புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
26 Posts - 43%
M. Priya
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
1 Post - 2%
Jenila
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
4 Posts - 3%
Jenila
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
3 Posts - 3%
Rutu
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
3 Posts - 3%
Baarushree
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
2 Posts - 2%
prajai
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
2 Posts - 2%
viyasan
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
1 Post - 1%
M. Priya
மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_m10மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 2:38 pm



ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் பிறக்கிறது. 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத வருடம் சிறப்பாக பிறக்கிறது.

இந்த வருடம் இப்படித்தான்;

மன்மத வருடத்தின் பலன் வெண்பா:

மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.


சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி மன்மத ஆண்டில் நன்கு மழை பொழியும். மரம், செடி, கொடி, பறவை மற்றும் விலங்குகள் பெருகும். அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைசெடிகள் அழியும்.

இந்த வருடத்தின் ராஜாவாக சனி பகவான் வருவதால் உலகெங்கும் சாதாரணமானவர்கள் சாமானிய பதவியில் அமர்வார்கள். சில இடங்களில் வறட்சியும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் அதிகரிக்கும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மறைமுக பகைமை இருக்கும். இரும்பு, எண்ணெய் வித்துக்களின் விலைகள் குறையும். எலக்ட்ரானிக் சாதனங்களின் அதிக உற்பத்தியால் விலை மலிவாகும். கால்நடைகளை வினோத நோய்கள் தாக்கும். வேலை நிறுத்தங்களும் உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் அதிகரிக்கும். மக்கள் பாபகாரியங்களை துணிந்து செய்வார்கள்.

திருட்டு பயம் அதிகரிக்கும். சிறுபான்மை மக்கள் பலமடைவார்கள். மந்திரியாக செவ்வாய் வருவதால் வாகனப் பெருக்கத்தால் பூமியில் வெப்பம் அதிகரிக்கும். மின்சார கசிவால் தீ விபத்துகள் அதிகரிக்கும். எரிமலைகள் வெடிக்கும். முதன்மை பதவியில் இருப்பவர்களுக்கும் இரண்டாம் கட்ட பதவியில் இருப்பவர்களுக்கும் இடையே ஈகோ பிரச்னைகள் அதிகரிக்கும். சேனாதிபதியாக சந்திரன் வருவதாலும் அந்த சந்திரனை குரு பார்ப்பதாலும் ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் நவீன போர்தளவாடங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும். ஜலகிரகம் சந்திரன் சேனாதிபதியாக வருவதால் கப்பற்படை நவீனபடுத்தப்படும். புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்படும்.

எல்லைப்பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும். தண்ணீரால் அதிக நோய் பரவும். பூமியில் நீர் மட்டம் குறையும். வடமேற்கு திக்கில் அமைந்துள்ள நாடுகள், மாநிலங்கள் செழிப்படையும். பால் உற்பத்தியை பெருக்க அரசு புது திட்டங்களை அமல்படுத்தும். அர்க்காதிபதியாகவும் சந்திரன் வருவதால் தங்கம், வெள்ளி விலை நிலையற்றதாக இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் தங்கம், வெள்ளி விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பருவம் மாறி மழை பொழியும். வெள்ளை தானியமான நெல் உற்பத்தி அதிகரிக்கும். அரிசி விலை குறையும்.

மேகாதிபதியாகவும் சந்திரன் வருவதாலும் நவாம்சத்தில் சந்திரனை மழைக்கோள் சுக்கிரன் பார்ப்பதாலும் பருவமழை அதிகரிக்கும். ஆறு, குளங்கள் நிரம்பும். பலவித தானியங்களும் செழிப்படையும். கரும்பு உற்பத்தி அதிகரிக்கும். மாலை நேரத்தில் புயல் சின்னம் உருவாகி, இரவு நேரத்தில் மழை பொழிவு அதிகமாகும். வெள்ளை நிற மேகங்களின் உற்பத்தி அதிகமாகும். நதிகள் பெருக்கெடுத்து ஓடும். நீர்தேக்கங்கள் பாதிப்படையும். ஸஸ்யாதிபதியாக குரு வருவதால் அதிக பால் தரும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆடு, கோழி உற்பத்தி அதிகமாகும். ஜவுளி உற்பத்தி அதிகமாகும்.

துணிகளின் விலை குறையும். அலுமினியம், பித்தளை பயன்பாடு அதிகரிக்கும். இரசாதிபதியாக சனி வருவதால் மழை பொழிவு சீராக இருக்காது, பாதரசத்தின் விலை உயரும். அமிலங்களின் விலை அதிகரிக்கும். தான்யாதிபதியாக புதன் அமைந்து சூரியன், செவ்வாயுடன் புதன் சம்மந்தப்பட்டிருப்பதால் தரிசுநிலங்கள், சதுப்புநிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிலங்களிலும் பயிர்கள் விளையும். பயிறு வகைளைகள் தழைக்கும். சர்க்கரை, மதுபான வகைகளின் விலை அதிகரிக்கும். மஞ்சல் விலை உயரும். நீரஸாதிபதியாக சுக்ரன் வருவதாலும் சுக்ரன் ஆட்சி பெற்றிருப்பதாலும் மீனவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். கடலில் மீன் உற்பத்தி அதிகரிக்கும். கடலில் வாழும் அதிசய உயிரினங்கள் கரையேறும். பாக்கு, தேயிலை, காபி கொட்டை உற்பத்தி அதிகரிக்கும். சந்தனம் அதிகம் விளையும்.

இந்த மன்மத வருடம் கடக லக்னத்தில் பிறப்பதால், மக்களிடையே திட்டமிடல் அதிகரிக்கும். ஜனநாயகம் தழைக்கும். சாதி, மத, சமத்துவத்தையும் பாதுகாப்பையும் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் எதிர்ப்பார்ப்பார்கள். குரு உச்சமாக இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், இந்தியாவின் வெளிநாட்டுக்குக் கடன் குறையும். மத்திய அரசு புது சலுகைகளை அறிவிக்கும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைந்த விலையில் வீடு, கலப்படமற்ற மருந்துகள் தருவதில் ஆளுபவர்கள் அக்கறைக் காட்டுவார்கள். மதுபானம், சிகரெட் ஆகியவற்றின் மீது அரசு புதிய வரிகளை விதிக்கும். லக்னாதிபதி சந்திரனை குரு பார்ப்பதால் இரண்டாம் எண்ணின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

கள்ளநோட்டை தடுக்க கடுமையான சட்டங்கள் அமலாகும். சந்திரனை சனி பார்ப்பதால் சளி தொந்தரவு, காய்ச்சல், நுரையீரல் தொற்று ஆகியவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ராகு வலுவாக இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வருடம் பிறக்கும் போது தனாதிபதி சூரியன், செவ்வாய், புதனுடன் சேர்ந்து நிற்பதால் இந்திய நாட்டின் நிதியிருப்பு அதிகரிக்கும்.

பங்குச்சந்தை சீராக இருக்கும். கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்படும். தீ விபத்துகள் அதிகமாகும். நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மானியத்தொகை வழங்கும். ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடும். திருதிய-விரையாதிபதியாக புதன் வருவதால் விளையாட்டுத் துறையில் இந்தியா பின் தங்கும். தோட்டப் பயிர்கள் நன்கு விளையும். கரும்புக்கு அரசு அதிக விலை அறிவிக்கும்.

விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அயல்நாட்டில் சென்று கல்வி கற்போரின் எண்ணிக்கை உயரும். சுக-லாபாதிபதியான சுக்ரனை சனி பார்வையிடுவதால் சிமெண்ட், மணல் இல்லாத நவீன கட்டுமான முறை கட்டிடங்கள் பிரபலமாகும். வரதட்சணைக் கொடுமை குறையும். பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்கு மேலும் கடுமையான சட்டம் நடைமுறைக்கு வரும். இந்திய மாணவர்கள் உலகளவில் புகழடைவார்கள். பஞ்சம-தசமாதிபதியாக செவ்வாய் வருவதாலும் செவ்வாய் சுக்ரனின் சாரம் பெற்றிருப்பதாலும் பூமியின் விலை உயரும்.

அடுக்குமாடி கட்டிடங்களின் விலையும் உயரும். பத்திரபதிவுத் துறை நவீனமாகும். மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவு அதிகரிக்கும். குடும்பத் தொழில், பாரம்பரிய தொழிலுக்கு மரியாதை கூடும். பாக்யாதிபதியாகவும், சஷ்டமாதிபதியாகவும் குரு வருவதால் ஆன்மீகத்துறை அதிக வளர்ச்சி அடையும். வேதங்கள் பிரபலமடையும். புதைந்திருக்கும் புதிய சிலைகள் கண்டறியப்படும். கோவில் அர்ச்சகர்களின் சம்பளம் உயரும். சினிமாத்துறை நலிவடையும். புது முகங்கள் வெற்றி பெறுவார்கள். சப்தம-அஷ்டமாதிபதியாக சனி வருவதால் நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆணைப் பிறப்பிப்பார்கள்.

காடு, வனவிலங்குகளை காப்பாற்ற புதிய சட்டங்கள் வரும். சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும். அரிதான பறவைகள், விலங்குகள் அழியும். வைகாசி, கார்த்திகை, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களில் சாலை விபத்துகள், ஆட்சி மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு, அதிக உயிரிழப்புகள், கலவரங்கள், இன மோதல்கள் ஆகியன அதிகரிக்கும்.

மந்தா என்ற பெயருடன் மகர சங்கராந்தி தேவதை பெண், ஆண் ரூபம் கலந்து பன்றி வாகனத்தில் வடக்கு திசை நோக்கி வருவதால் மழை அதிகரிக்கும். சன்னியாசிகள், நாட்டை ஆளுபவர்களின் உடல் நலம் பாதிக்கும். பரம்பரைபணக்காரர்களின் அந்தரங்கங்கள் வெளியாகும்.

இந்த மன்மத வருடத்தில் விலை வாசிகள் குறைவதுடன் ஏழை, எளிய நடுத்தர மக்களும் மேல்தட்டு மக்களுக்கு ஈடு இணையாக சுக போகங்களை அனுபவிக்க வைப்பதாகவும் அமையும்.

க.ப.வித்யாதரன்



மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:44 pm

மன்மத ஆண்டு பெயரே கிளுகிளுப்பா தான் இருக்கு அப்ப குளுகுளுன்னு இருந்தா சரி




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 2:49 pm

நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.......பார்க்கலாம்........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 4:53 pm

நம்பிக்கைதான் வாழ்வின் க்ரியாஊக்கி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:44 pm

விலை வாசிகள் குறைவதுடன்....!!!
-
சிரி சிரி சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 10, 2015 10:18 pm

எப்ப பார்த்தாலும் ஜோசியம் சொல்லிட்டே இருக்காரு..இவரு மருத்துவரா ஜோசியரான்னே தெரியலை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 10:37 pm

சரவணன் wrote:எப்ப பார்த்தாலும் ஜோசியம் சொல்லிட்டே இருக்காரு..இவரு மருத்துவரா ஜோசியரான்னே தெரியலை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜோதிடத் தொழில் தான் இன்று தமிழகத்தின் முன்னணி தொழிலாக உள்ளது!

பெண்கள் அனைவரும் கணவன் சொல்வதைக் கேட்கிறார்களோ இல்லையோ, ஜோதிடன் கூறுவதை அப்படியே கேட்பார்கள்!



மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 10, 2015 10:40 pm

சிவா wrote:
சரவணன் wrote:எப்ப பார்த்தாலும் ஜோசியம் சொல்லிட்டே இருக்காரு..இவரு மருத்துவரா ஜோசியரான்னே தெரியலை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜோதிடத் தொழில் தான் இன்று தமிழகத்தின் முன்னணி தொழிலாக உள்ளது!

பெண்கள் அனைவரும் கணவன் சொல்வதைக் கேட்கிறார்களோ இல்லையோ, ஜோதிடன் கூறுவதை அப்படியே கேட்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1129733


சூப்பர் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Apr 11, 2015 7:37 am

எங்க மாமா அங்களுக்கு எல்லா கலையும் தெரியம். சகல கலா வல்லவர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 11, 2015 8:47 am

ஜோசியன் சொல்லுவதை கேட்கிறார்கள் .
சாமியார்கள் சொல்லுவதையும் கேட்கிறார்கள் .
TV லே எதை சொன்னாலும் பார்க்குறாங்க /கேட்குறாங்க !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக