புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் எம்.ஜி.ஆர் – சிவாஜி பி.சுசீலா கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆனால் என் கனவுக்குரிய பாலசந்தர் என்னைச் சந்திக்க தொலைபேசியில் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை. கமல்ஹாசனின் ராஜபார்வையில் 'அந்தி மழை’ எழுதப்பட்ட நேரம்... புதிய திரைமொழியோடு ஒரு கவிஞன் தமிழ் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறான் என்ற செய்தியை பாலசந்தருக்குச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது சொந்தமாக தொலைபேசியோ, வாகனமோ இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு மாடிவீட்டுத் தொலைபேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. 'உங்களுக்கு ஒரு போன்; உடனே வாருங்கள்’ என்று. நான் சென்று எடுத்தால் எதிர்முனைக்குரல் நான் பாலசந்தர் பேசுகிறேன் என்றது. நான் நெகிழ்ந்தே போனேன். நாளை என் வீட்டுக்கு வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டார். மகிழ்ச்சியோடு வருகிறேன் என்றேன். மறுநாள் காலையில் சாலையில் வந்து பார்த்தால் சென்னையில் முழு அடைப்பு. எந்த வாகனமும் ஓடவில்லை. ட்ரஸ்ட்புரத்திலிருந்து மயிலாப்பூர் வாரன் சாலைக்கு 35 நிமிடத்தில் நடந்து சென்றேன். வியர்வையோடு என்னைப் பார்த்த பாலசந்தர் வியந்துபோனார். பாட்டெழுத வாய்ப்பு வரும் என்று போனால் வசனம் எழுத வாய்ப்பு தந்தார் பாலசந்தர்.
பாரதியார் வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். கமல்ஹாசன் தான் பாரதியார். நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்றார். அச்சத்தோடு ஒப்புக்கொண்டேன்... பாரதியார் குறித்த 300 நூல்கள் திரட்டி இரவு – பகல் குறிப்பெடுத்தேன். ஆனால் அந்தப் படம் தயாராகவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பாரதியார் படத்தை அரசே தயாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பாலசந்தர் சோர்ந்துபோனார். பின்னாளில் புதுக்கவிதையில் பாரதியாரின் சரிதை 'கவிராஜன் கதை’யாக என்னால் எழுதப்பட்டதற்கு இயக்குநர் சிகரமே முழுமுதற்காரணம்.
அவர் மகாரசிகர். குழந்தையை 'இடுப்பிலுள்ள நந்தவனம்’ என்று தண்ணீர் தண்ணீர் படத்துக்கு நான் எழுதியதை திரையுலகில் அவர் சொல்லாத ஆளில்லை. திருத்தம் சொன்னாலும் அது நெற்றிக்குப் பொட்டு வைத்தது மாதிரி நேர்த்தியாக இருக்கும். சிந்து பைரவியில் –
'கவல ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கும் பாட்டுப்படி
எண்ணியே பாரு
எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ்ப்பாட்டுப் பாடு’ – என்று எழுதியிருந்தேன். ஒற்றெழுத்தை அவர் 'ம்’ என்று மாற்றினார். தமிழ்ப்பாட்டும் பாடு என்று வருகிறபோது அது இரண்டு மொழிப் பாடல்களுக்கும் கட்டப்பட்ட பாலமாகிவிட்டது. அவர் தொழில்நுட்பக் கலைஞர் மட்டுமல்ல; தமிழ்நுட்பக் கலைஞர்.
அவர் கற்றுக் கொண்டேயிருந்தார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார். தெரியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர் தயங்கியதே இல்லை. 'அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்கு 'ஆவாரம் பூவு’ என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன். ஆவாரம் பூ என்றால் என்ன என்று கேட்டார். அதுகுறித்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். படம் பார்க்கும்போது பார்த்தால் ஒரு கயிற்றுப்பாலத்தில் வண்டி வண்டியாகக் கொண்டுவந்த ஆவாரம் பூக்களைக் கொட்டி நிரப்பியிருந்தார். பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை உள்ளவர். 'புன்னகை மன்னன்’ படத்தில் 'என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டில் 'ஆரிரரோ யார் இவரோ?’ என்ற வரியை படமாக்கும்போதும் கேமராவையே தூளிகட்டி ஆடவிட்டிருப்பார்.
பாலசந்தர் அவர்களுக்கு என் திரைவாழ்க்கை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் அதை சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் காலம் கொடுத்திருக்கிறது. இனி பெறப்போகும் எதுவும் வெற்றியுமில்லை; அடையப்போவது எதுவும் தோல்வியும் இல்லை. ஆனால் 90களில் நான் தோற்றுப்போய்விட்டதாக துவண்டுகிடந்தேன். 92-ல் ஒரே ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா மூன்று படங்களைத் தயாரித்தது. வானமே எல்லை – அண்ணாமலை – ரோஜா. மூன்று படங்களுக்கும் இயக்குநர்கள் வேறு, இசையமைப்பாளர்கள் வேறு – நடிகர்கள் வேறு. ஆனால் பாடலாசிரியர் மட்டும் ஒருவன் வைரமுத்து என்று எனக்குப் பெருவாய்ப்பு வழங்கியிருந்தார் பாலசந்தர். அந்த மூன்று படங்களுக்கும் என் உயிர் மூச்சையே ஊற்றி எழுதினேன். மூன்றும் வெற்றி பெற்றன. நான் இன்று வரைக்கும் தொடரும் என் பாட்டுப்பாதை அவர் போட்டுக்கொடுத்தது.
கமல் மீது காதல் அவருக்கு. தன்னை விட்டு வளர்ந்து வெகுதூரம் போய்விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவருக்கிருந்தது. அவன் நாத்திகனாகவே இருக்கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் செல்லமாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு 'வயலும் வாழ்வும்’ எடுத்தாலும் நான் நடிப்பேன்; அவர் மீது நான்கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனம் திறந்திருக்கிறார்.
ரஜினியை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று அவரிடம் ஆர்வமாக நான் கேட்டிருக்கிறேன். 'கனவு மிதக்கும் அந்தக் கண்கள்... கலகம் செய்யும் கண்கள்... அதுதான் ரஜினியை நான் தேர்வு செய்யக் காரணம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
எங்கள் வாழ்வுக்குப் பக்கத்திலேயே வரமாக வந்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டார் என்ற செய்தி இதயத்தை உடைத்தெறிந்துவிட்டது. சில மரணங்கள் வெறும் செய்திகள். சில மரணங்கள் வாழ்வின் கடைசிச் சம்பவங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பாலசந்தரின் மறைவு என்பது என் தகப்பன் இரண்டாம் முறை இறந்து போனதுபோல் துக்கமானது. அன்று மாலை பாலசந்தர் இல்லத்தில் அவரது பூத உடலுக்குப் பக்கத்தில் ரஜினியும் நானும் கவிதாலயா நடராஜனும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், மகன் மதன் கார்க்கியும் இரண்டு மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து துக்கம் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்துவிட்டார் ரஜினி. மயானமேடைக்கு அருகே ரஜினியும், நானும், தங்கை ஐஸ்வர்யாவும் சோகம் கப்பிப்போய் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ரஜினி என்னைப் பார்த்துக் கேட்டார்; 'சாருக்கு நான் வாய்க்கரிசி போடவேண்டுமே.’ நான் சம்பந்தப்பட்ட ஒரு நண்பரை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்து ரஜினியை வெளியே அனுப்பிவைத்தேன். இயக்குநர் சிகரத்துக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு மீண்டும் எங்களை வந்தடைந்தார். ஒரு தகப்பனாருக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி மரியாதையை செய்துவிட்ட நிறைவோடு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.
பாலசந்தர் மார்பின் மீது கற்பூரம் கொளுத்தப்பட்டது. அது கொழுந்துவிட்டு குபுகுபுவென்று எரிந்தது. அந்த நெஞ்சில் எரிந்த 60 வருட அக்கினிதானே தமிழ் சினிமாவைப் புடம்போட்டுக்கொடுத்தது. அந்தக் கற்பூரத்தீ அணைந்துவிடலாம். அந்தக் கலைத்தீ அணையுமா? என்று கருதிக்கொண்டு கண்களில் நீர்முட்ட நின்றபோது... 'தடக்’கென்ற சப்தத்தோடு உள் எரிவாயில் சென்று விழுந்தது பாலசந்தரின் உடல். உடனே திரை விழுந்தது; இரும்புத்திரை. கனத்த நெஞ்சோடு கலங்கிய கண்களோடு கலைந்தோம். பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை.
நன்றி:ஜினியர்விகடன்
பாரதியார் வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். கமல்ஹாசன் தான் பாரதியார். நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்றார். அச்சத்தோடு ஒப்புக்கொண்டேன்... பாரதியார் குறித்த 300 நூல்கள் திரட்டி இரவு – பகல் குறிப்பெடுத்தேன். ஆனால் அந்தப் படம் தயாராகவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பாரதியார் படத்தை அரசே தயாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பாலசந்தர் சோர்ந்துபோனார். பின்னாளில் புதுக்கவிதையில் பாரதியாரின் சரிதை 'கவிராஜன் கதை’யாக என்னால் எழுதப்பட்டதற்கு இயக்குநர் சிகரமே முழுமுதற்காரணம்.
அவர் மகாரசிகர். குழந்தையை 'இடுப்பிலுள்ள நந்தவனம்’ என்று தண்ணீர் தண்ணீர் படத்துக்கு நான் எழுதியதை திரையுலகில் அவர் சொல்லாத ஆளில்லை. திருத்தம் சொன்னாலும் அது நெற்றிக்குப் பொட்டு வைத்தது மாதிரி நேர்த்தியாக இருக்கும். சிந்து பைரவியில் –
'கவல ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கும் பாட்டுப்படி
எண்ணியே பாரு
எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ்ப்பாட்டுப் பாடு’ – என்று எழுதியிருந்தேன். ஒற்றெழுத்தை அவர் 'ம்’ என்று மாற்றினார். தமிழ்ப்பாட்டும் பாடு என்று வருகிறபோது அது இரண்டு மொழிப் பாடல்களுக்கும் கட்டப்பட்ட பாலமாகிவிட்டது. அவர் தொழில்நுட்பக் கலைஞர் மட்டுமல்ல; தமிழ்நுட்பக் கலைஞர்.
அவர் கற்றுக் கொண்டேயிருந்தார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார். தெரியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர் தயங்கியதே இல்லை. 'அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்கு 'ஆவாரம் பூவு’ என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன். ஆவாரம் பூ என்றால் என்ன என்று கேட்டார். அதுகுறித்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். படம் பார்க்கும்போது பார்த்தால் ஒரு கயிற்றுப்பாலத்தில் வண்டி வண்டியாகக் கொண்டுவந்த ஆவாரம் பூக்களைக் கொட்டி நிரப்பியிருந்தார். பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை உள்ளவர். 'புன்னகை மன்னன்’ படத்தில் 'என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டில் 'ஆரிரரோ யார் இவரோ?’ என்ற வரியை படமாக்கும்போதும் கேமராவையே தூளிகட்டி ஆடவிட்டிருப்பார்.
பாலசந்தர் அவர்களுக்கு என் திரைவாழ்க்கை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் அதை சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் காலம் கொடுத்திருக்கிறது. இனி பெறப்போகும் எதுவும் வெற்றியுமில்லை; அடையப்போவது எதுவும் தோல்வியும் இல்லை. ஆனால் 90களில் நான் தோற்றுப்போய்விட்டதாக துவண்டுகிடந்தேன். 92-ல் ஒரே ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா மூன்று படங்களைத் தயாரித்தது. வானமே எல்லை – அண்ணாமலை – ரோஜா. மூன்று படங்களுக்கும் இயக்குநர்கள் வேறு, இசையமைப்பாளர்கள் வேறு – நடிகர்கள் வேறு. ஆனால் பாடலாசிரியர் மட்டும் ஒருவன் வைரமுத்து என்று எனக்குப் பெருவாய்ப்பு வழங்கியிருந்தார் பாலசந்தர். அந்த மூன்று படங்களுக்கும் என் உயிர் மூச்சையே ஊற்றி எழுதினேன். மூன்றும் வெற்றி பெற்றன. நான் இன்று வரைக்கும் தொடரும் என் பாட்டுப்பாதை அவர் போட்டுக்கொடுத்தது.
கமல் மீது காதல் அவருக்கு. தன்னை விட்டு வளர்ந்து வெகுதூரம் போய்விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவருக்கிருந்தது. அவன் நாத்திகனாகவே இருக்கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் செல்லமாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு 'வயலும் வாழ்வும்’ எடுத்தாலும் நான் நடிப்பேன்; அவர் மீது நான்கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனம் திறந்திருக்கிறார்.
ரஜினியை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று அவரிடம் ஆர்வமாக நான் கேட்டிருக்கிறேன். 'கனவு மிதக்கும் அந்தக் கண்கள்... கலகம் செய்யும் கண்கள்... அதுதான் ரஜினியை நான் தேர்வு செய்யக் காரணம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
எங்கள் வாழ்வுக்குப் பக்கத்திலேயே வரமாக வந்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டார் என்ற செய்தி இதயத்தை உடைத்தெறிந்துவிட்டது. சில மரணங்கள் வெறும் செய்திகள். சில மரணங்கள் வாழ்வின் கடைசிச் சம்பவங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பாலசந்தரின் மறைவு என்பது என் தகப்பன் இரண்டாம் முறை இறந்து போனதுபோல் துக்கமானது. அன்று மாலை பாலசந்தர் இல்லத்தில் அவரது பூத உடலுக்குப் பக்கத்தில் ரஜினியும் நானும் கவிதாலயா நடராஜனும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், மகன் மதன் கார்க்கியும் இரண்டு மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து துக்கம் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்துவிட்டார் ரஜினி. மயானமேடைக்கு அருகே ரஜினியும், நானும், தங்கை ஐஸ்வர்யாவும் சோகம் கப்பிப்போய் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ரஜினி என்னைப் பார்த்துக் கேட்டார்; 'சாருக்கு நான் வாய்க்கரிசி போடவேண்டுமே.’ நான் சம்பந்தப்பட்ட ஒரு நண்பரை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்து ரஜினியை வெளியே அனுப்பிவைத்தேன். இயக்குநர் சிகரத்துக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு மீண்டும் எங்களை வந்தடைந்தார். ஒரு தகப்பனாருக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி மரியாதையை செய்துவிட்ட நிறைவோடு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.
பாலசந்தர் மார்பின் மீது கற்பூரம் கொளுத்தப்பட்டது. அது கொழுந்துவிட்டு குபுகுபுவென்று எரிந்தது. அந்த நெஞ்சில் எரிந்த 60 வருட அக்கினிதானே தமிழ் சினிமாவைப் புடம்போட்டுக்கொடுத்தது. அந்தக் கற்பூரத்தீ அணைந்துவிடலாம். அந்தக் கலைத்தீ அணையுமா? என்று கருதிக்கொண்டு கண்களில் நீர்முட்ட நின்றபோது... 'தடக்’கென்ற சப்தத்தோடு உள் எரிவாயில் சென்று விழுந்தது பாலசந்தரின் உடல். உடனே திரை விழுந்தது; இரும்புத்திரை. கனத்த நெஞ்சோடு கலங்கிய கண்களோடு கலைந்தோம். பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை.
நன்றி:ஜினியர்விகடன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நெஞ்சை கசக்கிய நிகழ்வு அவர் மறைவு....
தாங்கள் கூறியது போல் அவர் கலை
என்றுமே கலையாது....
தாங்கள் கூறியது போல் அவர் கலை
என்றுமே கலையாது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
» பாரிஸும் இல்லை, சிங்கப்பூரும் இல்லை: இதுதான் உலகின் காஸ்ட்லியான நகரம்
» ”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» பார்வை இல்லை; கடலில் பயம் இல்லை: படகு ஓட்டி பிழைக்கும் 70 வயது "இளைஞர்'
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» ”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» பார்வை இல்லை; கடலில் பயம் இல்லை: படகு ஓட்டி பிழைக்கும் 70 வயது "இளைஞர்'
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|