புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
251 Posts - 52%
heezulia
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முட்டை! - சிறுவர்கதை Poll_c10முட்டை! - சிறுவர்கதை Poll_m10முட்டை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை! - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:21 pm


தோப்பில் ஏராளமானத் தென்னை மரங்கள் காணப்பட்டன. வேலியோரத்தில் உயரமாக வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்றில், குருவி கூடு கட்டி வசித்து வந்தது.

வேலியோரப் பகுதியில் வசித்து வந்த ஓணான் அந்த தென்னை மரத்தின் மீது ஏறியது. மரத்தின் உச்சியில் இருந்த குருவிக்கூட்டை வந்தடைந்தது.

கூட்டில் முட்டையுடன் இருந்த குருவியானது ஓணானைக் கண்டதும் திடுக்கிட்டது.

""குருவியே, நீ மரியாதையாகக் கூட்டை விட்டுப் பறந்து சென்று விடு. இல்லையென்றால் நீ இட்டு வைத்திருக்கும் முட்டை களை உடைத்துக் குடிப்பதோடு மட்டுமல்லாமல், உன்னையும் சேர்த்துக் கடித்துக் குதறிவிடுவேன்,'' என்றது ஓணான்.

அந்தக் கொடூரமான ஓணானைக் கண்டதும் குருவிக்குப் பயம் ஏற்பட்டது. அது மிகவும் பணிவோடு ஓணானை நோக்கியது.

""ஓணானே, என்னை ஒன்றும் செய்து விடாதே! உன்னோடு சண்டையிட என்னால் முடியாது. நீ என் முட்டைகளை குடிப்பதையும் என்னால் தடுக்க முடியாது. அதனால் உன்னிடம் நான் ஒரு நிபந்தனையைக் கூறுகிறேன். அந்த நிபந்தனைக்கு நீ கட்டுப் படுவாய் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியுடையவனாக இருப்பேன்,'' என்றது குருவி.

""குருவியே, நீ என்ன நிபந்தனை கூறுகிறாய்?'' என்று கோபத்துடன் கேட்டது ஓணான்.

""ஓணானே, நீ என் கூட்டில் இருக்கும் முட்டைகளைத் தாராளமாகக் குடித்துச் செல்லலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு முட்டையைத்தான் குடிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு இடுகிற நிபந்தனை,'' என்றது குருவி.

ஓணான் சிறிது நேரம் யோசனை செய்தது.

"இந்தக் குருவி நம்மை தினமும் ஒரு முட்டையை குடிக்கச் சொல்கிறதே. சரி... நமக்குக் கிடைத்த வரைக்கும் லாபம்தான். நாம் அது கூறியபடி தினமும் ஒரு முட்டையைக் குடிப்போம்,'' என்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டது.

""குருவியே, உன்னுடைய நிபந்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். தினமும் கூட்டில் இருந்து ஒரு முட்டையினை நான் குடித்துக் கொள்கிறேன். ஆனால், நீயோ வேறு நிபந்தனையை என்னிடம் போடக்கூடாது,'' என்றது ஓணான்.

""ஓணானே, நான் உன்னிடம் ஒரு தடவை மட்டும்தான் நிபந்தனையிடுவேன். மற்றபடி உன்னிடம் நான் அடிக்கடி நிபந்தனையைப் போட்டுக் கொண்டிருக்க மாட்டேன்,'' என்றது குருவி.

அதனைக் கேட்ட ஓணான் மகிழ்ச்சியோடு குருவிக் கூட்டிலிருந்து ஒரு முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது.

குருவியோ அந்தக் காட்சியைப் பார்த்தபடி கவலையுடன் இருந்தது. அன்று முதல் ஓணான் தினமும் தென்னை மரத்திற்குத் தவறாமல் வந்துவிடும்.

குருவிக்கூட்டில் இருந்து ஒரு முட்டையைக் குடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தது. "நம் முட்டையினை நாள் தோறும் ஓணானிடம் இழந்து வருகிறோமே' என்று கவலை அடைந்தது குருவி.

ஒருநாள் தோப்புக்காரர் அந்த தென்னந் தோப்பில் தேங்காய்களைப் பறிக்க ஏற்பாடு செய்தார். தேங்காய் வெட்டுக்காரர் ஒருவர் வேகமாகக் குருவி கூடு கட்டி வசித்து வந்த தென்னை மரத்தில் ஏறினார்.

கூட்டில் இருந்த குருவியோ அதனைக் கண்டு பயத்தால் நடுங்கியது.

""ஓணானால்தான் நமக்குத் தினமும் ஆபத்து வந்து கொண்டிருந்தது. இப்போது இந்தத் தேங்காய் வெட்டுக்காரரால் ஒரேடியாக நமக்கு ஆபத்து வரப்போகிறதே! நாம் என்ன செய்வது?'' என்று கவலையடைந்தது குருவி.

தேங்காய் வெட்டுக்காரரும் தென்னை மரத்தின் உச்சியை அடைந்துவிட்டார். குருவிக் கூட்டை ஏறிட்டுப் பார்த்தார். கூட்டின் உள்ளே குருவி கவலையுடன் இருப்பதைப் பார்த்ததும் அதன்மீது இரக்கம் கொண்டார்.

""குருவியே, நீ எதனால் இப்படி இருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று அன்போடு கேட்டார் வெட்டுக்காரர்.

""ஐயா, உங்களால் எனக்கு ஆபத்து வரப் போகிறது என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால், நீங்களோ என் மீது அன்பு காட்டு கிறீர்கள்,'' என்றது குருவி.

""குருவியே, என்னால் உனக்கு எப்போதுமே ஆபத்து ஏற்படாது. அதனால் நீ ஒருபோதும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்,'' என்றார் தேய்காய் வெட்டுக்காரர்.

""ஐயா, இப்போது நான் உங்களை நினைத்துப் பயப்படவில்லை. ஆனால், ஓணானை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது. ஒரு ஓணான் வந்து என் கூட்டில் இருந்து தினமும் ஒரு முட்டையைக் குடித்துச் செல்கிறது. அதனால்தான் நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்,'' என்றது குருவி.

தேங்காய் வெட்டுக்காரர் சிறிது நேரம் யோசனை செய்தார். பின்னர் குருவியைப் பார்த்தார்.

""குருவியே, நீ கவலைப்படாதே... இன்று நாம் இருவரும் அந்த ஓணானை ஒரு வழியாக்கி விடலாம். நீ நான் சொல்கிறபடி நடந்துகொள்ள வேண்டும்,'' என்றார்.

""ஐயா, நீங்கள் சொல்கிறபடியே நானும் நடந்து கொள்கிறேன்,'' என்றது குருவி.

""குருவியே, நான் ஒரு முட்டையைத் தயாரித்து தருகிறேன். நீ உன் கூட்டில் இருக்கிற மற்ற முட்டைகளை மறைத்துவிட்டு நான் தருகிற முட்டையை மட்டும் கூட்டில் வைக்க வேண்டும். ஓணான் வந்து அந்த முட்டையை எடுத்துச் சாப்பிடும். அப்போது ஓணான் படுகிற அவஸ்தையை நீ பார்க்கப் போகிறாய்,'' என்றார் அவர்.

அதனைக் கேட்ட குருவியும் மகிழ்ச்சியோடு கூட்டில் இருந்த தனது முட்டைகளை எல்லாம் மறைத்து வைத்துக் கொண்டது. உடனே தேங்காய் வெட்டுக்காரர் தன்னுடைய வெற்றிலைப் பையில் இருந்து சுண்ணாம்பைக் கெட்டியாக எடுத்தார். அதனை முட்டை வடிவில் நன்றாக உருட்டி எடுத்து குருவியின் கூட்டின் உள்ளே வைத்துவிட்டார்.

பின்னர் வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கிக் கொண்டார். வேலியோரமாக மறைவில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் ஓணான் வேகமாக வந்தது.

வந்த வேகத்திலேயே சர்ரென்று மரத்தின் மீது ஏறி உச்சிக்குச் சென்றது. குருவிக்கூட்டில் இருக்கிற முட்டையைப் பார்த்தது.

""குருவியே, இன்று ஆச்சரியமாக இருக்கிறதே, கூட்டில் ஒரு முட்டைதான் இருக்கிறது. எப்போதும் நான்கைந்து முட்டைகள் இருக்குமே. அது சரி, எனக்கு ஒரு முட்டை தானே தேவை. உன்னிடம் நான் செய்த நிபந்தனையின்படி ஒரு முட்டையைத்தானே குடிக்க வேண்டும்,'' என்று முட்டையைக் குடிக்க முயற்சித்தது ஓணான்.

அந்த சுண்ணாம்பு முட்டையை தன் வாயில் போட்டு விழுங்கியது. மறு நொடியில் வீரிய மிக்க சுண்ணாம்பினால் அதன் நாக்கும், வயிறும் வெந்தது. எரிச்சலோடு மரத்தின் மேலேயிருந்து பொத்தென்று தரையில் விழுந்தது.

தரையில் விழுந்த ஓணான் அங்குமிங்குமாக தள்ளாடியபடி வேலியில் புகுந்துக் கொண்டது.

தேங்காய் வெட்டுக்காரர் வேலி மறைவில் இருந்து மரத்தின் அருகே வந்தார். உடனே குருவியானது அவர் அருகே பறந்து வந்து நின்றது.

""ஐயா, நீங்கள் என் முட்டையைக் காப்பாற்றி விட்டீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி,'' என்றது.

""குருவியே, இனிமேல் நீ தைரியமாக இந்த மரத்தில் வசிக்கலாம்,'' என்றார் தேங்காய் வெட்டுக்காரர்.

***
சிறுவர் மலர்



முட்டை! - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 27, 2014 11:21 pm

முட்டை! - சிறுவர்கதை 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக