புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
81 Posts - 67%
heezulia
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
1 Post - 1%
viyasan
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
273 Posts - 45%
heezulia
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
18 Posts - 3%
prajai
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
8 Posts - 1%
Guna.D
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
7 Posts - 1%
mruthun
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_m10" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:18 pm

" இன்று அமர்க்களமான நாள்!" என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள்.

எம். எஸ். உதயமூர்த்தி எழுதி வடித்த தன்னம்பிக்கை ஊட்டும், சுயசிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பல. சமூகத்தில் அவரின் கட்டுரைகளை வாசித்து சுயசிந்தனையோடு... முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அத்தகைய வெற்றிகளுக்கும், இளைய தலைமுறையின் வழிகாட்டுதலுக்கு தீ பந்தமாகவும் விளங்கும் டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் எண்ண கடலிலிருந்து ஒரு கட்டுரைத் துளி உங்கள் பார்வைக்கு...

" உன்னால் முடியும் "

ஒரு காலத்தில் ரோம் சாம்ராஜ்யம் புகழ்பெற்ற நாடாக, ஆட்சியாக இருந்தது. ஆனால், அதன் புகழ் நிலைபெற்று நிற்கவில்லை. வெகுவேகமாக ரோம் சாம்ராஜ்யம் கவிழ்ந்தது. அதன் சரிவுக்கு காரணம், காமப்பாதையிலும், கள் போன்ற போதைப் பொருட்களிலும் அந்த நாட்டு அரசர்கள் பெரிதும் மூழ்கி திளைத்தது தான்.

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எப்போதுமே ஒரு லட்சியம் இருக்கும். எப்போது மனதில் லட்சியம் இடம் பெற்று விட்டதோ அதன்பின் அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனை எப்போதும் அவன் உள்ளத்தில் அலை மோதும். அதற்கான ஆய்வு வேலைகளைத் துவக்குவான். அதுபற்றிய அறிவும், அனுபவமும் பெற்றவர்களின் ஆலோசனையை பெறுவான். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தான் அவன் கவனம் இருக்கும்.

ஒரு உதாரண சம்பவம் பல பத்திரிகைகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. யாஹ்யகான் என்பவர் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தார். அந்த நாட்டின் பிரபல பாடகியான கீதா என்ற பெண்மணியை தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு அனுப்பினார் ஜனாதிபதி. ஜனாதிபதி மாளிகைக்கு பாடகி கீதா வந்தபோது அவரை உள்ளே விட மறுத்து விட்டனர் அரண்மனைக் காவலர்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நடக்காதபோது, உள்ளிருந்து நேராக ஜனாதிபதி ஆளை அனுப்பினார் அழைத்து வர உள்ளே போனார் கீதா.

முடிவில் மாளிகையிலிருந்து கீதா வெளியே வந்தபோது, மிகுந்த அன்புடன், மிக்க மரியாதையுடன் அவரை வழியனுப்பினர் பாதுகாவலர்கள். இதைக் கண்ட கீதா, " நான் உள்ளே போனபோது இவ்வளவு கெடுபிடி செய்தீர்களே? " என்று கேட்டார். அதற்கு காவலர்கள் தந்த பதில் " அம்மா! நீங்கள் போகும்போது வெறும் கீதாவாக போனீர்கள். திரும்பி வரும்போதோ தேசியகீதமாய் வெளிவந்தீர்கள்!" என்றனர்!

இப்படிப்பட்ட தலைவர்களின் ஆட்சி எப்படி இருக்கும்? தன்னம்பிக்கையும், லட்சியமும் உள்ள மனிதன் தன் காரியத்தில் குறியாக இருப்பான். ஆனால், குடியிலும், முறைகெட்ட காரியங்களிலும் தன்னை மறப்பவர்கள், எதையும் சாதிப்பதில்லை. தலைவனின் பலவீனங்கள் நாட்டையே பலவீனப்படுத்துகின்றன. அடுத்தமுறை அந்த தலைவனை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதே சமயம் தன்னம்பிக்கையும், லட்சியமும் கொண்ட தனிமனிதர்கள் நிறைய இருக்கும் ஒரு சமுதாயத்தில் யாரும் தலைவனை லட்சியம் செய்வதில்லை; தலைவனையும் மீறி நாடு முன்னேறுகிறது.

தன்னம்பிக்கைக்கு உதாரணமாக, அமெரிக்க நாட்டில் ஒரு மாமனிதர் அந்நாட்டின் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் மிகுந்த சந்தேகப் பிராணி. எனவே, அவரது பதவிக்கு எதிராக, போட்டியாக நிற்கும் கட்சியின் தலைமையகத்தில் அவர் தன் ஆட்களை அனுப்பி, அங்கே உள்ள தகவல்களை திருடி வரச் சொன்னார். அவர் பெயர் நிக்சன். இதன் விளைவு என்ன? வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அவர் பதவியிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று. நினைவில் கொள்ளுங்கள் தன்னம்பிக்கை என்பது ஒரு மாபெரும் சக்தி. மனிதர்களிடத்தில் இது இயல்பாக உள்ள ஒரு சக்தி. தன்னம்பிக்கையும், லட்சியமும், நேர்மையும் இல்லாதவர்களை மக்கள் எளிதில் நிராகரிக்கின்றனர். முன்னுக்கு வர விரும்பும் எந்த இளைஞருக்கும், பெண்ணுக்கும் தன்னம்பிக்கையும், லட்சியமும், நேர்மையும் அவசியம் தேவை.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:19 pm

தமிழ்நாட்டில் நடந்த மற்றொரு சம்பவம்... எட்டயபுரம் மன்னரின் அவையில் கவிஞராக இருந்தார் பாரதியார். ஒருநாள் பாரதி மீசை வைத்துக் கொள்வதுதான் கம்பீரம் தரும் என்று தீர்மானித்து, மீசையுடன் அரண்மனைக்குச் சென்றார். எட்டயபுரம் மன்னருக்கு இது பிடிக்கவில்லை. பாரதியின் சித்தப்பாவிடம் அவர் மீசையை எடுக்கும்படியும், இல்லாவிட்டால், மன்னர் வழங்கும் மாத மான்ய பணம் நிறுத்தப்படும் என்றும் கூறினார்.

மன்னரிடம் சென்று, " ஐயா, இத்தனை நாள் என் கவித்திறமைக்காக மான்யம் அளிக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் மீசைக்காக என்பது தெரிகிறது. இனி, அந்த மீசைக்காக காசு வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தார் பாரதியார்! தன்னம்பிக்கை உள்ளவர்கள் சுய கவுரவத்தைப் பறிகொடுக்க மாட்டர். பெரிய அரசியல் தலைவர்களை சுற்றி வரும் இன்றைய மனிதர்களைப் பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய புகழ்பெற்ற விஞ்ஞானி வான்பிரான். அவர் ராக்கெட் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அதாவது, ராக்கெட்டின் நுனியில் வெடிமருந்து குண்டை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப முடியும். 360, 450 கி.மீ., தொலைவிற்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்து கொண்டிருந்தனர். அதில் தான் ஈடுபட்டிருந்தார் வான்பிரான்.

" பல ராக்கெட்டுகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு விண்வெளியில் செல்கிறது. நாம் ஏன் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டை அனுப்பக்கூடாது? " என்று எண்ணினார். இப்படித்தான் ஒன்றிலிருந்து ஒன்றாக மனித மனதில் எண்ணங்கள் புறப்படுகின்றன. எண்ணங்கள் வேர் விடவும், வலிமை பெறவும் சில நாட்கள் ஆகின்றன. அதன்பின் இது நிஜமாக நிகழ்கிறது; செயல் வடிவம் பெறுகிறது.

தன்னம்பிக்கை உள்ளவன், ஏன் அப்படி - நாம் நினைக்கிறபடி செய்து பார்க்க கூடாது என்று எண்ணுகிறான். அதையே இரவு, பகலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இதன் விளைவாக தெளிவு பிறக்கிறது; அதை செய்து முடிக்கிறான்.

நமது திருமந்திர நூலில் ஓர் இடத்தில், " தத்துவமசி " என்ற வார்த்தை வருகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ என்று பொருள். அசி என்றால், ஆகிறாய் என்று பொருள்படும். அதாவது, " நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய்! " என்பது பொருள். இன்று நாம் எண்ணுகிறோம். அதே நினைவாக இருக்கும் போது அதை செய்து முடிக்கிறோம். தன்னம்பிக்கை தான் இதன் மூலம். அது தான் நம்மை எண்ணங்களிலிருந்து, செயல்வரை அழைத்துச் செல்கிறது.

எண்ணம் செயலாவதை பற்றி மாண்டூக்கிய உபனிஷத்தில் அகம் பிரம்மாஸ்மி என்று வருகிறது. அதாவது, பிரம்மம் என்ற மாபெரும் இறை சக்தி நம்மில் குடிகொண்டிருக்கிறது என்பது தான் அதன் பொருள்.

உண்மையும், லட்சிய சாதனையும் இப்படியெல்லாம் வழிகாட்டும் போது, ஏன் இது மக்களின் மூலம் நிறைவேறுவதில்லை? இதை பற்றிய ஒரு பெரிய உண்மையை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாட்டில் இருந்த ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

அவர் எதையுமே சாதிக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்திருந்தபோது தன் பிரச்னைகளை எழுதி, " ஏன் இப்படி எனக்கு ஏற்படும்படி செய்கிறாய்? என்று கடவுளிடமே கேட்டார். அரை மணி நேரம் சென்றபின், அவர் கையிலிருந்த பேனா தானாக எழுத ஆரம்பித்தது. அதில் வந்த வார்த்தை, " ஒருமைப்பட்ட மனதுடன் மக்கள் என்னை அணுகுவதில்லை! " என்று கடவுளிடமிருந்து பதில் வந்தது. அடுத்த வரியாக, கடவுள் சொன்ன வாசகம், " மக்கள் என்னை நம்புவதில்லை!" என்பது. இப்போது கடவுள் நம்பிக்கை பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள். நாம் கடவுளை வேண்டும் போது, பூரணமாக மனம் ஒன்றி வேண்டுகிறோமா? அப்படி நாம் கடவுளை வேண்ட நினைக்கும் போது, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியில் தான் தெளிவும், மேலிடத்திலிருந்து சரியான எண்ணமும் தோன்றுகிறது. இதை புத்தபிரானிலிருந்து ஏராளமான யோகிகள் வரை பலரும் கூறியிருக்கின்றனர்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:19 pm

இதை எழுதியபோது தமிழ் பாடல் ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. மனதில் சலனமில்லாமல் - மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் என்று ஒரு ஞானி வேண்டிப் பாடியிருக்கிறார். ஏன் நாமும் செய்யக் கூடாது?

ஒரு நாட்டின் சொத்து அதன் நிலவளம், நீர்வளம், கனிம வளம் தான். அத்துடன், என்று மக்களின் உழைப்பும், ஆர்வமும், முன்னேற்ற மனப்பான்மையும், லட்சிய நோக்கும், தொழில் திறமையும், பலன் காண முடியும் என்ற நம்பிக்கையுடன் ஈடுபடுகிறதோ அன்று தான் நாட்டின் வளம் பெருகும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், வாழ்வு என்ற மகிழ்ச்சிகரமான சூழ்நிலை எங்கும் பரவும்.

ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அது கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று எப்போது நம்மை செயல்படத் தூண்டுகிறதோ, அப்போதுதான் அது பலன் தரும். எப்படிப்பட்ட எண்ணம் மனதில் இடம் பெற வேண்டும்?

ஒரே ஒரு வார்த்தை தான். அது, நம்பிக்கை. உங்களுக் குள்ளேயே, " அது என்னால் முடியும். நான் முயற்சிக்கப் போகிறேன்! " என்ற நம்பிக்கைதான் அது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகை நிருபர் நார்மன் கசினை பார்த்த மருத்துவர்கள், " நீங்கள் பிழைப்பது எளிதல்ல. நோய் உச்ச நிலை அடைந்து விட்டது. இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? அதை நாங்கள் வாங்கித் தருகிறோம். இந்த கடைசி வாரங்களையாவது நீங்கள் சந்தோஷமாக கழியுங்கள்! " என்றனர்.

நார்மன் கசின் சொன்னார் பொழுதுபோக்க, எனக்குப் பிடித்தது சார்லி சாப்ளினுடைய சினிமா படங்கள் தான்... என்றார். சார்லி சாப்ளின் பிரபல ஹாஸ்ய நடிகர்; இங்கிலாந்துக்காரர். சார்லி சாப்ளின் படத்தை போட்டு காண்பித்தனர். முழுவதுமாக ரசித்தார். தாங்க முடியாமல் சிரித்தார். மூன்றாவது வாரம் மருத்துவர்கள் வந்து பார்த்த போது அவர் பூரணமாக குணமடைந்து விட்டதைப் பார்த்து, சோதனை செய்து ஆச்சரியப்பட்டனர். மன நிலைமாற்றம், நம்பிக்கை, சந்தோஷமான எண்ணம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை கவனியுங்கள்... இது அமெரிக்காவில் ஹூஸ்டன் மாநகரில் நடந்த உண்மை சம்பவம். இந்த அதிசயத்தை அனுபவித்த மருத்துவர்கள் அவரை மருத்துவ கல்லூரியில் ஒரு பேராசிரியராக நியமித்தனர்.

அமெரிக்காவில் இன்றுகூட ஒரு பெண்மணி பலவித நோய்களுடன் வரும் மக்களை குணப்படுத்தி வருகிறார். அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் நன்கு, அலசி ஆராய்ந்து பைபிளை முழுவதுமாக படித்தவர். நோயுற்றவர்களை தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்று இயேசு கிறிஸ்துவின் சிலை எதிரில், " ஓ எங்கள் பிரபுவே..." என்று ஆரம்பிப்பார்.

பின் விவரமாக, " இப்படி இவர்கள் நோயுடன் வாடுகிறார்களே... நீர் ஒருவர் தானே இதை எல்லாம் நிவர்த்தி செய்ய முடியும். இப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள்! " என்று சில பைபிள் வசனங்களை சொல்வார். இப்படி, செய்து இதுவரை 20 நபர்களை, நோய்களிலிருந்து காப்பாற்றி இருக்கிறார் என்றால், எத்தகைய நம்பிக்கை, வேண்டுகோள் இதை மாற்றுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அதுதான், நம்பிக்கை - நம்பிக்கை - நம்பிக்கை!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:49 pm

இதை ஒட்டி மற்றோர் செய்தியையும் சொல்ல வேண்டும். சமீபத்தில், ஒரு புத்தகம் படித்தேன், " கடவுளுடன் நான் நடத்திய சம்பாஷனை! " என்பது தான் அதன் தலைப்பு. இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பல காலம் எழுதினார். பல விஷயங்களைப் பற்றியும் எழுதினார். ஒன்றும் வெளியாகவில்லை. மற்ற எந்த விதங்களிலும் இவர் எழுத்து அவருக்கு வருமானத்தைக் கொடுக்கவில்லை. எனவே, " கடவுளே நீங்கள் இருப்பது உண்மை தானா? உண்மையானால், என் கஷ்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு தானா இருக்கிறீர்? " என்று கேட்டு கடவுளுக்கு விபரமாக கடிதம் எழுதினார். பிறகு, அசந்து போய், எழுதிய இடத்திலேயே உட்கார்ந்து விட்டார். நேரம் போனது தெரியவில்லை. அரை மணி நேரம் கழித்து அவர் பிடித்துக் கொண்டிருந்த பேனா எழுத ஆரம்பித்தது! அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் வந்தது. இதன் முக்கியத்துவம் என்னவெனில் கடவுளிடம் பேச முடியும், அவர் வழி காட்டுவார் என்பதை விவரமாக, தனக்கு ஏற்பட்ட அனுபவம் அனைத்தையும் எட்டு கனமான புத்தகங்களாக எழுதி இருக்கிறார்.

இதில், இரண்டாவது புத்தகத்தில் ஓரிடத்தில் கடவுள் கூறுகிறார். " நான் அவர்களுக்கு எப்படி உதவுவது? மக்கள் கடவுளை நம்புவதில்லை! " என்று அழுத்ததிருத்தமாக சொல்கிறார். இது உண்மைதான் என்று நம் கண்முன் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது தெரிகிறது.

ஏனெனில், நாம் வேலை நிமித்தமாக ஏதேனும் கோவில் இருக்கும் வழியே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் வழியே நடந்து செல்பவர்கள், கோவில் அருகில் நின்று கன்னத்தில் இரண்டு போட்டுக் கொண்டு, கண்களை மூடி வேண்டிக் கொண்டு நடந்து செல்வதை பார்க்கலாம்.

இதைத் தான் அந்த எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இது ஆழமான ஒரு செய்தி. இந்த வேலைக்காரன் மோசம் என்ற எண்ணம் இருந்தால் வேலைக்காரனிடம் பணத்தைக் கொடுத்து, " வங்கியில் கட்டி விட்டு வா... " என்று கூறுவீர்களா? இந்தக் காரியம் நடக்காது என்று தீர்மானித்து விட்டால் கடவுளிடம் போய் முறையிடுவீர்களா?

எல்லாம் எதில் முடிகிறது என்றால், நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையில். நம்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். பயப்பட வேண்டியதில்லை. கடவுள் பெரியவர் தான் எல்லாம் அறிந்தவர் தான் எல்லாம் வல்லவர்தான். அதற்காக அவர் நமக்கு எங்கே உதவப் போகிறார் என்று ஒரு நாளும் எண்ணிவிடாதீர்கள்.

அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஞானிகளைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும், ஆழ்வார்களைப் பற்றியும், யோகிகளைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும், அவர்கள் காட்டும் வழிகளைப் பற்றியும் ஏராளமான தமிழ் நூல்கள் இருக்கின்றன. இவர்கள் நம்மைப் போல் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். இவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; நம்புங்கள். நம்பிக்கை தான் எல்லாம். உங்கள் மீது, முடியும் என்ற நம்பிக்கையுடன் கை கூப்புங்கள்; செயல்படுங்கள்.
எல்லாம் நல்லதே நடக்கும்,
நம் எண்ணம் சிறகடித்துப் பறக்கும்!
பொல்லாங்கு கீழ் விழுந்து துடிக்கும்!
இந்தப் புவியில் புதிய யுகம் பிறக்கும்!

என்று ஸ்ரீ அரவிந்த அன்னை எழுதியிருக்கிறார்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன்னை நம்பாமல் பிறரை சார்ந்து வாழ ஆசைப்படுவர்; தங்கள் பொறுப்பை, கவலைகளை யார் தலையிலாவது சுமத்தி விடுவர்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:50 pm

ஒரு தீவில் கப்பல் உடைந்து ஒரு பெரிய பணக்காரக் குடும்பம், அந்தத் தீவில் அகப்பட்டுக் கொண்டபோது, அங்கிருந்த சமையல்காரன் தான் எல்லாருக்கும் தைரியமூட்டிக் காரியம் செய்யச் சொல்லி ஒரு தலைவனாக நடந்து கொண்டான் என்று ஒரு கதை இருக்கிறது.

நாம் பிறருக்கு தைரியமூட்ட முற்படும் போது, நமக்கு தைரியம் பிறக்கிறது, நம்பிக்கையும், தைரியமும் கொடுப்பதால் குறைவதல்ல; கொடுக்கக் கொடுக்க நம்மிடம் கூடிப் பெருகும் பொருள் அது. அரசியல் கூட்டங்களில் ஒரு மூன்றாந்தரத் தலைவன் மற்றொரு கட்சிக்காரனைத் தாக்குவதையும், நகைப்பதையும் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.

அதிலிருக்கும் மனத் தத்துவம்... பிறரைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போது ஏதோ நாம் அவனை விட உயர்ந்தவன் என்ற இறுமாப்பு நமக்கு எழுகிறது, குழந்தைக்குத் தைரியம் கொடுக்கும் போது, நாம் பெறும் தைரியம் போல. ஆகவே, எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்; தைரியம் கொடுங்கள்; பிறரது தன்னம்பிக்கையை வளருங்கள். அவை உங்களையே வளர்ப்பதை உணர்வீர்கள்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள், கொஞ்சம் பலகீனமானவர்கள். பிறரிடம் யோசனை கேட்கும் போது அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்... " யோசனை தான் கேட்கிறேன். ஆனால், எப்படி முடிவு செய்வது என்பது என் செயல்!" என்பதை அவர்கள் தங்களுக்குத் தானேயும், யோசனை சொல்பவரிடமும் தெளிவு படுத்தி விட வேண்டும். ஏனெனில், பிறர் யோசனையையும், முடிவையும் ஏற்று நடக்கும்போது, நாம் நம் சுயத் தன்மையை இழந்து விடுகிறோம்.

தன்னம்பிக்கையின்மையின், மறுபக்கம் கர்வம், தற்பெருமை, அகம்பாவம் என்ற குணங்கள், தன்னம்பிக்கையின்மை எத்தனை கெடுதலோ, அதே போலத்தான், என்னால் எல்லாம் முடியும்... " மனது வைத்தேனானால். மறுபடியும் செய்து காட்டுவேன்... " " ஒரு தரம் புரிந்து கொண்டேனானால் போதும், விடமாட்டேன்! " என்று சிலர் தன் திறமையைப் பற்றி அறிவுக்கு மீறிய கணிப்பு செய்வர்.

ஒரு சமயம், " நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்... " என்று கூறி, சீனிவாசன் என்ற இளைஞரிடம் தோற்றுப் போனார் காமராஜர். வரிசையாக கென்னடி வெற்றி பெற்றுக்கொண்டே வந்தபோது, " கென்னடி எதை எடுத்தாலும் வெற்றி பெறுவார்! " என்று பத்திரிகையில் எழுதினர்; அவருக்கும் அப்படி ஓர் நம்பிக்கை பிறந்தது.

இதன் விளைவாக, சரியான முன் ஏற்பாடு இல்லாமல் கியூபாவின் மீது எடுத்த படையெடுப்பு பெரிய தோல்வியில் முடிந்து அவரை மூக்கொடிய வைத்தது, அகம்பாவம், தன்னைப் பற்றிய அளவுக்கு மீறிய அதி நம்பிக்கையால் வருவது. இது தானே ஏற்படுவது மட்டுமல்ல... " சுற்றியிருக்கும் கும்பல் துதிபாடும் கும்பல் காலில் விழும் கும்பல் " ஆகியவற்றால் வரும். தலைவனின் பெருமையைப் புகழ்பாடும் போதும், பல தலைவர்கள் அதை உண்மையென்று நம்பி மோசம் போய் விடுவர்.

தாழ்வு மனப்பான்மையும் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து விடும். நம்மை விட அறிவிலும், திறமையிலும், வலிமையிலும் மிகுந்துள்ளவர்கள் உலகில் நிறையப் பேர் இருக்கக் கூடும். அவர்களோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் அப்படி இல்லையே என்று ஒப்பாரி வைப்பது நல்லதல்ல.

நம் உணர்வுதான், நம் நினைவுகள் தான் நம்மை வாழ வைக்கின்றன.

" இன்று அமர்க்களமான நாள்! " என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பெரும்பாலும் தான் இருக்கிற சூழ்நிலையைப் புரிந்துகொள்ள மாட்டர் அல்லது புரிந்துகொள்ள மறுப்பர். நாம் இருக்கிற சூழ்நிலை, நமது சக்தி, நம்மால் என்ன முடியும் என்பதை பற்றி சரியான தெளிவு இல்லாத போது நாம் எடுக்கிற முடிவுகள் தவறாகப் போகின்றன. அப்போது நம் ஆசைகளால் நம் முடிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நடைமுறை உண்மைகளிலிருந்து பெறப்படுவது அல்ல. நோக்கே கோணலாக இருக்கும்போது நமது குறி எங்கே சரியாக இருக்கும்...?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:51 pm

நம் நிலைமை என்ன, நம் குடும்ப நிலை என்ன, நம் லட்சியம் என்ன? அது சாதிக்கக் கூடியதா? அதற்கு வேண்டிய அறிவும், திறமையும், பயிற்சியும், பக்க பலமும் இருக்கிறதா என்று அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.

இதைத் தான் அழகாகக் கூறுகிறார் வள்ளுவர்: " வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும் தூக்கி செயல்!' என்று செயலின் தன்மையை நன்கு ஆராய்வதோடு, நம்மால் முடியுமா, மாற்றானின் வலிமை என்ன, நமக்குப் பக்கத்துணை என்ன என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.

ராஜாஜியிடம் ஓர் அசாதாரண தன்னம்பிக்கை என்றும் உண்டு. வின்ஸ்டன் சர்ச்சிலானாலும், காந்திஜியானாலும் அவர் தன் தனித்தன்மையை இழந்து விடாமல், வாதிடுவார். பிறரது குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டுவார். பிறரது புகழோ, வலிமையோ, செல்வாக்கோ எதுவும் அவரை அசைத்ததில்லை.

ராஜாஜி சென்னை மாநில முதல்வராயிருந்த போது, சென்னையை வட சென்னை - தென் சென்னை என்று பங்கிட்டுப் பிரித்து, ஆந்திரர்களுக்குப் போய் விடும் அபாயம் இருந்தது. ராஜாஜியோ சென்னையைத் தமிழ்நாட்டுடன் சேர்த்தார். காரணம், வட மாநில தலைவர்களுக்கு சமமாக அவரால் வாதாட முடிந்தது.

பின் முதல்வரானார் காமராஜர். தமிழ் நாட்டுக்கு சேர வேண்டிய தேவிகுளம், பீர்மேடு போன்ற ஊர்கள் கேரளத்துடன் சேர்க்கப்பட்டன. காமராஜரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆராய்ந்து பார்த்தால், அப்போது அரசியல் துறையில் காமராஜர் வளர்ந்து கொண்டிருந்த சமயம். தன்னைப் பற்றிய சுய உணர்வு, தன்னம்பிக்கை அவரிடம் இல்லாமல் தேவிகுளம், பீர்மேடு பறிபோயிற்று. அதே காமராஜரை, நேரு இறந்ததும் பாருங்கள். தன்னைப் பற்றிய சுய உணர்வு, அவருக்கு " காமராஜின் பதவி விட்டு விலகும் திட்டத்தை " நேரு அங்கீகரித்ததிலிருந்து - அதிகம் வந்தது. ஆகவே, நேரு இறந்ததும் சாஸ்திரியைப் பிரதமர் ஆக்கினார். சாஸ்திரி இறந்ததும் இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கினார். தன்னைப் பற்றிய சுய உணர்வுடன் பாடுபட்டார் காமராஜர்.

இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தார் காந்திஜி. பாகிஸ்தானைப் பெற்று தன் மக்களுக்குத் தனிநாடு அளித்தார் ஜின்னா. நேற்றைய தோல்விகளிலிருந்து தனி மனித முன்னேற்றத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்குமான, பல நல்ல பாடங்களை நாம் அங்கே கற்றுக்கொள்ள முடியும். மனம் என்ற நாற்றங்காலில் எண்ணம் என்ற விதை விழும்போது புதுப்புல் - புதுநெல் அங்கே முளைக்கிறது. நேற்று மடிந்த வைக்கோல் இன்று நல்ல எருவாகி இருக்கிறது.
தன்னம்பிக்கை பெற என்ன வழி என்று ஆராய்வதன் முதல்படி, நமது பயத்தின் காரணத்தைப் புரிந்து கொள்வது தான்.
ஏன் பயப்படுகிறோம்? பல சமயம் நடக்க முடியாதவைகளை எல்லாம் எண்ணிப் பயப்படுகிறோம். அந்தச் சமயத்தில் உங்கள் பயத்தை எழுதி ஒரு பெட்டியில் போடுங்கள். அதை ஒரு வாரம், ஒரு மாதம் கழித்துப் படித்துப் பாருங்கள். இதற்கா பயந்தோம் என்று தோன்றும்.

பல சமயம் நாம் விஷயங்களை ஒத்திப் போடுகிறோம்; காரியம் செய்யப் பயப்படுகிறோம். நாம் எது செய்து என்ன பயன் என்ற சோகமும், விரக்தியும் எழுகிறது. செயல் - முயற்சி - இருக்கிறதே அதைப் போல தன்னம்பிக்கைக்கு அருமருந்து வேறு இல்லை. சிறையிலே கிடந்தான் ஒரு கைதி - பல மாதங்கள், பல ஆண்டுகள். ஒரு நாள் வாசற்கதவுப் பக்கம் சென்று கையை வைத்துத் தள்ளினான். என்ன ஆச்சரியம்! கதவு திறந்து கொண்டது. உண்மை என்னவென்றால் இத்தனை நாளும் சிறைக்கதவு திறந்துதானிருந்தது; மனித முயற்சிதான் அங்கே இல்லை.

முயற்சிக்கு ஈடாக தன்னம்பிக்கை தரும் மருந்து வேறு ஏதும் இல்லை. கொஞ்சம் வாழ்க்கைக் கதவைத் தள்ளிப் பாருங்கள்! அது திறந்துதானிருக்கிறது. தன்னம்பிக்கையற்றவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து விடுகின்றனர். அது, " வாழ்க்கை ஒரு வாய்ப்பு " என்பது. நம்மை இவ்வுலகில் வாழுமாறு, வாழ்வை ரசிக்குமாறு, அனுபவிக்குமாறு காலத்தை நமக்குக் கடன் கொடுத்திருக்கின்றனர்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:52 pm

தன்னம்பிக்கை பெற மற்றுமோர் எளிதான வழி உங்களைப் பற்றிப் பிறர் பாராட்டியதை எழுதி, ஒரு தாளில் வைத்துக் கொள்ளுங்கள். சில சமயம் உங்கள் புத்திசாலித்தனத்திற்காக, உதவிக்காக, உங்கள் குணத்திற்காகப் பிறர் பாராட்டியிருக்கக் கூடும். அதை ஒரு சிறு அட்டையில் எழுதி பையில் வைத்திருங்கள்.

" உங்களுக்குப் பல்லக்கு ஏறும் பாக்கியம் உண்டு! " என்று ஜோதிடம் கூறியது; " உனது விடாப்பிடியும், உறுதியும் கண்டு நான் அயர்ந்து போகிறேன்! " என்று உங்கள் நண்பன் கூறியது; " அப்பா! இந்தத் தள்ளாத வயதில் எனக்கு உதவினாயே. நீ மகாராஜனா இருக்கணும்! " என்று ஒரு பெரியவர் சொன்னது இப்படி உங்கள் வாழ்வில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும், அதன் சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை தளரும்போது, சோகம், பயம் எழும்போது அதை எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தந்த நிகழ்ச்சிகளை மனக்கண் முன் முழுமையாகக் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் மனம் மீண்டும் லட்சியத்தில் மிதக்கும். தன்னம்பிக்கையால் பூரிப்படையும்; தைரியத்தால் வலுப்பெறும்.
ஒரு சமுதாயம் தன்னம்பிக்கையற்று இருக்கிறதென்றால் அதில் உள்ள பெரும்பாலான மக்கள் தன்னம்பிக்கை இழந்து செயலிழந்து இருக்கின்றனர் என்று அர்த்தம்.

நாடு இருக்கும் நிலையில், நாம் வாழும் சூழ்நிலையில், நம் நாட்டில் தனிமனிதன் தன்னம்பிக்கை இழக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. தன்னம்பிக்கையில்லாத மனிதன் செத்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

பிறரது உதாசீனம், பிறரது அவமானச் சொல் - சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்.

தினம் பள்ளிக்கூடம் போகிறான் ஒரு மாணவன். படிப்பு ஒன்றும் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. போதாக் குறைக்கு ஒரு மனிதர் அங்கு பிரம்புடன் பொல்லாதவராக சிடுசிடு மூஞ்சியுடன் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் படிப்பு ஏறவில்லை. ஆனாலும், ஆசிரியரோ தினமும் அர்ச்சிக்கிறார்... " ஏ! மக்கு! நீ எங்கே உருப்படப் போறே! " என்று.

குழந்தைக்குப் படிக்க ஆசை வருமா? தன்னம்பிக்கை ஏற்படுமா என்று கூறுங்கள். " ஏண்டா இங்கு வந்து என் கழுத்தை அறுக்கிறே!' " என்று கூறும் ஆசிரியர், எத்தகைய தன்னம்பிக்கையை இளவயதில் ஊட்டுகிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

மாறாக நான் ஒரு சமயம், ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே அவர் அலுவலக அறையில், கோடுகளால் வரைந்த கொக்குப் படம் மாட்டியிருந்தது. " என் பெண் போட்ட கொக்குப் படம்! " என்று பெருமையுடன் சொன்னார் அவர். அது கொக்கு போல இல்லை; அது வேறு விஷயம். அலுவலகத்தில் மாட்டப்பட்டிருக்கும் படத்தைக் கண்டு அக்குழந்தைக்கு எத்தனை பெருமை ஏற்படும்; அப்பா தரும் முக்கியத்துவம் அக்குழந்தையின் வளர்ச்சியில் எப்படி உதவும் என்று எண்ணிப் பாருங்கள்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:52 pm

திடீரென்று, ஒருநாள் புது மீசையுடன் என்னைக் காண வந்த இளங்கவிஞரைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். " தெருவில் போனால் எல்லாரும் என்னை தம்பீ " என்கின்றனர். கல்லூரியில் போனால், இந்த இளவயதும், மெலிந்த உருவமும் ஒரு ஆசிரியருக்கு வேண்டிய கம்பீரத்தை, மதிப்பைக் கொடுப்பதாகக் காணோம். எனக்கே நடுக்கம் ஏற்படும் சிலசமயம். அதற்குத் தான் மீசை வளர்க்கத் துவங்கினேன். பாரதியார் போல முண்டாசும் கட்டிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்! " என சிரித்தார் அவர். பெரிய மனோதத்துவ நிபுணர்கள் கூறுவதை எளிதாகச் செய்துவிட்டார் நண்பர். பிற காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் மனப்போக்கை மாற்றலாம் என்கின்றனர் மனநூலார். மனம் சோர்ந்திருக்கும் போது ஒரு நல்ல பாட்டை முணுமுணுங்கள். வருத்தமான நேரத்தில் ஒரு சினிமாவில் நிகழ்ந்த ஒரு வீரம் நிறைந்த சம்பவத்தை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். குளித்து விட்டுப் போனால் நமக்கே ஒரு ஆரோக்கியம் ஏற்படுகிறது. நல்ல துவைத்த, சலவை செய்த துணியை உடுத்திக் கொள்ளும் போது நமக்கே ஒரு நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வெளியே வைத்திருக்கும் மீசை உள்ளேயும் சிறிது வீரத்தை ஊட்டுகிறது.

நமது முன்னோர் எழுதியுள்ள நூல்களிலும் சரி, பாடியுள்ள பாடலிலும் சரி, " நாம் நமக்கு மட்டும் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை; இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவும் தான் பிறந்திருக்கிறோம்..." என்று எழுதியிருக்கின்றனர்.

இதை உதவி என்றோ, அன்பு என்றோ, பெருந்தன்மை என்றோ, தாராளமான மனம் என்றோ, வள்ளல் என்றோ கூறுகிறோம். அடுத்த வீட்டுக்காரர் கஷ்டப்பட்டால், பக்கத்து வீட்டுக்காரர் நல்லவராக இருந்தால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்... " நான் எப்படி உங்களுக்கு உதவி செய்யக் கூடும்! " என்று கேட்டு உதவி செய்யத்தான் வருவார். ஏனெனில், நாளை அவருக்கும் இப்படி ஒரு கஷ்டம் அல்லது துன்பம் நேரிடலாம். தனக்கு மட்டுமே வாழ்பவர்களது வாழ்க்கை பொதுவாக இனிமையாகவோ, மகிழ்வுடனேயோ அமைவதில்லை. இது இயற்கையின் நியதி இதை உணர்ந்த மாமனிதர்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆப்ரிக்காவுக்கு இரு தொழிலதிபர்களிடையே ஏற்பட்ட வழக்கு காரணமாக சென்றார் காந்திஜி. கொஞ்ச நாள் அங்கே வாழ்ந்தபோது வெள்ளையர்கள், மற்ற இனத்தவரைத் தாழ்வாக நடத்தியதைக் கண்டு வருந்தினார்; பின் போராடினார்.

இந்தியர்களையும், ஆப்ரிக்காவில் பிறந்து வாழும் கறுப்பர் இனத்தையும் இனவெறியர்கள் கேவலமாகப் பேசினர்; அடித்தனர்; உதைத்தனர். காந்திஜி முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்தபோது அவரை அவரது மூட்டையுடன் ரயிலிலிருந்து ரயில்வே பிளாட்பாரத்தில் பிடித்து தள்ளிய சம்பவம்... எப்படிப்பட்ட கொடுமை; அநியாயம்! அப்போது, அங்கே தலைமை நிர்வாகியாக இருந்த ஸ்மட்ஸ் துரை மிகவும் பொல்லாதவர். சம உரிமை கேட்டு போராடிய அத்தனை இந்தியர்களையும், கறுப்பர்களையும் சிறையில் தள்ளினார். 40 நாட்கள் சிறையிலிருந்தனர்; கஷ்டப்பட்டனர். எனினும், காந்திஜியும், மற்றவர்களும் விடுவிக்கப்பட்ட போது வெளியே வந்த காந்திஜி, ஸ்மட்ஸ் துரையிடம், தான் அவருக்காக சிறையிலிருந்தபோது செய்த ஒரு அழகான செருப்பை அன்பளிப்பாக கொடுத்தார். ஓரளவு ஸ்மட்ஸ் துரையின் மனம் இளகி இருக்கவேண்டும். ஒரு சில நாட்கள் வரை காந்திஜி அளித்த செருப்பை அணிந்து நடந்தார்.

சில நாட்கள் சென்றதும் திடீரென அவருக்கு ஞானோதயம் பிறந்தது. இப்படி சிறையிலடைத்து கஷ்டப்படுத்திய பின்னும் எத்தனை அன்புடனும், மரியாதையுடனும் இவர் நமக்காக ஒரு செருப்பை தைத்துக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணி அந்த செருப்பை தன் கண்ணாடி அலமாரியில் வைத்தார். நமது ஊரிலும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், பொதுவாக எதிரியை, எதிர்கட்சிக்காரரை மதிக்கின்றனரா அல்லது திட்டி கேவலப்படுத்துகின்றனரா என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். ஆனால், காந்திஜி என்ன செய்தார் என்பதை அடுத்து வரும் இளைய தலைமுறைக்காவது உயர் நெறிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்ததை நினைவூட்ட வேண்டும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:52 pm

திருவள்ளுவர் கூறுகிறார்:
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்... " என்று.
துன்பம் செய்தவர்களை, நமக்கு கேடு விளைவித்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால், நாம் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அப்படி உதவ வேண்டும். நாம் இப்படி உதவும்போது நம் எதிரியே வெட்கப்படுவார். " எனக்கு கெடுதல் செய்து பழித் தீர்க்க முயலாமல் இந்த மனிதர் உதவுகிறாரே... " என்று, தான் செய்த செயலுக்கு வெட்கப்படுவார் என்கிறார் திருவள்ளுவர்.

காந்திஜி பற்றிய மற்றொரு சம்பவம்...

" வெள்ளையர்கள் நடக்கும் சிமென்ட் நடைபாதையில் கறுப்பர்கள், இந்தியர்கள் நடக்கக் கூடாது; அவர்கள் கீழே உள்ள மண் தரையில் தான் நடக்க வேண்டும்! " என்று சட்டம் இருந்தது, காந்திஜி சொன்னார்:

" பிறரைத் தாழ்த்துவதன் மூலம் எப்படி ஒருவன் உயர முடியும் என்பது எனக்கு புரியவில்லை! "

பிறரைத் தாழ்த்துவதன் மூலம் மற்றவன் உயர்ந்துவிட முடியுமா?

காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த இங்கிலாந்தின் புகழ்பெற்ற சினிமா பட டைரக்டர் அட்டன்பரோ, " இந்த ஒரு வரிதான் காந்திஜி பற்றிய சினிமாவை எடுப்பதற்கு காரணமாக இருந்தது! " என்று குறிப்பிடுகிறார். காந்திஜி போன்ற மனிதர்கள் நம் தாய் நாட்டில் வாழ்ந்தனர் என்பது நமக்கு மட்டுமல்ல, அடுத்து வரும் இளைய தலைமுறையை சிந்திக்க வைக்கும், சீர்படுத்தச் செய்யும் மந்திரச் சொற்கள். அவர்களுக்கு நம் பெரியோர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறிகளை நாம் உணர்த்த வேண்டும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற புகழ் பெற்ற விஞ்ஞானி காந்திஜியைப் பற்றி
" எலும்பின் மீது தோல் போர்த்திய உடம்பு போன்ற - இப்படிப்பட்ட ஒரு மனிதர் இந்த பூமி மீது நடந்தார் என்பதை நாம் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகள் நம்புவது அரிது! " என்று எழுதுகிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டைன். இப்படி உலகமே அவரைப் புகழ்கிறது. காந்திஜியைப் பற்றி எழுதுகிறார் ஸ்மட்ஸ் துரை சிறையில், பொதுவாழ்வில எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்த போதிலும் தன் மனித சுபாவத்தை மட்டும் எப்போதும் துறக்கவே இல்லை காந்திஜி. கோபமோ, வெறுப்போ கொண்டதில்லை. மிகுந்த நெருக்கடியான சம்பவங்களில் கூட தமது நகைச்சுவையை அவர் இழந்தது கிடையாது.

சிறையிலிருந்து விடுதலை அளித்த போது என் உபயோகத்திற்கு என்று ஒரு ஜோடி மிதியடிகளை தயாரித்து எனக்கு சன்மானமாக அளித்தார். அதை அனேக காலம் வரை நான் உபயோகித்து கொண்டிருந்தேன். அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின் மீது நிற்க நான் தகுதியுடையவன் அல்லன் என்ற உணர்ச்சி மட்டும் என்னுள் இருந்து கொண்டிருந்தது... என்கிறார் ஸ்மட்ஸ் துரை. தான் துன்பம் அனுபவிப்பதன் மூலம் மற்றவர்களை சிந்திக்க வைத்து அவர்களைத் தூய்மைப் படுத்துவது என்ற உயரியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது காந்திஜியின் அணுகுமுறை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் காந்திஜி தன்னைப் பற்றி கவலைப்பட்டாரா? தன் சுய கவுரவத்தை இழந்ததாக எண்ணினாரா என்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள். அதுதான் தன்னைப்பற்றி ஒரு மனிதன் தானே கொண்டுள்ள நம்பிக்கை. அந்த தெளிவுதான் வாழ்வின் அடித்தளம்; அசைக்க முடியாத அடித்தளம்.

பெருந்தலைவர்களைப் போல நாம் எல்லாம் ஆக முடியுமா என்றெல்லாம் பலரும் சிந்திக்கக் கூடும். வாழ்வின் வெற்றிக்கு முக்கிய தேவை வாழ்க்கை நெறிகள் தான். இதைத் தான் நாம் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதுதான் இன்றைய ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி, பல்கலைக்கழகம் வரை மாணவர்களுக்கும், நாளை பொதுவாழ்வில் இறங்க விரும்பும் நல்லவர்களுக்கும், அல்லாதவர்களுக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

காந்திஜி போன்றவர்கள் உலகனைத்திற்குமாக, உலக மக்களுக்காக, பிறந்தவர்கள். நாட்டைப் பற்றி, நாட்டு மக்களைப் பற்றி எண்ணி தங்களை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தனக்காக வாழ்வதில்லை. வழிகாட்ட வந்த மகான்கள்!

வாழ்க்கை எனும் வண்டி சரியாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று நாம் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால், சிலசமயம், நாம் எதிர்பாராத பிரச்னை நம் முன்னே வந்து நிற்கும். " இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே... இப்போது என்ன செய்வது? " என்று யோசிப்போம்.

செய்யும் தொழிலில் கடுமையான போட்டி; தொழிலில் எதிர்பாராத நஷ்டம்; நம் உறவில் எதிர்பாராத ஏமாற்றம் என்று வரக்கூடும்! எதிர்பாராத ஒரு சம்பவம் ஏற்படும்போது நாம் செய்வது அறியாது திகைத்துப் போகிறோம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 4:53 pm

நம் மனமானது இதன் விளைவாக தோல்வியையே, கஷ்டத்தையே மீண்டும், மீண்டும் சிந்திக்க வைத்து பய உணர்வை, பெருக்குகிறது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் நாம் திளைத்து, அதிலேயே மூழ்கி இருந்தால் கவலையும், துக்கமும் தான் மிஞ்சும்; அதிகமாகும். இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும் நடக்கக் கூடியது தான். சிலர் கோபம் கொண்டு, " வருவது வரட்டும்! " என்று இறங்குவர். அவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய விஷயம் பகவத் கீதையில் வரும் சம்பவம் தான்.

அர்ஜுனன் வில்லேந்தியவனாய் நிற்கிறான்... ஆனால், கைகளோ செயல்படவில்லை. மனமோ சொல்கிறது, " என் எதிரே எதிரிகளாக நிற்பவர்கள் எல்லாம் என் அண்ணன்கள், தம்பிகள். இவர்களை எல்லாம் நான் எப்படிக் கொல்வேன்? " என்று கண் கலங்குகிறான். தேரோட்டியாக வந்த கிருஷ்ண பகவான் சொல்கிறார்: " கடமையைச் செய். முடிவைப் பற்றி, பயனைப் பற்றி கவலைப்படாதே!' என்று. இதைவிட நல்ல சம்பவத்தை கஷ்டப்படுபவர்களுக்கு நாம் சொல்ல முடியாது. மனதில் எழும், பயம், கவலை எல்லாம் மாற்றி நாம் உருப்படியான செயலில் இறங்கி, நமது பிரச்னையை சமாளிக்க வேண்டும் எனில் முடிவைப் பற்றி கவலைப்படக் கூடாது. கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமானால் எதையும், சிந்திக்கவோ, செயல்படவோ நம்மால் முடியாமல் போகும். மனிதன் அதிலேயே உழன்று கொண்டிருப்பான்.
பல தற்கொலைகள், அறியாமையால், தன்னம்பிக்கையும், அது தரும் துணிவும் இல்லாமையால் நடக்கின்றன. தன்னபிக்கை பெற நல்ல மருந்து நம் பிரச்னை சம்பந்தமான காரியத்தில் இறங்குவது தான்.
அமெரிக்காவில் எங்கள் அலுவலகத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை கூறும் பணி யிலிருந்தவர் வந்து சேர்ந்தார். அவர் சொல்கிற வாக்கியங்கள் நினைவுக்கு வருகிறது. " என்னை யாரும் பயமுறுத்த முடியாது. நாம் காரியத்தில் இறங்க வேண்டியது தான்! " என்பார்.

நாம் முயற்சியில் ஈடுபட்டால் கவலை மறந்து விடும். அப்போது மாறுபட்ட புதிய எண்ணங்கள் மனதில் தலைதூக்கும்; புதிய எண்ணங்கள் வழிகாட்டும். இதில் முக்கியமான காரியம், " மனதை தளர விடக்கூடாது! " என்பது தான். துணிந்தவனின் மனதிற்கு ஆற்றின் ஆழம் முழங்கால் அளவு தான் என்பர். ஆறு மிக ஆழமாக இருந்தாலும் நாம் நீந்திப் போய் விடலாம் என்பதுதான் அவர்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்: கடலைப் போன்றது தான் வாழ்க்கை. மேடு, பள்ளம் நிறைந்தது. புயல் நெடுநேரம் வீசப் போவதில்லை. இரண்டு மரங்களைக் கீழே தள்ளியவுடன் புயல் தானே நின்று விடும் என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கினால், நிலைமை மாறும். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும், துணிவும் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. வாழ்வில் நல்ல விஷயங்கள் அதிகமா, கெட்ட விஷயங்கள் அதிகமா என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். நம்மால் சமாளிக்க முடியாத கெட்ட சம்பவங்கள் மற்றும் தோல்விகள் எல்லாம் வாழ்வில் குறைவாகத்தான் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர்.

பலர், " வாழ்க்கை நம் கையிலா இருக்கிறது? திடீரென கஷ்டங்களும், தோல்வியும், நஷ்டங்களும், சங்கடங்களும் வாழ்வில் தோன்றுகின்றனவே. இவற்றை நீக்குவதும், போக்குவதும் நம் கையிலா இருக்கிறது? " என்று கேட்பார்.

எந்த கஷ்டம் வந்தாலும் சரி, அடுத்து என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தோமானால் தெளிவு தென்படும், ஒரு யோசனை தோன்றும். அமைதியாய் இருங்கள், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

அமெரிக்காவில், என் வழக்கறிஞர், எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அசாதாரண மனிதர் அவர்!

அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது பள்ளியின் பஸ்சில் கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பஸ்சை மோத அவர் கை, கால் ஊனமுற்றவரானார். அவரால் நடக்க முடியாது; தள்ளுவண்டியில் வைத்துத் தான் தள்ளிக் கொண்டு போவர். விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எழுத முடியாது. டைப்பிங் மெஷின் முன் உட்கார்ந்து கொண்டு எழுத்துக்களை அழுத்துவார்.

உடல்குறை பற்றி பேச மாட்டார். எடுக்கிற வழக்குகளில் எல்லாம் ஜெயித்து விடுவார். அவர் தன் குறைபாடுகளைக் கண்டு அழுது புலம்பியதில்லை; பிறரது இரக்கத்தையும் எதிர்பார்க்க மாட்டார். அது தான் வாழ்க்கை. இருப்பதை ஏற்று, மேலே என்ன செய்யலாம் என்று யோசித்தோமானால் வழி பிறக்கும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக