புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_c10கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_m10கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_c10கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_m10கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_c10கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_m10கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:37 pm


கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? 4isbs_Peepal_GI_4I_2037770eஉதகை அருகே பழமையான ஒரு மரத்தை கோத்தர் இன பழங்குடியின மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 பண்டைய பழங்குடியினரில் கோத்தர் இனத்தவரும் ஒரு பிரிவினர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும் 7 பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள செட்டில்மென்ட்டே இவர்களது தலைமையிடமாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்டமான மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியை குறைந்தது 40 பேர் இணைந்து தங்கள் கைகளைக் கோர்த்து நின்றால் மட்டுமே சுற்றிப் பிடிக்க முடியும். அதேபோல, இதன் உயரமும் பிரமாண்டமாகவே காணப்படுகிறது. இம்மரம் குறித்து குந்தா கோத்தகிரி ஊர்த் தலைவரான பெள்ளன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் 7 செட்டில்மென்ட்டுகளில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் இயற்கையை மட்டுமே வழிபடுபவர்களாவர். இவர்களில் 6 குழுவினர் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள கோவில் திறக்கப்படும். ஆனால், குந்தா கோத்தகிரியிலுள்ள கோவில் மட்டும் அறுவடை நேரத்திலும், உழவு காலத்திலும் என ஆண்டுக்கு 2 முறை திறக்கப்படுகிறது. எந்தக் கோவிலின் வளாகத்திற்குள்ளும் பெண்கள் நுழைய அனுமதி கிடையாது.

குந்தா கோத்தகிரி கோவிலின் நுழைவுப் பகுதியில் சேல மரம் என அழைக்கப்படும் மரம் உள்ளது. இம்மரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர்.

இம்மரத்தின் அடி வேரையொட்டிய தண்டுப்பகுதி மட்டும் சுமார் 40 மீட்டர் அகலமுள்ளது. இந்த ஊர் தோன்றியபோது முதலில் கோவில் அமைப்பதற்காக எங்களது முன்னோர்கள் மண்ணை தோண்டியபோது முதலில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் என பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் 10 தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளதால் இம்மரத்தின் வயது பல நூறு ஆண்டுகள் இருக்குமென கூறப்படுகிறது.

இம்மரம் குறித்து கேள்வியுற்று ஆய்வு செய்வதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்த ரிச்சர்டு என்ற ஆராய்ச்சியாளர் இம்மரத்தின் பட்டை, வேர் உள்ளிட்டவற்றைக் கண்டு இம்மரத்திற்கு குறைந்தது சுமார் 1,000 ஆண்டுகள் வயதிருக்குமென கூறிச் சென்றதால் அதையே நாங்களும் நம்பி வருகிறோம் என்றார்.

இம்மரம் குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளரும், எமரால்டிலுள்ள மத்திய அரசின் மூலிகைப் பண்ணை இயக்குநருமான டாக்டர் ராஜன் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே இங்குள்ள மரங்களைக் குறித்த ஆவணங்கள் உள்ளன. அதனால் இம்மரம் குறித்த சரியான வயதை ஆய்வுகளுக்கு பின்னரே கூறமுடியும். இந்த மரம் அவர்களது வழக்கப்படி சேல மரம் என அழைக்கப்பட்டாலும் தாவரவியலில் இது பைக்கஸ் பிரிவைச் சேர்ந்ததாகும். இதுவும் அரச மரக் குடும்பத்தைச் சேர்ந்ததேயாகும்.

கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் கி.பி.1200-இல் இருந்தே வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1691-இல் கள்ளிக்கோட்டையிலிருந்து நீலகிரிக்கு முதலில் வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் பெரைரா முதலில் இப்பகுதிக்கே வந்துள்ளார். அப்போது மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததாகவும் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.

எனவே, குந்தா கோத்தகிரியிலுள்ள இந்த மரம் பழமையான மரமாக இருக்கலாம். ஆனால், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததா என்பதை தீர்மானமாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார்.

மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மரம் மிகப் பழமையான மரம் எனற பெயரைப் பெற்றுள்ளதுடன், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வீக மரமெனக் கூறப்படுவதால் இம்மரத்தைப் பார்ப்பதற்காக ஆடிப்பெருக்கு தினத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியில் குவிந்திருந்தனர்.

[thanks]தினமணி[/thanks]



கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 21, 2014 12:47 pm

தகவலுக்கு மிக்க நன்றி மாமா அங்கள், இவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறோம், அவர்களது வாழ்க்கை முறை என்னவோ. இது சம்பூர்ண ராமயண படத்தின் பாடல் ராக வகைகள் பற்றிய இது அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றிய கேள்வி மட்டுமே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:தகவலுக்கு மிக்க நன்றி மாமா அங்கள், இவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறோம், அவர்களது வாழ்க்கை முறை என்னவோ. இது சம்பூர்ண ராமயண படத்தின் பாடல் ராக வகைகள் பற்றிய இது அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றிய கேள்வி மட்டுமே.


பழங்குடியினர் பண்பாடு

தோடர்களின் வரலாறு

மேலும் குறும்பர், கோடர், பனியர், இருளர் என்ற பிரிவுகளாக பழங்குடினர் தமிழகத்தில் வாழ்கிறார்கள், இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன்!



கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக