புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 6%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 12:52 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:55 pm

வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் புதன்கிழமை மனு அளித்தாா்.

இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சோ்ந்த கவிதா என்பவா் தனது குழந்தைகளுடன் புதன்கிழமை அளித்துள்ள மனு விவரம்:

எனது கணவா் ஜெயக்குமாா் (42) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். கரோனா பரவல் காரணமாக வேலையில்லாததால், அவா் நாடு திரும்புவதற்கு பல்வேறு முயற்சி மேற்கொண்டாா். இருப்பினும் அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை.

எனவே, வெளிநாட்டில் உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 30, 2021 2:08 pm

சில இதழ்கள், சில சேனல்கள் என்று முடக்கப்படாது , மாவட்ட உட்செய்திகளைத் தருவது பாராட்டத்தக்கது! தேவையானது !
நன்றி சிவா அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 30, 2021 5:51 pm

நான் ஒரு இந்தியன்.
மேலும் தமிழன்.
ஒரு மாவட்டத்திற்குள் என்னை அடக்கிக்கொள்ள விரும்பவில்லை.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 31, 2021 8:10 pm

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர், மகாலிங்கம் (வயது 42). இவர் தேவகோட்டை ரஸ்தா அருகில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

இவர் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை 3 பேர் ஒரு வேனில் பின்தொடர்ந்தனர். அங்குள்ள ஒரு கல்லறைத்தோட்டம் அருகே சென்றபோது மகாலிங்கத்தை வழிமறித்த அவர்கள் வேனிலிருந்து இறங்கினர். கண் இமைக்கும் நேரத்தில் பட்டா கத்தியால் மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடித்துடித்து இறந்தார். பின்னர் அவர்கள் அதே வேனில் தப்பிச் சென்றனர்.

2 பேர் போலீசில் சரண்

இது பற்றி தகவல் அறிந்ததும் காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கல்லல் செல்லும் வழியில் கீரணிப்பட்டி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த வேனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

இந்த நிலையில் தேவகோட்டை சிவன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் (34) சுந்தரபாண்டியன் (21) ஆகிய 2 பேர் இந்த கொலை வழக்கில் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரான மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பெண் தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலையான மகாலிங்கத்துக்கு மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:06 pm

தேவகோட்டை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


செலுகை கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் பெத்து என்ற தென்னரசு (29). இவரும், இவரது சகோதரா் காளிதாஸ் (31), உறவினா்களான சுரேஷ் (32), கணேசன் (34) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை மாலை செலுகை கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.


அப்போது அங்கு வந்த சில மா்ம நபா்கள் பெத்து என்ற தென்னரசுடன் தகராறில் ஈடுபட்டு, அவரையும், அவருடன் வந்த மற்ற 3 பேரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.


இதில் பலத்த காயமடைந்த பெத்து என்ற தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்ற மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.


இதுதொடா்பாக தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் சிவனூரைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (40), செலுகை கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் பெத்து (35) ஆகிய இருவரும் தொழில் போட்டியில் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, மணிகண்டன், பெத்து ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த தேவகோட்டை தாலுகா போலீஸாா் அவா்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.





சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:09 pm


மனைவியை கிண்டல் செய்ததால் வாலிபரை குத்தி கொன்றதாக உறவினருடன் கைதானவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் படுகொலை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள செலுகை கிராமத்தை சேர்ந்த வேலு மகன் தென்னரசு(வயது 22). பக்கத்து கிராமமான சிவனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர்கள் 2 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு ஓட்டி வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தென்னரசு, அவரது அண்ணன் காளிதாஸ், நண்பர்கள் இளங்குளம் கணேசன், குருப்புலி சுரேஷ் ஆகியோர் செலுகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் பெத்து (35) ஆகியோர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் தென்னரசு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மற்ற 3 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. உடனே அங்கிருந்து மணிகண்டன், பெத்து ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.

மனைவியை கிண்டல் செய்ததால்..

படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட தென்னரசு உடலை கைப்பற்றிய தேவகோட்டை தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிைலயில் கொலை வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய மணிகண்டன், பெத்துவை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் பெத்து அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து இருந்ததால் தென்னரசுவும், அவரது நண்பர்களும் கிண்டல் செய்து வந்தனர். சம்பவத்தன்று இதை எனது அக்காள் தட்டி கேட்டார். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த நான், உறவினர் மணிகண்டனுடன் சேர்ந்து மனைவியை கேலி செய்த ஆத்திரத்தில் தென்னரசுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டோம். தடுக்க வந்தவர்களையும் கத்தியால் தாக்கி விட்டு தப்பி விட்டோம் என்று கூறி இருந்தார். இதையடுத்து கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:11 pm

காரைக்குடியில் ரசாயனம் தடவப்பட்ட 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்குடி பகுதியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, வெள்ளைப்பன்றி போன்ற இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும். அதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் இறைச்சிக்காக அலைமோதியது.

இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் குழு மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், போலீசார் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நகராட்சி மீன் அங்காடி, கழனிவாசல், வாட்டர் டேங்க், பர்மா காலனி, சந்தைப்பேட்டை, கீழ ஊருணி, செஞ்சை, அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மீன்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக சில வியாபாரிகள் மீன்களில் ரசாயனத்தை தடவி விற்பனை செய்வது வழக்கம். இவை உடல் நலத்திற்கு மிகவும் கெடுதலானது. இதைத் தொடர்ந்து ரசாயனம் தடவிய 100 கிலோ மீனை டாக்டர் பிரபாவதி பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த மீன்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குழுவினர் நகரின் பல்வேறு இடங்களில் சோதனைகளை தொடர்ந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட 1 கிலோ பாலிதீன் பைகளை நகராட்சி சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 10, 2021 12:17 am

தேவகோட்டை அருகே பஸ் நிறுத்தத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தேவகோட்டை அருகே இஸ்திர்க்கோட்டையை சேர்ந்த மாயழகு மகன் ராஜீவ்காந்தி. இவருக்கும் வடுகனி கிராமத்தை சேர்ந்த ராதிகா (வயது30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.தற்போது ராதிகா அவரது தாய் வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ராதிகா தேவகோட்டையில் உள்ள பஸ் நிலையம் அருகில் தையல்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று தேவகோட்டை செல்ல வடுகனி பஸ் நிறுத்தத்தில் ராதிகா காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ராஜீவ்காந்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராதிகாவை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 14, 2023 8:34 am

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Img-2010


3-வது நாளாக தாய்-மகள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கனகம், அவரது மகள் வேலுமதி, இவருடைய மகன் சிறுவன் மூவரசு ஆகியோரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு நகை, வெள்ளி பொருட்கள், சேலைகளை கொள்ளையடித்து சென்றனர்.

அதில், கனகம், வேலுமதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் மூவரசன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநில முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை தொடர்ந்து தேவகோட்டையிலேயே தங்கியிருந்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு
தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட தாய், மகள் உடல்களை அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறுத்து வருகின்றனர். 3-வது நாளான நேற்றும் அவர்களது உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

மேலும், இது சம்பந்தமாக 4 நாட்டார்கள் தரப்பில் இன்று கண்ணங்கோட்டையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர்தான் உடல்களை பெற்று கொள்வார்களா என தெரியவரும்? இந்த கூட்டம் தொடர்பாக கண்ணங்கோட்டையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 14, 2023 8:36 am

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Img-2011




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக