புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2015 4:30 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க, அமெரிக்க ஒருநாளைக்கு ரூ. 58 கோடி செலவுசெய்கிறது

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுஉள்ள அமெரிக்கா இதற்காக ஒருநாளைக்கு ரூ. 58 கோடிக்கு மேல் செலவுசெய்கிறது என்று தெரியவந்து உள்ளது.

சிரியாவிலும், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒட்டுமொத்த உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து தீவிரவாதத்தில் நம்பிக்கை உடைய இளைஞர்கள், சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அந்த இயக்கம் இன்னும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் பிற நாடுகளில் இருந்து சிரியாவுக்கு சென்று சண்டையிட முயற்சித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. அவற்றில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 400 பேரும் அடங்குவர். அமெரிக்காவில் இருந்தும் சுமார் 150 பேர் சிரியா செல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட, சிரியாவில் வெளிநாட்டு தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க வேண்டும். துருக்கி–சிரியா எல்லையை தீவிரமாக கண்காணித்தால் வெளிநாட்டு தீவிரவாதிகள் பெரும்பாலோர் சிரியாவினுள் செல்வதை தடுத்து விட முடியும். தடுக்க வேண்டும். என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இரு நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுஉள்ள அமெரிக்கா இதற்காக ஒருநாளைக்கு ரூ. 58 கோடிக்கு மேல் செலவுசெய்கிறது என்று தெரியவந்து உள்ளது. இதுவரையில் சுமார் 17 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு உள்ளது அமெரிக்கா தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு முகமை பெண்டகன் வெளியிட்டு உள்ளதகவல்கள் அமெரிக்கா செலவுசெய்த தொகையை காட்டி உள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு செய்யப்பட்ட செலவில் 3-ல் 2 பங்கு அமெரிக்க விமானப்படை செலவுக்கான பில் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் செலவு செய்வதற்கு எதிரான பரிந்துரை அமெரிக்க காங்கிரஸ் நிராகரித்து விட்டது. அமெரிக்கா பாராளுமன்றம் பிரநிதித்துவம் 579 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாதுகாப்புக்கு கட்டண ரசீதுக்கு அனுமதி வழங்கிஉள்ளது.

ஈராக் நாட்டிற்கு இந்த வாரத்தில் மேலும் 450 ராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபடும் அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையானது 3,500 ஆக உயரும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 7:51 pm

நினைக்க வாசிக்க மனம் பதைபதைக்கிறது



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 26, 2015 12:43 am

மொசூல் நகரில் விபசாரத்தில் ஈடுபட்ட வாலிபர் கல் எறிந்து கொலை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிக ஆக்கிரமித்து இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். அங்கு சிறிய குற்ரங்கலுக்கு கூட கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஈராக்கின் மொசூல் நகரில் திருமனமான ஒருவர் வேறு பெண்ணுடன் கள்ளகாதல் கொண்டு இருந்ததால் அவர் வீதியில் வைத்து கல் எறிந்து கொல்லப்பட்டார்.

ஷரியத் கோர்ட் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அந்த நபர் நகரின் மைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டார்.அங்கு அவர் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர் மீது பொதுமக்கள் கல் எறிந்து கொல்ல கேட்டு கொள்ளப்பட்டது.

பின்னர் அவ்வாறே அவர் கல் எறிந்து கொல்லபட்டு அந்த படம் தீவிரவாதிகளின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதே நாள் ஓரின சேர்க்கையாளர் ஒருவர் மாடிக்கட்டிடத்தில் இருந்து தூக்கி எறிந்து கொல்லபட்டார்.

2014 ஜூன் மாதம் ஈராக்கின் 2 வது மிகப்பெரிய நகரான மொசூல் நகரை பிடித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் ஷரியத் சட்டத்தை அங்கு கடைபிடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 26, 2015 12:44 am

கொலை செய்வது எப்படி? 3 வயது சிறுவனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பயற்சி

சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை பிடித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ். அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமீப காலமாக அவர்கள் சிறுவர்களை அதிகமாக வன்முறை செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிறுவர்கள் போர் பயிற்சி எடுக்கும் வீடியோவை அவ்வப்பொழுது வெளியிட்டுவந்த அவர்கள் கடந்த ஜூலை மாதம் சிறுவன் ஒருவன் கைதியின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டனர்.

இது உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வீடியோவில் 3 வயது சிறுவன் தீவிரவாதிகள் சீருடையில் தன்னிடம் இருக்கும் கத்தியால் டெட்டி பீர் எனப்படும் கரடி பொம்மை ஒன்றின் தலையை சிரித்தப்படியே துண்டிக்கிறான்.

பின்னர் அந்த பொம்மையை முற்றிலும் சிதைக்க முயற்சி செய்வது பதிவாகியுள்ளது. மேலும் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பின் கொடி இடம் பெற்றுள்ளது. 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த சிரியாவை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 26, 2015 12:47 am

சிரியாவில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட புகைப்படம் வெளியாகியது

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 201508250044096293_Syria-Blow-up-the-2thousandyearold-temple_SECVPF

சிரியாவில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ரோமானியர் கால கோவிலை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகிஉள்ளது.

சிரியா, ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்குள்ள பல முக்கிய நகரங்களை தங்களுடைய பிடிக்குள் கொண்டு வந்து உள்ளனர். கடந்த மே மாதம் சிரியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான அல்மைராவை அரசு படைகளிடம் இருந்து அவர்கள் கைப்பற்றினர். பாலைவனத்தின் முத்து என்று அழைக்கப்படும் இந்த நகரில் ரோமானியர்கள் காலத்தில், கி.பி. 17–ம் ஆண்டில் கட்டப்பட்ட பால் ஷாமின் என்ற புராதன சிறப்பு மிக்க கோவிலும் உள்ளது.

இந்த கோவிலின் பாதுகாப்பு தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 82 வயது காலித் ஆசாத் என்பவரை முதியவர் என்று கூட கருதாமல் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். இதனால் இந்த கோவிலை எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

கடந்த ஜூன் மாதம் பல்மைரா நகரின் பழம்பெரும் 2 கோவில்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்து இருந்தனர். அப்போது அல்மைராவில் இருந்த ரோமானியர் கால நினைவுச் சின்னங்கள் பலவற்றை தகர்த்தனர். இதனால் பால் ஷமின் கோவிலையும் அவர்கள் தகர்க்கலாம் என்று கருதப்பட்டது.

அதுபோலவே நேற்று முன்தினம் பால் ஷமின் கோவிலை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதில் அந்த கோவில் அடியோடு தரைமட்டமானது. இதுபற்றி சிரியாவின் பழம்பொருள் பாதுகாப்புத் துறையின் தலைவர் மமூன் அப்துல்கரீம் கூறுகையில், ‘‘என் கண்கள் முன்பாகவே பல்மைரா நகரம் அழிக்கப்பட்டு வருகிறது’’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

கோவிலை தகர்த்த பின்பு, அந்த கோவிலுக்கு அடியில் தங்கப் புதையல் இருக்கலாம் என்று கருதி தீவிரவாதிகள் அந்த இடத்தை அகழ்ந்தெடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். தவிர, சட்டவிரோதமான முறையில் அப்பகுதியில் உள்ள பொக்கிஷங்களை அகழ்ந்தெடுப்பதற்கு உரிமம் வழங்கும் பணியையும் தொடங்கி இருக்கின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைரா நகரை கைப்பற்றுவதற்கு சிலமாதங்களுக்கு முன்பாகவே, அந்த நகரின் புராதன கோவில்களில் இருந்த விலைமதிப்பு மிகுந்த அனைத்து சிலைகளையும் சிரியா அரசாங்கம் அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. இதனால் அந்த சிலைகள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்காமல் தப்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் தகர்க்கப்பட்டது தொடர்பான புகைப்படம் வெளியாகிஉள்ளது. ஐ.நா.வால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பால்மைரா அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 2:35 pm

கைதிகளை கொதிக்கும் தாரில் போட்டு கொலை செய்யும் ஐ.எஸ் அமைப்பினர்

ஈராக் சிரியாவின் சிலபகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐஎஸ் அமைப்பினர் தங்களிடம் பிடிபடும் கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்தனர். தற்போது கொதிக்கும் தாரில் கைதிகளை தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் மொசூல் நகரில் கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் 6 கைதிகளை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர். அல் ஷோர்டா என்ற இடத்தில் இந்தக் கொடுமையை ஐஎஸ் அரங்கேற்றி உள்ளது. மக்களின் மனதில் பயத்தை உருவாக்க அவர்கள் கண் முன் இந்தக் கொடுமையை ஐஎஸ் அமைப்பினர் அரங்கேற்றி வருகின்றனர்.

ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை இதுபோன்று தண்டனை வழங்குகின்றனர். இதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசிட்டில் தூக்கிப் போட்டு 25 கைதிகளை கொன்று இருக்கும் மனிதாபிமானமற்ற செயலும் நடந்துள்ளது. இவர்கள் அனைவரையும் ஒரே கயிற்றில் கட்டி ஆசிட்டில் தூக்கிப் போடப்பட்டுள்ளனர்



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 5:10 pm

ஐ.எஸ் அமைப்பினர் மீது போர்விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்?

மாஸ்கோ,சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில உலக வல்லரசுகள் தாக்குதல் முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில், ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரானில் உள்ள விமான தளத்தில் இருந்து ரஷ்யாவின் 16 Tu-22M3, su-34 உள்ளிட்ட போர் விமானங்களை கிளம்பிச்சென்றது.இந்த விமானமானது, ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் ஜபத் அல் நுசாரா பயங்கரவாத குழுவினர் உள்ள எலோப்பா மாகாணத்தில் முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக