புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_m10அமர காவியம்: திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமர காவியம்: திரை விமர்சனம்


   
   

'அமர காவியம்' திரைப்படத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பீடு! [3Vote ]

  • ஐந்து

    00%
  • நான்கு

    133%
  • மூன்று

    267%
  • இரண்டு

    00%
  • ஒன்று

    00%

You are not connected. Please login or register

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 5:20 pm

நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம்.. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.. என எதிர்பார்ப்புகளுடனும், ‘படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர்’ என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமர காவியம். புதிய இயக்குநர் ஜீவா சங்கரின் இந்த படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா?

பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா.

காதல் பறவைகளின் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிறது. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை.

படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்துக் காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன.

நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு நாயகன் தீ வைக்கிறான். நெருப்பு பற்றியெரியும்போது அதே வீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுகிறார்கள். இப்படிப் பல காட்சிகள் நம்பகத்தன்மை பற்றிய கவலையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை.

கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிஜமாக நடந்ததா, இல்லையா என்பது படத்துக்கு முக்கியம் இல்லை. படத்தில் அது வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது.

கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை.

சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். எப்போதும் ஒரே விதமான இறுக்கத்துடன் முகத்தைக் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.

மைனா, கும்கி போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமய்யாவை உப்பு இல்லாத ஊறுகாய்போல பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. ‘ஏதேதோ எண்ணம் வந்து’ பாடல் மனதில் நிற்கிறது.

முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார். இருவரும் ஒருவரே என்பதுதான் நகைமுரண்.

‘காவியம்’ என்ற பெயரைத் தாங்கி வந்திருப்பதாலோ என்னவோ.. நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக்கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது ‘அமர காவியம்’.




அமர காவியம்: திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 09, 2014 4:08 am

அமர காவியம்: திரை விமர்சனம் 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 20/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 1:47 am

அமர காவியம் - விகடன் சினிமா விமர்சனம்
அமர காவியம்: திரை விமர்சனம் P98a
காதலும், காதல் நிமித்தமும், பிரிதலும் அதன் நிமித்தம் உயிர் துறத்தலுமான 'எய்ட்டீஸ்’ கால காதல் காவியம்!

நண்பனின் காதலைச் சொல்லப்போன சந்தர்ப்பத்தில் மியா (அறிமுகம்) மீது காதல் கொள்கிறார் சத்யா. பலப்பல காரணங்கள் சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள் பெற்றோர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் சத்யா. காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது, கோபதாபங்கள் வெடிக்கின்றன. அடுத்தடுத்து சத்யா எடுக்கும் அதிர்ச்சி முடிவுகளே... படம்!

தகவல் தொடர்பே இல்லாத 80-களில், அன்றைய காதலர்களின் ரகசியக் கொண்டாட்டங்களையும், பிரிவு வேதனைகளையும் மென்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். காதலுக்கு நண்பர்கள், பெற்றோர் மட்டுமே எதிரி அல்ல... தகவல் தொடர்பின்மை யும்தான் என்பதைச் சொன்ன விதம் கிளாஸ்.

'ஹீரோ’ சத்யா... அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்கும்போது எத்தனை சந்தோஷ மின்னல்கள் முகத்தில் தெறிக்க வேண்டும்!? சின்ன சிரிப்பைத் தவிர, மற்ற உணர்வுகள் வருவேனா என்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் ஃபிலிம் சத்யா!

நாயகி மியாவுக்கு படம் அட்டகாச கிரீட்டிங் கார்டு! குறும்பு கொப்பளிக்கும் கண்கள், க்யூட் ஸ்வீட் ரியாக்ஷன்கள் எனக் கவிதை வாசிக்குது பொண்ணு.

மெதுமெதுவாக நகரும் காட்சிகள், திருப்பமே இல்லாத திரைக்கதை எனப் படம் முற்பாதியில் ஸ்லோமோஷன் சினிமா. காதலர்கள் இடையிலான சிக்கலுக்கு அவர்களின் 'பொசஸிவ்’ குணமும்கூட காரணமாக இருக்கலாம் என்பதை பிற்பாதி வசனங்களிலும் காட்சிகளிலும் இயல்பாக விவரித்திருக்கிறார்கள். 'அவன் உன்னைக் காதலிக்கிறான்னா, நீ ஏன் நாம காதலிக்கிறதை இன்னும் அவன்கிட்ட சொல்லலை? நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்துட்டு நீயும் காதலிக்கிறேனு தப்பாப் புரிஞ்சுப்பான்ல’ என சத்யா, மியாவிடம் குமுறும் இடம் ஓர் உதாரணம்.

இசைக்கருவிகளை காதல் கருவிகளாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'தாகம் தீர...’, 'மௌனம் பேசும்...’ பாடல்களிலும் படம் நெடுகிலும் பின்னணி இசையில் அத்தனை காதல். ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் ஊட்டி ஜில்லிப்பு... நம் விழிகளில்!

80-களின் காதல் கதையைக் களமாகக் கொண்டவர்கள், இன்னும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளைப் பிடித்திருக்க வேண்டாமா? எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான்? அமரகாவியம் என்று டைட்டில் வைத்ததற்காகவே, அப்படி ஒரு திகீர் கிளைமாக்ஸ்போல!

'எய்ட்டீஸ்’ இளைஞர்களுக்கு படம் 'அமரகாவியமா’க இருக்கலாம்!
அமர காவியம்: திரை விமர்சனம் P98
- விகடன் விமர்சனக் குழு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக