனிதனும் தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான கருமங்களைச் செய்து கொள்வது நல்லது. எள்ளையும், இரும்பையும் தானம் செய்தால் யமதர்மன் மகிழ்சியடைவான்.

“பருத்தித் தானத்தை செய்தால் யம தூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. தானியங்களைத் தானம் செய்தால், கூற்றவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து,  ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள்.

“மரணமடையும் நிலைமை அடைந்தவன், நம்மையே தியானித்து, நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தை அடைவான்.

“கயா சிரார்த்தம் செய்வதை விட தந்தை-தாய் இறக்கும் சமயத்தில் அவன் தன் தாய் தந்தை அருகிலேயே இருந்து தொண்டு செய்வதே உத்தமமாகும்.

“கூடாரமும் முசலமும் சூரிகையும் இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாம். அந்த ஆயுதங்கள் இரும்பாலானததால்  மரிக்கும் காலத்தில் இரும்பைத் தானம் செய்தால் யமன் மகிழ்வான். யமதூதர்கள் அஞ்சுவார்கள், காண்டாமிருகன், ஔதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி யடைவார்கள்.
     
“வைனதேயா!  ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுள்ள உறுப்புகளில் பிரம்மருத்திர இந்திரராதி தேவர்களும் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் இருக்கிறார்கள். தாயும் தந்தையும் குருவும் சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணுவேயின்றி மற்றோருவருமில்லை.

“சர்வம் விஷ்ணு மயம் என்ற ஜகத் அருள்வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சுவர்ணம், தானியம், தேன், நெய், பசு, யாகம், அந்தணர், அஜசங்கர, இந்திராதி தேவர்கள் ஒன்றைக் கொடுப்பவனும், வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயின்றி வேறொன்றுமில்லை.

“ஜீவர்கள் பூர்வத்தில் செய்த தர்மத்தை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியம் செய்தவன் சுவர்க்கம் அடைவான். பாவம் செய்தவன் நரகத்தை அடைவான்.”




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 10, 2015 12:51 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

17. பிரயணயோகம்


பிராணிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்தி துன்புறுத்துவார்கள்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 10, 2015 1:26 pm

தானச் சிறப்பும் உயிர் பிரியும் விதமும்


ஸ்ரீ மந் நாராயணர், கருடனை நோக்கி, “வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான்.

“ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது சதுர்த்தியிலாவது, பௌர்ணமியலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும். பிரமால்யத்திலும், தேவாலயத்திலும் வடக்கு, கிழக்கு முகத்தில் தீபம் வைக்க வேண்டும். தீபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டேறியச் செய்து கொடுக்க வேண்டும்.
       
“மனிதனாக பிறந்த ஒருவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன். தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும்.

“ஆசனப் பலகையையும், செப்புத் தாலியையும் பொருள்களையும் தானம் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாக எமலோகம் செல்வான்.

“அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும் குடையும், விசிறியும்,  பாத ரஷயையும் அவசியமாக தானம் செய்ய வேண்டும்.

“வெற்றிலை,  பாக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானம் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள்.

“ஆடைகளைத் தானம் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறை போன்ற கடைவாய்ப் பற்களும், செம்பட்டை ரோமமும், அச்சம் தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள்.” என்றருளிச் செய்தார்.

கருடன் அவரை நோக்கி, “ஸ்ரீ ஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும்.” என்று கேட்க பகவான் கூறலானார்.
                 



“கருடா! உயிரானது மனிதனது சரீரத்தை விட்டு விலகும் பொது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ, ரோமக்கால்கள் துவாரங்கள் வழியாகவோ,  நீங்கி விடும். ஞானிகளுக்கு கபாலம் விரிந்து உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டைப் போல கிடக்கும்.

“பிறகு அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல்கூறுகள் பஞ்சபூதத்தால் ஆனவை. ஆகையால் ப்ரித்வி என்ற மண்ணிலும், அப்பு என்ற புனலிலும், தேயும் என்ற அக்கினியிலும், வாயு என்ற காற்றிலும் ஆகாயம் என்ற வானத்திலும் லயமாகி விடும்.

‘காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், காமேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும், மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து, ஒன்றோடொன்று உறைந்து இருப்பான்.

“உயிரானது நீங்கும் பொது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடிஏறுவதைப் போலவே புண்ணியஞ் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்விய தேசத்தில் அவன் குடியேறுவான்.

“மலமூத்திரங்களும், பயன்தராத கற்பனைகளும், ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ,  எரிக்கப்பட்டோ நாசமடைந்து விடுவதே மனித உடலாகும்.

“ஒ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி,  மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கும் விதத்தினை சொல்கிறேன் கேட்பாயாக!
                     
“பல நரம்புகளோடு துணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக்குரோத லோப மோக மதமார் சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும்,காம குரோத இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான தேகம், எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்” என்று கூறியருளினார்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 10, 2015 1:28 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

18. விசஸவம்


சுவில் எல்லாதேவதைகளும் இருக்கிறார்கள். அந்தப்பசுக்களை கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்து துன்புறுத்துவார்கள்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 2:06 pm

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 3838410834 கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 3838410834

தொடருங்கள் தோழி .....
படிக்க ஆர்வமாக உள்ளது....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2015 2:07 pm

இரவெல்லாம் கண் விழித்து ,இடுகின்ற பதிவுகளை ,
பகலில் , கஷ்டமின்றி ,படித்துப் பயன் பெறுகிறோம் .
நன்றி , விமந்தனி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:59 pm

உடலியல் பற்றிய விளக்கங்கள்



“வைனதேயா! பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களை அடைத்து, பத்து நாடிகளில் அலங்கரிக்கப்பட்டு பிராண, அபான , வியான, உதாசன, சமான, நாக, கூர்ம, கிறுக, தேவதத்த, தனஞ்செயன் என்ற தச வித வாயக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்த சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோஷங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் (பருவுடலில்) “தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும், நகமும் பிரித்திவியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன. பசி, தாகம், நித்திரை, சோம்பல், சாந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன.

“இச்சை, கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும்.

“சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சக்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞாநேந்திரியங்களாகும்.

“இடைபிங்கனல் மற்றும் சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும், காந்தாரி, கஜ்சிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாதினி என்ற ஏழு நாடிகளும், சரீரத்தின் மிக முக்கியமான பெரிய நாடிகளாகும்.

“ஜீவன் உண்ணுகிற சாறு முதலியவற்றை மேல சொன்ன வாயுவே, அந்ததந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊதி விருத்தி செய்கிறது.

“சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்பட்ட ரோமங்களும், முப்பத்தியிரண்டு பற்களும், இருபது நகங்களும், இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும் ஆயிரம் பலம் இறைச்சியும், நூறு பலம் இரத்தமும், பத்துப் பலம் மேதசும், பத்துப் பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும், மூன்று பலம் முக்கிய இரத்தமும், கபமும், மலமும், மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.

“அண்டத்திலுள்ள யெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும் , கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்க்கு மேற்ப்பட்ட பகுதி நிதலம் என்றும் ஊறு, தராதலம் என்றும், குஷ்யந்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதளம் என்றும், நாபியை பூலோகம் என்றும், இதயத்தை சுவர்க்கலோகமென்றும், தோளை மகாலோகமேன்றும், முகத்தை ஜனலோகமென்றும், சிரசை சத்தியலோகமென்றும் சொல்லுகிறார்கள்.

"திரிகோணத்தை மேருகிரியென்றும், கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்த கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும் இடதுபுறம் ஹிமாசலம் என்றும் தென்பாகம் கந்தமாதன் பர்வதம் என்றும், இடது உள்ளங்கையுலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந் தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத் தீவு என்றும், நரம்பு கிரௌஞ்ச்சத் தீவு என்றும், தொக்குசான் மளித் தீவு என்றும், ரோமத்திரல் பிலட்சத் தீவு என்றும், நீர்பாற்க்கடல் என்றும், கபம் சுராசித்து என்றும், மஜ்ஜை நெய்க்கடல் என்றும், வாய் நீர் கறுப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனிய புனல், சந்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.

“சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாத சக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும், இதயத்தில் புதனும், வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும் உள்ளனர்.

“மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்த குலாசலங்களும் தீவுகளும் நவகிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன்.

“ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் போது தானே, அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வளவு தான் என்றும், இன்ன வித்தை இவ்வளவு தான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவுதான் என்றும், இன்ன சமயத்தில் இன்னவிதமான மரணமுண்டாகத் தக்கது என்றும், பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரம்மன் விதித்து நிச்சயித்து விடுகிறான்.

“ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும், யோகமும் - மற்ற யாவுமே ஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதற்காகவாவது, ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன.

“ஜீவன் தன பூர்வஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனையே மறு ஜென்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறுகிறேன். இனி கேட்க வேண்டியது எதுவாயிருந்தால், அதையும் கேட்கலாம்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 12:05 am

யமன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாவ அவஸ்தைகள்


ருடன் சிறிது யோசித்து மணிவண்ணப் பெருமானைத் தொழுது, “யமபுரி எங்குள்ளது? அங்கு செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாக கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தார். திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.

“மீண்டும் அதைப் பற்றிக் கேட்டதால் எஞ்சியவற்றை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. யமபுரிக்கு செல்லும் வழியில் சிறிது தூரம் வரை செம்பை உருக்கி வார்த்தது போல் கனல் காந்திக் கொண்டிருக்கும். அதற்கப்பால் சிறிது தூரம் இண்டை முட்களாலும் தீக் கொள்ளிகளாலும் நிறைந்திருக்கும்.

“சிறிது தூரம் பொறுக்க முடியாத குளிர்ப்பிரதேசம் அமைந்திருக்கும். பூலோகத்திற்கும் எமலோகத்திற்க்கும் இடையே எண்பத்தாறாயிரம் காத வழி உள்ளது என்று முன்னமே உனக்குச் சொல்லி இருக்கிறேன். அத்தனை காதவழியிலும் பாபஞ் செய்த ஜீவனுக்கு அந்த வழி நெடுகிலும் மரத்தின் நிழலும் பருகுவதர்க்குத் தண்ணீரும் சிறிதளவு கூடக் கிடைக்காது. பாபிகளுக்கு யமலோகமும் அங்குச் செல்லும் மார்க்கமும் மிகவும் கொடுமையாக இருக்கும்.

“கருடா! இனி யம லோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக! தென் திசைக்கும் நிருதியின் திசைக்கும் நடு மையத்தில் யமபுரியானது வஜ்ஜுர மயமாயும் தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருதரத்தாலும் சிதைக்கத் தகாததாயும் அமைந்திருக்கும்.

“அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சதுரமாய் நூறு யோசனை உயரமுள்ளதாயும் அநேகஞ் சாளரங்களைக் கொண்டதாயும், துகிர்க் கொடிகள், முத்துக் கோவைகள், தூரங்கள் இவற்றால் அலங்கரிக்கப் பெற்றதாயும் சுவர்ணமயமாகவும் எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும்.

“அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள அநேகமாயிரம் வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும்.

“அங்கு சைத்திய சௌரப்பியமான மென்காற்று இயங்குவதாயும் எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் புழங்கும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும்.

“அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள். ரோகங்கள் எல்லாம் கோர உருவத்துடன் நின்று கொண்டிருக்கும். அவர்களுக்கு நடுவில் கண்டவர்கள் அஞ்சும்படியான ரூபத்தோடு மகிழ்ச்சியாக யமதர்மன் வீற்றிருப்பான்.

“அவன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு அருகில் இருபத்தைந்து யோசனை அகல நீலமுள்ளதாகவும், பத்து யோசனை உயரமுள்ளதாகவும் பலவித அலங்காரங்களால் அழகு செய்யப்பட சித்திரகுப்தனுடைய அரண்மனை இருக்கிறது.

“அந்த அரண்மனையில் ஒரு திவ்விய மண்டப்பத்தில் சித்திர குப்தன் வீற்றிருப்பான். அவன் சகல ஜீவன்களும் செய்யும் பாவபுண்ணியங்களை ஒன்று விடாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான்.

“அவன் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாகாது. அந்த சித்திரகுப்தனுடைய அரண்மனைக்குக் கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென்திசையில் சூலைநோயோடு வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தொடு கூடிய அஜீரணத்துக்கும் அருசிக்கும், வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும் தென் மேற்கில் அதிசார நோய்க்கும், வடமேற்கில் ஜென்னிக்கும் தனித்தனியே கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

“அவ்ரோகங்கள் யாவும் யமனுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்திருக்கும்.

“கருடா! யமனுடைய அரண்மனைக்குத் தென்திசையில் பாபஞ் செய்த சேதனர்கள் யமகிங்கரர்கள் பற்பலவிதமாக ஹிம்சை செய்வார்கள்.

“சிலஜீவர்களை உலக்கைகளால் நையப்புடைப்பார்கள். சிலரைக் கரிய கொடிய ஆயுதங்களால் சிதைக்கிறார்கள். சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள். சிலரை செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில் கோர்த்து பெருந்தலனில் வாட்டுகிறார்கள்.

“இன்னுஞ் சிலரை அக்கினிக் குண்டத்தில் வேக வைக்கிறார்கள். வைனதேயா! அங்கு செம்பினால் செய்யப்பட ஆண்பாவைகளும் பெண்பாவைகளும் அக்கினியில் சூடேற்றப்பட்டு தகத்தகாயமாய் தகித்துக் கொண்டிருக்கினறன.

“பரஸ்திரிகளை கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள் பார்த்து, ‘பாவிகளே! தருமமும், மானமும் பாராமல் பிறன் மனைவியரைப் புணர்ந்த இன்பம் பூவுலகத்தில், இவ்வுலகத்தில் மாற்றான் பட்ட மனத்துன்பமே இப்போது நீங்கள் அனுபவக்க நேரிட்ட பயனாகும். அந்தப் பயன் இதுவேதான்!’ என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும் பெண்பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள்.

“பரபுருஷோடு சேர்ந்த மங்கையரை தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙனமே ஒன்று சேர்ப்பார்கள். வினுதையின் மைந்தனே! புருஷனானவன் தன் மனைவியைத் தவிர பரஸ்திரியை கூடிக் கலந்ததிற்கும், ஸ்திரியானவள் தனது கணவரையன்றி பரபுருஷனைக் கூடியதற்கும், யமலோகத்தில் விதிக்கப்படும் தண்டனையைப் பார்! இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும் ஸ்திரி புருஷர்களில் நல்லொழுக்கத்தில் நிற்ப்பவர்களை பூவுலகில் காண்பதற்கே அரிதாகி விடுகிறது.

“யமபுரியில் சில பாவிகளைக் கரும்புகளை கரும்பாலையில் சக்க வைத்து கசக்கி சாறு பிழிவதைப் போல ஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள். சிலரை நரகங்களில் தள்ளி அடியாழம் வரையிலும் அழுத்துகிறார்கள்.

“கடன் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்காதவர்களை யமகிங்கரர்கள் அழைத்துச் சென்று கடன்கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுப்பதை விட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே! என்று முனிந்து நையப்புடைக்கிறார்கள்.

“பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச் சொல்வதால் பயன் என்ன? இன்னவன் அறநெறியாளன், இன்னவன் அதகுமிஷ்டன், இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன், இன்னவன் நரகம் செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டே உணரலாம்.

“தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம். ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து தருமஞ் செய்வதே வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது.




கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2015 6:36 am

சிறிது இடைவெளி விட்டு  தொடர்ந்தது ,
ஆர்வத்தை அதிகமாகவே தூண்டியது .
நன்றாக உள்ளது .தொடருங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 21 of 28 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 24 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக