புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிறுகதை உத்திகள் Poll_c10சிறுகதை உத்திகள் Poll_m10சிறுகதை உத்திகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை உத்திகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 25, 2013 5:40 pm

சிறுகதை உத்திகள்

ந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.

சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.

குழந்தைக்கு ஜுரம்
தி.ஜானகிராமன்


*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 6:02 pm

சரி நண்பரே

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 6:07 pm

அருமையிருக்கு

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 27, 2013 7:12 am

தி.ஜா.வின் ’சிலிர்ப்பு’ வாசக, ஆசிரிய மனங்களில் பலவித உணர்ச்சிகளை அலைமோதவிட்டுக் கண்ணீர் துளிக்கச் செய்து சிலிர்க்கச் செய்யும் கதை:

தாயை விடுமுறையில் பிரிந்த குழந்தையொன்று தந்தையின் அரவணைப்பில் தன் தாயிடம் மீண்டும் செல்கிறது. இன்னோரு ஏழைக் குழந்தை தன் தாயைப் பிரிந்து வேறோர் பணக்காரக் குடும்பத்தின் குழந்தைக்குத் தாய்மை சேவை செய்யச் செல்கிறது. இந்த இரண்டு குழந்தைகளுடனும் தொடர்பு கொண்ட பெரிய மனித உள்ளங்களின் கயமை, கையாலாகாத்தனம்...

சிறுகதை எழுத்தாள ஆர்வலர்களே, அவசியம் இந்தக் கதையையும் படியுங்கள். பின்னர் நாம் இவ்விரு கதைகளிலும் பயிலும் உத்திகளை சேர்ந்தே அலசுவோம்.

*****


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 27, 2013 12:20 pm

மீண்டும் சந்திப்போம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 27, 2013 7:04 pm

எங்கே சிறுகதை உத்திகள்?
கதைகளை நேரடியாக திரியில் பதிவிடலாமே?வசதியாக இருக்கும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Mar 28, 2013 10:40 am

பயனுள்ள திரியை தொடங்கிய அய்யாவுக்கு மிக்க நன்றி.....
தி. ஜா வின் இரு சிறுகதைகளிலும் படிக்க வாய்ப்பு அமைத்தமைக்கு மேலும் நன்றி.

என் பார்வைகள்,

குழந்தைக்கு ஜுரம்.

1950-60 களில் வந்த திரைப்படத்தை பார்த்த உணர்வு இக்கதையில் வெளிபடுகிறது. வாத்தியாரின் இயலாமை, வறுமை, ஏமாற்றும் குணம் கொண்ட பஞ்சு இவர்களின் காட்சிப் பாத்திர அமைப்பு வெகு இயல்பாய் இருந்தது. வறுமையில் இருக்கும் கௌரவம், அடுத்தவருக்கு இயல்பாய் பிரத்தன்யப்படும் சுபாவ வெளிப்பாடு இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கதை படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அதன் காட்சியும், அதில் உள்ள நாயகர்களின் வசனமுமே மூளைக்கு எட்ட வேண்டும், கதைப் படிக்கிறோம் என்பதை மறந்து காட்சியில் ஒன்ற வேண்டும், அது இக்கதையில் சிறப்பாக அமைந்துள்ளது.




சதாசிவம்
சிறுகதை உத்திகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Mar 28, 2013 10:55 am

சிலிர்ப்பு

மிக அழகான கதைப்பாங்கு, சற்று நீண்ட சிறுகதை..

காட்சி வர்ணனையும், கதாபாத்திர வர்ணனையும் அருமை, அதிலும் ரயிலில் ஏறிய பெண்மணியும், அவளுடன் வந்த சிறுமியின் உருவம் கண்ணில் தெரிவது போன்ற சிறப்பான எழுத்துகள். உயர்வாக இருப்பவர் வறுமை நிலையில் உள்ள குழந்தைகளை பிழிந்து வேலை வாங்கும் சமுதாய அமைப்பையும், பெண் பிள்ளை என்றால் அவளுக்கு படிப்பதற்கு, பொறுப்பாய் இருப்பதே சரி என்ற அந்தக் கால சமுக கட்டமைப்பும் இக்கதையில் அழகாக வெளிப்பட்டுள்ளது. உள்ளொன்று வைத்து புறமொன்றுமாய் திரியும் மாமா கதாபாத்திரம், சிறுவனின் ஆசை, பேச்சு இயல்பாய் உள்ளது.

கண்களை கசியச் செய்யும் கருத்து மிக்க கதை.

ஒரு சாராரின் மொழிநடையும், பல வடமொழிச் சொற்களும் இரு கதைகளிலும் வழிந்தோடுகிறது.






சதாசிவம்
சிறுகதை உத்திகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 28, 2013 5:33 pm

சிறுகதை யென்பது

சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன. சொந்த அனுபவங்களை ’டயரி’யில் பதிப்பதோர் கதை. பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை. குழந்தைகள் பேசுவதே ஒரு கதை. இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற சமாசாரங்களில் கதைகளைப் பெரிதும் காணலாம். இது போன்ற சின்னக் கதைகளுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு சிறுகதையில் முக்கியமாக மூன்று கூறுகள் இருக்கவேண்டும்: conflict, crisis, resolution (epiphany) என்று இவற்றை ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு) என்று சொல்லலாம். மேற்சொன்ன சின்னக் கதை ரகங்களில் இந்த மூன்றும் இருந்தால் அவை சிறுகதை வடிவும் பெறக்கூடும்.

முரண்பாடு

முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை: கதையின் முக்கிய பாத்திரம் ஒன்றை ஆவலுடன் விழைந்து அது நிகழ நிகழலிருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதுதான். அந்த விழைவு வன்முறையைச் சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. விழைவின் திண்மையே முக்கியம்.

முரண்பாடுகளைப் பொதுவாக இப்படிப் பாகுபடுத்தலாம்:

மனிதன்-மனிதன் முரண்பாடு
மனிதன்-இயற்கை முரண்பாடு
மனிதன்-கடவுள் முரண்பாடு
மனிதன் தனக்குள் முரண்பாடு
மனிதன்-சமூகம் முரண்பாடு
மனிதன்-இயந்திரம் முரண்பாடு

முரண்பாடு கதையின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது. கதையோட்டத்தில் அது விரிக்கப்படுகிறது. ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது. கடைசியில் தீர்வு காணப்படுகிறது.

உச்ச நெருக்கடி

முரண்பாட்டைத் தீர்க்கக் கதையின் முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செய்யும் காரியங்கள் போன்றவை அதை ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் செலுத்துகின்றன. இந்த உச்ச நெருக்கடி வெளியிலிருந்து வருவதாக இருக்கலாம், அல்லது மனதில் நிகழ்வதாக இருக்கலாம். எப்படியாயினும் இது இயல்பாக நிகழ வேண்டும், கதாசிரியர் திணித்ததாக இருக்கக் கூடாது. இது கதாபாத்திரங்களின் ஒருவருக்கொருவர் உடாடிச் செயல்படுவதன் விளைவாக நிகழ வேண்டும். சில சமயங்களில் இது இயற்கையால் கடவுளால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம், ஆனால் அப்போதும் அது இயல்பாக நிகழ வேண்டும். இயல்பாக என்றால் இப்படி நிகழ்ந்தது நியாயமே அல்லது தவிர்க்க முடியாததே என்ற எண்ணத்தை, உணர்வை கதையின் முக்கிய பாத்திரத்திடமும் வாசகன் மனதிலும் தோன்றச் செய்வது.

இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு)

இறுதித் தீர்வு கதையின் முக்கிய பாத்திரம் விழைந்தது நிகழ்வதாக இருக்கலாம். நிகழாமல் போவதாக இருக்கலாம். நிகழ்ந்ததன் விளைவுகளாக இருக்கலாம். நிகழாததன் காரணத்தை முக்கிய பாத்திரம் புரிந்துகொள்வதால் அதன் மனதில் தங்கும் இறுதியான புரிதல் உணர்ச்சியாக இருக்கலாம்.

இன்றைய கதைகளில் பல சமயம் இறுதி தீர்வினை வாசகனிடமே விட்டுவிடுவது உண்டு. அப்படி வரும்போது அந்தப் புரிதல் உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

முதலில் ஏற்பட்ட முரண்பாடு ஓர் உச்ச நெருக்கடியை அடைந்ததும் தீர்வாக ஒரு மாற்றம் கதையில் நிகழவேண்டும், இது முக்கியம். அல்லது இந்த மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு முடிவு அல்லது அதற்கான வாய்ப்பு கதையின் முக்கிய பாத்திரத்துக்கோ வாசகனுக்கோ பிரத்யட்சமாக வேண்டும்.

எனவே, சிறுகதை திடீரென்று நடுவில் தொடங்கி, ஒரு முரண்பாட்டையும் அதன் விளைவான அழுத்த உணர்வுகளையும் ஏற்படுத்தி விரைவாக அது ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் சென்று பின்னர் அதற்கொரு தீர்வினை (அல்லது தீர்வுக்கான வாய்ப்பினை) ஏற்படுத்தி முடிகிறது.

இந்த மூன்று கூறுகளையும் சிறுகதையில் அமைக்க உதவும் உத்திகள் பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இடைப்பட்ட நேரத்தில், இவற்றை தி.ஜா.வின் ’குழந்தைக்கு ஜுரம்’, ’சிலிர்ப்பு’ கதைகளில் அடையாளம் கண்டு இந்த இழையில் பதிய ஆர்வலர்கள் முனையலாம்.

மேலே உள்ள சுட்டிகளில் கதைகளைப் படிக்க இயலாவிடில், இந்தச் சுட்டிகள் உதவும்:

’குழந்தைக்கு ஜுரம்’


’சிலிர்ப்பு’


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 28, 2013 5:55 pm

வணக்கம் திரு.சதாசிவம்.

தி.ஜா.வின் இரு கதைகளையும் நீங்கள் அலசிய விதம் அருமை. இறுதியாக.

> ஒரு சாராரின் மொழிநடையும், பல வடமொழிச் சொற்களும் இரு கதைகளிலும் வழிந்தோடுகிறது.

என்று எழுதியிருக்கிறீர்கள். தி.ஜா. அந்த ’ஒரு சாரார்’ வகையைச் சேர்ந்தவர் என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே. கதைமாந்தர்களையும் கதையின் சூழலையும் பார்க்கும் போது இந்த நடையும் ஒரு வட்டாரத் தமிழாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து.

அன்புடன்,
ரமணி

*****


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக