புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
prajai
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
292 Posts - 42%
heezulia
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
2015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 புத்தாண்டு பலன்கள் !


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:43

மேஷம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.
வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும்.

புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு

அஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:44

மேஷ ராசி : மாதப் பலன்கள்

ஜனவரி

உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 16-01-2015 அதிகாலை 02.42 மணிமுதல் 18-01-2015 காலை 07.33 மணி வரை.

பிப்ரவரி

மாதக் கோள் என வர்ணிக்கப்படும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. அசையும்- அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 12-02-2015 காலை 11.08 மணி முதல் 14-02-2015 மாலை 05.37 மணி வரை.

மார்ச்

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 11-03.2015 மாலை 05.41 மணிமுதல் 14-03-2015 அதிகாலை 01.31 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 4-ல் குருவும் 8-ல் சனியும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 07-04-2015 இரவு 11.19 மணி முதல் 10-04-2015 காலை 07.28 மணி வரை.

மே

ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப் படையும். கடன்கள் சற்று குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 05-05-2015 அதிகாலை 05.33 மணி முதல் 07-05-2015 மதியம் 01.02 மணிவரை.

ஜூன்

ராசிக்கு 6-ல் ராகுவும் மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய், சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்று வீர்கள். என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சனி சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிருக்காது. கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய இயலாது போகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 01-06-2015 மதியம் 01.06 மணி முதல் 03-06-2015 இரவு 07.49 மணி வரை. மற்றும் 28-06-2015 இரவு 09.46 மணி முதல் 01-07-2015 அதிகாலை 04.17 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக் கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 26-07-2015 காலை 06.40 மணி முதல் 28-07-2015 மதியம் 01.50 மணி வரை.

ஆகஸ்ட்

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவையற்ற வீண் பயணங்களைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையி ருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 22-08-2015 மதியம் 02.42 மணி முதல் 24-08-2015 இரவு 11.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 18-09-2015 இரவு 09.22 மணி முதல் 21-09-2015 காலை 07.03 மணி வரை

அக்டோபர்

ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமான நிலையில் நடைபெறும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாகச் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கப்பெறும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-10-2015 அதிகாலை 03.09 மணிமுதல் 18-10-2015 மதியம் 01.11 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குருவும், 6-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறமுடியும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது,
சந்திராஷ்டமம்: 12-11-2015 காலை 09.11 மணி முதல் 14-11-2015 மாலை 06.44 மணி வரை.

டிசம்பர்

5-ல் குருவும் 6-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள். பணம் சேமிக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 09-12-2015 மாலை 04.28 மணி முதல் 12-12-2015 அதிகாலை 01.19 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1, 2, 3, 9; நிறம் – ஆழ் சிவப்பு; கிழமை – செவ்வாய்; கல்- பவளம்; திசை – தெற்கு; தெய்வம் – முருகன்.
பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:45

ரிஷபம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும் ஆற்றல்கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்திலுள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளும் ஏற்படுக்கூடும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கைகூடும். ஆண்டின் தொடக்கம் சற்று சாதகமின்றி இருந்தாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். உத்தியோ கஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங் களைப் பெற்று உயர்பதவிகளைப் பெறுவீர்கள். 5-ல் ராகு சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவு, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்துவதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இந்த ஆண்டு எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நல்ல அனுகூலமான பலனைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்
இந்த ஆண்டு முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் தொடக்கத்தில் குருவும் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, கை, கால்களில் அசதி, எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படவியலாத நிலை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். மனைவிக்கும் எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  05-07-2015-ல் ஏற்படும் குரு மாற்றத்தால் குரு 4-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். அன்றாடப் பணிகளிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்திலுள்ளவர்களை ஆண்டின் தொடக்கத்தில் அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் அனுசரித்துச் செல்லமாட்டார்கள். இந்த வருடம் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் பிற்பாதியில் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு ஜீவனாதிபதி சனி 7-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும், எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடைந்துவிடமுடியும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். இந்த வருடம் குரு சஞ்சாரமும் சுமாராக இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.  உயரதிகாரிகள் உங்களின் திறமைகளைப் பாராட்டுவதால் மனநிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். உங்கள்மீதிருந்த தேவையற்ற பழிச்சொற்கள் மறையும்.

தொழில், வியாபாரம்
உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவனாதிபதியான சனி பகவான் கூட்டுத் தொழில் ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு, வழக்குகளை சந்திக்கநேரிடும். தொழில்ரீதியாக நண்பர்களும் எதிரியாவார்கள். தொழிலிலும் மந்தமான நிலையிலேயே நடைபெறும் என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்துச் செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள உதவும்.

பெண்களுக்கு
இந்த ஆண்டானது அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கணவரிடம் பிரச்சினை, உறவினர்களிடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் போன்றவை உண்டாகி, மனநிம்மதி குறையும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒற்று மையும் நிம்மதியும் சிறக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.

கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டின் தனகாரகன் குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதால் உறவினர்கள் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள்.  கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்களுக்கும் நல்ல லாபம் அமையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை முதலீட்டிற்குப் பயன்படுத்தும்போது கவனம்  தேவை.

அரசியல்வாதிகளுக்கு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, எதிலும் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகளும் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சியடைவீர்கள்.

விவசாயிகளுக்கு
மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைபோகும். ஆண்டின் தொடக்கத்தில் பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தன வரவுகளும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பொருளாதாரரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் குரு மாற்றத்திற்குப் பின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வராமலிருந்த பணவரவுகளும் தடையின்றி வந்துசேரும்.

மாணவ- மாணவியருக்கு
கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல் பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். உடன்பழகும் நண்பர் களிடம் கவனமுடன் செயல்படுவதும், பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டுநடப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:46

ரிஷபம்- மாதப்பலன்கள்

ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சனியும் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தானிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் கடன்களைத் தவிர்க்கலாம். சுபகாரியங் களுக்கான முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-01-2015 காலை 07.33 மணி முதல் 20-01-2015 காலை 08.57 மணி வரை.

பிப்ரவரி

10-ம் தேதி முதல் செவ்வாய் 11-ல் சஞ்சரிக்கவுள்ளதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. பணவரவுகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு அமையும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலைப் பளு சற்று கூடும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-02-2015 மாலை 05.37 மணி முதல் 16-02-2015 இரவு 08.05 மணி வரை.

மார்ச்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததை நிறைவேற்று வீர்கள். தொழில், வியாபாரரீதியாக இருந்த போட்டிகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படு வார்கள். எதிரிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். தொழில். வியாபாரமும் சிறந்த நிலையில் நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-03-2015 அதிகாலை 01.31 மணி முதல் 16-03-2015 காலை 05.47 மணி வரை.

ஏப்ரல்

3-ல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் எல்லாவகையிலும் லாபங்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். 7-ல் சனி சஞ்சாரம் செய்வதால் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 10-04-2015 காலை 07.28 மணி முதல் 12-04-2015 பகல் 12.57 மணி வரை.

மே

ஜென்ம ராசிக்கு 3-ல் குருவும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும். நெருங்கியவர்கள் வீண் பிரச்சினைகளை உண்டாக்கு வார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் காலம் என்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பதும், பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதைக் குறைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 07-05-2015 மதியம் 01.02 மணி முதல் 09-05-2015 மாலை 06.30 மணிவரை.

ஜூன்

ஜென்ம ராசியிலேயே சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆராக்கியத்தில் கவனமுடன் இருப்பது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதியாக மாறக்கூடும். பணவரவுகளிலும் இடையூறுகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 03-06-2015 இரவு 07.49 மணி முதல் 05-06-2015 இரவு 12.18 மணி வரை.

ஜூலை

ராசிக்கு 6-ல் சனியும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எதிலும் ஓரளவுக்கு ஏற்றங்களை அடையமுடியும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் அமையும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 01-07-2015 அதிகாலை 04.17 மணி முதல் 03-07-2015 காலை 07.52 மணி வரை. மற்றும் 28-07-2015 மதியம் 01.50 மணி முதல் 30-07-2015 மாலை 05.19 மணி வரை.
ஆகஸ்ட்

3-ல் சூரியன், செவ்வாயும் 11-ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரரீதியாக உயர்வுகள் உண்டாகும். பூர்வீக வழியிலும் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். கொடுத்த வாக் குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 24-08-2015 இரவு 11.10 மணி முதல் 27-08-2015 அதிகாலை 03.36 மணி வரை.

செப்டம்பர்

ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு ஏற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும்-. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமும் திறமைக்கேற்ற பதவிகளும் கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங் கள் நடைபெறும். பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 21-09-2015 காலை 07.03 மணி முதல் 23-09-2015 மதியம் 01.05 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், குரு சஞ்சரித்தாலும் 11-ல் கேதுவும் மாத- பிற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிர்பார்த்த லாபங்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிரிகளை வெல்லக் கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலைக் குறைக்க உதவும். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தட்சிணாமுர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-10-2015 மதியம் 01.11 மணி முதல் 20-10-2015 இரவு 08.32 மணி வரை.

நவம்பர்

6-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். என்றாலும் நிறைய பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்க முடியும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடையமுடியும். சிவனை வழிபடுவது, பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-11-2015 மாலை 06.44 மணி முதல் 17-11-2015 அதிகாலை 02.11 மணி வரை.

டிசம்பர்

ராசிக்கு 4-ல் குருவும் 7-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்பு யாவும் உண்டாகும் என்றாலும் 11-ல் கேது இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்போட்டே வெற்றிபெற வேண்டியிருக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 12-12-2015 அதிகாலை 01.19 மணி முதல் 14-12-2015 காலை 07.54 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8; நிறம் – வெண்மை, நீலம்; கிழமை – வெள்ளி, சனி; கல் -வைரம்; திசை – தென்கிழக்கு; தெய்வம் – விஷ்ணு, லட்சுமி.

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த ஆண்டு 7-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வதும் நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபடலாம். குரு பகவானும் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதால் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed 17 Dec 2014 - 13:48

நன்றி அம்மா... முதலில் வருட பலன்... பின்பு மாத பலன்... மிக அருமை
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:49

மிதுனம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)


பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும் தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார்- உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 4-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றிச் செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற் கொண்டிருப்பவர்களுக்கும் உடல்ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக் குறையும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறை வேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கி யமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வரும் ஜூலை 5-ஆம் தேதி குரு 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.

பெண்களுக்கு

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் போன்றவை சிறப்பாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவியும் அமையும். ஊதிய உயர்வு கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன காரகன் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சிறப்பான லாபம் அமையும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும், குரு மாற்றத்திற்குப் பின் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பதும், பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. வீண் வம்பு வழக்கு ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பர கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பும் மூலம் நற்பலனை அடைவீர்கள். விளை யாட்டு போட்டிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கமே வீசும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:50

மிதுனம் - மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உயர்வுகளைப் பெறமுடியும். கடன்கள் நிவர்த்தியாகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-01-2015 காலை 08.57 மணி முதல் 22-01-2015 காலை 08.49 மணி வரை.

பிப்ரவரி

ஜென்ம ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சனியும் சஞ்சரிப்பது அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும் அமைப்பாகும். உங்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் கிட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கூடும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 16-02-2015 இரவு 08.05மணி முதல் 18-02-2015 இரவு 07.57 மணி வரை.

மார்ச்

6-ல் சனியும் 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக லாபங்களை அடையமுடியும். பண வரவுகள் சரளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிரிபார்த்துக் காத்திருந்த இடமாற்றங்கள் தடையின்றிக் கிடைக்கும் கடன்கள் படிப்படியாகக் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 16-03-2015 காலை 05.47 மணி முதல் 18-03-2015 காலை 06.58 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் அமையும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 12-04-2015 பகல் 12.57 மணி முதல் 14-04-2015 பகல் 03.52 மணி வரை.

மே

தன ஸ்தானமான 2-ல் குருவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் சிறப்பான வரன்கள் தேடிவரும். தொழில், வியாபாரத்திலும் லாபம் பல மடங்கு பெருகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 09-05-2015 மாலை 06.30 மணி முதல் 11-05-2015 இரவு 10.18 மணி வரை.

ஜூன்

6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலும், 12-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் 2-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 05-06-2015 இரவு 12.18 மணி முதல் 08-06-2015 அதிகாலை 03.40 வரை.

ஜூலை

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 03-07-2015 காலை 07.52 மணி முதல் 05-07-2015 காலை 10.00 மணி வரை. மற்றும் 30-07-2015 மாலை 05.19 மணி முதல் 01-08-2015 மாலை 06.30 மணி வரை.

ஆகஸ்ட்

3-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விஷயங்களிலும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை எடுக்கவே எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-08-2015 அதிகாலை 03.36 மணிமுதல் 29-08-2015 அதிகாலை 04.11 மணிவரை.

செப்டம்பர்

ராசிக்கு 3-ல் சூரியனும், 5-ஆம் தேதி முதல் 6-ல் சனியும், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். பண வரவுகளிலிருந்த பிரச்சினைகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றதை அடையமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தொழில், வியாபாரமும் முன்னேற்ற நிலையில் நடைபெறும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 23-09-2015 மதியம் 01.05 மணி முதல் 25-09-2015 மதியம் 03.35 மணி வரை.

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனியும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-10-2015 இரவு 08.32 மணி முதல் 22-10-2015 இரவு 12.48 மணி வரை.

நவம்பர்

ராசிக்கு 3-ல் செவ்வாயும் 6-ஆம் வீட்டில் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எதிலும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் மேன்மைகள் ஏற்படுவதால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் சாதகப் பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 17-11-2015 அதிகாலை 02.11 மணி முதல் 19-11-2015 காலை 07.33 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால் விரோதம் பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் கிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14-12-2015 காலை 07.54 மணி முதல் 16-12-2015 பகல் 12.54 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5, 6, 8; நிறம் – பச்சை, வெள்ளை; கிழமை – புதன், வெள்ளி; கல் – மரகதம்; திசை – வடக்கு; தெய்வம் – விஷ்ணு.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடுசெய்வது, கொண்டக்கடலை மாலை, மற்றும் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மஞ்சள்நிறப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:52

கடகம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும். என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. என்றாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தன ஸ்தானத்துக்கு மாறுதலாகிறார். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், தெய்வதரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உடல் ஆராக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் நிம்மதியான உறக்கம்கூட வராது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போடவேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத் திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால், உடல் ஆரோக்கியரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகளும் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப் பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். அசையா சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவி னர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.

உத்தியோகம்

குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவிருக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

பெண்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகளும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும், குருமாற்றத்திற்குப் பின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக் குப்பின் பணம் கொடுக்கல்- வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்த வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயத்தில் பட்ட பாட்டிற்கேற்ற பலனைப் பெற்றுவிட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும், தகுந்த நேரத்தில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடையவேண்டிய லாபங்களை அடைந்துவிட முடியும்.

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச்சென்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனி 2 -ஆம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சுகவாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் பயணம்செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:54

கடகம் ராசி - மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். குருப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 22-01-2015 காலை 08.49 மணி முதல் 24-01-2015 காலை 09.14 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சி ளில் நிறைய தடைகளுக்குப் பின்தான் வெற்றிகிட்டும். சுப காரியங்களில் தாமத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-02-2015 இரவு 07.57 மணி முதல் 20-02-2015 மாலை 07.15 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதும் 8-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடைகளும் நெருங்கியவர்களிடம் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையைக் கொடுக்கும். கணவன்- மனைவி யிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்ப ஒற்றுமையும் குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தை அடைவீர்கள். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-03-2015 காலை 06.58 மணி முதல் 20-03-2015 காலை 06.34 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-04-2015 பகல் 03.52 மணி முதல் 16-04-2015 மாலை 04.55 மணி வரை.

மே

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 2-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் விலகிச்செல்லும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரரீதீயாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உறவினர்களை சற்று அனுசரித் துச்செல்வது நல்லது. விநாயக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 11-05-2015 இரவு 10.18 மணி முதல் 13-05-2015 இரவு 12.50 மணி வரை.

ஜூன்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும், பயணங்களால் அனுகூலங்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே இருக்கும். என்றாலும் பிறரை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 08-06-2015 அதிகாலை 03.40 மணிமுதல் 10-06-2015 காலை 06.39 மணி வரை.

ஜூலை

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது வீண் விரயங்களையும் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளையும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கும் அமைப்பாகும். என்றாலும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 05-07-2015 காலை 10.00 மணி முதல் 07-07-2015 பகல் 12.08 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானத்தில் குருவும் முயற்சி ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள், பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரம் உயர்வதால் கடன்களும் குறையும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபங்களைப் பெறமுடியும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 01-08-2015 மாலை 06.30 மணி முதல் 03.08.2015 இரவு 07.11 மணி வரை. மற்றும் 29.08.2015 அதிகாலை 04.11 மணிமுதல் 31-08-2015 அதிகாலை 04.37 மணி வரை.

செப்டம்பர்

தன ஸ்தானமான 2-ல் குருவும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகளும் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்
சந்திராஷ்டமம்: 25-09-2015 மதியம் 03.35 மணி முதல் 27-09-2015 பகல் 03.37 மணி வரை.

அக்டோபர்

தன ஸ்தானத்தில் குருவும் 3-ல் ராகு, சூரியனும் சஞ்சாரம் செய்வதால் செல்வம், செல்வாக்கு உயர்வடையும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களும், வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்துகொண்டால் சற்று அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனிப்ரீதி உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-10-2015 இரவு 12.48 மணி முதல் 25-10-2015 அதிகாலை 02.18 மணி வரை.

நவம்பர்

ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரகளிலிருந்த தடைகள் விலகி, பொருளாதாரம் மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளையும் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 19-11-2015 காலை 07.33 மணி முதல் 21-11-2015 காலை 10.48 மணி வரை

டிசம்பர்

தன ஸ்தானத்தில் குருவும் 3-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வ தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகவே நடைபெறும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகி சுமுகமான நிலை நிலவும். உற்றார்- உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-12-2015 பகல் 12.54 மணி முதல் 18-12-2015 மதியம் 04.48 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1, 2, 3, 9; நிறம் – வெள்ளை, சிவப்பு; கிழமை- திங்கள், வியாழன்; கல் -முத்து; திசை – வடகிழக்கு; தெய்வம் – வெங்கடாசலபதி.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றுவது, படிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். தினமும் விநாயக ரையும் வழிபாடு செய்யலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Dec 2014 - 13:58

சிம்மம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

எதிலும் தனித்துநின்று போராடி வெற்றிபெறும் ஆற்றல்கொண்ட சிம்ம ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 05-07-2015-க்குப் பிறகு ஜென்ம ராசிக்கு மாறுதலாகிறார். இந்த வருடம் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. தயாள குணம்கொண்ட நீங்கள் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டு என்றாலும் அதை சில தடைகளுக்குப் பின்பே பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாக உங்களின் முன்கோபமே காரணமாக இருக்கும் என்பதால் முன்கோபத்தையும் முரட்டு சுபாவத்தையும் சற்று தளர்த்தி அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களின் மத்தியஸ்தத்திற்கு பலரிடம் நல்ல மதிப்பு உண்டென்றாலும் இந்த வருடம் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கமின்றி லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களின் உதவி ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகித்தாலும் மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரத்தால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பதின்மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடையமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதிக அலைச்சல்களையும் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் இருக்கும் பதவிகளுக்கு பங்கம்வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாத காரணத்தால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்கள் விருப்பத்தை சற்று தள்ளிவைப்பது உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பெறாமைகளை சமாளித்தே லாபத்தைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதை பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. அரசு வழியில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் அதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் சுமாரான லாபத்தை அடையமுடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது. தொழிலாளர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

பெண்களுக்கு

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்று மையை நிலைநாட்டமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந் தாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சில நேரங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும் பூர்வீகச் சொத்துகளால் வீண் செலவுகளும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று கூடும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி நடப்பதாலும், குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். கொடுத்த கடன்களை சிறிது சிறிதாக வசூலித்துவிட முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற வதந்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தாலும் நிதானத்தைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்பு தகாரறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன் உங்களுக்குக் கிடைத்துவிடும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் வில்லங்கம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தகுந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் குறையும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ஞாபக மறதி, கல்வியில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியாத நிலை போன்றவை உண்டாகக் கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போதும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களிலும் நிதானம் தேவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக