புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_m10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_m10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_m10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_m10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_m10பொறியாளன்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியாளன்: திரை விமர்சனம்


   
   

'பொறியாளன்' திரைப்படத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பீடு! [2Vote ]

  • ஐந்து

    00%
  • நான்கு

    00%
  • மூன்று

    150%
  • இரண்டு

    150%
  • ஒன்று

    00%

You are not connected. Please login or register

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 9 Sep 2014 - 4:18



உதயம் என்.எச்.4 என்ற காதல் த்ரில்லர் படம் தந்த மணிமாறன் இதில் ரியல் எஸ்டேட் மோசடி - கந்துவட்டிக் கொடுமை இரண்டையும் இணைத்துக் கதைக்களமாக்கியிருக்கிறார்.

சரவணன் (ஹரீஷ் கல்யாண்) ஒரு சிவில் இன்ஜினீயர். கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அவன் நேர்மையாக இருப்பதற்காகவே சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் தானே கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்க முடிவெடுக்கிறான். அதற்குப் பணம் தேவை. பணத்தில் ஒரு பகுதியை (2 கோடி ரூபாய்) அவனது நண்பன் பிரபு புரட்டிக் கொடுக்கிறான். அது பிரபுவின் பணமல்ல. அவன் வேலை செய்யும் கொடூரமான கந்துவட்டி தாதா சுந்தரின் (அச்சுத குமார்) பணம்.

சுந்தர் ஜெயிலுக்குப் போன சமயத்தில் அவனது பணத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு, அவன் ஜாமினில் வெளியே வருவதற்குள் வைத்துவிடலாம் என்பதுதிட்டம். ஆனால் சரவணன், பிரச்சினைக்குரிய நிலத்தை வாங்கியதால் 2 கோடியைப் பறிகொடுக்கிறான். ஜாமின் பெற்று வெளியே வரும் சுந்தரிடம் பிரபு மாட்டிக்கொள்கிறான். தாதாவிடம் பிணைக் கைதியாக இருக்கும் நண்பனைக் காப்பாற்றுவதற்காக, பணத்தை மோசடி செய்த புரோக்கரை தேடிச் செல்கிறான் சரவணன். பணம் கிடைத்ததா, நண்பனை மீட்டானா என்பது மீதிக்கதை. இதற்கு நடுவில் கொஞ்சம் காதல் கதை.

அரசு பதிவுத் துறையில் இருக்கும் ஓட்டைகளால் ஒரே இடம் பலருக்கு விற்கப்படுவதுதான் திரைக்கதையின் மையம். ஆனால், அதை வலுவாகச் சித்தரிக்க அழுத்தமான சம்பவங்கள் இல்லை. பணத்தைக் கொடுத்து ஏமாந்த கதாநாயகன், ஏமாற்றியவனைத் தேடி அலைவதிலேயே பாதிக் காட்சிகள் நகர்கின்றன. இது பார்வையாளர்களை பொறுமையிழக்க வைத்துவிடுகிறது.

சென்னையில் நிலம் வாங்குவது என்கிற விவகாரத்தின் பின்னால் நிலத்தின் உரிமையாளர், வாங்குபவர், இடைத்தரகர்கள், கடன்கொடுக்கும் வங்கிகள், பதிவுத் துறையினர் எனப் பலர் இருக்கிறார்கள். பல தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் இத்தகைய மோசடிகளை தெரிந்தே ஆதரிக்கிறார்கள் என்பதைச் சின்னச் சின்னக் காட்சிகள் வழியாகச் சொல்கிறார்கள். எதிலும் அழுத்தம் இல்லை. முதல் பாதியில் காதல், இரண்டாம் பாதியில் பிரச்சினை என்று பிரித்துக் கொண்ட திரைக்கதையின் பின் பாதிஇழுவை, படத்தைத் தள்ளாட வைத்துவிடுகிறது. மோசடியைச் சொல்ல ஆசைப்பட்டால் போதாது. நம்பகத்தன்மை கொண்ட அழுத்தமான சம்பவங்கள் மூலம் சொல்ல வேண்டும். மணிமாறன் இதில் தவறியிருக்கிறார்.

ஹீரோயிஸத்தைத் தவிர்த்திருப்பது, வில்லனை தவிர மற்றவர்களைப் பெருமளவில் இயல்பாகச் சித்தரித்துள்ளவிதம் ஆகியவை பார்வையாளர்களைப் படத்துக்கு நெருக்கமாக்குகின்றன. ஆனால் முழுமையாகப் படத்துடன் ஒன்றவைக்கும் மாயாஜாலம் கடைசிவரை நடக்கவே இல்லை. ஹரீஷின் முகம் பார்த்தவுடன் மனதில் பதிகிறது. நடுத்தர வர்க்க இளைஞனாக இயல்பாக நடிக்க முயன்று வெல்கிறார். பணத்தை இழந்துவிட்டோம் என்று தெரியவரும் காட்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் நடிப்பைக் கொடுத்திருக்கலாம்.

சரவணணின் காதலியாக வரும் ஆனந்தி (ரக் ஷிதா), பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் கவர்கிறார். கவுரவமான தோற்றம் கொண்ட ரவுடியாக இருக்கிறார் அச்சுத குமார். அதிரவைக்கும் குரலில் பேசாமலேயே பயமுறுத்துகிறார். வசனங்கள் கவனிக்கவைக்கின்றன. ‘‘அப்பா, ஜெயில்ல உங்கள அடிச்சாங்களா…ப்பா?’’ என மகள் குழந்தைத் தனமாக கேட்கும்போது ‘‘பணம் இல்லாதவங்களைத்தான் ஜெயில்ல அடிப்பாங்கடா..’’ என்று சொல்லும் வில்லன், ‘‘நிறைய வெச்சிருக்கவனா பார்த்துகடன் கொடுங்கடா. ஒண்ணும் இல்லாதவன்கிட்ட எப்படி வசூலிக்கிறது?’’ என்கிறார். வட்டித் தொழில் வருமானத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் கதாபாத்திரம். வசனங்களில் வலுவாக நின்றாலும் பாத்திரப் படைப்பில் பழமையின் துரு ஏறியிருப்பது ஏமாற்றம். இதற்குப் பிராயச்சித்தமாக ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சாஸ்திரியின் பச்சோந்தித்தன சித்தரிப்பு கச்சிதம்.

திரைக்கதை ஏற்கெனவே இழுவையாக இருக்க, பாடல்களை அங்கங்கே சொருகியிருப்பது இன்னும் இம்சை. ஆனாலும் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் கவர்கிறார் எம்.எஸ்.ஜோன்ஸ். வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.

தி இந்து!



பொறியாளன்: திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu 11 Sep 2014 - 12:46

பொறியாளன் - விகடன் சினிமா விமர்சனம்
பொறியாளன்: திரை விமர்சனம் P96a
ரியல் எஸ்டேட் புரோக்கரால் ஏமாற்றப்படும் ஹீரோ, சிக்கலில் இருந்து மீள வகுக்கும் 'பொறியாளன்’ வியூகமே... படம்!

சிவில் இன்ஜினீயர் ஹரீஷ் கல்யாண், கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்கிறார். முதல் புராஜெக்ட்டுக்கு இரண்டு கோடி தேவைப்படுகிறது. கந்துவட்டி தாதா அச்சுதகுமார் சிறையில் இருக்கும் சமயம், அவருடைய பணம் ஹரீஷ் கைக்கு வருகிறது. ஆனால், ஹரீஷ் மோசடி புரோக்கரிடம் பணத்தைப் பறிகொடுக்க, தாதா அச்சுதகுமாரிடம் சிக்கிய ஹரிஷின் நிலை என்ன? திக்திக் திருப்பங்களுக்குப் பதில் சொல்கிறது பின்பாதி!

மோசடி நிலப் பதிவுகள், கந்துவட்டி கொலைகள்... என ரியல் எஸ்டேட் உலகின் கறுப்புப் பக்கங்களை பக்கா சினிமா ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தாணுகுமார். சிவில் இன்ஜினீயரிங் கனவு, ஏரியா ஏஞ்சலுடன் காதல், நிறுவன உரிமையாளருடன் பஞ்சாயத்து... என நிதானமாக நகரும் கதை, கந்துவட்டி தாதா அத்தியாயம் தொட்டதும் கியர் தட்டுகிறது. 'பணம் போச்சு... தாதா வந்துட்டான்... வீட்டுப் பெண்களை நோட்டம் விட்டுப் போயிருக்கான்’ என்று எல்லாம் பி.பி ஏற்றுகிறார்கள். 'அடடா...’ என செமத்தியான ஆக்ஷன் 'சமோசா’ எதிர்பார்த்தால், ஹீரோ எல்லோரையும் நம்பி, 'காமாசோமா’ என்று சுற்றிக்கொண்டே இருக்கிறார்.

' 'சென்னை’னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்... எல்.ஐ.சி-தானே? அப்படி ஒரு ஊருக்கே அடையாளம் கொடுக்கிறவங்க சிவில் இன்ஜினீயர்தானே!’ என்று தன் 'சொற்ப சம்பளம்’ வேலை குறித்த பெருமிதமும், காதலியை 'அண்ணனாக’ அதட்டி பின்னர் பிரியம் பொழிவதும், ஏமாந்த பிறகு கலங்கி பின்னர் வெறிகொண்டு அலைவதுமாக... இயல்பாக ஈர்க்கிறார் ஹரீஷ் கல்யாண். அறிமுக நாயகி ரக்ஷிதாவுக்கு சின்ன கேரக்டர். ஆனால், அத்தனை பெரிய கண்களால் லைக்ஸ் குவிக்கிறார். பணத்தைத் திருப்பிக்கொடுக்க அவகாசம் கேட்டு வரும் ஹரீஷையும் அஜய்ராஜையும் பார்த்து, இருக்கையில் இருந்து படாரென எழுந்து உதற வைக்கும் இடத்தில்... முகம்கூடக் காட்டாமல் பயமுறுத்துகிறார் வில்லன் அச்சுதகுமார்.

'ஹீரோ வாங்கியது மோசடி நிலம்’ என்ற ஒரு வரியை நிலைநிறுத்த மிக நீளமாகப் பயணிக்கிறது முன்பாதி. இன்ஜினீயரிங் பட்டதாரி, கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமிக்க ஹீரோ, வாங்கும் நிலத்துக்கு வில்லங்கம் போட்டுப் பார்க்க மாட்டாரா, மோசடிப் பேர்வழி சென்ற விலாசத்தைக் கொடுப்பதோடு போலீஸ் ஒதுங்கிக்கொள்ளுமா..., எனப் பின்பாதி முழுக்க கேள்விச் செங்கல்களை அடுக்குகிறது திரைக்கதை. அதிலும் 'சைவ பட்சினி’ புரோக்கரை கோவா வரை துரத்திச் செல்வது, அவர் பீர் பாட்டிலுக்குப் பயந்து உண்மை சொல்வது எல்லாம்... ஜுஜுலிப்பா!

அடுத்து என்ன நடக்குமோ என்ற டென்ஷனை ஏற்றும் 'பொறியாளன்’, அதைத் தீர்க்கும் 'ஸ்கெட்ச்களிலும்’ பொறிபறக்க வைத்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக